தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சூர்யா நடித்து, ஹரி இயக்கியுள்ள படம் எஸ்-3.
இது சிங்கம் படத்தின் 3வது பாகமாக உருவாகியுள்ளது.
இதில் சூர்யாவுடன் அனுஷ்கா, ஸ்ருதிஹாசன், ராதாரவி, நாசர், விவேக், ரோபா சங்கர், சூரி, கிரிஷ் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.
ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இப்படத்தை ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படத்தின் டீசர் சற்றுமுன் வெளியானது.
இந்த டீசர் 1 நிமிடம் 24 நொடிகள் கொண்டது.
இது முழுக்க முழுக்க ஆக்ஷன் டீசராக அனல் பறக்க உருவாகியுள்ளது.
டீசர் தொடங்கும் போதே.. டிரெயின் ஓடுகிறது. பின்னணியில் வேட்டை பாடல் ஒலிக்கிறது.
அதனையடுத்து, ஒரு தவறு செய்தால், அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன் என் எம்ஜிஆரின் எங்க வீட்டு பிள்ளை படப்பாடலை பாடுகிறார் சூர்யா.
பாடுகிறார் என்பதை விட கர்ஜிக்கிறார் என்றே சொல்லலாம்.
இதனிடையே பல ஆக்ஷன் காட்சிகள் வந்து செல்கிறது.
அதில் பல கார், கண்டெய்னர் லாரிகள், ஜீப் உள்ளிட்ட பல வாகனங்கள் மற்றும் விமானங்கள் வரை வந்து செல்கிறது.
சிங்கம் சிங்கம் துரை சிங்கம்… சீறும் எங்கும்… என்ற பாடலும் பின்னணியில் ஒலிக்கிறது.
அப்போது அனுஷ்கா, ஸ்ருதிஹாசன், சூரி மற்றும் வில்லன் தாகூர் அனுப் சிங் காட்சிகளும் இடம்பெறுகிறது.
பெரும்பாலான காட்சிகள் போலீஸ் ஸ்டேஷன், ரெயில்வே ஸ்டேஷனில் படமாக்கப்பட்டுள்ளது.
மேலும், விமான நிலையம், பஸ் ஸ்டாண்ட், தேசிய நெடுஞ்சாலை ஆகிய இடங்களிலும் படமாக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து சூப்பர் பன்ச் பேசி பாய்ந்து பாய்ந்து அடிக்கிறார்.
நான் பாத்தது எல்லாம் திங்கிற ஓநாய் இல்ல… பசிச்சா மட்டும் வேட்டையாடுற சிங்கம்.
இப்போ நான் கொலை பசியில இருக்கேன். எது கிடைச்சாலும் வேட்டையாடனுங்கிற வெறியில இருக்கேன்.
எதிர்ல எவன் வந்தாலும் ஏறி மிதிச்சுட்டு போய்ட்டே இருப்பேன். என்று பேசி முடிப்பதற்குள் கண் முன்னே பல முகபாவங்களை காட்டி ரசிகர்களை மிரள வைத்து இருக்கிறார் சூர்யா.
இது நிச்சயம் ஆக்ஷன் ரசிகர்களுக்கு அல்வா சாப்பிடுவது போன்ற உணர்வை தரலாம்.