தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஜனநாயக நாட்டில் எல்லாருக்கும் கருத்து சுதந்திரம் உள்ளது.
அது சினிமா ஆனாலும், அரசியல் ஆனாலும் அனைவரும் அதை விமர்சனம் செய்ய தகுதியானவர்களே.
தற்போது வாட்ஸ் அப் மற்றும் ட்விட்டர் உள்ளிட்ட சாதனங்கள் நம் செல்போனிலே இருப்பதால் நொடிக்கும் நொடி, தாம் பார்க்கும் விஷயங்களை விமர்சனம் செய்து வருகின்றனர்.
அதிலும் சினிமா தியேட்டரில் படம் பார்த்துக் கொண்டிருக்கும்போதே படத்தின் காட்சிகளை விவரித்து, சூப்பர், மொக்கை என்றெல்லாம் விமர்சனம் செய்கின்றனர்.
இன்று வெளியாகியுள்ள இருமுகன் படத்தை பற்றி பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இதுகுறித்து நடிகர் சித்தார்த் தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது…
“படம் பார்த்துக் கொண்டிருக்கும் போதே ட்வீட் செய்தால், படத்தை முழுமையாக பார்ப்பதற்கு என்றே தனி மூளை வேண்டும்.
உங்களுக்கு படம் பிடித்திருந்தால் பாராட்டுங்கள். பிடிக்கவில்லை என்றால் பிடிக்கவில்லை என்று சொல்லுங்கள்.
படத்தை பார்க்காதீர்கள் என்று சொல்லாதீர்கள்” என காரசாரமாக பதிவிட்டுள்ளார்.