தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
உலகநாயகன் கமல்ஹாசன் நடத்திவரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு இந்து மக்கள் கட்சி கடும் கண்டங்களை தெரிவித்து போலீசில் புகார் அளித்தது என்பதை பார்த்தோம்.
எனவே இது தொடர்பாக பேச பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார் கமல்ஹாசன்.
அப்போது பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.
ஜிஎஸ்டியை நான் எதிர்க்கவில்லை. அதில் சில நெருடல்கள் உள்ளது.
பிக்பாஸை தடை செய்ய முடியாது. அது கலாச்சாரத்திற்கு கேடு என்றால், முத்தக்காட்சியில் நடிக்கும்போது ஏன் யாரும் எதிர்க்கவில்லை.?
முத்தக்காட்சியால் சீரழியாத சமூகம் பிக்பாஸ் நிகழ்ச்சியால் சீரழிந்துவிடப் போகிறதா?
என்னை கைது செய்யவேண்டும் என்று சொல்பவர்களுக்கு நான் பதில் சொல்லவேண்டிய அவசியம் இல்லை.
சண்டியர் என்ற பெயரை என் படத்திற்கு நான் வைத்தபோது சிலர் எதிர்த்தனர். அப்போது ஆளும் கட்சி ஒன்றும் சொல்லவில்லை.
நான் பெயரை மாற்றும் சூழ்நிலை ஏற்பட்டது. அதன்பின்னர் அதே பெயரில் ஒரு படம் உருவானபோது அதே கட்சித்தான் ஆட்சியில் இருந்தது.
கட்சியும் மக்களும் அதே வேடிக்கைத்தான் பார்த்தார்கள்.
சத்யமேவ ஜயதே என்ற இயக்கத்தின் மூலம் 35 வருடங்களாக நற்பணிகளை செய்துக் கொண்டுதான் வருகிறேன்.
இப்போது ஆட்சியை விமர்ச்சித்து வருவது போல, ரஜினி ஆட்சிக்கு வந்தால் அவரின் தவறுகளை விமர்சிப்பேன்.
நல்லது செய்தால் அதை வரவேற்பேன்.” என்று பேசினார் கமல்ஹாசன்.
Kamal open talk about Bigboss GST Rajini Political Entry