தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர்கள் : சிம்பு, மஞ்சிமா மோகன், பாபா சேகல், சதீஷ் கிருஷ்ணன் (டான்ஸர்), டேனியல் பாலாஜி மற்றும் பலர்.
இசை : ஏஆர் ரஹ்மான்
ஒளிப்பதிவு : டான் மாகர்துர்
படத்தொகுப்பு : ஆண்டனி கான்ஷேல்வஸ்.
இயக்கம் : கௌதம் வாசுதேவ் மேனன்
பி.ஆர்.ஓ.: சுரேஷ் சந்திரா
கதைக்களம்…
சிம்புவின் தங்கையின் தோழி மஞ்சிமா மோகன். அடிக்கடி சிம்புவின் வீட்டிற்கு வருவதும் போவதுமாக மஞ்சிமா இருப்பதால் காதலும் வளர்கிறது.
சிம்புவுக்கு பைக் மீது கொள்ளை பிரியம்.
ஒரு சூழ்நிலையில் இருவரும் நெடுந்தூரம் பைக்கில் செல்கின்றனர்.
ரொமான்டிக்காக செல்லும் இந்த பயணம் ஒரு கட்டத்தில் ஆக்ஷனுக்கு மாறுகிறது.
ஒரு விபத்தில் இவர்கள் சிக்கிக் கொள்ள, மஞ்சிமா தொலைந்து விடுகிறார்.
அதன் பின்னர் சிம்பு என்ன செய்தார்? மஞ்சிமா எங்கே சென்றார்? என்பதே படத்தின் மீதிக்கதை.
கதாபாத்திரங்கள்…
சிம்பு யதார்த்த நடிப்பால் கவர்கிறார். வீட்டில் இருந்துக்கொண்டு பெற்றோர், மற்றும் சிஸ்டருக்கு தெரியாமல் மஞ்சிமாவை சைட் அடிக்கும் போது இளநெஞ்சங்களில் கிக் ஏற்றுகிறார்.
பைக்கை லவ் செய்யும் காட்சிகளில் பைக் பிரியர்களையும் பிக்அப் செய்கிறார்.
ரொமான்ஸ், ஆக்ஷன் இரண்டிலும் ரசிகர்களை ஏமாற்றவில்லை.
தமிழில் முதல் படமாக இருந்தாலும், அதற்குமுன்பே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிட்டார். இனி மஞ்சிமாவை நிச்சயம் ரசிகர்கள் கொஞ்சத்தான் போகிறார்கள்.
மாடர்னாகவும் ஹோம்லியாக வந்து கிறங்கடிக்கிறார்.
கௌதம் படத்தில் நாயகிகளுக்கு முக்கியத்துவம் இருக்கும். அதே பார்முலா இதிலும் குறையில்லை.
படம் முழுக்க இவர்களை சுற்றி நகர்கிறது. இதனால் இளவட்டங்களுக்கு இப்படம் விருந்தாக அமையும்.
போலீசாக வரும் பாபா சேகல் கேரக்டரில் இன்னும் வலு சேர்த்திருக்கலாம். சிம்புவின் நண்பராக வரும் சதீஷ் மற்றும் குழுவினர் மற்றும் டேனியல் பாலாஜி ஆகியோர் பொருத்தமான தேர்வு.
தொழில்நுட்ப கலைஞர்கள்…
கௌதம் படங்களில் எப்பவும் ஸ்டைலிஷ் பீல் இருக்கும். எந்தவொரு ப்ரேமிலும் ஒளிப்பதிவாளர் சபாஷ் போட வைக்கிறார்.
ஷோக்காளி பாடலை எப்படிதான் பாடினார்களோ தெரியவில்லை. அப்படி ஒரு ஸ்பீட். விக்னேஷ் வரிகள் ரசிகர்களை கவரும்.
ஏஆர் ரஹ்மானின் இசையில் தள்ளிப்போகாதே பாடல்… நிச்சயம் காதலர்களின் காலர் டியூனாக என்றும் இருக்கும். (ஆனால் இப்பாடலின் டியூன் புரியாமல் பாட்டு எழுதியாக கவிஞர் தாமரை குறிப்பிட்டு இருந்தார்.)
கிளாசிக் டைரக்டர் என பெயர் எடுத்த கௌதம், இதில் ஆக்ஷனில் இறங்கியுள்ளார். அதையும் அவர் ஸ்டைலில் கையாண்டு இருப்பது சபாஷ்.
இவரது படங்களில் ஒரு கேரக்டர் தன் பெயரை சொல்லிவிட்டு கதையை ஆரம்பிக்கும். ஆனால் இதில் இறுதியில், சிம்பு அவர் பெயரை சொல்லும்போது ரசிகர்களிடையே அப்படி ஒரு அப்ளாஸ்.
ஆக்ஷன் இருந்தாலும், வழக்கம்போல ரொமான்டிக் காட்சிகளிலேயே அதிகம் ஸ்கோர் செய்கிறார் மனிதர்.
அச்சம் என்பது மடமையடா… அச்சமில்லாமல் தாராளமாக பார்க்கலாம்.