தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு பலரும் நிவாரண நிதியை அளித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினை சென்னை தலைமைச் செயலகத்தில் சந்தித்த நடிகர் பிரசாந்த் மற்றும் அவருடைய தந்தையும் நடிகருமான தியாகராஜன் ஆகியோர் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.
அப்போது கொரோனா நிவாரணப் பணிகளுக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ. 10 லட்சத்துக்கான காசோலையை இருவரும் வழங்கினர்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசியதாவது…
“முதலமைச்சரை மரியாதை நிமிர்த்தமாக சந்தித்தேன். மேலும் கொரோனாவிற்கான முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு 10 லட்சம் ரூபாய் நிதி உதவி அளித்துள்ளேன்.
முதலமைச்சரின் வேகம் சிறப்பாக உள்ளதோடு, செயல்பாடுகள் சிறப்பாக இருக்கிறது.. மிகவும் கடினமாக உழைத்து வருகிறார்.. கலைஞரை பார்ப்பது போலவே உள்ளது. அவரை சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி.
Prashanth family donated Rs 10 lakhs to corona relief fund