தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பரதன் இயக்கும் பைரவா படத்தை முடித்துவிட்டு அட்லி இயக்கவுள்ள படத்தில் நடிக்கிறார் விஜய்.
இப்படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் சார்பாக ராமநாராயணனின் மகன் முரளி தயாரிக்கிறார் என்பதை நாம் முன்பே பார்த்தோம்.
இந்நிலையில் இப்படத்தில் விஜய்க்கு சம்பளமாக ரூ. 35 கோடி வரை பேசப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
மேலும் அட்லிக்கு சம்பளமாக ரூ. 15 கோடி கொடுக்க இருக்கிறார்களாம்.
இதன் மூலம் ஷங்கர், முருகதாஸ் அவர்களின் அடுத்த இடத்தை அட்லி நெருங்கி விட்டார்.
ராஜா ராணி, தெறி ஆகிய இரண்டு படங்களை மட்டுமே இயக்கியுள்ள அட்லிக்கு தெறி படத்தில் சம்பளமாக ரூ. 3 கோடி மட்டுமே கொடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.