தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர்கள் : டான்ஸ் மாஸ்டர் தினேஷ், மனீஷா யாதவ், யோகி பாபு மற்றும் பலர்
இயக்கம் – காளி ரங்கசாமி
ஒளிப்பதிவு – மகேஷ் முத்துசாமி
இசை – ஜோஷ்வா ஸ்ரீதர்
பி.ஆர்.ஓ. : ஜான்
தயாரிப்பு – இயக்குனர் அஸ்லம்
வெளியீடு : உதயநிதி ஸ்டாரின்
கதைக்களம்…
தினம் தினம் நாம் படிக்கும் கள்ளக் காதல் கதைதான் இப்படத்தின் ஒன்லைன்..
படத்தின் ஆரம்ப காட்சியில் போலீசிடம் ஒரு அட்ரஸ் கேட்கிறார் ஹீரோ தினேஷ் மாஸ்டர். அதன்பின்னர் அந்த அட்ரசில் சென்று திரும்பிய பின் ஒரு கொலை செய்துவிட்டதாக போலீசில் சரணடைகிறார்.
அதன்பின்னர்தான் ப்ளாஷ்பேக்…
சென்னையின் கூவம் ஓரம் உள்ள ஒரு குப்பத்தில் தன் அம்மாவுடன் வசிக்கிறார் நாயகன். சென்னை மாநகராட்சியில் குப்பை அள்ளும் தொழிலாளி இவர்.
சென்னையை சிங்கார சென்னையாக்குவோம் என அரசியல்வாதிகள் சொன்னாலும் அதை செய்வது நாங்கள்தான் என கௌரமாக சொல்பவர் தினேஷ். இவருடைய சக தொழிலாளி நண்பன் யோகிபாபு.
நாகரீகமாக வாழும் மனிஷாவை உண்மையை மறைத்து திருமணம் செய்துக கொள்கிறார்.
அதன்பின்னர் இவருடைய வேலை மனீஷாவுக்கு தெரிய வருவதால் அங்கு வாழ மறுக்கிறார். எனவே தன் மனைவி மற்றும் பச்சிளங்குழந்தைக்காக ஒரு அப்பார்ட்மெண்ட்டில் வாடகைக்கு குடியேறுகிறார்.
அங்கு உள்ள ஒரு ஐடி வாலிபருடன் மனீஷாவுக்கு கள்ளத் தொடர்ப்பு ஏற்பட இருவரும் ஊரை விட்டு எஸ்கேப் ஆகிறார்கள்.
அதன்பின்னர் தினேஷ் மாஸ்டர் என்ன செய்தார்? மனைவி கிடைத்தாளா? இப்படி பல கேள்விகளுக்கு விடைதான் இதன் க்ளைமாக்ஸ்.
கேரக்டர்கள்…
வெகுநாட்களுக்கு பிறகு சினிமாத்தனம் இல்லாத படம்.
தினேஷ் மாஸ்டர் ஒரு டான்சர் என்றாலும், அதற்காக ஓவராக டான்ஸ்க்கு இடம் கொடுக்காமல் கதைக்கு தேவையான நடிப்பை கொடுத்திருக்கிறார்.
வழக்கு எண் 18/9, ஆதலால் காதல் செய்வீர் உள்ளிட்ட படங்களை தொடர்ந்து இந்த படத்திலும் தன் நடிப்பால் கேரக்டரை பேச வைத்திருக்கிறார் மனீஷா.
பிடிக்காத வாழ்க்கை, பிறகு பிடித்த வாழ்க்கை, துயரம், சந்தோஷம் என ஒவ்வொரு சீனையும் ரசிக்க வைக்கிறார். மனீஷாவின் பூங்கொடி கேரக்டருக்கு ஒரு பூங்கொத்து பார்சல்.
படத்தின் முதல் பாதி யோகிபாபுவின் ராஜ்ஜியம்தான். இவரைப் பார்த்தாலே சிரிப்பு வந்துடும். சரக்கு விலை உயர்வுக்கும் சம்பளத்திற்கும் யோகிபாபு கொடுக்கும் விளக்கம் செம.
இவருடன் அந்த ஐடி ஜார்ஜ், ஆதிரா, கோவை பானு, செந்தில், லலிதா, சுஜோ மாத்யூஸ், கிரன் ஆர்யன் என அனைவரும் கதையை தாங்கி நிற்கிறார்கள்.
தொழில்நுட்ப கலைஞர்கள்…
ஜோஷ்வா ஸ்ரீதரின் இசையில் பாடல்கள் இனிமை. நாயகன் மற்றும் நாயகியின் வலியை நா. முத்துகுமாரின் பாடலின் வரிகள் உணர்த்துகின்றன.
பின்னணி இசையில் தீபன் சக்ரவர்த்தி நிற்கிறார்.
மகேஷ் முத்துசுவாமியின் ஒளிப்பதிவு படத்திற்கு கச்சிதம்.
தேவையான இடத்தில் கத்திரி போட்டு படத்தொகுப்பாளர் கோபி கிருஷ்ணா சபாஷ் போட வைக்கிறார்.
இயக்கம் பற்றிய அலசல்…
குப்பை போடுபவரே இங்கு கௌரவமாக பார்க்கப்படுகிறார். இந்த படம் பார்த்தால் குப்பை அள்ளுபவர்கள் மீது நமக்கு மதிப்பு ஏற்படும்.
சென்னை குப்பத்து ஏரியா அவர்களின் பழக்க வழக்கங்கள், வால்பாறை மக்கள் பேசும் பாஷை என அனைத்தையும் ரசிக்கும் படி கொடுத்திருப்பது காளி ரங்கசாமியின் ரகசியம்.
இந்த படம் பார்த்தால் நம் மனக் குப்பையை களைந்து விட்டு வரலாம்.
ஒரு குப்பைக் கதை… மனக் குப்பையை களைய ஒரு கதை
Oru Kuppai Kathai review and rating