ஜீ.வி பிரகாஷின் பாடலை வாங்கிய யுவன்சங்கர் ராஜா

ஜீ.வி பிரகாஷின் பாடலை வாங்கிய யுவன்சங்கர் ராஜா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vaniganஒரு படத்திற்கான அங்கீகாரம் என்பது மக்களால் பெரிதாக அங்கீகரிக்கப்பட்ட பிரலபங்கள் அப்படத்தை எதாவது முறையில் அங்கீகரிக்கும் போதுதான். தற்போது புதிதாக தயாராகியுள்ள வணிகன் என்ற படத்தின் ஆடியோ உரிமைதை வாங்கி அப்படம் மீதான நம்பிக்கையை கூட்டி இருக்கிறார் இசை அமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா.

FESTUS PRODUCTIONS என்ற பட நிறுவனம் சார்பில் செந்தில் விஜயகுமார் தயாரிப்பில் டேனியல் VP எழுதி இயக்கியுள்ள படம் வணிகன்.
நேரம், பிரேமம், வெற்றிவேல் ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ஆனந்த் நாக் கதாநாயகனாக நடித்துள்ளார். பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக வலம்வந்து கொண்டிருக்கும் நக்ஷத்திரா நாகேஷ் இந்த படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார். மற்றும் முக்கிய கதாப்பாத்திரத்தில் சார்லி, புச்சட்னி ராஜ்மோகன், கிருத்திகா பாலா ஆகியோர் நடித்துள்ளனர்.

இசை – சுரேஷ்குமார்.TR – புவனேஷ்செல்வனேஷன்
ஒளிப்பதிவு – அகஸ்டின் இளையராஜா
பாடல்கள் – மோகன்ராஜன்
எடிட்டிங் – பரமேஷ்கிருஷ்ணா
தயாரிப்பு – செந்தில் விஜயகுமார்
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார் டேனியல்VP.
இவர் இதற்கு முன் இரண்டு குறும்படங்களை இயக்கியுள்ளார்.
படத்தை பற்றி இயக்குனர் டேனியல்VP. கூறியதாவது,

“இது ஒரு எதார்த்தமான திரில்லர் படம். தற்போது சமூகத்தில் நடந்துகொண்டிருக்கும் ஒரு முக்கியமான விஷயத்தை இதில் கையாண்டிருக்கிறோம். இந்த படத்தின் பாடல்களை கேட்ட பிரபல இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா, இசையமைப்பளார்களை பாராட்டியதோடு மட்டுமல்லாமல், தனது யூ1 ரெக்கார்டஸ் நிறுவனம் மூலம் இந்த படத்தின் ஆடியோ உரிமையை வாங்கியிருக்கிறார் அது எங்கள் படக்குழுவினருக்கு கிடைத்த முதல் வெற்றியாக கருதுகிறோம். தவிர இந்த படத்தில் இசையமைப்பாளர், நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமார், பாடலாசிரியர் மோகன்ராஜன் எழுதிய ” வாடி முட்ட கண்ணி ” என்ற பாடலை பாடியுள்ளார். அந்த பாடலை இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா வெளியிட்டார். அது தற்போது சமூகவலைத் தளங்களில் வைரலாக பரவிவருகிறது. படம் விரைவில் வெளியாக உள்ளது” என்றார் இயக்குனர் டேனியல்VP.

ஹீரோ பட எடிட்டிங்கில் சிவா முழு ஒத்துழைப்பு வழங்கினார் – படத்தொகுப்பாளர் ரூபன்

ஹீரோ பட எடிட்டிங்கில் சிவா முழு ஒத்துழைப்பு வழங்கினார் – படத்தொகுப்பாளர் ரூபன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Editor Ruben and Sivakarthikeyanசமீபத்தில் வெளியிடப்பட்ட ஹீரோ படத்தின் ட்ரைலருக்கு எல்லா தரப்பிலிருந்தும் மிகுந்த வரவேற்பு கிடைத்து வருகிறது. குறிப்பாக படத்தொகுப்பாளர் ரூபன் தனது குழுவிற்கு கிடைத்து வரும் வரவேற்பால் பெரு மகிழ்ச்சியில் திளைக்கிறார். இந்த பாராட்டுரைகள் அனைத்தும் இயக்குநர் பி.எஸ்.மித்திரனுக்குத்தான் செல்லவேண்டும். காரணம் அவரது தெளிவான பார்வையும் மற்றும் சரியான திட்டமிடலும்தான் என்கிறார்.விஷுவல் புரொமாக்களை எப்படி வடிவமாக்க வேண்டும் என்று குழுவாக நாங்கள் திட்டமிட்டு செயலாற்றியதற்கு இப்போது கிடைத்து வரும் வரவேற்பு எங்களுக்கு மகத்தான மகிழ்ச்சியைத் தருகிறது என்றார் ரூபன்.
ஹரோ படத்தின் முன்னோட்டம் முழுவதும் நாயகன் சிவகார்த்திகேயனுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்காமல், மற்ற பாத்திரங்களின் பங்களிப்புக்கும் வாய்பு வழங்கியிருக்கிறது. இது குறித்தும் விவரித்த படத்தொகுப்பாளர் ரூபன் மேலும் தொடர்ந்து கூறியதாவது…
இதற்காக நான் சிவகார்திகேயனுக்குதான் நன்றி செலுத்த கடமைப்பட்டிருக்கிறேன். மிகப் பெரிய நடிகராக இருந்தும் அவர் எங்கள் பணியில் எப்போதும் குறுக்கிடவில்லை. குறிப்பாக டிரைலர் கட் பண்ணும்போதும் எங்களை முழு சுதந்திரத்தைக் கொடுத்தார்.. டிரைலரையும் பின்னர் முழுப்படத்தையும் பார்த்துவிட்டு தன் மகிழ்ச்சியைத் தெரிவித்தார் என்று சொல்லும் ரூபன், எஸ்.கேயினின் இந்த செய்கையும் பாராட்டினார்.

தொடர்ந்து பேசிய ரூபன் ஹீரோ படம் குறித்து கூறியதாவது…
படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவிலேயே பலரும் சொன்னதை இப்போது நான் மீண்டும் சொல்கிறேன் என்று நினைத்தாலும் கவலையில்லை. அதுதானே உண்மை. ஒரு திரைப்படம் என்பதைத்தாண்டி, சமூகப்பொறுப்புடன் ஒரு காட்சியை கருத்தாக்கம் செய்யும் மித்ரன் வசீகரமான முறையில் அதை வழங்கியிருக்கிறார். ஹீரோ படம் பொழுதுபோக்கு அம்சங்கள் நிரம்பிய ஜனரஞ்சகப்படம் என்றாலும், இதிலுள்ள செய்தி படம் பார்ப்பர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தி பாராட்டும் வரவேற்பும் பெறும் என நான் நம்புகிறேன். திரையில் தோன்றும் நடிகர்களின் சிறப்பான நடிப்பு, ஆதிக்கம் செலுத்தும் யுவன் சங்கர் ராஜா சாரின் மனம் மயக்கும் இசை, ஜார்ஜ் சி.வில்லியம்ஸின் அருமையான ஒளிப்பதிவு என்ற ஹீரோ படத்தின் ஒவ்வொரு அம்சமும் ரசிகர்களிடம் வெகுவான பாராட்டுதல்களைப் பெறும் என்றார்.

படத்தொகுப்பாளர் ரூபன் படத்துக்கு இடையூறாக இருக்கும் பாடலையோ காட்சியமைப்பயோ அனுமதிக்க மாட்டார் என்று
படக்குழுவினரிடைய ஒரு பலமான கருத்து.உண்டு. இது குறி்த்து சிரித்துக் கொண்டே விவரித்த ரூபன், இயக்குநர்கள் என்மீது நம்பிக்கை வைத்து பொறுப்புகளை விடும்போது எனக்கு சற்று லேசான நடுக்கம் ஏற்படுவதுண்டு.ஹீரோ படத்தைப் பொறுத்தவரை இது சற்று கடினமான பணியாக இருந்தது. காரணம் இயக்குநர் மித்ரன் மற்றும் எழுத்துப் பணிகளைச் செய்யும் அவரது குழுவினர், ஒவ்வொரு காட்சியையும் ரசிக்கத் தக்கவகையி்ல் எடுத்திருந்தனர். படத்துக்கு தேவையில்லை என்று தோன்றும் காட்சிகளை நீங்கள் தாராளமாக வெட்டி எடுத்து விடலாம் என்று சவால் விடுவதுபோல் சுவையான காட்சிகளை கொண்டு வந்து என் எடிட்டிங் டேபிளை நிரப்பியிருந்தார்கள். செதுக்கி செதுக்கி ஹீரோ படத்தை நாங்கள் உருவாக்கிய விதம் எங்கள் எல்லோருக்கும் மிகுந்த மகிழ்ச்சியையும்,திருப்தியையும் கொடுத்திருக்கிறது. இப்போது ரசிகர்கள் எனும் நீதிபதிகள் தீர்ப்புக்காக காத்திருக்கிறோம் என்றார்.

உலகெங்கும் டிசம்பர் 20ஆம் தேதி திரைக்கு வரும் ஹீரோ திரைப்படத்தை கே.ஜே.ஆர்.ஸ்டுடியோஸுக்காக கோட்டபாடி ஜே.ராஜேஷ் தயாரித்திருக்கிறார். ஆக்ஷன் கிங் அர்ஜுன், அபய் தியோல் கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் இவானா ஆகியோர் சிவகார்த்திகேயனும் இணைந்து முக்கிய வேடங்களில் இப்படத்தில் நடித்திருக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவையும், ரூபன் படத்தொகுப்பையும் செய்திருக்கின்றனர். கலை இயக்குநராக வி.செல்வகுமாரும், சண்டைப் பயிற்சியாளராக திலீப் சுப்பராயனும், பணியாற்றியிருக்கின்றனர். எழுத்துப் பணிகளை எம்.ஆர்.பொன் பார்தித்திபன், அண்டனி பாக்யராஜ், சவரிமுத்து ஆகியோர் செய்திருக்கின்றனர். சவுண்ட் டிசைனிங் பொறுப்பை தபஸ் நாயக்கும் செய்திருக்கின்றனர். பாடல்களை பா.விஜய் எழுத, ராஜு சுந்தரம் மற்றும் சதீஷ் நடனக்காட்சிகளை அமைத்திருக்கின்றனர். ஆடை அலங்காரப் பொறுப்பை பல்லவி சிங் ஏற்க, டிசைன்கள் பொறுப்பை எஸ்.செல்வகுமார் சிவா டிஜிட்டல் ஆர்ட்ஸ் லார்வென் ஸ்டுடியோ, மைண்ட் சென் வி.எப்.எக்ஸ்.செய்திருக்கின்றனர்.
நிர்வாகத் தயாரிப்பாளர் பணிகளை டி.எழுமலையான் ஏற்றிருக்கிறார்

திருவள்ளுவராக மாறும் ஹர்பஜன் சிங்; பிளாக் ஷீப் குழு புதிய முயற்சி

திருவள்ளுவராக மாறும் ஹர்பஜன் சிங்; பிளாக் ஷீப் குழு புதிய முயற்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Blacksheep teams Adutha 6 Harbhajan Singh as Thiruvalluvarஇணைய உலகில் இளைஞர்களின் விருப்ப யூடியூப் சேனலாக இருப்பது பிளாக் ஷீப். ஆர்.ஜே.விக்னேஷ், அரவிந்த் உள்பட பல கலைஞர்களான இளைஞர்கள் அந்தச் சேனலை முன்னெடுத்துச் செல்கிறார்கள்.

எல்லாருக்கும் நல்லாருக்கும் என்ற வாக்கியத்தோடு பிளாக் ஷீப் குழு தனது புதிய பயணத்தைத் துவங்கியுள்ளது. புதிதாக 6+1 நிகழ்ச்சிகளை பிளாக் ஷீப் அறிமுகப்படுத்தியது.

இதன் துவக்கவிழா சென்னையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. விழாவில் பிளாக் ஷீப் தளத்தில் வெற்றிகரமாக இயங்கி வரும் நிகழ்ச்சிகளின் பங்கேற்பாளர்களை அழைத்து அறிமுகப்படுத்தி அசத்தினார்கள்.

விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலைப்புலி தாணு, இயக்குநர்கள் சேரன், விஜய் சந்தர், அரசியல்வாதியும் நடிகருமான நாஞ்சில் சம்பத், நடிகர் ரியோ, நடிகரும் டாக்டருமான சேதுராமன், தொலைக்காட்சி புகழ் கோபிநாத், அசார் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டு வாழ்த்தினார்கள்.

பிளாக் ஷீப்பின் அடுத்த 6+1 பற்றிய அறிவிப்புகள்….

1. திருக்குறள் கன்சல்டன்சி சர்வீசஸ் :- சிஎஸ்கே அணியில் சுழற்பந்து வீச்சாளராக இருக்கும் ஹர்பஜன் சிங் திருவள்ளூவராக நடிக்கும் வலைத் தொடர் ஒன்றை DUDE விக்கியின் இயக்கத்தில் தயாரிக்க உள்ளது.

இந்த வலைத்தொடரின் 12 பகுதிகளை கொண்ட முதல் சீசன் வரும் பிப்ரவரி 2, 2020 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகவுள்ளது.

2. பிளாக் ஷீப் டிஜிட்டல் விருதுகள் :- தமிழ் டிஜிட்டல் தளத்தில் இயக்கும் திறமைசாலிகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு தனித்துவமான விருதினை வழங்கி கௌரவப்படுத்திட விருது வழங்கும் விழா நடத்த இருக்கிறார்கள்.

3. பிளாக் ஷீப் வேல்யூ :- பிளாக் ஷீப்பின் புத்தம் புதிய நிகழ்ச்சிகளை பிளாக் ஷீப் வேல்யூவில் பார்த்து ரசிக்கலாம். பிளாக் ஷீப் ஓடிடி (Black Sheep OTT) என்று சொல்லப்படும் தனி ஆப்-பை அறிமுகப்படுத்தினார்கள்.

4. பிளாக் ஷீப் F3 :- ஜனவரி 5 2020 F 3 (FACES FOR THE FUTURE) என்ற பெயரில் மாநில அளவிலான கல்லூரி திறமைத் திருவிழாவை நடத்தி அதில் வெற்றி பெறுவோருக்கு பிளாக் ஷீப்பில் இணையும் வாய்ப்பு வழங்கப்பட உள்ளது.

5. பிளாக் ஷீப் ரீவேம்ப் :- ஜனவரி 2, 2020 ம் தேதி முதல் மேலும் பல புதிய நிகழ்ச்சிகளுடன், மேன்படுத்தப்பட்ட தரத்தில், பல புதுமைகளுடனும் பிரம்மாண்டத்துடனும் பயணிக்கத் தயாராகிவிட்டது பிளாக் ஷீப்.

6. ஆண்பாவம் :- ஒரு ஆண் எதிர் கொள்ளும் பொதுவான பிரச்சனைகளை வேடிக்கையான முறையில் விவாதிக்க வரும் நிகழ்ச்சிதான் ஆண் பாவம். இதில் ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ திரைப்படத்தின் கதாநாயகனான டாக்டர் சேதுராமன் நடிப்பில், ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ திரைப்படத்தின் மூலம் தன் முத்திரியை பதித்த கார்த்திக் வேணுகோபாலின் எழுத்து மற்றும் இயக்கத்தில் உருவாக இருக்கிறது.

12 பகுதிகளை கொண்ட இந்த தொடரின் முதல் சீசன் வரும் பிப்ரவரி 2ம் தேதி முதல் வெளியாக இருக்கிறது.

பிளாக் ஷீப்பின் அடுத்த திரைப்படம் :-

நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கால் பதித்த பிளாக் ஷீப், தற்போது புட் சட்னி புகழ் ராஜ்மோகன் இயக்கத்தில், தமிழ் சினிமாவில் வெற்றிகரமான விநியோகஸ்தராக தன் முத்திரையை பதித்த ராக்போர்ட் என்டர்டெயின்மெண்ட் முருகானந்தம் தயாரிப்பில், பர்ஸ்ட் காபி அடிப்படையில், பிளாக் ஷீப் புரொடக்‌ஷன்ஸ் மூலம் புதிய படம் தயாரிக்க இருக்கிறார்கள்.

இந்த திரைப்படம் தற்கால பள்ளி மாணவர்களின் வாழ்க்கை, தேவை, ரசனை, மகிழ்ச்சி, கொண்டாட்டம், காதல், நட்பு மற்றும் இன்றைய சூழலில் அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்தும் பதிவு செய்ய இருக்கிறார்கள். ஒட்டு மொத்த பிளாக் ஷீப் நட்சத்திரங்களும் நடிக்க, பிளாக் ஷீப் அயாசும், மைக் செட் ஸ்ரீராமும் நாயகர்களாக நடிக்கிறார்கள்.

இத்திரைப்படம் கோடை விடுமுறையை குறிவைத்து வெள்ளித்திரைக்கு தயாராகிறது.

Blacksheep teams Adutha 6 Harbhajan Singh as Thiruvalluvar

Blacksheep teams Adutha 6 Harbhajan Singh as Thiruvalluvar

 

உலக மூத்த நடிகர் சாருஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது கிடைத்திருப்பது பற்றி விஜய்ஸ்ரீ

உலக மூத்த நடிகர் சாருஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது கிடைத்திருப்பது பற்றி விஜய்ஸ்ரீ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijaysri thanks to TN Govt in regards to award for Charuhassan நடிகர் சாருஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது கிடைத்திருப்பது குறித்து, இயக்குனர் விஜய்ஸ்ரீ ஜி கூறியதாவது:

“மூத்த திரைப்பட நடிகர் சாருஹாசனுக்கு ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ வழங்கி கௌரவித்த சென்னை சர்வதேச திரைப்பட விழா குழுவினருக்கும், செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை அமைச்சர் திரு. கடம்பூர் ராஜூ அவர்களுக்கும், துறை சார்ந்த இதர இயக்குனர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.”

கடந்த 2016 ஆம் ஆண்டு, நானும் எனது மக்கள் தொடர்பாளர் திரு நிகில் முருகனும் நடிகர் சாருஹாசனை சந்தித்துப் பேசினோம். அப்போது அவர், தனக்கு உடல் நலம் சரியில்லை என்றும், ஓய்வில் இருப்பதாகவும் கூறினார்.

மேலும், தனக்கு இரண்டு பைபாஸ் அறுவை சிகிச்சையும், விபத்தின் காரணமாக கால்களில் ஏற்பட்ட காயம் காரணமாக, இரும்பு பெல்ட் வைத்திருப்பதாகவும், ஆகையால், தன்னால் ஊன்றுக்கோலின்றி நடக்க இயலவில்லை எனவும் பல காணொளிகளில் ஏற்கெனவே தெரிவித்திருந்தபடி எங்களிடமும் தெரிவித்தார்.

இந்த சூழலில், ஒரு தேசிய விருது பெற்ற நடிகரான நீங்கள் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்று நான் மட்டுமல்ல, என்னைப் போலவே பல இயக்குனர்கள் ஆசைப்படுகிறார்கள் என்பதை அவரிடம் வலியுறுத்தி பேசிவிட்டு, அவருக்கெனவே, அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு, ஒரு கதைகளம் அமைத்திருக்கிறேன் என்று ‘தாதா 87’ கதை அவரிடம் கூறினேன்.

கதை அவருக்கு பிடித்திருக்க, உற்சாகமாக நடித்துக் கொடுத்தார். தற்போது, அவர் 3 தெலுங்கு மற்றும் 2 மலையாள படங்களில் நடித்து வருகிறார் என்பதிலும், அதற்கு நானும் ஒரு காரணம் என அவர் பல்வேறு காணொளிகளில் குறிப்பிட்டு பேசி வருவதையும் கண்டு மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

சாருஹாசனைப் போன்ற சிறந்த மூத்த நடிகர்கள், நடிக்காமல் ஒதுங்கி இருக்கிறார்கள். நாம்தான் இத்தகைய சிறந்த கலைஞர்களை அடையாளம் கண்டு, தொடர்ந்து நடிக்க வைக்க வேண்டும்.

2016 ஆம் ஆண்டு முதன்முதலாக தாதா 87 படத்துக்காக, சாருஹாசன் அவர்களை முதன்முதலாக சந்தித்தது துவங்கி, அவருக்கு ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ கிடைத்திருக்கும் இந்த தருணம் வரையில், அனைத்து நேரத்திலும் எனக்கு உறுதுணையாக இருந்துவரும் நிகில் முருகன், ‘தாதா 87’ படத்தின் தயாரிப்பாளர், படக்குழுவினர் அனைவருடனும் எனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வதுடன், எனது மனமார்ந்த நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் இயக்குனர் விஜய்ஸ்ரீ ஜி.

Vijaysri thanks to TN Govt in regards to award for Charuhassan

டைட்டில் பஞ்சத்தால் வடிவேலு டயலாக்கை வைத்த பரிதாபங்கள் டீம்

டைட்டில் பஞ்சத்தால் வடிவேலு டயலாக்கை வைத்த பரிதாபங்கள் டீம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Gopi Sudhakars film gets title from famous Vadivelu dialogue‘பரிதாபங்கள்’ என்ற யூடியூப் இணையதளம் மூலம் தமிழகம் மட்டுமல்லாது உலகம் முழுவதும் பரிட்சயமானவர்கள் கோபி மற்றும் சுதாகர்.

இவர்கள் தற்போது ‘பரிதாபங்கள்’ ப்ரொடக்‌ஷன்ஸ் என்ற படத் தயாரிப்பு நிறுவனத்தை துவக்கியுள்ளனர்.

இதில், உருவாகும் முதல் படத்தினை ‘க்ரொவ்ட் பண்டிங்’ முறையில் தயாரிக்க திட்டமிட்டு, இதுவரை சுமார் 6.5 கோடி வரை கிடைத்துள்ளதாம்.

இப்படத்தின் தலைப்பாக ‘ஹேய் மணி கம் டுடே கோ டுமாரோவ் யா’ ((Hey Money Come Today Go Tomorrow Ya )) என்ற வடிவேலுவின் டயலாக்கை வைத்துள்ளனர்.

இப்படத்தினை, எஸ் ஏ கார்த்திக் இயக்கவிருக்கிறார். இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாய் மற்றும் நிஜாய் ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார்.

இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

Gopi Sudhakars film gets title from famous Vadivelu dialogue

அமிதாப் சொன்ன 3 அட்வைஸ்ல 2 தான் பாலோ பண்றேன்.. – ரஜினி ஓபன் டாக்

அமிதாப் சொன்ன 3 அட்வைஸ்ல 2 தான் பாலோ பண்றேன்.. – ரஜினி ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

I follow Amithabs 2 advises among 3 advises says Rajiniதர்பார் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் மும்பையில் நடைபெற்றது. இதில் ரஜினிகாந்த், முருகதாஸ், சுனில் ஷெட்டி ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

ட்ரைலரை வெளியிட்ட பின் ரஜினி பேசியதாவது…

என் நண்பர் அமிதாப்பச்சன் எனக்கு 3 அறிவுரைகள் சொன்னார்.

எப்போதும் உடற்பயிற்சி செய்ய வேண்டும், எப்போதும் பிசியாக இருக்க வேண்டும், அரசியலில் நுழையக் கூடாது என்ற மூன்று விஷயங்களை கடைப்பிடிக்கும்படி சொன்னார்.

அமிதாப்பச்சன் வழங்கிய மூன்று அறிவுரைகளில் முதல் இரண்டை மட்டுமே கடைபிடிக்க முடிந்தது” என ரஜினி ஓபனாக தன் அரசியல் வருகை குறித்து பேசினார்.

I follow Amithabs 2 advises among 3 advises says Rajini

More Articles
Follows