தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சமீபத்தில் ‘விருமன்’ பட இசை வெளியீட்டு விழா மதுரையில் நடைபெற்றது.
இந்த படத்தில் நடித்திருந்த சூரி அந்த விழா மேடையில் பேசும்போது… ஆயிரம் கோயில்கள் கட்டுவதை விட பள்ளிக்கூடங்கள் கட்டலாம் என நடிகர் சூர்யாவின் கல்வி சேவையை பாராட்டி பேசி இருந்தார்.
இது இந்துக்களிடையே சில பிரிவினர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியது.
எப்போதும் கோயில்களை கூறி வைத்தே சிலர் பேசி வருகின்றனர். ஆனால் மசூதி & சர்ச்சைகளைப் பற்றி யாரும் பேசுவது இல்லை என கருத்து தெரிவித்திருந்தனர்.
இதனையடுத்து மற்றொரு பிரஸ்மீட்டில் அதற்கு மன்னிப்பு கேட்டார் சூரி.
நான் இந்து கடவுளை வணங்குபவன் என பேசி இருந்தார்.
இந்த நிலையில் இன்று சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைவரது வீடுகளிலும் தேசிய கொடி ஏற்ற வேண்டும் என பாரத பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்து இருந்தார்.
நடிகர் ரஜினிகாந்த் விஜய் ஆகியோரது வீடுகளில் தேசிய கொடி ஏற்றப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நடிகர் சூரி தன் வீட்டில் தேசியக்கொடியை ஏற்றி உள்ளார். ஆனால் அது இப்போது சர்ச்சையாகி உள்ளது.
வீடுகளை துடைக்கும் மாப்பிள் இருக்கும் கம்பை கழற்றி அதில் தேசியக் கொடியை ஏற்றி இருக்கிறார்.
இந்திய தேசியக்கொடி ஏற்றிய புகைப்படத்தை நடிகர் சூரி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
வீட்டை சுத்தம் செய்யும் குச்சியில் தேசிய கொடியை கட்டுவது தேசியக்கொடியை அவமதிப்பதாகும் என நெட்டிசன்கள் சூரியை விளாசி வருகின்றனர்.
தற்போது அடுத்த சர்ச்சையில் சிக்கி விட்டார் சூரி.
Actor Soori hoists National flag at home made controversy