மோதல் நிறைந்த புரம்.; வீரபாண்டியபுரம் விமர்சனம் 3.25/5

மோதல் நிறைந்த புரம்.; வீரபாண்டியபுரம் விமர்சனம் 3.25/5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்..

ஒரு காதல் ஜோடியால் இரு கிராமத்து பிரிவினரிடையே ஏற்பட்ட மோதல். என வழக்கமான கிராமத்து பாணியிலான கதை.

கதைக்களம்…

வீரபாண்டியபுரம் மற்றும் நெய்க்காரப்பட்டி என்ற இரு கிராமங்களிடையே தீராத பகை இருந்து வருகிறது. நெய்க்காரப்பட்டி தலைவர் ஜெயபிரகாஷ்.

இதில் வீரபாண்டியபுரம் பெரிய குடும்பத்தைச் சேர்ந்தவர் சரத். இவரின் மகள் நாயகி மீனாட்சி.

நாயகன் ஜெய் மற்றும் நாயகி மீனாட்சி இருவரும் காதலிக்கின்றனர். ஜெய்க்கு யாருமில்லை. ஆனால் மீனாட்சியின் அப்பா ஊர் பெரியவர். ஜாதி வெறியர். இதனால் பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்துக் கொள்ளலாம் என்கிறார் நாயகி.

திருட்டுத்தனமாக திருமணம் செய்தால் என்னால் யாருக்கும் பாதிப்பில்லை. ஆனால் நீ இப்படி செய்தால் உன் குடும்பத்திற்கு அவமானம் என்கிறார் நாயகன்.

இதனால் நாயகியை அழைத்துக் கொண்டு அவளின் வீட்டுக்கே செல்கிறார். முதலில் சம்மதிக்கும் நாயகியின் அப்பா.. பின்னர் ஜெய்யை போட்டுத் தள்ள ப்ளான் போடுகிறார். அதுபோல் ஜெய்யும் சில திட்டங்கள் போடுகிறார்.

அதன்பிறகு என்னானது.? ஜெய் போட்ட திட்டம் என்ன? திட்டம் போட என்ன காரணம்.? காதல் என்ன ஆச்சு? இறுதியில் வென்றது யார்? எப்படி? என்பதே மீதிக்கதை.

கேரக்டர்கள்…

இதுநாள் வரை நாம் ஜெய்யை ஹீரோவாக மட்டுமே பார்த்து இருக்கிறோம். இதில் இசையமைப்பாளராகவும் உயர்ந்து இருக்கிறார். மனதை வருடும் பாடல்களை கொடுக்கவில்லை என்றாலும் சில பாடல்கள் கேட்கும்படியே கொடுத்து ஜெயித்து இருக்கிறார் ஜெய். அடி அவரா..? என்ற பாடல் தாளம்போட வைக்கிறது.

வழக்கமான துள்ளல் இல்லாமல் ஏதோ அமைதியாகவே நடித்துள்ளார் ஜெய். நாயகியுடன் பெரிதாக ரொமான்ஸ் இல்லை. ஆனால் அதற்கு ப்ளாஷ்பேக்கை ஒரு காரணமாக வைத்துவிட்டார் டைரக்டர்.

ஆர்ப்பாட்டமில்லாத நடிப்பில் மீனாட்சி மின்னுகிறார். ப்ளாஷ்பேக்கில் வரும் டீச்சர் கேரக்டர் கச்சிதம். அகன்ஷா சிங்க்கு பெரிய ஸ்கோப் இல்லை.

அன்னபாரதி சிறிய கேரக்டரில் நடித்துள்ளார்.

பாலசரவணன் காமெடி பெரிதாக கை கொடுக்கவில்லை என்றாலும் கொஞ்சம் கலகலப்புக்கு உதவியிருக்கிறது. காளிவெங்கட் நடிப்பு கவனிக்க வைத்துள்ளது. சென்டிமெண்டிலும் கவர்ந்துள்ளார்.

படத்தில் இரு கோஷ்டி என்பதால் நிறைய வில்லன் அடியாட்கள் உள்ளனர். அதில் சரத் (இரு வேடங்களில்), ஜெயபிரகாஷ், ஹரிஷ் உத்தமன், அர்ஜெய் உள்ளிட்டோர் கவனம் பெறுகின்றனர். அருள்தாஸ் கேரக்டர் தேவையா?

டெக்னீஷியன்கள்..

மலைவாழ் மக்கள் வசிக்கும் இயற்கை பகுதி காட்சிகள் ஒளிப்பதிவிற்கு சிறப்பு சேர்த்துள்ளது. வேல்ராஜ் தன் பணியில் சிறப்பு. திண்டுக்கல் மாவட்ட அழகை திகட்ட திகட்ட தந்திருக்கிறார்.

படத்தின் நீளம் மொத்தம் 2 மணிநேரம்தான் என்பதால் பிரச்சினையில்லை.

படத்தின் டைட்டில் கார்டு போடும் நேரத்தில் வரும் அஜய்யின் பின்னணி இசை எரிச்சலை தருகிறது. டைட்டில் கார்ட்லும் பெரிய சுவாரஸ்யம் இல்லை. ஆக்சன் காட்சிகளில் பின்னணி இசை ஓகே ரகம்.

வழக்கமான கிராமத்து கதையை சில ட்விஸ்ட்டுக்களுடன் கொடுத்துள்ளார் சுசீந்திரன். ஆனால் விறுவிறுப்பு கூட்டி கொடுத்திருக்கலாம்.

ஆனால் இது வழக்கமான சுசீந்திரன் படம் போல் இல்லை. ஏனென்றால் அதிகமாகவே வன்முறை உள்ளது. அதிலும் தலை துண்டிப்பு, கை கால் துண்டிப்பு,.. உயிரோடு எரித்தல் என நிறைய கலவரங்களை காட்டியுள்ளது ஏனோ. சிவ.. சிவா…

ஆக வீரபாண்டியபுரம்… காதலும் மோதலும் நிறைந்த புரம்

Veera Pandiyapuram movie review and rating in Tamil

மைண்ட் ரீடர்..; கூர்மன் விமர்சனம்

மைண்ட் ரீடர்..; கூர்மன் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்..

ஒருவரின் மனதில் உள்ளதை அவரை பார்க்கும் சில நொடிகளில் சொல்லிவிடும் மைண்ட் ரீடர் என்பதை தான் கூர்மன் என தமிழில் ஒரு திருக்குறள் உடன் சொல்லியிருக்கிறார்கள்.

அதாவது சந்திரமுகி படத்தில் வடிவேலு நினைப்பதை எல்லாம் ரஜினி சொல்வாரே.. அதுபோல..

கதைக்களம்..

ஊருக்கு ஒதுக்குபுறமாக உள்ள பங்களா வீட்டில் வாழ்ந்து வருகிறார் நாயகன் ராஜாஜி. இவர் முன்னாள் போலீஸ். ஒருவரிடம் பேசும் சில நிமிடங்களிலேயே அவர் மனதில் நினைப்பதை சொல்லும் திறமை கொண்டவர்.

இதனாலேயே போலீஸ் விசாரணையில் இவருக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. ஒரு கட்டத்தில் இவரின் காதலி ஜனனி ஐயர் கொல்லப்படுகிறார்.

ஜனனியின் முறைமாமன் ராஜாஜியையும் தலையில் அடித்து விடுகிறார். நாயகி இறந்துவிடுகிறார். நாயகன் மட்டும் உயிருடன் இருக்கிறார்.

இந்த பிரச்சினையில் மனதளவில் கொஞ்சம் பாதிக்கப்பட காவல்துறையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்படுகிறார் ராஜாஜி. எங்கும் வெளியில் செல்லாமல் அந்த வீட்டிலேயே தனிமையில் இருக்கிறார். இவரின் வீட்டில் உதவியாளராக பால சரவணன்.

ராஜாஜியின் திறமையை அறிந்த இன்ஸ்பெக்டர் ஆடுகளம் நரேன் குற்றவாளிகளை ராஜாஜி பண்ணை வீட்டுக்கு அனுப்பி விசாரணையில் உண்மைகளை அறிகிறார். ஆனால் ஒரு குற்றவாளி ராஜாஜியின் வீட்டில் இருந்து தப்பி விடுகிறார்.

அதன்பின்னர் என்ன ஆனது? ராஜாஜி வீட்டை விட்டு வெளியே வந்தாரா.? குற்றவாளியை கண்டு பிடித்தார்களா? என்பதே மீதிக்கதை.

கேரக்டர்கள்…

நிறைய படங்களில் பார்த்த ராஜாஜி இந்த கூர்மன் படத்தில் முற்றிலும் மாறுப்பட்ட கேரக்டரில் தோன்றியுள்ளார். நடிப்பில் முதிர்ச்சி தெரிகிறது.

தர்மதுரை படத்தில் ரஜினி வருவாரோ அதுபோல… தாடி வைத்தும் ப்ளாஷ்பேக்கில் ஷேவிங் செய்தும் அதற்கேற்ப உடல்மொழியும் கொடுத்துள்ளார். பாசம், ஆக்ரோஷம் என வித்தியாசம் காண்பித்திருக்கிறார்.

2வது நாயகனாக பிரவீன், நடிப்பில் கவனிக்க வைத்துள்ளார். குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் நடிப்பு சிறப்பு. ஆனால் பால சரவணன் கண்களுக்கு தெரியாத மறைந்த ஜனனி ஐயர் இவர் கண்களுக்கு தெரிவது எப்படின்னு தெரியல…

பாலசரவணன் கொஞ்சம் வயதான கேரக்டரில் நடித்துள்ளார். எனவே கொஞ்சம் நையாண்டியை குறைத்துள்ளார் போல.

ஜனனி ஐயர் கேரக்டரில் இன்னும் அழுத்தம் கொடுத்திருக்கலாம். நாயகனுக்கு அட்வைஸ் செய்வது மட்டுமே இவரின் வேலை.

ஆடுகளம் நரேன் வழக்கமான போலீஸ் கேரக்டரில் கச்சிதம்.

சுபு என்னும் கேரக்டரில் ஜெர்மன் ஷேப்பர்ட் என்ற நாய் நடித்துள்ளது.

டெக்னீஷியன்கள்..

சக்தி அரவிந்த்தின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம். நேர்த்தியான ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து. படத்தில் உள்ள பண்ணை வீடும் அதன் சுற்றியுள்ள பகுதிகளும் அழகு.

ஒரு திரில்லர் பட ஓட்டத்திற்கு தேவையான பின்னணி இசையை கொடுத்துள்ளார் இசையமைப்பாளர் டோனி பிரிட்டோ.

கோபி கருணாநிதியின் அரங்க அமைப்பு நம்மை கவர்கிறது.

வித்தியாசமான கதைக்களத்தை வைத்து இப்படத்தை கொடுத்துள்ளார் இயக்குனர் பிரயான் பி ஜார்ஜ். மேக்கிங்கிலும் வித்தியாசம் காட்டியுள்ளார்.

போலீஸ் கேரக்டரில் வருகிறார் ராஜாஜி. அவர் போலீசாக இருக்கும்போதும் ஓய்வில் இருக்கும்போது ஆர்மி ஜீப்பிலேயே சுத்துகிறார். அதற்கான காரணம் என்னவோ? இயக்குனரே…

பாலியல் வன்கொடுமை படத்தின் கரு. ஆனால் அதை அழுத்தமாக பதிவு செய்யாமல் விட்டுள்ளார் இயக்குனர். உணர்வுப்பூர்வமாக சொல்லியிருந்தால் இந்த கூர்மன் இன்னும் கவனிக்கப்பட வைத்திருப்பான்.

கூர்மன்… மைண்ட் ரீடர்

Koorman movie review and rating in tamil

கஷ்டகர்மா…; அஷ்டகர்மா விமர்சனம்

கஷ்டகர்மா…; அஷ்டகர்மா விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்… செய்வினை வைப்பதும் அதை வைத்தவருக்கே திருப்பி விடும் பழகிய நகரத்து கதை.

கதைக்களம்..

நாயகன் டாக்டர் கிஷன் ஒரு மனத்தத்துவ நிபுணர். இவர் கனவு தொல்லையால் பாதிக்கப்படும் ஸ்ரீதா சிவதாஸுக்கு சிகிச்சை அளிக்கிறார்.

அதாவது ஸ்ரீதாவின் வாய் பேசாத முடியாத மகன் ஓவியமாக வரையும் ஒவ்வொரு படமும் ஒவ்வொரு நிகழ்வாக நிஜத்தில் நடக்கிறது. தன் அப்பாவுக்கு ஒரு கள்ள உறவு இருக்கிறது என்பது வரை வரைகிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். (அதில் ஒரு ட்விஸ்ட்)

ஒரு கட்டத்தில் பேய் இருக்கா இல்லையா என்ற டி.வி. ஷோவில் கலந்துக் கொள்கிறார் நாயகன் கிஷன்.

அப்போது பேய் இருக்கும் என்று சொல்லும் எதிர் அணியுடன் இவருக்கு ஒரு சேலஞ்ச் ஏற்படுகிறது. அதன்படி ஒரு பங்களாவில் தங்க வேண்டும் என்கின்றனர்.

ஆனால் அந்த வீட்டு ஓனரோ தங்க விட முடியாது என மறுக்கிறார். ஏன்? என்பதுதான் மற்றொரு கதை.

இறுதியில் பேய் இருக்கும் வீட்டில் கிஷன் தங்கினாரா? சவாலில் வென்றாரா? பேய் இருக்கா? இல்லையா? என்பதே மீதிக்கதை.

கேரக்டர்கள்…

ஸ்மார்ட் ஹீரோவாக சாக்லேட் பாயாக வருகிறார் ஹீரோ கிஷன். இவர்தான் படத்தின் தயாரிப்பாளரும் கூட. ஆக்சன் ரொமான்ஸ் எனவும் எதுவும் இல்லாமல் ஜஸ்ட் லைக் தட் என வருகிறார்.

லட்டு போல பெண் கிடைச்சா.. தட்லாம்.. தட்லாம்.. என டிஆர் பாடிய பாடலுக்கு ஆடுகிறார். பாடல் வரிகள் இவருக்கு லிப்சிங் ஆகவில்லை.

இவரின் உதவியாளராக தோழியாக வருகிறார் நாயகி நந்தினி ராய். மற்றொரு நாயகியாக ஸ்ரீதா சிவதாஸ். ஆனால் நாயகியுடன் கிஷனுடன் எந்த வேலையும் இல்லை.

ஸ்ரீதா சிவதாஸ் அம்மா கேரக்டர் மற்றும் அவரது குடும்பம் ஒரு ட்விஸ்ட் ப்ளாஷ்பேக் எனலாம். அந்த கதையுடன் நாயகியை கனெக்ட் செய்திருப்பது இரண்டாம் பாகத்துக்கான லீட் என சொல்லியுள்ளனர்.

டெக்னீஷியன்கள்..

முத்து கணேஷ் இசையில் டி.ராஜேந்தர் பாடிய தட்டலாமா.. தட்டலாமா.. என்ற பாடல் ஆட்டம் போட வைக்கும். ஆனால் நாயகனின் நடனம் தான் ஒன்றும் சொல்வதற்கில்லை.. படத்தின் ஒரே ஆறுதல் குரு தேவின் ஒளிப்பதிவு. தரமாக கொடுத்திருக்கிறார்.

பல கிராமத்து படங்களில் நாம் பார்த்த செய்வினை வைப்பதுதான் இந்த படத்தின் கதை. ஆனால் அதை நகரத்து பாணியில் சொல்லியிருக்கிறார் இயக்குனர் விஜய் தமிழ்செல்வன்.

ஆனால் இது பேய் படமா… மந்திரவாதி படமா.? என குழப்பம் ரசிகர்களுக்கு வரலாம். திரைக்கதையில் சுவாரஸ்யம் கூட்டி இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.

மிஷ்ரி என்டெர்ப்ரைசைஸ் சார்பில் C.S.பதம்சந்த், C.அரிஹந்த் ராஜ் C.S.கிஷன் இணைந்து தயாரித்துள்ளனர். ஜெய்ஹிந்தி உள்ளிட்ட பிரபல படங்களை தயாரித்த ஒரு பிரபல நிறுவனம் தரமான படத்தை தயாரித்து இருக்கலாமே..

ஆக…. அஷ்டகர்மா.. ஒரு கஷ்டகர்மா

Astakarma movie review and rating in tamil

கேங்ஸ்டர் ட்ரீட் .. மகான் விமர்சனம் 3.25/5

கேங்ஸ்டர் ட்ரீட் .. மகான் விமர்சனம் 3.25/5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்…

தவறு செய்ய அனுமதிக்காத சுதந்திரம், சுதந்திரமே அல்ல என்ற மகாத்மா காந்தியின் வசனத்துடன்தான் படம் தொடங்குகிறது. காந்தி மகான் என்பதுதான் விக்ரம் கேரக்டர் பெயர்.

ஒரு தாதாவுக்கும் ஒரு போலீசுக்கும் நடக்கும் பாச போராட்டமே இப்படத்தின் ஒன்லைன்.

கதைக்களம்..

சுதந்திர போராட்ட தியாகி குடும்பம். காந்தியக் கொள்கைகளை தீவிரமாக பின்பற்றும் குடும்பத்தில் பிறந்தவர் காந்தி மகான் என்ற விக்ரம்.

குழந்தை பருவம் முதலே மது ஒழிப்பு, அகிம்சை என வளர்க்கப்படுகிறார்.

அதன்படி அரசுப் பள்ளியில் ஆசிரியராகவும் பணிக்கு சேர்கிறார்.

மனைவி சிம்ரன்.. ஒரு மகன் துருவ் (தாதா பாய் நவ்ரோஜி) என பிடிக்காத வாழ்க்கையை நகர்த்துகிறார். 40 வயதாகியும் ஒரு கட்டுப்பாடிலேயே செல்கிறார். மனைவி வேற பிடிவாத குணம் கொண்டவர்.

ஒரு நாள் மனைவி , மகன் வெளியூர் செல்ல தனியாக இருக்கும் விக்ரம் சரக்கடிக்கிறார். சிகரெட் பிடிக்கிறார். இன்று ஒருநாளாவது சுதந்திரமாக தனக்கு பிடித்தப்படி வாழ நினைக்கிறார்.

சாராயக்கடையில் பால்ய நண்பன் சத்யவான் (பாபி சிம்ஹா) சந்திக்க அன்று இரவே அவரின் வாழ்க்கை தடம் மாறுகிறது.

மறுநாள் குடும்பத்தில் பிரச்சினை எழ, சிம்ரன் இவரை பிரிந்து தன் மகனுடன் வட இந்தியா செல்கிறார்.

வேறுவழியில்லாமல் தனியாக இருக்கும் விக்ரம் தன் நண்பனுடன் இணைந்து ஜாலியாக வாழ்கிறார். பார்களை திறக்கின்றனர். தங்கள் கம்பெனி சார்பாக சரக்குகளை விற்கின்றனர். கோடிக்களில் புரளுகின்றனர்.

இவர்கள் அந்த ஏரியாவின் தாதா போல உருவாகுகின்றனர். அரசியல்வாதிகள் வரை இவர்களின் கட்டுப்பாட்டில் உள்ளனர்.

20 – 25 வருடங்களுக்கு பிறகு என்கௌண்டர் ஸ்பெஷல் போலீஸ் ஆபிசராக வருகிறார் விக்ரம் மகன் துருவ்.

அன்றுமுதல் அப்பா மகன் போராட்டம் வெடிக்கிறது. பாபி சிம்ஹா ஆட்களை என்கௌண்டரில் போடுகிறார் துருவ்.

நண்பனா..? மகனா-..? என்ன செய்தார் விக்ரம்..? அப்பா.? கடமையா..? என்ன செய்தார் துருவ்..? என்பதே மீதிக்கதை.

கேரக்டர்கள்..

படம் முழுக்க விக்ரமின் ராஜ்ஜியம் தான். காந்தி மகான் கேரக்டரில் கச்சிதம். நண்பன் மகன் என க்ளைமாக்சில் இவர் நகர்த்தும் விஷயங்கள் வேற லெவல். விக்ரமுக்கு உண்மையான கம்பேக்.. ஜாலியாக ஒரு வாழ்க்கை.. த்ரில்லாக ஒரு வாழ்க்கை… பாசமாக ஒரு வாழ்க்கை என வெரைட்டி காட்டியுள்ளார்.

தாதா பாய் நவ்ரோஜியாக வருகிறார் துருவ். அப்பாவுடன் போட்டி போட்டு நடித்துள்ளார். ஒரு வேளை குட்டி 16 அடி பாயும் என நினைத்து பல இடங்களில் ஓவர் ஆக்டிங் செய்துள்ளார். திடீரென திடீரென கத்துகிறார். இது எரிச்சலை ஏற்படுத்துகிறது.

மற்றபடி பக்கா ஷேவிங் செய்து மாணவன்.. தாடி வைத்த என்கௌண்டர் போலீஸ் என மிரட்டியிருக்கிறார் துருவ் விக்ரம்.

கார்த்திக் சுப்பராஜ் படம் என்றால் பாபி சிம்ஹா வேற மாரி.. வேறமாரி.. ஆரம்பம் முதல் க்ளைமாக்ஸ் வரை அசத்தியிருக்கிறார் சிம்ஹா.

சிம்ரன் பெரிதாக கவரவில்லை. வாணிபோஜன் படத்தில் நடித்திருக்கிறார் என்ற செய்தி வந்தது.? ஆனால் எங்கு என்றுதான் தெரியவில்லை.

டெக்னிஷியன்கள்..

விக்ரமின் வளர்ச்சி, மதுபான தயாரிப்பு என கதை செல்வது சலிப்பை தட்டுகிறது. பாடல்கள் தேவையில்லாத ஆணிகள்.. ஒரு பாடல் கூட உருப்படியாக இல்லை. முதல்பாதி முடிவதற்குள் நமக்கு சோர்வு வருகிறது

துருவ் வந்த பிறகுதான் படத்தின் கதை சூடுபிடிக்கிறது.

ஷ்ரேயஸ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு அசத்தல் ரகம். 1968 முதல் 2018 வரை காட்சிகளை வேறுப்படுத்தி காட்டியிருப்பது சிறப்பு.

எடிட்டர் பல காட்சிகளை வெட்டி எறிந்திருக்கலாம். படத்தின் நீளம் பெரிய குறையாக உள்ளது.

அப்பா – மகன் போட்டியில் வெல்வது யார்.? என்ற சுவாரசியமான கதையை வைத்து மூன்று மணி கொடுத்திருக்கிறார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்.

மேலும் வழக்கமான அவரது பாணியில்தான் இப்படம் நகர்கிறது. சில ட்விஸ்ட் ரசிக்கும்படி உள்ளதை பாராட்டலாம். ஆனால் கேங்ஸ்டர் கதையில் சில மாற்றங்களை இனிவரும் காலங்களில் கார்த்திக் சுப்பராஜ் செய்தால் பல வெற்றிகளை பெறலாம்.

ஆக… இந்த மகான்.. கேங்ஸ்டர் ட்ரீட்

Mahaan movie review and rating in Tamil

FIR (FANTASTIC INVESTIGATION RIDE).. எப்ஃஐஆர் FIR விமர்சனம் 3.75/5

FIR (FANTASTIC INVESTIGATION RIDE).. எப்ஃஐஆர் FIR விமர்சனம் 3.75/5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்..

முஸ்லீம்கள் என்றாலே தீவிரவாதம் முத்திரை குத்தப்படுகிறது. அந்த பழியில் இருந்து மீண்ட ஒருவன் மற்றவர்களின் முகத்திரையை கிழித்திருக்கிறார்.

விஷ்ணு விஷால் நடிப்பில் அறிமுக இயக்குனர் மனு ஆனந்த் இயக்கத்தில் மஞ்சிமா மோகன், ரைசா, ரெபா மோனிகா, கெளதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகி வெளியாகியுள்ள திரைப்படம் தான் “எப் ஐ ஆர்”. இப்படத்தை விஷ்ணு விஷால் தனது சொந்த நிறுவனத்தின் மூலம் தயாரித்திருக்கிறார்.

கதைக்களம்..

கெமிக்கல் இன்ஜினியரிங் முடித்துவிட்டு தனக்கு பிடித்த வேலையை தேடி அலைகிறார் விஷ்ணு விஷால். முஸ்லீம் மதத்தைச் இவர் சேர்ந்தவர் என்பதால் இவரது பெயர் இர்பாஃன் பதான்.

இவரின் காதலி ரெபோ மோனிகா. விஷ்ணு விஷாலின் அம்மா போலீஸ் அதிகாரி. விஷ்ணுவின் தோழி ப்ராமண பெண் மஞ்சிமா மோகன் ஒரு வழக்கறிஞர்.

ஒரு கட்டத்தில் வேலையே கிடைக்காத காரணத்தால் கெமிக்கல் கம்பெனியில் வேலைக்குச் சேர்கிறார் விஷ்ணு. இதனால் அடிக்கடி கோவை, பெங்களுர், ஹைதராபாத் என பயணம் செய்கிறார்.

இவர் பயணம் மேற்கொள்ளும் நேரங்களில் இலங்கை, ஹைதராபாத் உள்ளிட்ட பகுதிகளில் வெடிக்குண்டு வெடிக்கிறது. ஒரு பிரபல அமைப்பு இந்தியாவிற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கிறது.

சில சூழ்நிலைகளால் விஷ்ணுவின் நடவடிக்கைகள் உளவுத்துறைக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. சில சாட்சிகளும் ஆதாரங்களும் இதற்கு சாட்சியாக கிடைக்க தீவிரவாத அமைப்பின் தலைவர் (அபுபக்கர்) இவர்தான் என உளவுத்துறை முத்திரை குத்துகிறது.

இதனால் விஷ்ணுவின் அம்மா பணியும் பறிபோகிறது. மேலும் அவர்களது வீட்டை காலி செய்ய சொல்கின்றனர்.

விஷ்ணு விஷால் யார்..? நிஜமாகவே அவர் தீவிரவாதிதானா..? சுமத்தப்பட்ட பழியிலிருந்து மீண்டாரா? உளவுத்துறை என்ன செய்தது.? என்பதே மீதிக்கதை..

கேரக்டர்கள்..

ஒரு படம் காமெடி.. ஒரு படம் ஆக்சன் என மாறி மாறி பயணிக்கிறார் விஷ்ணு விஷால். அவர் கதைகளை தேர்ந்தெடுக்கும் பாணிக்காகவே அவரை பாராட்டலாம். கதை மீது அளவுக்கடந்த நம்பிக்கை இருந்திருப்பதால் அவரே தயாரிப்பாளராகவும் மாறியிருக்கிறார்.

மேலும் இதுபோன்ற படத்தை ஓடிடியில் வெளியிடாமல் தியேட்டர்களில் வெளியிட துணிந்தமைக்கு அவரை வெகுவாக பாராட்டலாம்.

அப்பாவி இஸ்லாமிய இர்ஃபான் பதனாக தன் கேரக்டரை உணர்ந்து நடித்திருக்கிறார் விஷ்ணு விஷால். அதே சமயம் தன்னை காப்பாற்றிக் கொள்ள அவர் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் அசத்தல் ரகம். ஆக்‌ஷன் காட்சிகளில் சிக்ஸ் பேக் படிக்கட்டுகளை காட்டி ரசிகைகளையும் ஈர்க்கிறார்.

NIA அதிகாரியாக கெளதம் வாசுதேவ் மேனன். அவரது ஸ்டைலிஷ் இங்கிலீஷ் எப்போதும் ப்ளஸ்தான். அவரது மேனரிசம் அவரது கேரக்டருக்கு கூடுதல் பலம் அளித்துள்ளது.

இன்ஸ்வெஸ்டிகேசன் குணசேகர் கொள்ளியப்பனும் தன் கேரக்டரில் கவனம் ஈர்க்கிறார். இடையில் எங்கு காணாமல் போனார்? என்பது தெரியவில்லை.

அதுபோல் நிறைய அதிகாரிகள் வருகிறார்கள். அவர்களும் ரசிகர்களை கவர்கிறார்கள்.

படத்தில் மூன்று நாயகிகள். இதில் மனிஷாவாக வரும் ரைசா முதல் இடம் பெறுகிறார். ஆக்சன் காட்சிகளிலும் ஃபயராக வருகிறார் ரைசா. இனி அவருக்கு இதுபோன்ற வித்தியாசமான கேரக்டர்கள் சான்ஸ் வரும்.

கன்னங்கள் வீங்கி குண்டு பெண்ணாக வருகிறார் மஞ்சிமா மோகன். இனியாவது அவர் உடலை கவனிப்பது நல்லது. படத்தில் பெரிதான வேலையில்லை. பிராமண பெண்ணாக ப்ராத்தனா கேரக்டரில் ரசிக்க வைக்கிறார்.

ரெபா மோனிகா அழகான ஒரு மெலோடி பாட்டுக்கு வந்து அட.. அடடா அழகு என ரசிக்க வைக்கிறார். இவரின் கேரக்டர் க்ளைமாக்சில் செம ட்விஸ்ட்.

டெக்னீஷியன்கள்…

ஒளிப்பதிவாளர் அருள் வின்செண்ட் படத்தின் பில்லர் எனலாம். அருமையாக காட்சிகளை நகர்த்தியிருக்கிறார். ரொமான்டிக் சீன் மற்றும் ஆக்‌ஷன் காட்சிகளில் மிரட்டலான ஒளிப்பதிவு.

அஷ்வத் இசையில் விழியே.. பாடல் சூப்பர். பின்னனி இசையில் தெறிக்கவிட்டுள்ளார். ஆரம்பம் முதல் க்ளைமாக்ஸ் வரை இசை ராஜ்யம் நடத்தியுள்ளார் அஷ்வத். பிரசன்னாவின் படத்தொகுப்பு ஷார்ப் தான். எங்கும் போரடிக்கவில்லை.

ஜெட் ஸ்பீட்டில் மேக்கிங் என தனி முத்திரை படைத்துள்ளார் டைரக்டர் மனு ஆனந்த்.

படத்தின் ஆரம்பம் முதலே ரேஸ் கார் வேகத்தில் பயணிக்கிறது கதை. இது ஆக்சன் பிரியர்களுக்கு செம ட்ரீட்டாக இருக்கும். அதை சிறப்பாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் மனு ஆனந்த். இது அவரின் முதல் படம் என்று சொன்னால் யாரும் நம்பமாட்டர்கள். திரைக்கதையை தெளிவாக வைத்து க்ளைமாக்சில் செம ட்விஸ்ட் வைத்து சீட் நுனியில் ரசிகர்களை உட்கார வைப்பார்.

தேசத்திற்காக உண்மையாக வாழும் அனைவரும் இந்நாட்டின் மன்னனே என உணர்த்தியிக்கிறார்.

ஆக.. இந்த எப்ஃஐஆர் படம்.. FIR (FANTASTIC INVESTIGATION RIDE)

FIR movie review and rating in Tamil

கடைசி விதை..; கடைசி விவசாயி விமர்சனம் 3.75/5

கடைசி விதை..; கடைசி விவசாயி விமர்சனம் 3.75/5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்…

நம் அனைவருக்கும் உணவளிப்பவனே உயர்ந்தவன். அந்த உயர்ந்த உள்ளம் கொண்ட விவசாயி பற்றிய வாழ்வியலே இந்த பாடம்.

கதைக்களம்…

75-80 வயது மதிக்கத்தக்க நல்லாண்டிதான் இந்த கதையின் நாயகன்.

ஓர் அழகான கிராமத்தில் விவசாயம் செய்து தன்னை மட்டுமே நம்பி வாழ்கிறார். நாத்து நடவோ அறுவடை செய்யவோ ஆள் கிடைக்காவிட்டாலும் தனி ஆளாக அனைத்தையும் செய்து வருகிறார்.

பலர் 100 நாட்கள் வேலை திட்டத்தை நம்பியிருக்க இவர் மட்டுமே 365 நாட்கள் விவசாயியாக வாழ்ந்திருக்கிறார்.

செயற்கை உரங்களை நம்பாமல் இயற்கை முறையில் விவசாயம் செய்கிறார். இவரின் எண்ணத்திற்கு ஏற்ப இவரது கேணியில் மட்டும் தண்ணிரூக்கு பஞ்சமில்லை.

ஒரு கட்டத்தில் 15 வருடங்களாக நின்றுபோன ஊர் குல தெய்வத்திற்கு படையலிட இவரிடம் நெல்மணிகளை கேட்கின்றனர்.

இதற்காக நாத்து நாட்டு பயிரிடுகிறார் நல்லாண்டி.

பிராணிகள் மீது அதீத அன்பு கொண்ட இவரது விவசாய நிலத்தில் மூன்று மயில்கள் இறந்து கிடக்கின்றன.

இறந்த மயில்கள் தானே என தனது நிலத்திலேயே மூன்றையும் புதைத்தும் விடுகிறார்.

இதனை பார்த்த ஒரு நபர் தவறுதலாக நல்லாண்டி தான் 3 மயில்களை கொன்று புதைத்தார் என காவல்துறையில் புகாரளித்து விடுகிறார்.

மயிலை கொன்ற காரணத்திற்காக நல்லாண்டி மீது போலீஸ் வழக்கு பதிய சிறையில் அடைக்கப்படுகிறார்.

இதனால் பயிரிடப்பட்ட நாற்று பாதியில் நிற்கிறது.

நல்லாண்டி வழக்கில் இருந்து மீண்டாரா ? பயிர்கள் என்னவானது. ? குல தெய்வம் படையல் திருவிழா நடந்ததா? என்பதே மீதிக் கதை.

கேரக்டர்கள்…

இந்த பெரியவர் நல்லாண்டி நிஜ வாழ்க்கையில் கொரோனா காலத்தில் மரணமடைந்துவிட்டார். ஒருவேளை அவர் இருந்திருந்தால் ஒட்டு மொத்த பாராட்டையும் பெற்று இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்திருப்பார்.

அவர் படத்தில் ஒரு காட்சியில் கூட நடிக்கவில்லை. அவர் செய்வதை செய்யட்டும் நான் படமாக்கி கொள்கிறேன் என இயக்குனர் & ஒளிப்பதிவாளர் மணிகண்டன் நினைத்திருப்பார் போல… அப்படியே யதார்த்தமாக வருகிறார் இந்த மனிதர்.

அவரின் அப்பாவித்தனம் படத்திற்கு கூடுதல் பலம்.. ஒரு காட்சியில் கோர்ட்டில் நீதிபதி வந்து அமர… யார் அந்த பெண்? என கேட்கிறார்.

நம் உயிர்களை போல நெற்பயிரும் உயிர்தான். அதனை காப்பது நம் கடமை என சொல்லும்போது நம் கண்கள் கலங்கும்.

கதையின் நாயகி என்றால் அது நீதிபதியாக வரும் ரெய்ச்சல் ரெபேகா தான். இந்த மனிதர் மயிலை கொன்று இருப்பாரா.? என போலீசிடம் கேட்கும்போது நீதி தேவதையாக தோன்றுகிறார்.

இறுதியில் தீர்ப்பளித்துவிட்டு விவசாயிக்கு என்ன ஆச்சு என பதறும்போது ரெய்ச்சல் மீது நடிப்பு பாய்ச்சல் ஒளி தெரிகிறது.

கைதியாக வருபவர், போலீஸ் ஏட்டாக வந்த காளைப் பாண்டியன், கிராமத்து வாசிகளாக வந்த முனீஸ்வரன், காளிமுத்து & பாட்டியம்மாக்கள் உள்ளிட்டவர்கள் சூப்பர்.

படத்தில் முருக பக்தனாக விஜய்சேதுபதி & யானை வளர்ப்பவனாக யோகிபாபு இருவரும் ஓரிரு காட்சிகளில் வருகிறார்கள். அவ்வளவுதான்.

டெக்னீசியன்கள்…

சந்தோஷ் நாராயணன் மற்றும் ரிச்சர்ட் இருவர்களின் பின்னனி இசை ரசிக்க வைக்கிறது. ஏற்கெனவே கேட்ட முருகா முருகா பாடல்களை தவிர்த்து புதுப்பாடல்களை போட்டு இருக்கலாம்.

கிராமத்து அழகினை வெறுமனே காட்டாமல் மயில், மாடு, கோழி, யானை உள்ளிட்ட ஜீவன்களுடன் காட்டியது கூடுதல் சிறப்பு.

எந்த செயற்கைத்தனமும் இல்லாத கிராம மக்களின் வாழ்வியலுடன் ரேஷன் கார்டு, மின்சாரம் என எதுவும் இல்லாமல் வாழும் நல்லாண்டி போன்ற மனிதர்களை நாம் இன்று பார்க்க முடியாது.

அவரின் உன்னதமான வாழ்க்கையை இன்றைய தலைமுறைக்கு பாடமாக பதிவு செய்திருக்கிறார் மணிகண்டன் என்பதே நிதர்சனமான உண்மை.

ஆக…. இந்த கடைசி விவசாயி…

விவசாயிதான் இந்த மண்ணின் கடைசி விதை. அவர்கள் இல்லையேல் நாம் இல்லை..

Kadaisi Vivasayi movie review and rating in tamil

More Articles
Follows