தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் சூர்யா.
இந்தாண்டு வெளியான இவரின் 24 படம் நல்ல வரவேற்பை பெற்றது.
ஆனால் இதற்குமுன் வெளியான அஞ்சான் மற்றும் மாசு என்கிற மாசிலாமணி படங்கள் ஆகியவை வெற்றிப் பெறவில்லை.
இருந்தபோதிலும் சூர்யாவுக்கு ரசிகர்கள் அதிகரித்து வருகின்றனர்.
இந்நிலையில் ட்விட்டரில் இவரை பின் தொடர்பவர்கள் எண்ணிக்கை ஒரு மில்லியனை கடந்துள்ளது.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது…
“என்னுடைய நல்ல நேரத்திலும் கெட்ட நேரத்திலும் என் மீது அளவு கடந்த அன்பை காண்பித்தீர்கள்.
நன்றி மட்டும் சொல்வது போதாது. உங்கள் அனைவரையும் நேசிக்கிறேன்.” என பதிவிட்டுள்ளார்.