தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ராம் இயக்கத்தில் ஜேஎஸ்கே தயாரிப்பில் நேற்று வெளியான படம் தரமணி.
இப்படத்தில் ஆண்ட்ரியாவின் அனைவராலும் பேசப்பட்டு வருகிறது.
இதுகுறித்து நடிகை ஆண்ட்ரியா கூறியதாவது….
‘இந்த படத்திற்கு மனதளவில் நிறைய உழைப்பு தேவைப்பட்டது. அப்படியொரு தைரியமான கேரக்டர்.
என் கேரக்டருக்கு இவ்வளவு பாராட்டு கிடைக்கும் என நான் நினைக்கவில்லை.
என் பாடி லாங்குவேஜ் (உடல் மொழி) ஐ யதார்த்த நடிப்பையும் வெளிப்படுத்த டைரக்டர் ராம் முழு சுதந்திரம் கொடுத்தார்.
ஆண்களை சார்ந்து வாழும் காலம் தற்போது மாறிவருகிறது.
தங்களின் தேவையை பெண்களே பார்த்துக் கொள்கிறார்கள்.
ஆண்களுக்கு எல்லாவிதத்திலும் சமமானவர்கள் பெண்கள் என்ற நிலை தற்போது உருவாகியுள்ளது.
எனவே ஆண்களின் ஈகோ பாதிக்கப்பட்டிருக்கிறது.” என்று தெரிவித்துள்ளார்.