தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இது நாள் வரை நாம் ஹீரோவாக பார்த்து வந்த ஜெய் இந்த படத்தில் வில்லனாக நடித்துள்ளார். சுந்தர் சி கதையின் நாயகனாக நடித்துள்ளார். ஹனி ரோஸ் நாயகியாக நடித்துள்ளார்.
ஒன்லைன்…
ஒரு சைக்கோ பல கொலைகளை செய்கிறார். எல்லா கொலைகளுக்கும் ஒரே ஒற்றுமை உள்ளது. அந்த ஒற்றுமை தான் பட்டாம்பூச்சி. தான் செய்த கொலைகளை ஓவியமாக வரைந்து அதனருகில் பட்டாம்பூச்சி என்ற தன் முத்திரையை பதித்து செல்வது வழக்கம்.
கதைக்களம்…
1980-களில் கதை நடக்கிறது.
தூக்கு தண்டனை கைதியான ஜெய்யிடம் கடைசி ஆசை என்ன? என கேட்கிறார்கள்.
உடனே அவர் என்னைப்பற்றி எழுதிய ரிப்போர்டரை பார்க்க வேண்டும் என்கிறார்.
உடனே அந்த ரிப்போர்டர் ஹனி ரோஸ் சிறைச்சாலைக்கு வரவழைக்கப்படுகிறார்.
அப்போது அவரது கடைசி ஆசையாக ஒரு உண்மையை கூறுகிறார்.. தான் செய்யாத கொலைக்காக சிறைத்தண்டனையை அனுபவித்து வருவதாகவும் ஆனால் தான் ஏழு கொலைகளை செய்து இருப்பதாகவும் கூறுகிறார்.
எனவே மீண்டும் போலீஸ் இந்த வழக்கை விசாரணைக்கு எடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிடுகிறது. 30 நாட்களுக்குள் இது தொடர்பான ஆதாரங்கள் தேவை என்கிறது நீதிமன்றம்.
இந்த வழக்கை கையில் எடுக்கிறார் இன்ஸ்பெக்டர் சுந்தர் சி. இதில் பல திருப்பங்களை சந்திக்கிறார்.
பட்டாம்பூச்சி அடுத்தடுத்து கொலைகள் செய்ய என்ன காரணம்.? செய்யாத குற்றத்திற்கு ஏன் எப்படி சிறை சென்றார்.? அவரின் மனநிலை எப்படி பாதிக்கப்பட்டது.? அதற்கான காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.
கேரக்டர்கள்…
சைக்கோ கொலையாளி என்றால் ஏதாவது ஒரு நோயால் பாதிக்கப்பட்டு இருக்க வேண்டுமே.. அதற்கு ஒரு பெயர் வேண்டுமே.. அதை வைத்திருக்கிறார்கள்.
தன்னால் முடிந்தவரை தான் ஒரு சைக்கோ என்பதை நிரூபிக்க படத்தின் கிளைமாக்ஸ் வரை முயற்சித்துள்ளார் ஜெய். ஆனால் விளைவு.?
யூனிஃபார்ம் போடாத போலீசாக சுந்தர் சி. அவரும் தன் சொந்த படம் தானே என நடித்து வைத்துவிட்டார் போல..
இமானின் மகளாக மாற்றுத்திறனாளி சிறுமியாக மானஷ்வி. மனதில் நிறைகிறார். இமானின் முடிவு நம் மனதை கலங்க வைக்கும்.
கொஞ்சம் கவர்ச்சி.. கொஞ்சம் நடிப்பு கொஞ்சம் அழகு.. என வருகிறார் ஹனிரோஸ்.
டெக்னீஷியன்கள்..
கிருஷ்ணசாமி ஒளிப்பதிவு ஓகே. நவீன் சுந்தரின் பின்னணி இசை சில இடங்களில் ரசிக்கலாம்.
‘வீராப்பு’, ‘ஐந்தாம்படை’ படங்களை இயக்கிய பத்ரி இந்த ‘பட்டாம் பூச்சி’ படத்தை இயக்கியிருக்கிறார்.
சைக்கோ த்ரில்லர் கதைகளை நாம் பல படங்களில் பார்த்திருப்போம். ஆனால் இதில் ஓவர் போஸ் கொடுத்துள்ளனர்.
ஜெய் ஏன் கொலையாளி ஆனார்.? என்பதற்கு சில பிளாஷ்பேக் காட்சிகள் சொல்லப்பட்டாலும் அவை எதுவும் மனதில் பதியவில்லை.
பலவீனமான திரைக்கதையால் காட்சிகளில் தடுமாற்றம் தெரிகிறது.
Pattampoochi movie review in Tamil