விஜய்-சூர்யா படங்களில் நடித்தவருக்கு தலையில் பயங்கர அடி..!

விஜய்-சூர்யா படங்களில் நடித்தவருக்கு தலையில் பயங்கர அடி..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor vidyut jammwalவிஜய்யின் துப்பாக்கி, சூர்யாவின் அஞ்சான் போன்ற படங்களில் நடித்தவர் வித்யூத் ஜம்மால்.

இவர் தற்போது ஜங்கி என்ற அதிரடி ஆக்ஷன் படத்தில் நடித்து வருகிறார்.

படத்தின் ஒரு காட்சியில் நடித்துக் கொண்டிருக்கும் போது திடீரென எதிர்பாராமல் அவரது தலையில் பலத்த அடி விழுந்துள்ளது.

இதனால் அதிர்ச்சியான படக்குழு அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்துள்ளனர்.

தற்போது அவர் குணமாகி வருவதாக கூறப்படுகிறது.

லைகாவுடன் இணைந்த சிம்பு-விஜய்சேதுபதி; பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார் மணிரத்னம்

லைகாவுடன் இணைந்த சிம்பு-விஜய்சேதுபதி; பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார் மணிரத்னம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

simbu and mani ratnamமணிரத்னம் இயக்கத்தில் சிம்பு, விஜய்சேதுபதி, அரவிந்தசாமி, அருண்விஜய் ஆகிய 4 ஹீரோக்கள் ஒரே படத்தில் இணைகின்றனர்.

இதில் நாயகிகளாக ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதிராவ் நடிக்கின்றனர் என்பதை பார்த்தோம்.

இப்படத்திற்கு ஏஆர்.ரஹ்மான் இசை அமைக்க, சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார்.

ஸ்ரீகர்பிரசாத் எடிட்டிங் செய்ய மணிரத்னமே தன் மெட்ராஸ் டாக்கீஸ் சார்பாக தயாரிக்கிறார்.

இத்துடன் லைக்கா நிறுவனமும் இணைந்துள்ளது.

இந்நிலையில் செக்கச் சிவந்த வானம் என்று இப்படத்திற்கு தலைப்பிட்டு பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர்.

காதலர் தினத்தில் விஜய்சேதுபதியின் ஜுங்கா விருந்து

காதலர் தினத்தில் விஜய்சேதுபதியின் ஜுங்கா விருந்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

junga stillsகோகுல் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்து வரும் படம் ‘ஜுங்கா’.

இந்த படத்தின் ஆடியோ விநியோக உரிமையை பிரபல திங்க் மியூசிக் நிறுவனம் கைபற்றியுள்ளது.

இயக்குனர் கோகுலும், விஜய் சேதுபதியும் இணைந்த ‘இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்திற்கு இசை அமைத்த சித்தார்த் விபின் தான் இப்படத்திற்கும் இசை அமைத்துள்ளார்.

இவரது இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் சிங்கிள் டிராக் காதலர் தினமான ஃபிப்ரவரி 14ஆம் தேதி வெளியாகவுள்ளது.

மற்ற பாடல்கள் விரைவில் வெளியாகும்

இந்த படத்தில் விஜய்சேதுபதியுடன் சாயிஷா, மடோனா செபாஸ்டியன் இருவரும்
நாயகிகளாக நடிக்கின்றனர்.

மெர்சல் தயாரிப்பாளருக்காக ரஜினியை இயக்குகிறாரா அட்லி..?

மெர்சல் தயாரிப்பாளருக்காக ரஜினியை இயக்குகிறாரா அட்லி..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanth and atleeஷங்கரின் உதவியாளராக ரஜினியின் எந்திரன் படத்தில் பணிபுரிந்தவர் அட்லி.

அப்போதே சூப்பர் ஸ்டாருக்கு அறிமுகமாகி விட்டார் அட்லி.

இதனையடுத்து ராஜா ராணி, தெறி, மெர்சல் ஆகிய படங்களை இயக்கி ஹாட்ரிக் ஹிட் கொடுத்து விட்டார்.

எனவே அட்லி படத்தின் அடுத்த ஹீரோ என்ற கேள்விக்கு விடை தெரியாமல் இருந்து வந்தது.

இந்நிலையில் ரஜினியை சந்தித்து அட்லி கதை சொன்னதாகவும் அவரும் ஓகே சொல்லிவிட்டதாக கூறப்படுகிறது.

இப்படத்தை மெர்சல் தயாரிப்பாளர் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

ஒருவேளை இது உறுதியானால் இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம்.

காதலர் தினத்தில் ரசிகர்களுக்காக மோதும் சிம்பு-சிவகார்த்திகேயன்

காதலர் தினத்தில் ரசிகர்களுக்காக மோதும் சிம்பு-சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

simbu and sivakarthikeyanகௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, மஞ்சிமா மோகன் ஜோடியாக நடித்த படம் ‘அச்சம் என்பது மடமையடா’.

ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்த இப்படத்தின் பாடல்கள் சூப்பர் ஹிட்டானது.

இப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும் காதலர்களிடையே பரபரப்பாக பேசப்பட்டது.

அதுபோல், சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘ரெமோ’.

அனிருத் இசையமைத்திருநத இப்படத்தை அறிமுக இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கியிருந்தார்.

இந்நிலையில் இந்த இரு படங்களை காதலர் தினத்தை முன்னிட்டு மீண்டும் திரையிட உள்ளனர்.

சென்னையில் உள்ள பிரபல திரையரங்கம் இதற்கான ஏற்பாட்டை செய்துள்ளது.

உங்களுக்கு பிடிச்ச ஹீரோயின் சம்பளம் எவ்வளவு தெரியுமா..?

உங்களுக்கு பிடிச்ச ஹீரோயின் சம்பளம் எவ்வளவு தெரியுமா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kollywood actressஆண்கள் இல்லாமல் கூட ஒரு சில சினிமாக்கள் வந்துள்ளன. ஆனால் பெண்கள் இல்லாமல் சினிமா எடுக்க முடியுமா? என்பது பெரும் சந்தேகம்தான்.

ஆனால் ஹீரோக்களை விட ஹீரோயின்களுக்கு சம்பளம் குறைவு என்பதே நிதர்சன உண்மை.

அண்மைக்காலமாக சில முன்னணி நாயகிகள் நாயகன் இல்லை என்றாலும் கூட தங்கள் கேரக்டர் எப்படி உள்ளது? சம்பளம் எவ்வளவு? என்பதை குறி வைத்தே கதைகளை கேட்டு வருகின்றனர்.

அந்த நாயகிகள் யார் என்பது உங்களுக்கு தெரியும்தானே…?

அந்த டாப் ஹீரோயின்கள் சம்பளம் எவ்வளவு என்பது குறித்த ஒரு பார்வை இதோ..

நயன்தாராவும், அனுஷ்காவும் முதல் இடத்தில் இருக்கிறார்கள். இவர்கள் சம்பளம் ரூ.4 கோடியில் இருந்து 5 கோடியாக உயர்ந்துள்ளது.

இவர்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படங்கள் தொடர்ந்து வெற்றி பெறுவதே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.

காஜல் அகர்வால் மற்றும் தமன்னாவின் சம்பளம் தற்போது ரூ.2 கோடியாக உயர்ந்துள்ளது.

இவர்களைத் தொடர்ந்து நடிகை அமலாபாலும் ரூ.2 கோடி சம்பளம் கேட்கிறாராம்.

த்ரிஷா தற்போது 1.5 கோடி வரை சம்பளம் வாங்குகிறார்.

முன்னணி ஹீரோக்களுடன் டூயட் பாடும் கீர்த்தி சுரேஷ் ஒரு கோடி வரை சம்பளம் வாங்குகிறார்.

திருமணத்திற்கு பிறகும் தன் சம்பளத்தை உயர்த்தியுள்ளார் சமந்தா. இவரது சம்பளம் 2 கோடியை நெருங்குகிறதாம்.

ரகுல் பிரீத் சிங் கின் சம்பளம் தீரன் அதிகாரம் ஒன்று படம் வசூலுக்கு பிறகு ரூ.1½ கோடியாக உயர்ந்துள்ளது.

More Articles
Follows