FIRST ON NET ஓவர் நைட்ல ஒலகம்.. 4 பீர்ல கலகம்.. கேப்மாரி விமர்சனம்

FIRST ON NET ஓவர் நைட்ல ஒலகம்.. 4 பீர்ல கலகம்.. கேப்மாரி விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்…

கேப்மாரி படத்தின் முதல் காட்சியே ட்ரெயினில் ஆரம்பமாகிறது. அதுவரை அறிமுகமில்லாத ஹீரோ ஜெய் ஹீரோயின் வைபவ் சாண்டில்யா சந்திப்பு ரயிலுக்குள் போதை செக்ஸ் உடன் முடிகிறது.

நாலு பீரு அடித்துவிட்டால் தான் என்ன செய்கிறோம் என்பதை அறியாமல் செய்துவிடுவாராம் ஜெய்.

அதன்பின் மற்றொரு கட்டத்தில் சந்திக்கும் ஜெய் மற்றும் வைபவி இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணமும் செய்துக் கொள்கின்றனர்.

இவர்களின் வாழ்க்கை சந்தோஷமாக செல்ல அதுல்யா வடிவில் பிரச்சினை ஆரம்பமாகிறது.

ஜெய்யின் ஆபிசில் வேலை செய்யும் அதுல்யா இவரை திருமணத்திற்கு முன்பே காதலிக்கிறார்.

ஒரு கட்டத்தில் அதுல்யாவின் ஆசைக்கு சரக்கு போட்டுவிட்டு இணைங்கி விடுகிறார் ஜெய். இதனால் அதுல்யா கர்ப்பமாகிறார்.

உன்னால் நான் கர்ப்பமாகிவிட்டேன். எனக்கு வேறு வழியில்லை. என்னை திருமணம் செய்துக் கொள் இல்லை என்றால் போலீசில் புகார் செய்வேன் என பயமுறுத்துகிறார்.

அதன்பின்னர் ஜெய் என்ன செய்தார்? அதுல்யாவை திருமணம் செய்தாரா? அல்லது கருவை கலைத்தாரா? அல்லது இருவருடனும் உறவு வைத்துக் கொண்டாரா? வைபவி என்ன செய்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

Capmaari 2

கேரக்டர்கள்…

முன்பு லவ்வர்… பின்பு இரண்டு மனைவிகள் என செம ஜாலியாக இருக்கிறார் ஜெய். பீர் அடிப்பது… கட்டிலில் ஆட்டம் போடுவது என இரண்டு நாயகிகளுடன் லுட்டி அடிக்கிறார் ஜெய். ஆனால் நடிப்பில் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு இருக்கலாம்.

வைபவி அண்ட் அதுல்யா.. இருவரும் போட்டி போட்டுக் கொண்டு கவர்ச்சி மழை பொழிந்துள்ளனர். தொடை அளவு மட்டுமே துணி அணிந்து நம்மை நனைய வைத்துவிடுகின்றனர். அழகிலும் நடிப்பிலும் குறையில்லை.

இவர்களுடன் ஆபிசில் வேலை பார்க்கும் ஒரு கூட்டமும் உள்ளது. தேவதர்ஷினி, சத்யன், சித்தார்த் விபின் என கலகலப்பாக டபுள் மீனிங் ட்ராக் ஓடுகிறது.

Capmaari 3

தொழில்நுட்ப கலைஞர்கள்…

பாடல்கள் அடிக்கடி வந்து நம்மை கடுப்பேத்துகிறது. ஆனால் அழகான ஹீரோயின் கவர்ச்சியான கன்னிகள் என ஓரளவு தேற்றிவிடுகிறார் எஸ்ஏசி.

சென்சாரில் ஏ சான்றிதழ் வாங்கியிருப்பதால் எதையும் எடிட்டிங் செய்யவில்லை போல. டபுள் மீனிங் காட்சிகளை அப்படியே வைத்துள்ளனர்.

சித்தார்த் விபின் இசையில் ஓரிரு பாடல்கள் ஓகே. ஜீவன் ஒளிப்பதிவில் அத்தனையும் அழகு. ஆனால் நாயகியின் கால்கள் நடுவில் கேமரா வைத்து செய்திருப்பது எல்லாம் ரொம்ப ஓவர்.

கதையில் ட்விஸ்ட் வைத்திருக்கலாம். ஆனால் ஏதோ வெறுமனே ஜாலியாக இருக்க வேண்டும் என படம் இயக்கியிருக்கிறார் எஸ்ஏசி.

வீட்டு வேலைக்காரி வந்தால் கூட.. வீட்டுக்கு வேலை வந்திருக்கேன் என சொல்ல மறுக்கிறார். நான்தான் பால் குடுப்பேன் என பேசுகிறார்.

ஓவர் நைட்ல எனக்கு ஒலகத்தைகே காமிச்சிட்டார். செம பீல்யா என என அதுல்யா டயலாக் எல்லாம் பேசுகிறார்.

அவன் அப்படிதான் சொருகினா அந்த மறந்துடுவான் பென்ட்ரைவ் என அதுல்யா வேற காம நெடிகளை அள்ளி வீசுகிறார்.

பேட்டு, பால் என கிரிக்கெட் போல பெட்ரூம் விளையாட்டு ஆடுகின்றனர்.

படம் முழுவதும் சரக்கு அடித்துக்கிட்டே இருக்கார் ஜெய்.

2 விசிலு வரத்துக்குள்ள குக்கர் ஆஃப் ஆச்சு என்று செக்சில் 2 ரவுண்டுகளை சொல்கிறார் பைவ்வி.

இவையில்லாமல் காண்டத்திற்கு க்ளவுஸ் என பெயரிட்டும் அழைக்கின்றனர்.
இப்படி படம் முழுக்க கேப்பே இல்லாமல் கேப்மாரி விளையாடியிருக்கிறார்.

சமூகத்திற்கு தேவையான புரட்சி கருத்துக்களை சொன்னதால் புரட்சி இயக்குனர் என்றொரு பெயர் எஸ்ஏ. சந்திரசேகருக்கு உண்டு.

ஆனால் இங்கே செக்சில் புதுமையான கருத்துக்களை சொல்லியுள்ளார்.

capmaari 1

எங்களுக்கு இதுபோன்ற காட்சிகள் இருந்தால் போதும். நாங்க என்ஜாய் பண்ணிப் பார்ப்போம் என நினைத்தால் கேப்மாரியை ரசிக்கலாம்.

யோவ் எப்படியா? பார்த்த உடனே காதல் வரலாம். ஆனால் செக்ஸ் எப்படியா? என நீங்கள் கேட்கிறீர்களா? அப்படி பார்த்தால் ஏகப்பட்ட லாஜிக் மிஸ் ஆகுது படத்தில்.

ஒரு வீட்டில் 2 பெண்களுடன் குடித்தனம் என்பது எல்லாம் ரொம்பவே ஓவர்.

இந்த பிரச்சினை எல்லாத்துக்கும் காரணம் குடி தான். எனவே இறுதியாக குடிப்பது உடம்புக்கு மட்டுமல்ல வாழ்க்கைக்கும் நல்லதல்ல என ரொம்பவே பொறுப்பான கருத்துடன் படத்தை முடித்துள்ளார் எஸ்ஏ. சந்திரசேகர்.

ஆக… கேப்மாரி… ஓவர் நைட்ல ஒலகம்.. நாலு பீர்ல கலகம்!

CM aka Capmaari review rating

செவன்ஸ் புட்பால் புள்ளிங்கோ… ஜடா விமர்சனம் 3.25/5

செவன்ஸ் புட்பால் புள்ளிங்கோ… ஜடா விமர்சனம் 3.25/5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒரு புட்பால் அணியில் 11 பேர் விளையாடி பார்த்திருப்போம். விளையாடியும் இருப்போம். ஆனால் இது 7 பேர் விளையாடும் புட்பால் விளையாட்டை பற்றிய கதை.

நாயகன் ஜடா (கதிர்), கால்பந்து வீரர். நாட்டுக்காக விளையாட வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். இவரது கோச் அருண் அலெக்சாண்டர்.

ஒரு கட்டத்தில் பல வருடங்களாக தென் சென்னையில் நடைபெறாமல் இருந்த ’செவன்ஸ்’ (7 பேர்) கால்பந்து போட்டியை நடத்தியே ஆக வேண்டும் என நினைக்கிறார் கதிர்.

செவன்ஸ் ஆட்டத்தை பொறுத்தவரை எந்த விதமான விதிமுறைகளும் கிடையாது. அவர்களின் டார்கெட் பந்து அல்ல. பந்தை எடுத்து செல்பவனே டார்கெட் நினைப்பார்கள். அதன் மூலம் அவனை அடித்து வீழ்த்தி பின்னர் கோல் போடுவார்கள். எனவே கதிரை அந்த ஆட்டத்தை ஆட வேண்டாம் என கோச் முதல் நண்பர்கள் வரை சொல்கிறார்கள்.

இதனால் பலர் கால்களை இழந்து, உயிரை இழந்துள்ளனர் என எச்சரிக்கின்றனர்.

ஆனால் ஜடா அவரின் முடிவில் இருந்து ஜகா வாங்கவில்லை.

அதன் பின்னர் அவர் சந்திக்கும் பிரச்சினைகளே படத்தின் கதை.

அந்த ஆட்டம் ஏன் நின்றது? யாரால் நிறுத்தப்பட்டது? திரும்பவும் அந்த ஆட்டத்தை ஆரம்பிப்பது ஏன்? இதனால் கதிருக்கு என்ன பயன்? என்பதே படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்..

ஒரு கால்பந்து வீரராக அருமையான நடிப்பை கொடுத்துள்ளார். அதே சமயத்தில் சென்னை லோக்கல் வாலிபராகவும் தன் கேரக்டரை பலப்படுத்தியுள்ளார்.

யோகிபாபு இருந்தும் காமெடி ஒரு துளி கூட இல்லை, ஆனால் படம் முழுவதும் கதிரின் நண்பராகவும் புட் பால் ப்ளேயராகவும் வருகிறார் யோகி.

இடையில் அர்ஜீன் ரெட்டி விஜய் போல வேசம் வேற போட்டுள்ளார்.

படத்தில் 2 நாயகிகள் இருக்கிறார்கள். அவ்வளவுதான்.

இவர்களுடன் கிஷோர், லிஜேஷ் மற்றும் கோச் ஆகியோரின் நடிப்பு கூடுதல் பலம்.

வில்லனாக அறிமுகமாகியிருக்கும் ஓவியர் ஏபி ஸ்ரீதர் தனது பார்வையிலும் கேரக்டரிலும் மிரட்டல்

தொழில்நுட்ப கலைஞர்கள்…

ஏ ஆர் சூர்யாவின் ஒளிப்பதிவு காட்சிகள் கச்சிதம். 2ஆம் பாதியில் நடக்கும் பேய் மிரட்டலுக்கு கைகொடுத்துள்ளது.

சாம் சி எஸ் பின்னனி இசை வழக்கம்போல பேய் பயத்தை கொடுத்துள்ளது. அதுபோல் புட் பால் காட்சியிலும் ரசிக்க வைக்கறிது-
பாடல்கள் ஓகே ரகம் தான்.

முதல் பாதி விறுவிறுப்பாக புட் பால் வேகத்துடன் செல்கிறது. ஆனால் 2ஆம் பாதியில் என்ன ஆனதோ? கொஞ்சம் புதுமை செய்ய வேண்டும் என பேய்யை உள்ளே கொண்டு வந்துவிட்டார்.

புட் பால் விளையாட்டில் பேய் புதுமை தான். ஆனால் அது வேறு மாதிரியான கதைக்களத்தை கொண்டுள்ளது.

ஆக புட்பால் புள்ளிங்கோ

Jada movie review rating

First on Net ரஞ்சித்தின் புரட்சி குண்டு… குண்டு விமர்சனம் 4/5

First on Net ரஞ்சித்தின் புரட்சி குண்டு… குண்டு விமர்சனம் 4/5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விசாரணை படத்திற்கு பிறகு மீண்டும் தினேஷ் மற்றும் ஆனந்தி நடித்துள்ள படம் இது. இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படத்தை ரஞ்சித் இயக்க, அதியன் ஆதிரை இயக்கியுள்ளார்.

கதைக்களம்..

படத்தின் ஆரம்பக் காட்சியில் 2ஆம் உலக போரின்போது வெடிக்காமல் இருந்த ஒரு சக்தி வாய்ந்த அணு குண்டு ஒன்று மாமல்லபுர கடற்கரை ஓரத்தில் ஒதுங்குகிறது.

உடனே இந்த செய்தி அந்த பகுதி முழுவதும் பரவுகிறது.

இதனையறிந்த போலீஸ் தங்கள் கன்ட்ரோலுக்கு அந்த குண்டை எடுத்து காவல் நிலைய வளாகத்தில் வைக்கின்றனர். இதனை ஒரு திருடன் எடுத்து கொண்டு காயிலான் கடையில் போட்டு பணம் வாங்கி செல்கின்றார்.

அங்கிருக்கும் பழைய இரும்பு பொருட்களுடன் அந்த அணு குண்டையும் எடுத்துக் கொண்டு மற்றொரு ஊருக்கு செல்கிறார் லாரி டிரைவர் தினேஷ்.

இந்த குண்டை தேடி போலீஸ் உதவியுடன் ஒரு ஊழல் கும்பல் வருகிறது. இது மீடியாக்களில் சிக்கினால் பெரும் பிரச்சினையாகிவிடும் என்பதாலும் போலீஸ் தேடி அலைகிறது.

‘இதனிடையில் சமூக ஆர்வலரும் பிரபல பத்திரிகையாளருமான ரித்விகாவும் இதை தேடி வருகிறார்.

ஒரு கட்டத்திற்கு பிறகு தான் இந்த குண்டு பற்றி அறிகிறார் தினேஷ். அதன்பின்னர் என்ன செய்தார்? அந்த குண்டை யாரிடம் ஒப்படைத்தார்? அந்த குண்டு வெடிக்காமல் இருந்ததா? ஒரு கும்பல் குண்டை தேடி அலையும் க்கம் என்ன? என்பதே மீதிக்கதை.

கேரக்டர்கள்..

அட்டக்கத்தி, விசாரணை ஆகிய படங்களுக்கு பிறகு இதில் நடிப்பின் உச்சம் தொட்டு இருக்கிறார் தினேஷ். ஒரு லாரி டிரைவராக இருந்தாலும் தன் தொழில் மீது அவர் காட்டும் அக்கறை சூப்பர். கயிலான் கடை லாரி டிரைவர் செல்வமாக வாழ்ந்திருக்கிறார்.

சித்ரா என்ற டீச்சர் கேரக்டரில் கயல் ஆனந்தி. கயல் படத்திற்கு பிறகு அவரை குண்டு ஆனந்தி என்றே சொல்லலாம். ஆனால் அம்மணி இன்னும் ஸ்லிம்மாக தான் இருக்கிறார்.

முண்டாசுப்பட்டி, ராட்சசன் படத்திற்கு அருமையான நடிப்பை கொடுத்துள்ளார் முனிஷ்காந்த். அப்பாவித்தனமாக அவர் குண்டு மீது தண்ணி ஊற்றி நமத்துபோக வைப்பது சிரிப்பை நிச்சயம் வரவழைக்கும்.

நம்ம நாட்டு குண்டு நம்மளை கொல்லாது? என இவர் கேட்கும் காட்சிகள் செம.

ஜான்விஜய், லிஜேஷ், ரித்விகா கேரக்டர்கள் நிச்சயம் பேசப்படும்.

இவர்களுடன் ரமா, மாரிமுத்து, ரமேஷ் திலக், மெட்ராஸ் ஜானி, சூப்பர் குட் சுப்ரமணி, போலீஸ் லிஜேஷ் என பலரும் சிறந்த நடிப்பை கொடுத்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

டென்மாவின் இசையில் பின்னணி இசை மிரட்டல். பாடல்களும் கேட்கும் ரகம் தான். கூத்து பாடல்கள் நிறைய உள்ளன.

கிஷோர் குமாரின் ஒளிப்பதிவு சூப்பர். காயிலான் கடைகள் கூட அழகான அழுக்காக தெரிகிறது.

வெறுமனே காயிலான் கடையாக இல்லாமல்.. அதை கொண்டு சென்று இறுதியில் நல்ல கருத்தை சொன்ன அதியன் ஆதியரை நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும்.

வசனங்கள் படத்திற்கு பலம்… மனுசனா அடுத்த உயிரோட வலியை புரிஞ்சிக்கனும். தனக்கு வந்தா உணர்வேனா என்ன அர்த்தம் என ரித்விகா கேட்கும் போது நிச்சயம் கைதட்டுவீர்கள்.

இடைவேளையில் குண்டு முக்கியமா? இல்லை காதலி முக்கியமா? என தினேஷ் வைத்து ஒரு ட்விஸ்ட் கொடுத்துள்ளார் டைரக்டர்.

வெடிக்காத குண்டுகளாலும் எப்படி ஆபத்து வருகிறது.? என்பதையும் குண்டு வெடித்தால் எந்த மாதிரியான அழிவுகள் வரும என்பதையும் சூப்பராக காட்டியுள்ளனர்.

அதிலும் குண்டு வெடித்து விடுமா? என நமக்கே மன உளைச்சலை கொடுத்துள்ளனர்.

கிளைமேக்ஸில் குரோசிமா நாட்டு அழிவு பற்றி பேசுவது நம் இதயத்தை கூட அழ வைக்னகும்.

டூயட் பாடல்களை குறைத்திருக்கலாம்.

இந்த படத்தை தயாரித்த டைரக்டர் பா ரஞ்சித்துக்கும் ஒரு மலர் குண்டு அனுப்பலாம்..
First on Net மண்ணாங்கட்டி கூஜா… மார்கெட் ராஜா MBBS விமர்சனம் 1.75/5

First on Net மண்ணாங்கட்டி கூஜா… மார்கெட் ராஜா MBBS விமர்சனம் 1.75/5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிக்பாஸ் 2 நிகழ்ச்சியின் வின்னர் ஆரவ் ஹீரோ நடித்துள்ள படம் இது. கமல், அஜித், விக்ரம் உள்ளிட்டோருக்கு சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த சரண் இயக்கியிருக்கிறார். படம் எப்படி என்பதை பார்ப்போமா..?

வசூல் ராஜா MBBS கதை சாயலில் கொஞ்சம் பேய் கதையை சேர்த்து மார்கெட் ராஜா கதையை கொடுத்துள்ளனர்.

இப்படத்தை சுரபி பிலிம்ஸ் சார்பில் எஸ்.மோகன் தயாரித்திருக்கிறார்.

இந்த படத்திற்கு விமர்சனம் எழுதி நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்றுதான் நினைத்தோம். ஆனால் வெறுமனே குறை சொல்வது ஈசி. ஆனால் என்ன குறை என்பதை சொல்லாமல் இருப்பது சரியல்லவே. எனவே இந்த விமர்சனத்தை தொடர்கிறோம்.

கதைக்களம்…

ஆரவ் பெரம்பூர் பகுதியின் தாதா. அதாவது அவர் தான் மார்கெட் ராஜா. இவரது அம்மா ராதிகா. இவர் சுருட்டு பிடிக்கும் பழக்கம் உடையவர்.

காவ்யா தப்பார் மெடிக்கல் காலேஜ் ஸ்டூடண்ட். காவ்யாவை செகன்ட் ஹீரோ லவ் செய்கிறார். ஆனால் அவர் ஒரு பயந்தாங்கொள்ளி என்பதால் அவரை லவ் செய்ய மறுக்கிறார்.

ஆனால் அந்த காலேஜ்க்கு ஒரு முறை அதிரடியாக வரும் ஆரவ்வை காதலிக்கிறார் காவ்யா.

ஒரு கட்டத்தில் செகன்ட் ஹீரோ தன் காதலியை கவர்ந்திழுக்க தனியாக சுடுகாட்டுக்கு செல்கிறார். அப்போது ஆரவ்வும் அங்கு செல்கிறார்.

அங்கு ஆரவ்வுக்கு வைக்கப்படும் துப்பாக்கி குறி தவறி செகன்ட் ஹீரோ மீது பாய்கிறது. அவர் இறந்த அடுத்த நிமிடமே அந்த ஆன்மா ஆரவ்வுக்குள் புகுந்து விடுகிறது.

இதனால் ஒரு தாதா கோழையாக மாறிவிடுகிறார். கோழையாக மாறிய பின்னர் என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.

ஆரவ் ராதிகா நிகிஷா

கேரக்டரகள்…

முதல் படமே ஆரவ்வுக்கு இப்படியொரு ஆரம்பமா? என்பதே நம் வருத்தம். நல்ல உயரம், நல்ல உடல்வாகு, ஸ்மார்ட் ஹீரோ என பல அம்சங்கள் இருந்தும் சரியான கதையை தேர்ந்தெடுக்காமல் விட்டுவிட்டார்.

ராதிகா எவ்வளவு திறமையான நடிகை என்பது எல்லாருக்கும் தெரியும். ஆனால் மகனிடம் அடி வாங்குவது முதல் சுருட்டு பிடிப்பது வரை ராதிகாவை ரசிக்க முடியவில்லை.

சமீபத்தில் ராதிகாவுக்கு நடிகவேள் செல்வி என்ற பட்டத்தை கொடுத்தார்கள். இந்த படத்தை பார்த்தால் அதை திருப்பி வாங்கிடுவார்கள் போல.

படத்தில் நிகிஷா பட்டேல் மற்றும் காவ்யா தப்பார் என 2 ஹீரோயின்கள் உள்ளனர். கவர்ச்சியிலும் அழகிலும் ஓகே. ஆனால் நடிக்க ஸ்கோப் இல்லை.

இவர்களுடன் நாசர், மதன்பாபு உள்ளிட்டோரும் உண்டு. இதில் நாசர் கேரக்டர் பெயர் சிவாஜி. மதன்பாபு பெயர் நாகேஷ். இரண்டு சிறந்த நடிகர்களின் பெயர்களையும் சிதைத்துவிட்டனர்.

சாயாஜி சிண்டே GOD FATHER என்பதால் அவரை கடவுள் அப்பா என்று வேறு அழைத்து நம்மை கடுப்பேத்திவிட்டனர்.

சாம்ஸ் உடன் இணைந்துள்ள ஆதித்யா வில்லன் ரோலுக்கு செட்டாவார். ஆனால் அவரை காமெடியாக்கி விட்டனர். சாம்ஸ் சில இடங்களில் ஓகே.

டெரர் வில்லன் பிரதீப் ராவத். அவரின் கேரக்டரையும் வீணடித்துவிட்டனர். மற்றொரு அம்மா கேரக்டரில் வரும் ரோகிணி கேரக்டரிலும் வலுவில்லை.

மார்கெட் ராஜா

தொழில்நுட்ப கலைஞர்கள்..

படத்திற்கு இசையமைத்திருப்பவர் சைமன் கே. கிங். இசையும் பின்னணி இசையும் நம்மை கவரவில்லை. தாதா அண்ணா என்ற பாடல் பாதி பேச்சிலும் பாதி ஏனோ தானோ என செல்கிறது.

ஆரவ் திடீரென மாஸ் காட்டும்போது இரைச்சலை கொடுத்துள்ளார். ஒரு டான் படத்திற்கு இன்னும் மெனக்கெட்டு இருக்கலாம்.

ஒளிப்பதிவை கேவி. குகன் செய்துள்ளார். இவரின் கைவண்ணத்தால் படத்தை பார்க்க முடிகிறது.

கோபி கிருஷ்ணா எடிட்டிங் செய்துள்ளார். சாரி செய்திருக்கிறாரா? என்பது தான் தெரியவில்லை.

தேவதர்ஷினி முனீஷ்காந்த் காட்சிகள் செம போர். பேய் இருக்குதா? என்பதை தெரிந்துக் கொள்ள நீச்சல் அடிக்கும்போது ஒரு கண்ணாடி அணிந்திருப்போம் இல்லையா? அதுபோல் மேஜிக் லென்ஸ் போட்டுக் கொள்கிறார்கள். அது போட்டால் பேய் தெரியுமா? தாங்கலடா சாமி. இதில் பேய் ஓட்ட சாமியார்கள் கூட்டம் வேற வருகிறது.

இயக்கம் பற்றிய அலசல்…

சரண் சார் என்னாச்சு? ஆள்மாறாட்டம் செய்வது எல்லாம் ஓகே தான். ஒரே போல உருவம் இருப்பவர்களை ஆள் மாறாட்டம் செய்யலாம்.

ஆனால் ஆரவ் அந்த மெடிக்கல் காலேஜ் ஸ்டூடண்க்கும் கொஞ்சம் கூட ஒற்றுமை இல்லை. ஆனால் அவர் இடத்தில் ஆரவ் தேர்வு எழுதுவது பின்னர் படிப்பு சான்றிதழ் வாங்குவது எல்லாம் நம் காதில் வாழைப்பூவை வைப்பதற்கு சமம்.

ஆசை நிறைவேறாமல் அலையும் ஒரு ஆன்மா லிப் கிஸ் அடித்தவுடன் அந்த ஆவி சென்று ஒரிஜினல் ஆரவ் வரும்போது நம்மால் சிரிக்காமல் இருக்க முடியாது.

ஆரவ் ஒரு டான்? டாக்டரா? பேய்? என டைரக்டரே கன்ப்யூஸ் ஆகி ஏதோ சொல்லி படத்தை முடித்திருக்கிறார்.

ஆக இந்த மார்கெட் ராஜா MBBS.. மண்ணாங்கட்டி கூஜா

Market Raja MBBS review rating

அடுத்தடுத்த அட்வைஸ்… அடுத்த சாட்டை விமர்சனம் 2.75/5

அடுத்தடுத்த அட்வைஸ்… அடுத்த சாட்டை விமர்சனம் 2.75/5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சாட்டை படத்தில் பள்ளி கல்வியை காட்டியிருந்தனர். அடுத்த சாட்டை படத்தில் பள்ளிக்கும் ஆசிரியர்களுக்கும் புரமோசன் போல. கல்லூரியில் நடப்பது போன்ற கதையை அமைத்துள்ளனர்.

கதைக்களம்…

தயாளன் (சமுத்திரக்கனி) அப்பா ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் காலேஜில் தமிழ் ஆசிரியராக பணிபுரிகிறார். நேர்மை உண்மை கடமை என இருக்கிறார்.

ஒரு ஆசிரியையுடன் இவருக்கு காதலும் உள்ளது.

மாணவர்கள் தோளில் கை போட்டு பழகும் குணம் கொண்டவர். கூடவே தயாளன் என்ற இவரின் பெயரை சொல்லி அழைத்தாலும் கவலைப்பட மாட்டார். எனவே இவரை மாணவர்களுக்கு பிடிக்கும்.

ஆனால் இவரின் ஓவர் நேர்மை கல்லூரியின் தலைமை ஆசிரியர் தம்பி ராமையாவுக்கு பிடிக்காது. கூடவே சில ஆசிரியர்களுக்கும்.

தம்பி ராமையா மகன் பழனிமுத்து (யுவன்) அதே கல்லூரியில் படிக்கிறார். அவருக்கு சக மாணவி போதும் பொண்ணு (அதுல்யா) மீது ஒருதலை காதல்.

ஆனால் அதுல்யாவோ கீழ் ஜாதி பையனுடன் நட்பாக பழகுகிறார். இதனால் யுவன் கடுப்பாகி ஜாதி வெறியை அங்கே விதைக்கிறார். இது ஒருபுறம் இருக்க, தம்பி ராமையா கொடுக்கும் பிரச்சினைகளால் மாணவர்களுக்கு பல இடையூறுகள் ஏற்படுகிறது.

காதல் பிரச்சினை, ஜாதி பிரச்சினை, நிர்வாக பிரச்சினை ஆகிய அனைத்துக்கும் சமுத்திரக்கனி எப்படி தீர்வு கண்டார் என்பதே படத்தின் க்ளைமாக்ஸ்.

கேரக்டர்கள்..

சமுத்திரக்கனி புரொபசர் அல்லது போலீஸ்? என்று தெரியாத அளவுக்கு செம மிடுக்காக வருகிறார். முகத்தில் ஒரே பாவனைகளை வைத்துக் கொண்டு அட்வைஸ் செய்கிறார். கொஞ்சம் அட்வைஸ் அல்ல. படம் முழுக்க சக ஆசிரியர்களுக்கும் அட்வைஸ் பாடம் எடுக்கிறார்.

ஒரு நண்பனுடன் பழகுவதன் குற்றமா? என அதுல்யா கேட்கும் காட்சிகள் சூப்பர். எனக்கு முன்ன படித்த ஒரு பெண் தவறாக காதல் கீதல் என நடந்துக் கொண்டால் எங்களை கல்லூரிக்கு அனுப்ப மாட்டார்கள். அதுபோல் நான் தவறு செய்தால் இனிவரும் பெண்களுக்கு அது ஒரு பிரச்சினையாக இருக்கும். நாங்கள் கல்லூரிக்கு வருவதே பெரும் பிரச்சனையாக உள்ளது என அதுல்யா ஆதங்கப்படும்போது நம்மை கண் கலங்க வைக்கிறார்.

ஜல்லிக்கட்டு போராட்டம் பற்றியும் பேசி கைத்தட்டல்களை வாங்குகிறார் அதுல்யா.

இவருடன் கன்னிகா கேரக்டர் நன்றாக உள்ளது. ஆனால் அவருக்கு பெரிதாக ஸ்கோப் கொடுக்கவில்லை.

பள்ளி ஆசிரியர்கள் கேரக்டர்கள் சிலவை நன்றாக உள்ளது. ஆனால் ஒரு பிரின்சிபால் இப்படி இருப்பாரா? என நம்மை கடுப்பேத்துற மாதிரி நடித்துள்ளார் தம்பி ராமையா. அதுவே அவரின் நடிப்புக்கு சான்றிதழ்.

பியூனாக இருக்கும் ஜார்ஜ் கொடுத்த வேலையை செய்துள்ளார்.

மாணவர்களாக வரும் யுவன், ஸ்ரீராம் மற்றும் ஆதி கேரக்டர்கள் சூப்பர். சமுத்திரக்கனியின் ஜோடியும் நன்றாக உள்ளது.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

ஜஸ்டின் பிரபாகரன் இசையில் பாடல்கள் ஓகே. ஒளிப்பதிவாளரும் தன் பங்கை சிறப்பாக செய்துள்ளார்.

கல்லூரி படம் என்றால் இன்னும் ஜாலியாக கொஞ்சம் காமெடியாக காட்டியிருக்கலாம்.

ஆனால் ஆர்ட்ஸ் காலேஜில் இவ்வளவு கன்டிசன் எதற்கு? எனத் தெரியவில்லை. மேலும் படிக்க வசதியில்லாதவர்கள் தனியார் கல்லூரியில் ர்ட்ஸ் சேர்வதன் நோக்கம் ஏன்? அரசு கல்லூரியில் சேரலாமே? அதற்கான சரியான விளக்கம் இல்லை.

படம் முழுவதும் கிட்டதட்ட 5000 மாணவர்கள் இருப்பார்கள் போல. அதை சூட்டிங் செய்வதே பெரும் சவால்தான்.

ஜாதி கயிறு கட்டிய மாணவர்கள் ஆசிரியர்கள் இவையெல்லாம் ரொம்ப ஓவர். பெரும்பாலும் மாணவர்கள் அதை பார்ப்பது இல்லை. ஆனால் இதிலும் காட்டியிருப்பது இப்போது சாத்தியமா எனத் தெரியவில்லை.

க்ளைமாக்ஸ் காட்சி கொஞ்சம் செயற்கையாக உள்ளது. ஆனால் அதில் தம்பி ராமையாவின் முடிவு ரசிக்க வைக்கிறது.

கல்லூரி காட்சி என்றாலும் அதில் அரை டவுசர் பெண்கள் என காட்டாமல் அனைத்தையும் நாகரிகமாக காட்டியிருக்கிறார் இயக்குனர்.

கலை கல்லூரியில் கேம்பஸ் இன்டர்வியூ சூப்பர் திட்டம். அதுபோல் மாணவர்கள் நாடாளுமன்றம் ரசிக்க வைக்கிறது. இந்த புதிய முயற்சிக்காகவே டைரகடர் அன்பழகனை பாராட்டலாம்.

ஆக…. அடுத்தடுத்த அட்வைஸ் தான் அடுத்த சாட்டை.

ரொமான்டிக் புல்லட்… எனை நோக்கி பாயும் தோட்டா விமர்சனம் 3/5

ரொமான்டிக் புல்லட்… எனை நோக்கி பாயும் தோட்டா விமர்சனம் 3/5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

3 வருடத்திற்கு போராட்டத்திற்கு பிறகு இந்த தோட்டா இன்று தியேட்டர்களில் பாய்ந்திருக்கிறது. அதுவும் கிளாசிக் டைரக்டர் பெயர் எடுத்த கௌதம் மேனனுடன் தனுஷ் இணைந்திருப்பதால் இந்த படத்தின் எதிர்பார்ப்பு கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. சரி படம் அதை பூர்த்தி செய்துள்ளதா என்பதை பார்ப்போம்.

கதைக்களம்…

கௌதம் மேனன் படங்கள் வாய்ஸ் ஓவரில் நகரும். இந்த படமும் அப்படிதான்.

கேங்ஸ்டர் கும்பல் ஒன்று தனுஷை சுட்டு விடுகின்றனர். அவர்களிடம் இருந்து தப்பிக்கும் தனுஷ் வாய்ஸ் ஓவரில் கதையை கடத்துகிறார்.

காலேஜில் படிக்கிறார் தனுஷ். அந்த காலேஜில் சினிமா சூட்டிங்க்கு வருகிறது ஒரு படக்குழு. அந்த படத்தின் ஹீரோயின்தான் மேகா ஆகாஷ்.

ஆனால் அவருக்கோ அந்த படத்தில் நடிக்க விருப்பமில்லாமல் நடித்து வருகிறார்.

இதனிடையில் காலேஜ் பாய் தனுஷுடன் காதலில் விழுகிறார் மேகா ஆகாஷ். இதனால் டைரக்டர் மேகாவை மிரட்டி அழைத்து செல்கின்றார்.

இதன்பின்னர் நடக்கும் சஸ்பென்ஸ சம்பவங்களே படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்….

தனுஷின் முகமும் உடலும் எந்த கேரக்டர் என்றாலும் செட்டாகும் என்பது நமக்கு தெரிந்த ஒன்றுதான். காலேஜ் பையனாகவும் பின்னர் தாடி வைத்து சேலன்ஞ் செய்யும் காட்சிகளில் தன் சிறந்த நடிப்பை கொடுத்துள்ளார்.

அதுவும் மேகா ஆகாஷ் உடன் தனுஷின் கெமிஸ்ட்ரி செம. அதில் கௌதம் மேனனின் கிளாசிக் டச்சை நாம் பார்க்கலாம்.

மேகா ஆகாஷ் நடித்த முதல் படம் இதுதான். அப்படியொரு ப்ரெஷ்ஷாக இருக்கிறார். கொள்ளை அழகு. அழும் காட்சிகளில் இன்னும் கூடுதல் எமோசன் தேவை. கௌதம் பட ஹீரோயின்கள் என்றாலே எல்லாரும் அழகுதான்.

சசிகுமார் மற்றும் சுனைனா காட்சிகள் அதிகம் இல்லை என்றாலும் படத்தின் கதையோட்டத்திற்கு நகர்கிறது. இருவரும் தங்கள் நடிப்பில் கச்சிதம். சசிகுமார் கேரக்டர் நன்றாக உள்ளது.

செந்தில் வீரசாமி கேரக்டர் நிச்சயம் ரசிகர்களுக்கு பிடிக்கும். வேல ராமமூர்த்தி கேரக்டர் வலுவில்லை.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

தனுஷ் மேகா ஆகாஷ் ரொமான்டிக் காட்சிகள் இளைஞர்களுக்கு கலர்புல் ட்ரீட். அதனை கூடுதல் அழகுடன் கொடுத்துள்ளார் இசையமைப்பாளர் தர்புகா சிவா.

இவரது இசையில் பாடல்கள் அனைத்தும் இதம். முக்கியமாக ஒரு வார்த்தை பேசாதே மற்றும் விசிறி பாடல்கள் சூப்பர்.

அதுபோல் வசனங்களும் சூப்பர். இவ்ளோ அழகை தேடி போனதில்லை, உன் முகத்தை தாண்டி யோசிக்க முடியவில்லை’ என்ற வசனம் காதலர்களை கவரும்.

’ஆம்பள அப்பப்போ மிருகமா நடந்துக்கொள்வான், அப்படி தான் நானும்’ என்ற வசனம் முரட்டு சிங்கிளை கைத்தட்ட வைக்கும்.

காதலர்களுக்கு காட்சிகல் விருந்து படைத்துள்ளார் ஒளிப்பதிவாளர்கள் ஜாமன் டி ஜான் மற்றும் மனோஜ் பரகஹம்சா.

பிரவீன் ஆன்டனி எடிட்டிங்கில் இன்னும் கத்திரி போட்டிருக்கலாம். 2ஆம் பாதியில் வாய்ஸ் ஓவர் ஓவர் என நாம் சொல்ல வேண்டிய அளவுக்கு ஓவராகவே உள்ளது. அதை குறைத்திருக்கலாம். பேசும் வசனங்களை விட வாய்ஸ் ஓவர் ரொம்பவே கடுப்பேத்துகிறது.

காதலுடன் சஸ்பென்சையும் கலந்து தன் ஸ்டைலில் கலந்துக் கொடுத்துள்ளார் டைரகடர் கௌதம் மேனன்.

அவரது வேட்டையாடு விளையாடு, என்னை அறிந்தால், அச்சம் என்பது மடமையடா என அனைத்து படங்களிலும் நாம் பார்த்த அதே ஸ்டைல்தான். பாதி சஸ்பென்சாகவும் பாதி ரொமான்டிக்காவும் படம் நகர்கிறது. இந்த ரூட்டை கௌதம் எப்போது மாற்றுவாரோ? தெரியல. ரொமான்ஸ் மட்டும் ஓகே.

படம் முதலில் குழப்பத்தை ஏற்படுத்தினாலும் பின்னர் தான் டைரக்டர் காட்சிகளை விளக்குகிறார்.

ஆக இதில் தனுஷ் உடன் இணைந்து தோட்டாவை பாய வைத்துள்ளார்.

எனை நோக்கி பாயும் தோட்டா… ரொமான்டிக் புல்லட்

Enai Noki Paayum Thota review rating

More Articles
Follows