தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கதைக்களம்..
இந்த படத்தை 4 விதமாக காதல் கதையாக பிரிந்து தந்திருக்கிறார்.
இடைவேளைக்கு முன்னர் 2 காதல்.. இடைவேளைக்கு பின்னர் 2 காதல்..
15 வயது காதல்… 25 வயது காதல்… 40 வயது காதல்…. 60 வயது காதல்…
முதல் அத்தியாயம் பிங்க் பேக்’
2வது அத்தியாயம் ‘காக்கா கடி’
3வது அத்தியாயம் ‘டர்ட்டிள் வாக்’
4வது அத்தியாயம் ‘ஹே அம்மு’
முதல் கதையில்…
குப்பை கிடங்கில் குப்பை பொறுக்கும் ஒரு சிறுவனுக்கும் பிங்க் ப்ளாஸ்டிக் பையில் குப்பைகளை போடும் ஒரு சிறுமிக்கும் உள்ள ஈர்ப்பு.
தந்தை அன்பாக கொடுத்த காஸ்ட்லியான மோதிரத்தை தவறவிடும் அந்த சிறுமி தவிக்க, குப்பை பொறுக்கும் அந்த பையன் எப்படி அதை அவளிடம் சேர்த்தான் என்பதே கதை.
2வது கதையில்…
வாடகை காரில் பயணம் செய்யும் கேன்சர் இளைஞன் மற்றொரு பயணி பெண் இடையே உண்டான உணர்வுபூர்வமான கவிதை இது.
3வது கதையில்…
திருமணமே செய்துக் கொள்ளாமல் காலத்தை கடந்த கன்னிக்கும்…. பேரன் பேத்திகளை பார்த்த மனைவியை இழந்த ஒருவருக்கும் இடையே உருவான முதிர்ந்த காதல் கதை இது.
4வது கதையில்…
வீடே சொர்க்கம் என வாழும் ஒரு இல்லத்தரசிக்கும் (சுனைனா) மனைவியுடன் உடலுறவே சொர்க்கம் என வாழும் சமுத்திரக்கனிக்கும் உள்ள கதை இது..
வசனங்கள் அருமை…
நடித்த அனைவரின் நடிப்பும் பாராட்டுக்குரியது தான். சின்ன சின்ன உணர்வுகளை அழகாக எடுத்துச் சொல்லியிருக்கிறார். குப்பை கிடங்கு காதலில் சின்ன சின்ன பசங்களின் டயலாக்குகள் சூப்பர்.
கார் காதலில்…. கட்டி இருக்குறவனுக்கு எப்படி கட்டு கொடுப்பாங்க…
உங்களை சைட் அடித்தவர்கள் கொடுத்த உங்க காதல் பரிசுகளை உங்க புருசனுக்கு கிட்ட காட்டுங்க.. நீங்க எவ்வளவு மதிப்புமிக்கவர் என்பது அவருக்கு தெரியட்டும்.. என்பது போன்ற வசனங்கள் கைத்தட்டல்கள் அள்ளும்.
30 வருச தாம்பத்தியத்தில் எவ்வளவு கஷ்டம் வந்தாலும் நாம எதையும் வீசி எறிய மாட்டோம். ஆனால் இப்போ அப்படியில்லை…
இருட்டுல இன்பம.. வெளிச்சத்துல வெறுமை… இப்படி பல வசனங்கள் உள்ளன.
இந்த கேரக்டர்களில் நடித்த சமுத்திரக்கனி, சுனைனா, மணிகண்டன், லீலா சாம்ஸன், நிவேதிதா சதீஷ், க்ரவ்மகா ஸ்ரீராம், சாரா அர்ஜுன், ராகுல் என அனைவருமே கச்சிதம்.
தொழில்நுட்ப கலைஞர்கள்..
நாலு காதல் நாலு பாட்டு வைக்காமல் ஒரு பாட்டை வைத்த இயக்குனரை பாராட்டலாம்.
அபிநந்தன் ராமானுஜம், மனோஜ் பரமஹம்சா, விஜய் கார்த்திக் கண்ணன், யாமினி ஞானமூர்த்தி என ஒவ்வொரு கதைக்கும் ஒவ்வொருவர் என நான்கு பேர் ஒளிப்பதிவு செய்துள்ளனர். அத்தனையும் அழகு.
இயக்குநர் ஹலிதாவே எடிட்டிங் செய்துள்ளதால் காட்சிகள் அழகு.
இவ்வாறாக 4 தனி கதைகளை படமாக கொடுத்துள்ளார் இயக்குநர் ஹலிதா ஷமீம். இவை நான்கிலும் அன்பை மையப்படுத்தி எடுத்துள்ளார்.
இதில் வேறு விதமான ஒரு தொடர்பை ஏற்படுத்தியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
Sillukaruppatti review rating