தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ரஜினிகாந்த் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது…
’திருவள்ளூவர் ஞானி, சித்தர். அவர் நாத்திகரல்ல, ஆத்திகர். கடவுள் நம்பிக்கை உள்ளவர் என்பதை யாராலும் மறுக்க முடியாது.
பாஜக, அவங்க டிவிட்டர்ல தனிப்பட்ட முறையில அதுபற்றி போட்டாங்க. அது அவங்க விருப்பம்.
நாட்டில் இவ்வளவு பிரச்னை இருக்கு. அதையெல்லாம் விட்டுட்டு அதை, இவ்வளவு பெரிய விஷயமாக்கி, சர்ச்சையாக்கியது சில்லியாக இருக்கிறது.
என்னை, பொன். ராதாகிருஷ்ணன் சந்தித்தது பேசினார். பாஜகவில் இணைய சொல்லி எனக்கு எந்த அழைப்பும் விடுக்கவில்லை.
எனக்கு, பாஜக சாயம் பூச முயற்சி நடக்கிறது. திருவள்ளுவருக்கும் காவி சாயம் பூசறாங்க. திருவள்ளுவரும் மாட்ட மாட்டார்.. நானும் மாட்ட மாட்டேன். எனக்கு ஐகான் விருது கொடுத்திருப்பதற்கு நன்றி.’ என்று பேசினார்.
Rajini press meet regarding Thiruvalluvar and BJP Controversy