புத்தாண்டு விருந்தாக பிரசாந்த் பட பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட தியாகராஜன்

புத்தாண்டு விருந்தாக பிரசாந்த் பட பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட தியாகராஜன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Andhagan2018ல் ஹிந்தியில் வெளியான படம் ‘அந்தாதுன்’.

ஸ்ரீராம் ராகவன் இயக்கிய இப்படத்தில் ஆயுஷ்மன் குரானா, ராதிகா ஆப்தே, தபு உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இத்திரைப்படம் 3 தேசிய விருதுகளைப் பெற்றது.

நடிகர் பிரசாந்தின் தந்தை தியாகராஜன் அப்பட ரீமேக் உரிமையை பெரும் தொகை கொடுத்து வாங்கியிருந்தார்.

பிரசாந்த் & சிம்ரன் & கார்த்திக் நடிக்கின்றனர்.

ஜெ.ஜெ.பெட்ரிக் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் சிவன் இசையமைக்கிறார்.

பட்டுக்கோட்டை பிரபாகர் வசனம் எழுதுகிறார்.

இப்படத்தின் டைட்டில் லுக்கை 2021 ஜனவரி 1-ம் தேதி அறிவிக்கிறோம் என தெரிவித்திருந்தனர்.

அதன்படி இந்த படத்திற்கு ‘அந்தகன்’ என்று பெயரிட்டு அதன் டைட்டில் லுக்கை புத்தாண்டு விருந்தாக வெளியிட்டுள்ளனர்.

Andhadhun Tamil remake tilted as Andhagan

புத்தாண்டு தினத்தில் வாரணாசி கோயிலில் சிம்புவின் சாமி தரிசனம்

புத்தாண்டு தினத்தில் வாரணாசி கோயிலில் சிம்புவின் சாமி தரிசனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிம்பு நடித்துள்ள ‘ஈஸ்வரன்’ படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 14 ஆம் தேதி திரைக்கு வருகிறது.

இப்படத்தைத் தொடர்ந்து மாநாடு் & பத்து தல ஆகிய படங்களில் நடிக்கிறார்.

இந்த நிலையில் இன்று 2021 புத்தாண்டு முன்னிட்டு நடிகர் சிம்பு கோயிலில் வழிபாடு செய்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார்.

நெற்றியில் பட்டை உடன் பைஜாமா உடையில் கண் மூடி பிரார்த்தனை செய்கிறார். அவருடன், அவரது நெருங்கிய நண்பரும் நடிகருமான மகத்தும் சென்றுள்ளார்.

அப்போது எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Simbu Mahat

Latest pic of Simbu goes viral

செல்வராகவன் & தனுஷ் கூட்டணியில் ‘ஆயிரத்தில் ஒருவன் 2’..; ஆனால் 4 வருஷம் காத்திருக்கனுமே…

செல்வராகவன் & தனுஷ் கூட்டணியில் ‘ஆயிரத்தில் ஒருவன் 2’..; ஆனால் 4 வருஷம் காத்திருக்கனுமே…

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

#AayirathilOruvan2செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி, பார்த்திபன், ஆண்ட்ரியா, ரீமாசென் ஆகியோர் நடிப்பில் வெளியான படம் ‘ஆயிரத்தில் ஒருவன்’.

2010-ம் ஆண்டில் ரிலீசான இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார்.

அந்த சமயத்தில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

ஆனால் சினிமா விரும்பிகளிடம் ஆயிரத்தில் ஒருவன் படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதனால் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் பாகம் இரண்டு எப்போது என்று ரசிகர்கள் தொடர்ச்சியாக கேள்வி எழுப்பிவந்தனர்.

இந்தநிலையில், செல்வராகவன் ஆயிரத்தில் படத்தின் இரண்டாம் பாகம் குறித்து தகவல் வெளியிட்டுள்ளார்.

செல்வராகவனின் ட்விட்டர் பதிவில், ‘இது வரை கேட்டிருந்த, காத்திருந்த என் அன்பு உள்ளங்களுக்கு இதோ உங்கள் முன்னால்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இதில் கார்த்தி நடிக்கவில்லை. அவருக்கு பதிலாக ஹீரோவாக தனுஷ் நடிப்பது உறுதியாகியுள்ளது.

தயாரிப்பு, இசை மற்ற நடிகர்கள் குறித்த எந்த விவரமும் வெளியிடப்படவில்லை.

இப்படம் 2024-ல் வெளியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தியேட்டரில் ‘மாஸ்டர்’ படம் FDFS பார்க்க ஆசைப்படும் மிஷ்கின்

தியேட்டரில் ‘மாஸ்டர்’ படம் FDFS பார்க்க ஆசைப்படும் மிஷ்கின்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Mysskinமிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் இளையராஜா இசையில் உருவான படம் ‘சைக்கோ’.

இந்த படத்தின் பெரும் வெற்றிக்கு பிறகு மிஷ்கின் இயக்கவுள்ள படம்
பிசாசு 2.

இந்த நிலையில் 2021 புத்தாண்டை ஒட்டி ரசிகர்களுக்கு தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது…

“கதைகளும், சினிமாவும் இல்லாமல் நம் வாழ்வு முழுமை பெறாது.

இனி வரும் நாட்களில் குடும்பத்துடன் திரையரங்குகளுக்கு செல்வோம்.

நான் தனிப்பட்ட முறையில் “மாஸ்டர்” படம் காண ஜனவரி 13 திரையரங்குக்கு செல்லவுள்ளேன்.

அனைத்து ரசிகர்களும் மீண்டும் திரையரங்குகளுக்கு செல்ல வேண்டும்.

திரைத்துறை மீண்டும் செழித்து வளர உதவு வேண்டும் என கேட்டு கொள்கிறேன்.” என இயக்குனர் மிஷ்கின் பதிவிட்டுள்ளார்.

I will watch Master movie in Cinema theatres says Mysskin

மக்களை காக்க மறுபிறவி எடுத்தாய்… மறுபரிசீலனை செய் தலைவா..; மன்றாடும் ரஜினி ரசிகர்கள்

மக்களை காக்க மறுபிறவி எடுத்தாய்… மறுபரிசீலனை செய் தலைவா..; மன்றாடும் ரஜினி ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanthகொரோனா வைரஸ் பரவல் மற்றும் தன் உடல்நிலை காரணமாக அரசியல் கட்சி தொடங்கும் முடிவில் இருந்து விலகுவதாக அறிவித்தார் நடிகர் ரஜினிகாந்த்.

ஆனாலும் ரஜினி மக்கள் மன்றம் என்றும் போல செயல்படும். தேர்தல் அரசியலுக்கு வராமல் மக்களுக்கு தன்னால் சேவை செய்ய முடியும் என அறிவித்தார்.

ரசிகர்களும், தமிழக மக்களும் தன்னுடைய இந்த முடிவை ஏற்றுக் கொள்ள வேண்டும் என ரஜினிகாந்த் அறிக்கை வெளியிட்டார்.

இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

ஆனாலும் தலைவர் அரசியலுக்கு வர வேண்டும் என ரஜினி ரசிகர்கள் தினம் தினம் வலியுறுத்தி வருகின்றனர்.

சென்னை உள்ளிட்ட சில பகுதிகளில் தர்ணா & ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நாளை மற்றொரு அறவழிப் போராட்டத்தை கையில் எடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

அதன்படி நாளை திண்டுக்கல் கல்லறை தோட்டத்தில் மாபெரும் அமைதி போராட்டம் நடைபெற உள்ளதாக அறிவித்துள்ளனர்.

Rajini fans protest against Rajinis political decision

ஜனவரி 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு..; காணும் பொங்கலுக்கு கடற்கரைகளில் அனுமதியில்லை.!

ஜனவரி 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு..; காணும் பொங்கலுக்கு கடற்கரைகளில் அனுமதியில்லை.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

TN Lock downகொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஜனவரி 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என தமிழக அரசு சற்றுமுன் அறிவித்துள்ளது.

இதில் சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்…

நோய் பரவல் நிலை மற்றும் வெளிநாடுகளில் உருமாறிய கொரோனா வைரஸின் தாக்கம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டும், கொரோனா வைரஸ் நோய்த்தொற்றை தடுப்பதற்காக தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், 31.12.2020 முடிய தமிழ்நாடு முழுவதும் தற்போதுள்ள பொது ஊரடங்கு உத்தரவு, ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளில் கீழ்க்கண்ட தளர்வுகளுடன், 31.1.2021 நள்ளிரவு 12 மணி வரை மேலும் நீட்டிப்பு செய்யப்படுகிறது.

தமிழ்நாடு முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர மற்ற பகுதிகளில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பல்வேறு தளர்வுகளுடன் கீழ்க்கண்ட பணிகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது :

1) நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, உள் அரங்கங்களில் மட்டும், அதிகபட்சம் 50 சதவிகித இருக்கைகள் அல்லது அதிகபட்சமாக 200 நபர்கள் பங்கேற்கும் வண்ணம் சமுதாய, அரசியல், பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாச்சார, கல்வி மற்றும் மதம் சார்ந்த கூட்டங்கள் நடத்த 1.1.2021 முதல் தொடர்ந்து அனுமதிக்கப்படுகிறது.

இக்கூட்டங்களுக்கு சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்களிடமும், சென்னை மாநகராட்சியில் காவல் துறை ஆணையர் அவர்களிடமும் உரிய முன் அனுமதி பெறுவது அவசியம்.

2) திரைப்படம் மற்றும் சின்னத்திரை உட்பட திரைப்படத் தொழிலுக்கான உள் அரங்கு மற்றும் திறந்தவெளியில் நடக்கும் படப்பிடிப்புகளுக்கு, வெளியிடப்பட்ட உரிய வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு பணி செய்யும் நபர்களின் எண்ணிக்கைக்கு உச்ச வரம்பின்றி பணி செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது.

3) நேரக் கட்டுப்பாடுகளை தளர்த்தி, அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும், வழக்கமான நேர நடைமுறைகளை பின்பற்றியும், நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றியும், பொதுமக்கள் தரிசனம் அனுமதிக்கப்படுகிறது.

ஏற்கனவே நடைமுறையில் உள்ள கீழ்காணும் செயல்பாடுகளுக்கான தடைகள், மறு உத்தரவு வரும் வரை தொடர்ந்து அமலில் இருக்கும்:-

புதிய உருமாறிய நோய்க் கிருமி பரவாமல் தடுக்க, வெளி மாநிலங்களிலிருந்து (புதுச்சேரி, ஆந்திரப்பிரதேசம், கர்நாடகம் மாநிலங்களைத் தவிர) தமிழ்நாட்டிற்குள் வருபவர்களுக்கு தற்போது நடைமுறையிலுள்ள இ-பதிவு முறை தொடரும்.

மத்திய உள் துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களைத் தவிர, சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை மத்திய அரசால் நீட்டிக்கப்பட்டுள்ளதால், இதற்கான தடை தொடரும்.

தமிழ்நாடு முழுவதும் நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் தற்போதுள்ள நடைமுறைகளின்படி, எந்தவிதமான தளர்வுகளுமின்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும்.

காணும் பொங்கல் அன்று கடற்கரைகளில் அளவுக்கு அதிகமான பொதுமக்கள் கூட்டம் கூடுவதால் கொரோனா தொற்று ஏற்படுவதை முன்னெச்சரிக்கையாக தடுக்கும் வகையில், மெரினா உள்ளிட்ட அனைத்து கடற்கரைகளிலும் காணும் பொங்கல் அன்று மட்டும் (16.1.2021) பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் குறைந்து வரும் சூழல் நீடிக்கவும், அதனை முழுமையாக தடுக்கவும், நாம் அனைவரும் தொடர்ந்து பாடுபட வேண்டும். குறிப்பாக, நோய்த் தொற்று குறைந்துள்ள நிலையில், மக்கள் பொது இடங்களில் அதிகமாக கூடுவதை தவிர்த்து, விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். பல்வேறு தளர்வுகளுக்கு தனித்தனியே நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் அவ்வப்போது அரசாணைகளாக வெளியிடப்பட்டுள்ளன.

இந்த நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை அனைவரும் தவறாது கடைபிடிப்பதை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும்.

பொதுமக்கள் வெளியே செல்லும்போதும், பொது இடங்களிலும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். பொதுமக்கள் வீட்டிலும், பணிபுரியும் இடங்களிலும் அடிக்கடி சோப்பை பயன்படுத்தி கை கழுவியும், சமூக இடைவெளியை தவறாமல் கடைபிடித்தும், அவசிய தேவை இல்லாமல் வெளியில் செல்வதைத் தவிர்த்தும், அரசுக்கு முழு ஒத்துழைப்பு நல்கினால் தான், இந்த நோய்த் தொற்றுப் பரவலை முற்றிலுமாக கட்டுப்படுத்த முடியும்“ என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

TN lockdown guidelines for Jan 2021

More Articles
Follows