தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஸ்ரீதேனாண்டாள் பிலம்ஸ் தயாரிப்பில் விஜய் நடித்துள்ள மெர்சல் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இப்படம் வருகிற அக். 18ல் உலகமெங்கும் வெளியாகிறது.
இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர் சென்னை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்த மனுவில்…
மெர்சல் படத்திற்கு கோடிக்கணக்கில் செலவு செய்துள்ளோம். புதுப்படங்களை திருட்டுத்தனமாக இணையத்தளங்களில் வெளியிடுவதால் பெரும் நஷ்டம் ஏற்படுகிறது.
எனவே மெர்சல் படத்தை திருட்டுத்தனமாக வெயியிடும் இணையத்தளங்களை தடை செய்ய கோரியிருந்தார்.
மனுவை விசாரித்த அனிதா சுமந்த் தீர்ப்பில் கூறியதாவது…
மெர்சல் படத்தை திருட்டுத்தனமாக வெளியிடுவதற்கு 2600 இணையத்தள சேசை நிறுவனங்களுக்கு தடை விதித்தார்.
மேலும் இது தொடர்பாக பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் 23ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.