தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
அஜித் நடித்து வரும் ‘துணிவு’ படத்தை இயக்கியுள்ளார் வினோத்.
இந்த படம் பேங்க் கொள்ளை சம்பவத்தை பற்றிய கதை என கூறப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் வினோத் தன் சமீபத்தை பேட்டியில் ‘துணிவு’ படத்தின் கதை பற்றி தெரிவித்துள்ளார்.
அதில்… “இந்த படத்தின் கதையை பற்றி இப்போது சொல்ல முடியாது. அது மற்றவர்களின் யூகமாகவே இருக்கட்டும்.
ஒரு பேங்க் போன்ற செட் போட்டது உண்மைதான். எனவேதான் இந்த படத்தின் கதை பேங்க் கொள்ளை பற்றியது என்று செய்திகள் வலம் வந்தன.
இதில் நெகட்டிவ் ரோலில் நடிக்கிறாரா அஜித்? எனவும் பேச்சுக்கள் எழுந்துள்ளன அதைப்பற்றி தெரிவித்தால் மீண்டும் மங்காத்தா போன்ற கதையா? என்ற யூகங்கள் எழும்.
எனவே துணிவு ரிலீஸ் வரை காத்திருங்கள்” என தெரிவித்துள்ளார் வினோத்.