தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர் விஷால் தனது வீட்டின் அருகேயுள்ள ஒரு இளம்பெண்ணின் வீட்டில் இருந்து தினமும் சுவர் ஏறிக் குதித்து ஓடுவதாக கோபாலபுரத்தைச் சேர்ந்த விஸ்வதர்சினி என்ற பெண், மீ டூ இயக்கம் வாயிலாக ஃபேஸ்புக்கில் குற்றம்சாட்டியிருந்தார்.
இந்நிலையில் பாலியல் ரீதியாக தன்னை பற்றி அவதூறு பரப்பியதாக அந்த வீட்டில் வசிக்கும் 16 வயது சிறுமி சார்பில் தேசிய குழந்தைகள் நல ஆணையத்துக்கு புகார் அளிக்கப்பட்டது.
புகார் மீது நடவடிக்கை எடுக்குமாறு சென்னை மாநகர காவல் ஆணையருக்கு உத்தரவிடப்பட்டு இருந்தது.
அதன் அடிப்படையில், சிறுமியிடம் வாக்குமூலம் பெற்று விசாரணை நடத்தினர்.
புகார் உண்மையானதால் ராயப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையம் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் விஸ்வதர்ஷினி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அதன்பேரில் ராயப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையம் விசாரணை நடத்தி விஸ்வதர்ஷினி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.