தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
36 வயதினிலே பட வெற்றியைத் தொடர்ந்து மகளிர் மட்டும் படத்தில் நடித்துள்ளார் ஜோதிகா.
பிரம்மா இயக்கியுள்ள இப்படத்தில் ஊர்வசி, சரண்யா, பானுப்பிரியா உள்ளிட்டோர் நடிக்க ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
இப்படம் செப்டம்பர் 15ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் இப்படம் குறித்து நடிகை ஜோதிகா கூறியதாவது…
மருமகள் ஒருத்தி தன்னுடைய மாமியாரையும் அவருடைய தோழிகளை எப்படி பார்த்துக்கொள்கிறார் என்பதுதான் இப்பட கதை.
ஆனால் இப்படியான கதை எப்படி ஒரு ஆணிடம் இருந்து வந்தது என எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
எனக்கு ஊர்வசி, சரண்யா பொன்வண்ணன், பானுப்ரியா ஆகியோரோடு நடிக்கும்போது பயமாக இருந்தது.
என்னால் சரியாக வசனத்தை பேச கூட முடியவில்லை. பின்னர்தான் அவர்கள் ஒத்துழைப்பு மூலம் சரியானது.
ஊர்வசியிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன்.
நான் படத்தில் புல்லட் ஓட்டி நடிக்க வேண்டிய காட்சி இருந்தது. எனவே சூர்யா 2 நாட்கள் புல்லட் ஓட்ட பயிற்சியளித்தார்.
என் மகள் தியாவை பள்ளிக்கு புல்லட்டில் அழைத்து சென்று டிராப் செய்தபோது அவளுக்கு பெருமையாக இருந்தது.
என் மகன் தேவ்வுக்கு சூர்யாதான் எப்போதும் ஹீரோ.
நாச்சியார் படம் வந்தபிறகு அவனுன்கு நான் ஹீரோவாக தெரிவேன் என நம்புகிறேன்.” என்றார்.
After Naachiyar release i will be hero for my son says Jothika