உண்மையாக போற கதைகளை படமாக்க போகிறேன்.; கமல் படம் குறித்து வினோத்

உண்மையாக போற கதைகளை படமாக்க போகிறேன்.; கமல் படம் குறித்து வினோத்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜித்தின் ‘துணிவு’ படத்தை தொடர்ந்து கமல்ஹாசனின் #KH233 வது படத்தை இயக்க உள்ளார் வினோத்.

இந்த படம் பற்றிய அறிவிப்பு சில தினங்களுக்கு முன் அதிகாரப்பூர்வமாக வீடியோவாக வெளியிடப்பட்டது.

இந்த அறிவிப்புக்கு முன்னர் விவசாயிகளுடன் செய்தியாளர்களை கமல் மற்றும் வினோத் சந்தித்தனர்.

எனவே இந்த படம் விவசாயம் பற்றியதாக இருக்கும் என தகவல்கள் வந்திருந்தன.

இந்த நிலையில் இந்தப் படம் குறித்து தன்னுடைய சமீபத்திய பேட்டியில் வினோத் கூறியிருப்பதாவது…

கமலின் #KH233 விவசாயம் படம் இல்லை, அவரிடம் இரண்டு மூன்று கதைகள் பேசினோம். அவர் சொன்ன கதைகள் ரொம்பவே இன்ரஸ்டிங்காக இருந்தது.

அந்த கதைக்கு திரைக்கதை எழுதி படமாக்குகிறோம். தமிழில் நிறைய உண்மை கதைகள் படமாக்கப்பட்டது.

நான் இனி உண்மையாக போற கதைகளை படமாக்க போகிறேன் – ஹச் வினோத்.”

இவ்வாறு வினோத் தெரிவித்துள்ளார்.

இந்தப் படத்தை குறுகிய கால தயாரிப்பாக உருவாக்க கமல்ஹாசன் திட்டமிட்டுள்ளார்.

Director H Vinoth speaks about KH233

JUST IN இயக்குநர் மடோன் அஸ்வினுக்கு சிவகார்த்திகேயன் என்ற 2வது விருது – மிஷ்கின்

JUST IN இயக்குநர் மடோன் அஸ்வினுக்கு சிவகார்த்திகேயன் என்ற 2வது விருது – மிஷ்கின்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து உருவாகியுள்ள ‘மாவீரன்’ படம் இந்த வாரம் வெள்ளிக்கிழமை ஜூலை 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

ஒரே நேரத்தில் தமிழ் – தெலுங்கில் இந்த படம் வெளியாகிறது. சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு பரத் ஷங்கர் என்பவர் இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில் இன்று ஜூலை 10ஆம் தேதி சென்னை தாஜ் ஹோட்டலில் படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் மடோன், சிவகார்த்திகேயன், சரிதா, அதிதி, மிஷ்கின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அப்போது மேடையில் மிஷ்கின் பேசும்போது..

“திறமையான இளம் இயக்குனர்கள் பலர் வருகிறார்கள். மடோன் அஸ்வின் முதல் படத்திலேயே (மண்டேலா) மிகப்பெரிய தேசிய விருதை வென்றார்.

தற்போது அவரது இரண்டாம் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருப்பது அவருக்கு மற்றொரு விருது. இந்த படத்தில் முழுக்க முழுக்க நான் ஒரு வில்லனாக நடித்துள்ளேன். படம் சிறப்பாக வந்துள்ளது.”

என்று பேசினார் மிஷ்கின்.

Sivakarthikeyan is 2nd award for Madon says Mysskin

சிம்பு ஸ்டைலில் ‘கொலை’ இசை விழா.; எலான் மஸ்க் சிஸ்டர் கிசுகிசு சொன்ன விஜய்ஆண்டனி

சிம்பு ஸ்டைலில் ‘கொலை’ இசை விழா.; எலான் மஸ்க் சிஸ்டர் கிசுகிசு சொன்ன விஜய்ஆண்டனி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘விடியும் முன்’ பட இயக்குனர் பாலாஜி குமார் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள படம் ‘கொலை’.

இந்த படத்தை இன்ஃபினிட்டி மற்றும் லோட்டஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

நாயகியாக ரித்திகா சிங் & மீனாட்சி சவுத்ரி நடிக்க கிரிஷ் என்பவர் இசையமைத்துள்ளார்.

இந்த படம் ஜூலை 21ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில் இன்று ஜூலை 10ஆம் தேதி சென்னை சத்யம் திரையரங்கில் இதன் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.

இந்த விழா மேடையில் விஜய் ஆண்டனி பேசும்போது…

இந்த படத்தின் மூலம் எனக்கு நிறைய நண்பர்கள் கிடைத்துள்ளனர் அனைவருக்கும் நன்றி. இதற்கு முன் மிஷ்கின் பேசும்போது ஒரு கொலை செய்ய இத்தனை காரணங்களா என அறிந்தபோது நாம் கூட கொலை செய்யலாமா? என்று என்ன தோன்றுகிறது.

‘கொலை’ படம் நன்றாக வந்துள்ளது. இந்த படத்தின் இயக்குனர் பாலாஜி இயக்கிய ‘விடியும் முன்’ படத்தை நான் பார்த்திருக்கிறேன். அன்று முதல் அவருக்கு ரசிகன் ஆகிவிட்டேன்.

அவரைப் பற்றிய ஒரு கிசுகிசுவை இப்போது சொல்கிறேன். அவர் நிறைய ஹாலிவுட் படங்களில் பணிபுரிந்து இருக்கிறார். உலக பணக்காரர் எலான் மாஸ்கின் சிஸ்டரின் நண்பர் இவர்.

இதை நீங்க கிசுகிசுவாக பயன்படுத்திக் கொள்ளலாம் என விஜய் ஆண்டனி பேசினார்.

மேலும் இறுதியாக.. ‘பத்து தல’ படத்தில் ஆடியோ விழாவில் சிம்பு நடனம் ஆடினார். அது அந்த படத்தின் ப்ரோமோஷனுக்கு பேரு உதவியாக இருந்தது. எனவே நிகழ்ச்சி தொகுப்பாளர் பிக் பாஸ் புகழ் அபிஷேக்கை நடனம் ஆட வைத்து பார்த்துக் கொண்டிருந்தார் விஜய் ஆண்டனி.

Vijay Antony reveals gossip about Elan musk

கூடுதல் தகவல்…

டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் CEO எலான் மஸ்க். இளம் வயதிலிருந்தே டெக் உலகில் ஆர்வம் கொண்டவர் இவர். தன் 13 வயதிலேயே ‘Blaster’ என்ற வீடியோ கேமை வடிவமைத்தார் எலான் மஸ்க்.

2002-லேயே தனியார் விண்வெளி ஆராய்ச்சி, மின்சார கார் போன்றவற்றில் பெருமளவில் முதலீடுகள் செய்தார். இவரின் சொத்து மதிப்பு 195 பில்லியன் டாலர். இந்திய மதிப்பில் சுமார் ரூ 14 லட்சம் கோடி.

முதலாளிகள் – தொழிலாளிகள் இணைந்து ‘அநீதி’ பார்க்க வேண்டும் – ஷங்கர்

முதலாளிகள் – தொழிலாளிகள் இணைந்து ‘அநீதி’ பார்க்க வேண்டும் – ஷங்கர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வசந்தபாலன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அநீதி’ படம் ஜூலை 21ஆம் தேதி தமிழ் – தெலுங்கில் வெளியாகவுள்ளது.

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தமிழ் திரை பிரபல இயக்குனர்கள் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் ‘அநீதி’ படத்தை தனது எஸ் பிக்சர்ஸ் பேனரில் வெளியிடும் இயக்குநர் ஷங்கர் பேசியதாவது…

“இப்படத்தை நான் பார்த்தேன், ரசித்தேன். எதார்த்தமாகவும் அதே சமயம் விறுவிறுப்பாகவும் இப்படத்தை வசந்த பாலன் எடுத்துச் சென்றிருக்கிறார். உழைக்கும் வர்க்கத்தின் குரலாக ‘அநீதி’ திரைப்படம் ஓங்கி ஒலிக்கிறது.

தொழிலாளிகள் எப்படி நடத்தப்பட வேண்டுமென்பதை ஆணித்தரமாக இப்படத்தில் வசந்த பாலன் சொல்லியுள்ளார். தொழிலாளர்கள் மட்டுமில்லாமல் முதலாளிகளும் இப்படத்தை கட்டாயம் பார்க்க வேண்டும்.

அர்ஜுன் தாஸ், துஷாரா விஜயன், வனிதா விஜயகுமார், காளி வெங்கட் உள்ளிட்ட அனைவரும் தங்களது சிறப்பான பங்களிப்பை இப்படத்திற்கு அளித்துள்ளார்கள்.

‘அநீதி’ திரைப்படத்தை தயாரித்துள்ள அர்பன் பாய்ஸ் நிறுவனத்திற்கு எனது வாழ்த்துகள். ஒரு தரமான திரைப்படத்தை வணிகரீதியாகவும் வெற்றி பெற வைக்க வேண்டும் என்ற முனைப்போடு அவர்கள் பணியாற்றி உள்ளார்கள்.

ஜிவி பிரகாஷ் இசை படத்திற்கு மிகவும் பக்கபலமாக உள்ளது. இத்திரைப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் வாழ்த்துகள், நன்றி.” என்றார்.

Employer and Employees should watch Aneethi says Shankar

இசையமைப்பாளராக செஞ்சுரி அடிக்க போகும் ஜீவி. பிரகாஷ்.; ‘அநீதி’ விழாவில் அறிவிப்பு

இசையமைப்பாளராக செஞ்சுரி அடிக்க போகும் ஜீவி. பிரகாஷ்.; ‘அநீதி’ விழாவில் அறிவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வசந்தபாலன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அநீதி’ படம் ஜூலை 21ஆம் தேதி தமிழ் – தெலுங்கில் வெளியாகவுள்ளது.

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தமிழ் திரை பிரபல இயக்குனர்கள் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் பேசியதாவது…

“என் மீது நம்பிக்கை வைத்து மிகவும் இள வயதிலேயே இசையமைப்பாளராக என்னை அறிமுகப்படுத்திய வசந்த பாலன் அவர்களுக்கும் ஷங்கர் சாருக்கும் எனது மனமார்ந்த நன்றி.

1993-ல் ஜென்டில்மேன் படத்தில் சிக்கு புக்கு பாடி பாடகராக அறிமுகமானேன். அதுவும் ஷங்கர் படம். ‘வெயில்’ படத்தில் என்னை இசையமைப்பாளராக அறிமுகம் செய்தார் வசந்தபாலன். அந்த படத்தை ஷங்கர் தயாரித்திருந்தார்.

விரைவில் இசையமைப்பாளராக 100வது படத்தை தொட உள்ளேன். வசந்த பாலன் ஒரு மிகச் சிறந்த இயக்குநர், நான்கு படங்களில் அவருடன் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது எனக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு.

‘அநீதி’ திரைப்படம் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. இப்படத்திற்கு அனைவரும் உங்களது ஆதரவை தாருங்கள், நன்றி.” என்றார்.

GV Prakash will hit 100th movie as music composer

வசந்தபாலன் படங்களில் சமூக அக்கறையும் கோபமும் வெளிப்படும்.. – கார்த்திக் சுப்பராஜ்

வசந்தபாலன் படங்களில் சமூக அக்கறையும் கோபமும் வெளிப்படும்.. – கார்த்திக் சுப்பராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வசந்தபாலன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அநீதி’ படம் ஜூலை 21ஆம் தேதி தமிழ் – தெலுங்கில் வெளியாகவுள்ளது.

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தமிழ் திரை பிரபல இயக்குனர்கள் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் பேசியதாவது…

“‘வெயில்’ படம் முதலே வசந்தபாலன் அவர்களின் எழுத்துக்கு நான் ரசிகன். ‘அநீதி’ திரைப்படத்தை காணும் வாய்ப்பை சமீபத்தில் நான் பெற்றேன். மிக மிக விறுவிறுப்பான ஒரு திரைப்படமாக ‘அநீதி’ அமைந்துள்ளது.

வசந்த பாலன் படங்களில் சமூக அக்கறையும் கோபமும் எப்போதும் வெளிப்படும். அது இந்த படத்திலும் உள்ளது. அர்ஜுன் தாஸ் மற்றும் துஷாரா விஜயன் ஆகியோரின் முழு நடிப்புத் திறமையையும் வெளிக்கொண்டுவரும் வகையில் இப்படம் அமைந்துள்ளது. காளி வெங்கட்டின் மிகச் சிறப்பான பங்களிப்பு ‘அநீதி’ படத்தில் பேசப்படும். இப்படம் வெற்றி பெற எனது மனமார்ந்த வாழ்த்துகள்.”

தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் டி சிவா பேசியதாவது…

“இந்தியாவையே திரும்பி பார்க்க வைக்கும் இரண்டு படங்களில் தற்போது பிஸியாக இருக்கும் வேளையிலும் ‘அநீதி’ படத்தை பார்த்து, ரசித்து, பாராட்டி அதை வெளியிட முன் வந்திருக்கும் இயக்குனர் ஷங்கர் சாருக்கு மனமார்ந்த நன்றி. வசந்த பாலன் சினிமாவை நேசிப்பவர், காதலிப்பவர். அவரது ஒவ்வொரு படத்திலும் இதை நாம் உணர முடியும்.

‘அநீதி’ திரைப்படத்தையும் அவ்வாறே அவர் உருவாக்கியுள்ளார். இப்படத்தை தயாரித்துள்ள அவரது நண்பர்களுக்கு எனது வாழ்த்துகள். நடிப்பிலும், குரலிலும் உடல்மொழியிலும் நாம் இழந்துவிட்ட ரகுவரன் மீண்டும் வந்தது போல் அர்ஜுன் தாஸ் உள்ளார். அவர் மேலும் பல உயரங்களை தொட வாழ்த்துகிறேன். இப்படம் வெற்றியடைய உங்களது மேலான ஆதரவை தாருங்கள். நன்றி.”

Vasantha Balan movies will have good message says Karthik Subbaraj

More Articles
Follows