தேசிய கொடி ஏற்றிய சூரி.; அடுத்த சர்ச்சையில் சிக்கினார்.. நெட்டிசன்கள் விளாசல்

தேசிய கொடி ஏற்றிய சூரி.; அடுத்த சர்ச்சையில் சிக்கினார்.. நெட்டிசன்கள் விளாசல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சமீபத்தில் ‘விருமன்’ பட இசை வெளியீட்டு விழா மதுரையில் நடைபெற்றது.

இந்த படத்தில் நடித்திருந்த சூரி அந்த விழா மேடையில் பேசும்போது… ஆயிரம் கோயில்கள் கட்டுவதை விட பள்ளிக்கூடங்கள் கட்டலாம் என நடிகர் சூர்யாவின் கல்வி சேவையை பாராட்டி பேசி இருந்தார்.

இது இந்துக்களிடையே சில பிரிவினர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியது.

எப்போதும் கோயில்களை கூறி வைத்தே சிலர் பேசி வருகின்றனர். ஆனால் மசூதி & சர்ச்சைகளைப் பற்றி யாரும் பேசுவது இல்லை என கருத்து தெரிவித்திருந்தனர்.

இதனையடுத்து மற்றொரு பிரஸ்மீட்டில் அதற்கு மன்னிப்பு கேட்டார் சூரி.

நான் இந்து கடவுளை வணங்குபவன் என பேசி இருந்தார்.

இந்த நிலையில் இன்று சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைவரது வீடுகளிலும் தேசிய கொடி ஏற்ற வேண்டும் என பாரத பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்து இருந்தார்.

நடிகர் ரஜினிகாந்த் விஜய் ஆகியோரது வீடுகளில் தேசிய கொடி ஏற்றப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நடிகர் சூரி தன் வீட்டில் தேசியக்கொடியை ஏற்றி உள்ளார். ஆனால் அது இப்போது சர்ச்சையாகி உள்ளது.

வீடுகளை துடைக்கும் மாப்பிள் இருக்கும் கம்பை கழற்றி அதில் தேசியக் கொடியை ஏற்றி இருக்கிறார்.

இந்திய தேசியக்கொடி ஏற்றிய புகைப்படத்தை நடிகர் சூரி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

வீட்டை சுத்தம் செய்யும் குச்சியில் தேசிய கொடியை கட்டுவது தேசியக்கொடியை அவமதிப்பதாகும் என நெட்டிசன்கள் சூரியை விளாசி வருகின்றனர்.

தற்போது அடுத்த சர்ச்சையில் சிக்கி விட்டார் சூரி.

Actor Soori hoists National flag at home made controversy

இணைவதற்கு முன்பே முட்டி மோதும் நடிகர் விக்ரம் & இயக்குனர் ரஞ்சித்

இணைவதற்கு முன்பே முட்டி மோதும் நடிகர் விக்ரம் & இயக்குனர் ரஞ்சித்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஞானவேல்ராஜா தயாரிக்கும் புதிய படத்தில் நடிகர் சீயான் விக்ரம் & இயக்குனர் ரஞ்சித் இணைகின்றனர்.

எனவே இந்த படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ஆனால் இந்த கூட்டணிக்கு முன்பே இவர்களின் 2 படங்கள் ஒரே நாளில் ரிலீசாகி மோதவுள்ளன.

அதுபற்றிய விவரம் வருமாறு…

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் ‘கோப்ரா’.

இந்த படத்தில் மதியழகன், கோப்ரா, பிளாக் ஹோப்ரா உள்ளிட்ட வித்தியாசமான வேடங்களில் நடித்திருக்கிறாராம் விகரம்.

கேஜிஎப் புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி நாயகியாக நடிக்க பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இவர்கள் இருவரும் இந்த படத்தின் மூலம் கோலிவுட்டில் நுழைகின்றனர்.

இவர்களுடன் மியா ஜார்ஜ், ரோஷன் மேத்யூ, பத்மபிரியா, முகமது அலி பெய்க், கனிகா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். ஏஆர் ரஹ்மான் இசை அமைத்துள்ளார்.

இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பாக கே எஸ் எஸ் லலித்குமார் தயாரித்துள்ளார்.

இப்படத்தின் வெளியீட்டு உரிமையை உதயநிதியின் ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் கைப்பற்றியுள்ளது.

இந்த படம் தமிழ் தெலுங்கு கன்னடம் ஆகிய மொழிகளில் வருகிற ஆகஸ்ட் 31-ஆம் தேதி வெளியாகிறது என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

அதுபோல…

பா.ரஞ்சித் இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராமன் நடித்துள்ள படம் ‘நட்சத்திரம் நகர்கிறது’.

இந்தப் படத்தில் நாயகியாக துஷாரா விஜயன், ‘டான்சிங் ரோஸ்’ ஷபீர், கலையரசன் உட்பட பல நடிகர்கள் நடித்துள்ளனர்.

கிஷோர் குமார் ஒளிப்பதிவில் டென்மா இசையமைத்துள்ளார். இப்படத்தை யாழி பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நீலம் புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ளது.

இந்த படமும் ஆகஸ்ட் 31-ம் தேதியான விநாயகர் சதுர்த்தி அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்துடன் மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடித்துள்ள ‘பிசாசு 2’ படமும் இதே ஆகஸ்ட் 31ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Actor Vikram and Director Ranjith Clash

‘தடை உடை’-க்க வரும் பாபி சிம்ஹா.; ரோகிணிக்கு கேக் வெட்டிய படக்குழு

‘தடை உடை’-க்க வரும் பாபி சிம்ஹா.; ரோகிணிக்கு கேக் வெட்டிய படக்குழு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்ற நடிகர் பாபி சிம்ஹாவின் புதிய திரைப்படமான ‘தடை உடை’ எனும் படத்தின் படப்பிடிப்பு விரைவில் நிறைவடையவிருக்கும் சூழலில், இப்படத்தில் அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் நடிகை ரோகிணி, தன்னுடைய பங்களிப்பை நிறைவு செய்திருக்கிறார்.

அறிமுக இயக்குநர் என். எஸ். ராகேஷ் இயக்கத்தில் தயாராகி வரும் முதல் திரைப்படம் ‘தடை உடை’.

இதில் நடிகர் சிம்ஹா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை மிஷா நரங்க் நடித்திருக்கிறார்.

இவர்களுடன் நடிகர் பிரபு, செந்தில், நடிகை ரோகிணி, மணிகண்ட பிரபு, சரத் ரவி, ‘பழைய ஜோக்’ தங்கதுரை உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

சக்தி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹதீஃப் இசையமைத்திருக்கிறார்.

ஆக்சன் திரில்லர் ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை முத்ராஸ் ஃபிலிம் ஃபேக்டரி எனும் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ரேஷ்மி சிம்ஹா பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்.

மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் முழுமையாக நிறைவு பெறவிருக்கிறது.

இந்நிலையில் நடிகை ரோகிணி தொடர்புடைய காட்சிகளின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை முன்னிட்டு, படக் குழுவினர் நடிகை ரோகிணியுடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடினர்.

 தடை உடை

Bobby Simha in next movie Thadai Udai

அப்போ கீர்த்தி.. இப்போ அதிதி.. எப்பவுமே காமெடியன்தான்.; எனக்கு ‘விருமன்’ டிக்கெட் கிடைக்கல – சூரி

அப்போ கீர்த்தி.. இப்போ அதிதி.. எப்பவுமே காமெடியன்தான்.; எனக்கு ‘விருமன்’ டிக்கெட் கிடைக்கல – சூரி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆகஸ்ட் 15, 2022, இன்று 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் சுதந்திர தினம் கோலாலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தமிழ் திரைப்பட பத்திரிக்கையாளர்கள் சங்கம் சார்பாக கொடியேற்றி உறுப்பினர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டு சுதந்திர தினம் விமர்சையாக கொண்டாடப்பட்டது. சிறப்பு விருந்தினராக நடிகர் சூரி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சங்கத்தின் சார்பாக கொடி ஏற்றி விழாவை சிறப்பித்தார்.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் சூரி-க்கு சங்கம் சார்பாக பொன்னாடை போற்றி நினைவு பரிசு கொடுத்து கௌரவிக்கப்பட்டது.

நடிகர் சூரி பேசுகையில்,

“அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள். இந்த நாளில் என்னை விழாவிற்கு அழைத்தமைக்கு மிக்க நன்றி. தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பாக தலைவி கவிதா அழைத்ததில் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன்.

நாம் இந்த நிமிடம் இந்த நொடி கொண்டாடிக் கொண்டிருக்கும் சுதந்திரம் சாதாரணமாக கிடைத்தது அல்ல.
இதற்கு பின்னால் பலரது உழைப்பும் தியாகமும் அடங்கி இருக்கிறது. எப்படி ஊரில் எல்லையில் இருக்கும் எல்லைச்சாமி நம்மை பாதுகாக்கிறதோ அதைப்போல நாட்டின் எல்லையில் இன்றளவும் நம்மை பாதுகாக்க உயிரைக் கொடுத்து போராடிக் கொண்டிருக்கின்றனர் ராணுவ வீரர்கள்.

சமீபத்தில் கூட எனது அருமை தம்பி மதுரையைச் சேர்ந்த லட்சுமணன் தற்கொலை படை மூலம் தனது இன்னுயிர் கொடுத்துள்ளார். அவரது தியாகம் சாதாரண தியாகம் அல்ல அவரது குடும்பத்தாருக்கும் அவரது அப்பா அம்மாவிற்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கல்கள் நீங்கள் வானுயர தலை நிமிர்ந்து நடக்கக் கூடிய அளவிற்கு அருமையான புதல்வனை பெற்றெடுத்துள்ளீர்கள்.

உருக்கமாக தொடர்ந்து பேசிய சூரி தனது அடுத்த படம் மற்றும் தற்போது ஓடிக்கொண்டிருக்கும் விருமன் குறித்தும் ஒரு சில வார்த்தைகள் பேசினார்.

எனக்கும் என் குடும்பத்தாருக்குமே விருமன் படத்திற்கு டிக்கெட் இருக்கின்றனவா என கேட்டேன் அதற்கு இல்லை என திரை அரங்கில் இருந்து பதில் வந்தது, எனில் இதைவிட ஒரு படத்திற்கு ஆரோக்கியம் என்ன இருக்க முடியும். அந்த அளவிற்கு அமோக வெற்றி படத்திற்கு கிடைத்திருக்கிறது.

தொடர்ந்து விடுதலை படம் குறித்து பத்திரிகையாளர்கள் சார்பாக கேள்விகள் கேட்கப்பட்டபோது பதிலளித்தார் சூரி.

ஒரு காமெடி நடிகனாக இருந்து இப்போது இந்த நிலைவரை வந்து இருக்கிறேன் எனில் அதற்கு என்னுடன் பயணித்த அத்தனை இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் தான் காரணம். முதன்முதலில் விடுதலை படத்தின் கதையை என்னிடம் வெற்றிமாறன் சார் சொல்லும்பொழுது இந்த கேரக்டரில் நிறைய சீன்கள் உள்ளன எப்படி இன்னும் இந்த கேரக்டரை வாங்கிவிடலாம் அல்லது அந்த கேரக்டர் நன்றாக இருக்கிறது என ஒவ்வொரு கேரக்டராக என் மனதுக்குள் யோசித்துக் கொண்டிருக்கையில் வெற்றிமாறன் சார் ‘நீங்க தான் மெயின் லீட் ‘ என்றார். அவர் கண் முன்பு என்னால் காட்டிக் கொள்ள முடியவில்லை.

என்னை வெளியே விட்டிருந்தால் வானத்தில் பறந்திருப்பேன். சாதாரண காமெடியனாக இருந்தவனுக்கு இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தது மிகப்பெரிய பாக்கியம் என்று கூறிய சூரி தான் கடந்து வந்த பாதை மூலம் தான் கற்றுக் கொண்ட அனுபவம் என்ன என்று மேலும் தொடர்ந்தார்.

எந்தத் துறை ஆனாலும் சரி முதலில் தன்னை தயார் செய்து கொள் உன் உடலை உன் ஆரோக்கியத்தை நீ முதலில் விரும்பு உன்னை நேசி அதைத்தான் என் அனுபவம் மூலம் கற்றுக் கொண்டேன். நான் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கை அத்தனை இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் என்னை நம்பி எனக்காக கொடுத்த வாய்ப்பு. மேலும் காமெடியனாக இருந்து சொல்ல வேண்டிய கருத்துக்கள் விஷயங்கள் எவ்வளவோ இருக்கின்றன என்னதான் நான் மெயின் கேரக்டராக நடித்தாலும் அதையும் நான் ஹீரோவாக பார்க்கவில்லை படத்தின் கேரக்டர் ஆக மட்டுமே பார்க்கிறேன்.

காமெடியன் சூரி என்பதே எனது அடையாளம் அதை எக்காலத்திலும் விடமாட்டேன். அதேபோல் எனது கேரக்டர் இப்படி மாறிவிட்டது நான் இத்தனை பேருடன் நடித்துக் கொண்டிருக்கிறேன் என சம்பளத்திலும் நான் எப்போதும் தீர்மானம் செய்ய மாட்டேன். அவர்கள் பார்த்து எனக்கு இப்போது வரை என்ன நியமித்தார்களோ என்ன கொடுக்கிறார்களோ அதைக் கொண்டுதான் என்னுடைய வாழ்க்கை பயணம் சென்று கொண்டிருக்கிறது. அவர்கள் கொடுக்கும் சம்பளம் அளவிற்கு என்னை நான் எப்படி தயார் செய்து கொள்ள முடியும் அதற்கு தகுதியானவனாக எப்படி மாற்றிக் கொள்ள முடியும் என்பதை மட்டுமே யோசிப்பேன். என்றவர்

மேலும் விருமன் படத்தில் தன்னுடன் சேர்ந்து நடித்த அதிதி சங்கர் குறித்தும் சில வார்த்தைகள் பேசினார்.

தங்கை கீர்த்தி சுரேஷ் கொஞ்சம் அதிகமாக பிடிக்கும் . மற்ற ஹீரோயின்களையும் பிடிக்கும். தற்போது விருமன் பட நாயகி அதிதி. அவரது பெயரை சரியாக உச்சரிக்கவே பலவிதமாக பயிற்சி எடுத்துக் கொண்டேன்.

ஒரு கூட்டத்திற்குள் நுழைந்தால் இருக்கும் அத்தனை பேரின் பெயர்களையும் மிகச் சரியாக மனதில் ஏற்றி விடும் அளவிற்கு திறமையானவர் . கேரக்டரை உள்வாங்கி நடிப்பதில் திறமைசாலி. நிச்சயம் அதிதி சங்கருக்கு மிகப்பெரிய எதிர்காலம் இருக்கிறது. மிகப்பெரிய நடிகையாகும் அத்தனை வாய்ப்புகளும் உள்ளன.

ஒரு நாளில் 30 நிமிடங்கள் உடற்பயிற்சிக்கு ஒதுக்குங்கள் 30 சதவீதம் உடற்பயிற்சி எனில் 70 சதவீதம் நாம் உண்ணும் உணவுதான். எதை சாப்பிட்டாலும் அளவாக சரியான நேரத்தில் சாப்பிட கற்றுக் கொள்ளுங்கள். மிக்ஸி போல மேல மேல அரைக்காதீர்கள் என அழுத்தமாகவே உடல் ஆரோக்கியம் குறித்து பேசினார்.

சூரி பேசி முடிக்க அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி விழா இனிதே நிறைவடைந்தது..

Actor Soori talks about Keerthy Suresh and Aditi Shankar

ரஞ்சித் வெற்றிமாறன் லோகேஷ் ஆகியோருக்காக காத்திருக்கும் விஜய் தேவரகொண்டா

ரஞ்சித் வெற்றிமாறன் லோகேஷ் ஆகியோருக்காக காத்திருக்கும் விஜய் தேவரகொண்டா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாலிவுட்டின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான Dharma Productions உடன் இணைந்து Puri connects நிறுவனம் தயாரிக்க, பிரபல இயக்குநர் பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் பான் இந்திய நடிகர் விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே நடித்துள்ள திரைப்படம் லைகர் (Saala Crossbreed).

பிரமாண்டமாக உருவாகியுள்ள இப்படம் 25 ஆகஸ்ட் 2022 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

தமிழ் பதிப்பை தயாரிப்பாளர் விநியோகஸ்தர் RK சுரேஷ் தனது Studio 9 நிறுவனம் சார்பில் வெளியிடுகிறார்.

பட வெளியீட்டை ஒட்டி நாயகன் விஜய் தேவரகொண்டா, நாயகி அனன்யா பாண்டே, தயாரிப்பாளர் விநியோகஸ்தர் RK சுரேஷ் ஆகியோர் நேற்று பத்திரிக்கை ஊடக நண்பர்களை சந்தித்தனர்

இந்நிகழ்வினில்

தயாரிப்பாளர் விநியோகஸ்தர் R K சுரேஷ் பேசியதாவது…

விஜய் தேவரகொண்டாவிற்கு தமிழகத்தில் அறிமுகம் தேவையில்லை அவருக்கு இங்கு நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். அவருடைய இந்த படத்தினை நான் வெளியிடுவது பெரு மகிழ்ச்சி.

இந்தப்படம் கண்டிப்பாக பெரிய வெற்றியை பெறும். இனி விஜய் தேவரகொண்டா தொடர்ந்து தமிழ்ப்படங்கள் செய்வார் என நம்புகிறேன். அனைவரும் இப்படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி.

பின்னர் விஜய் தேவரகொண்டா நாயகி அனன்யா பாண்டேவிற்கு தமிழில் பேச கற்றுக்கொடுத்ததாக கூறினார்.

நாயகி அனன்யா பாண்டே பேசியதாவது…

நான் உங்களை காதலிக்கிறேன். உங்களுக்காக இந்த வார்த்தைகளை தமிழில் சொல்ல கற்றுக்கொண்டு வந்தேன். இந்தப்படம் மிகப்பிரமாண்டமான மாஸான திரைப்படம். இத்திரைப்படம் அனைத்து தரப்பினரையும் கவரும். இப்படியானதொரு படத்தில் எனக்கு வாய்ப்பு கிடைத்தது பெருமை. இத்திரைப்படம் மிகச்சிறப்பான அனுபவத்தை தந்தது. இப்படத்தை பார்த்து ரசியுங்கள் அனைவருக்கும் நன்றி.

நடிகர் விஜய் தேவரகொண்டா பேசியது…

தமிழகத்திற்கு வந்து ரொம்ப காலம் ஆகிவிட்டது. நோட்டா படத்தின் போது என் மீது தமிழக மக்கள் காட்டிய அன்பு மறக்க முடியாதது.

இந்தப்படம் ஒரு அற்புதமான ஆக்சன் படம். உலகெங்கிலும் உள்ள அனைத்து ஆக்சன் ரசிகர்களையும் கவரும் வண்ணம் படம் உருவாகியுள்ளது. நான் தமிழ் படங்களை தொடர்ந்து கவனித்து வருகிறேன். தமிழ் இயக்குநர்களுடன் பணிபுரிய ஆசை உள்ளது. பா ரஞ்சித், வெற்றி மாறன், லோகேஷ் போன்றோருடன் உரையாடி இருக்கிறேன். வரும் காலத்தில் அவர்களது படங்களில் கண்டிப்பாக நடிப்பேன்.

லைகர் பொறுத்தவரை இந்தியா முழுவதும் உள்ள அனைத்து ரசிகர்களும் ரசிப்பார்கள். இது மிக அற்புதமான அனுபவத்தை தரும் நன்றி.

விஜய் தேவர்கொண்டா, பூரி ஜெகன்நாத், கரண் ஜோஹர், சார்மி கவுரின் லைகர் (Saala Crossbreed) திரைப்படத்தின் “அக்டி பக்கடி” பாடல் வெளியாகியுள்ளது.

இப்படத்தை பாலிவுட்டின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான Dharma Productions உடன் இணைந்து Puri connects நிறுவனம் தயாரிக்கிறது.

பூரி ஜெகன்நாத், சார்மி கவுர், கரண் ஜோஹர் மற்றும் அபூர்வா மேத்தா ஆகியோர் இணைந்து படத்தை பிரமாண்டமாக தயாரித்து வருகின்றனர்.

விஷ்ணு சர்மா ஒளிப்பதிவு செய்கிறார், தாய்லாந்தைச் சேர்ந்த கிச்சா ஸ்டண்ட் பணிகளை கவனித்து கொள்கிறார்.

இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் தயாராகும் இந்த பான் இந்தியா திரைப்படம் 25 ஆகஸ்ட் 2022 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

நடிகர்கள்: விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன், ரோனித் ராய், விசு ரெட்டி, அலி, மகரந்த் தேஷ் பாண்டே மற்றும் கெட்அப் ஸ்ரீனு.

தொழில்நுட்பக் குழு:

இயக்குனர்: பூரி ஜெகன்நாத்
தயாரிப்பாளர்கள்: பூரி ஜெகன்நாத், சார்மி கவுர், கரண் ஜோஹர் மற்றும் அபூர்வா மேத்தா
பேனர்கள்: Puri Connects மற்றும் Dharma Productions
ஒளிப்பதிவு: விஷ்ணு சர்மா
கலை இயக்குனர்: ஜானி ஷேக் பாஷா
எடிட்டர்: ஜுனைத் சித்திக்
ஸ்டண்ட் இயக்குனர்: கிச்சா

விஜய் தேவரகொண்டா

Vijay Devarakonda talks about Tamil directors in Liger event

ரஜினி வீட்டில் தேசியக்கொடி.; விஜய்யும் நானும் பிரிந்து விட்டோம்.; சிம்புவுடன் இணைவேன் – சீமான்

ரஜினி வீட்டில் தேசியக்கொடி.; விஜய்யும் நானும் பிரிந்து விட்டோம்.; சிம்புவுடன் இணைவேன் – சீமான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் கோபிநாத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ஜிவி 2’.

இது ‘ஜிவி 1’ முதல் பாகத்தில் இரண்டாம் பதிப்பாகும்.

இந்த படத்தில் வெற்றி அஸ்வின் கருணாகரன் உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.

அப்போது சிறப்பு விருந்தினர்களாக சீமான் தம்பி ராமையா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதன்பின் பத்திரிகையாளர்கள் சந்தித்து பேசினார் சீமான்.

அப்போது பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது விஜய்யின் பகலவன் படத்தை இயக்குவது எப்போது? என்று கேள்வி கேட்டனர்.

அதற்கு சீமான் பதில் அளிக்கையில்…

” சில காரணங்களால் பகலவன் படம் படத்தில் விஜய் நடிக்கவில்லை. இனி அது நடக்காது.

நானும் விஜய்யும் பிரிந்து விட்டோம். எனவே அதில் நடிப்பார். சிம்புவை விரைவில் இயக்க உள்ளேன்.

ரஜினி விஜய் வீடுகளில் தேசியக்கொடி ஏற்றப்பட்டுள்ளதே என்று கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் பதில் அளிக்கையில்…

“8 ஆண்டுகளாக பாஜகவுக்கு இல்லாத தேசப்பற்று இப்போது மட்டும் வர காரணம் என்ன?

ஒருவேளை ரஜினி விஜய் அவர்கள் வீட்டில் தேசிய கொடி ஏற்றாவிட்டால் அவர்களுக்கு தேசப்பற்று இல்லையா? என்றும் கேட்பார்கள்..” என தெரிவித்தார் சீமான்.

Seeman talks about Rajini Vijay Simbu and National flag

More Articles
Follows