தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பிரபலங்கள் மீது சினிமா துறை சார்ந்த பெண்கள் பாலியல் புகார்களை தொடர்ந்து கூறிய வண்ணம் உள்ளனர்.
வைரமுத்து மீது சின்மயி புகார்களை கூறியதை தொடர்ந்து தற்போது நடிகர் தியாகராஜன் மீது புகைப்பட கலைஞரான பிரித்திகா மேனன் பாலியல் குற்றச்சாட்டை கூறியுள்ளார்.
அவர் கூறியதாவது… பொன்னர் சங்கர் படத்தில் நான் புகைப்பட கலைஞராக பணியாற்றினேன் அப்போது எனக்கு 21 வயது இருக்கும்.
கோவை அருகே போர் காட்சிகளை எடுத்தார்கள். படப்பிடிப்பில் 200க்கும் மேற்பட்ட300 ஆண்கள் இருந்தார்கள். நானும் 3 பெண்களும் மட்டுமே இருந்தோம்.
சூட்டிங் சமயத்தின் போது தியாகராஜன் எனக்கு பல விதங்களில் பாலியல் தொல்லை கொடுத்தார்.
நான் தங்கியிருந்த ஓட்டல் அறைக்கு நள்ளிரவில் வந்து கதவை தட்டுவார். என பிரித்திகா மேனன் தெரிவித்து இருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக தியாகராஜன் கூறியதாவது…
நான் இயக்கி தயாரித்த கலைஞரின் பொன்னர் சங்கர் பட சூட்டிங்கின் சமயத்தில் இரவில் யாரோ அவரது அறை கதவை தட்டியதாகவும் அது நானாக இருக்கலாம் என்ற யூகத்தில் அவரது பேஸ் புக் அக்கவுண்டில் தவறான ஒரு செய்தியை பதிவிட்டுள்ளார் பிரத்திகா என்ற பெண்.
இதை நான் முற்றிலும் மறுக்கிறேன். அவர் இப்போது எங்கே இருக்கிறார் என்பது கூட தெரியவில்லை.
என் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ள அந்த பெண் மீது அவதூறு வழக்கு தொடர உள்ளேன்.
அதோடு இது போன்ற பொய் குற்றச்சாட்டு கூறுபவர்களுக்கு இது ஒரு பாடமாக அமையும்.
விரைவில் பத்திரிகையாளர்களை சந்திப்பேன். அவர்கள் முன்னிலையில் பல உண்மைகள் வெளிவரும்.” இவ்வாறு தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
Actor Thiagarajan clarifies about Prithika menons MeToo issue on him