டிசம்பர் 2-ல் ரஜினி-கமல் ரசிகர்களுக்கு செம விருந்து

டிசம்பர் 2-ல் ரஜினி-கமல் ரசிகர்களுக்கு செம விருந்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

natrajஈராஸ் நிறுவனம் தயாரிப்பில் ராமு செல்லப்பா உருவாக்கியுள்ள படம் எங்கிட்ட மோதாதே.

இதில், நட்ராஜ், ராஜாஜி, சஞ்சிதா ஷெட்டி, பார்வதி நாயர், ராதாரவி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்ய, நடராஜன் சங்கரன் இசையமைத்துள்ளார்.

தமிழக தியேட்டர் வெளியீட்டு உரிமையை கே.ஆர்.பிலிம்ஸ் நிறுவன சரவணன் பெற்றுள்ளார்.

இதில் நட்ராஜ் தீவிர ரஜினி ரசிகராகவும் ராஜாஜி கமலின் தீவிர ரசிகராகவும் நடித்துள்ளனர்.

இப்படம் டிசம்பர் 2இல் வெளியாகவுள்ளது. எனவே அன்றைய தினம் ரஜினி-கமல் ரசிகர்களுக்கு இப்படம் பெரும் விருந்தாக அமையும் என கூறப்படுகிறது.

அச்சம் என்பது மடமையடா படத்தின் முதல்நாள் வசூல்

அச்சம் என்பது மடமையடா படத்தின் முதல்நாள் வசூல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

simbu manjima mohanகௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, மஞ்சிமா மோகன் நடித்துள்ள அச்சம் என்பது மடமையடா படம் நேற்று உலகளவில் வெளியானது.

இப்படத்திற்கு பெரும்பாலும் பாசிட்டிவ்வான விமர்சனங்களே வந்துள்ளன.

க்ளைமாக்ஸ் இன்னும் பெட்டராக இருந்து இருக்கலாம் எனவும் கருத்துக்கள் நிலவி வருகின்றன.

இந்நிலையில் இப்படத்தின் சென்னை வசூல் மட்டும், ரூ. 65 லட்சத்தை கடந்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

ரூ. 500, ரூ. 1000 நோட்டுக்கள் செல்லாது என கூறப்பட்டுள்ள நிலையில், இதன் வசூல் குறைந்துவிட்டதாக கூறப்படுகிறது.

சினிமா ஸ்டார்ஸ் இல்லாத வடிவேலு மகள் திருமணம்

சினிமா ஸ்டார்ஸ் இல்லாத வடிவேலு மகள் திருமணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vadivelu daughter marriageவடிவேலுவின் மகள் கார்த்திகாவின் திருமணம் இன்று மதுரையில் உள்ள விரகனூர் சி.ஆர்.திருமண மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.

கார்த்திகா சி.ஏ படித்துள்ளார். இவர் ஐ.பி.எம்மில் வேலை பார்த்துவரும் கணேஷ்குமாரை மணம் முடித்துள்ளார்.

இதில் எந்த சினிமா பிரபலங்களும் கலந்துகொள்ளவில்லை.

மிக நெருக்கமான உறவினர்களுக்கு மட்டுமே திருமணத்தில் கலந்துகொள்ள அழைப்பு கொடுக்கப்பட்டதாம்.

தீராத சிக்கலில் சிவகார்த்திகேயன்; சவாலை வெல்வாரா?

தீராத சிக்கலில் சிவகார்த்திகேயன்; சவாலை வெல்வாரா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sivakarthikeyan stillsரெமோ படத்தின் நன்றி தெரிவிக்கும் சந்திப்பில் சிவகார்த்திகேயன் கண்ணீர் மல்கிய பேச்சு திரையுலகில் பெரும் பஞ்சாயத்தை உருவாக்கிவிட்டது.

இதனிடையில் ஞானவேல்ராஜா, எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன், வேந்தர் மூவிஸ் மதன் உள்ளிட்ட மூன்று தயாரிப்பாளர்களுக்கு ஒப்புக் கொண்டபடி கால்ஷீட் தர மறுத்துள்ளதாக சிவகார்த்திகேயன் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

ஆனால் ஞானவேல்ராஜாவிடம் கொடுத்த வாக்குறுதியை மட்டும் சிவகார்த்திகேயன் தரப்பு ஒப்புக் கொண்டது.

இந்நிலையில் மீண்டும் 24 ஏஎம் ஸ்டூடியோ தயாரிக்கும் படத்தில் நடிக்க தயாராகிவிட்டார் சிவா

இதற்கு ஒத்துழைப்பு தரக்கூடாது என சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்கள் ஃபெப்சி அமைப்பைக் கேட்டுக் கொண்டனர்.

இது தொடர்பாக தயாரிப்பாளர் சங்கத்தில் அவசரக் கூட்டம் இன்று நடைபெற உள்ளது.

சிவகார்த்திகேயனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டால், அவர் பல சிக்கல்களை சந்திக்க தயாராக இருக்கவேண்டும் என்கின்றனர் விவரமறிந்தவர்கள்.

வாய் திறக்காத ரஜினி, இதற்கு மட்டும் ஏன்.? சீமான் சீற்றம்

வாய் திறக்காத ரஜினி, இதற்கு மட்டும் ஏன்.? சீமான் சீற்றம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

seeman and rajinikanthகறுப்பு பணத்தை ஒழிக்கும் திட்டமாக ரூ. 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என மோடி அறிவித்தார்.

இதற்கு ரஜினி, கமல் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.

இதுகுறித்து சீமான் கூறியதாவது…

மோடியின் அதிரடி திட்டத்தால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பணக்காரர்கள் வரிசையில் நிற்கிறார்களா? நடுத்தர மக்கள்தான் பேங்க் வாசலில் கால்கடுக்க நிற்கின்றனர்.

தஞ்சாவூரில் 8 கோடி ரூபாய் பிடிபட்டுள்ளது.

அதில், இரண்டாயிரம் ரூபாய் புது நோட்டுகளும் பிடிபட்டுள்ளன.

வங்கிக்கே இன்றுதான் அந்த நோட்டுக்கள் வந்துள்ளன.

அதற்குள் அவர்கள் கைகளுக்கு எப்படிச் சென்றது?

வரி ஏய்க்காமல் இருக்கும் நடிக்கும் நடிகர், நடிகைகள் யார்?

எதற்கும் கருத்துச் சொல்லாத ரஜினி, இதற்கு மட்டும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் என்ன?

காவிரி மேலாண்மை வாரியத்தை மோடி அரசு அமைக்கவில்லை’ எனக் கேள்வி கேட்டாரா ரஜினி?

காவிரியால் கர்நாடக தமிழர்கள் பாதிக்கப்பட்டார்களே, அதைப் பற்றி பேசினாரா? ” என்றார் சீமான்.

அரசு தேர்வில் ‘கவர்ச்சி பாம்’ சன்னி லியோனின் பெயர்

அரசு தேர்வில் ‘கவர்ச்சி பாம்’ சன்னி லியோனின் பெயர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sunny leoneஅரசுப் பொதுத்தேர்வில் நாட்டில் உள்ள அனைத்து துறைகளை பற்றிய கேள்விகள் கேட்கப்படுவது வழக்கமான ஒன்று.

அதுபோல் சினிமா துறை சம்பந்தமான கேள்விகளும் அரசுத் தேர்வில் இடம் பெற்று வருகிறது.

ஆனால் சில நாட்களுக்கு முன்னர் மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற ஒரு தேர்வில் கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியின் கேர்ள் பிரண்ட் யார்? என்ற கேள்வி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் மத்திய அரசு பணியாளர்களுக்கான UPSC தேர்வில் சன்னிலியோனின் பெயர் இருந்ததால் இது தேர்வு எழுதியவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியதாம்.

அந்த கேள்வியில் ஒரு புத்தகத்தின் பெயரை குறிப்பிட்டு அந்த புத்தகத்தை எழுதியவர் யார்? என்ற கேள்வி கேட்கப்பட்டு இருந்தது.

கொடுக்கப்பட்ட நான்கு பதில்களில் முதலாவதாக சன்னிலியோன் பெயரும், அதற்கான ஒரிஜினல் விடையை நான்காவதாக குறிப்பிட்டு இருந்தார்களாம்.

அதற்கான விடை சன்னி லியோன் இல்லையென்று தெரிந்தும் அதை குறிப்பிட்டது ஏனோ? என பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஜெய் நடித்த வடகறி என்ற தமிழ் படத்தில் சன்னி லியோன் ஆட்டம் போட்டது குறிப்பிடத்தக்கது.

More Articles
Follows