தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் பிரபலமானவர் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன்.
இவர் ‘நேரம் – பிரேமம் – கோல்ட்’ உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.
இதில் பிரித்விராஜ் – நயன்தாரா நடித்த ‘கோல்ட்’ படம் போதுமான வரவேற்பை பெறவில்லை.
இந்த நிலையில் இவரது சமீபத்திய இணைய பதிவில்.. ” தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஆகியோருக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். அந்த கோரிக்கையில்..
“சினிமாவுக்கு என்று திரையுலக நல்வாழ்வுத்துறை என்ற ஒரு துறையை உருவாக்க வேண்டும். அதன் அமைச்சராக நடிகர் கமல்ஹாசனை நியமிக்க வேண்டும். அப்படி ஏற்படுத்தினால் அது சினிமாவின் மேம்பாட்டுக்காக உதவும்.
கமல் ஒருவரே சினிமாவை முழுவதும் அறிந்தவர்.. பாடகர் பாடலாசிரியர் தயாரிப்பாளர் இயக்குனர் நடன இயக்குனர் விநியோகஸ்தர் என பன்முக திறமை கொண்டவர் கமல்.. அவரிடம் இருந்து புதுமையான விஷயங்களை கற்றுக் கொண்டே இருக்கலாம். அவர் மட்டுமே உலகத்தில் தலைசிறந்த கலைஞர்.” என அல்போன்ஸ் புத்திரன் பதிவிட்டுள்ளார்
A request to @mkstalin & @Udhaystalin please Start or introduce a minister called cinema welfare minister and appoint @ikamalhaasan as the cinema welfare minister, if you do it cinema will became more flourishing and prosperous – @puthrenalphonse
Kamal should became Minister of Cinema Welfare says Alphonse Puthiran