தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர்கள் : குரு சோமசுந்தரம், ரம்யா பாண்டியன், காயத்ரி கிருஷ்ணா, மு.ராமசாமி, பாவா செல்லத்துரை மற்றும் பலர்.
இசை : சியோன் ரோல்டன்
ஒளிப்பதிவு : செழியன்
படத்தொகுப்பு : சண்முகம் வேலுசாமி
இயக்கம் : ராஜீ முருகன்
பிஆர்ஓ : ஜான்சன்
தயாரிப்பாளர் : டரீம் வாரியர்ஸ் (எஸ்ஆர் பிரகாஷ்பாபு, எஸ்ஆர் பிரபு)
கதைக்களம்…
இது ஒரு கதை என்பதை விட இதான் நாம் இன்றும் வாழும் வாழ்க்கை என்றே சொல்லலாம். நாட்டில் எது நடந்தாலும் கண்டுக்காமல் செல்லும் நம்மில், ஒருவர் அநியாயமாக நியாயத்திற்காக போராடினால் அவரை பிழைக்கத் தெரியாதவன் என்போம்.
அப்படியான ஒரு சாமானிய மனிதனின் வாழ்க்கை இப்பதிவு.
நாயகன் குரு சோமசுந்தரம், தன்னை இந்த நாட்டின் ஜனாதிபதி என அழைத்து கொள்கிறார். நாட்டில் நடக்கும் அநியாயங்களுக்கு எதிராக போரடுகிறார்.
இப்படியான ஒருவர் எதற்காக தன் மனைவியை கருணை கொலை செய்ய சொல்கிறார்? என கேள்விகளோடு இரண்டாம் பகுதி நகர்கிறது.
அதில் அழுத்தமான காரணங்களையும் உணர்வுகளையும் கொடுத்து இந்த சமூகத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார் இயக்குனர் ராஜீமுருகன்.
கதாபாத்திரங்கள்…
ஆரண்யகாண்டம், ஜிகர்தண்டா ஆகிய படங்களில் நடித்த குரு சோமசுந்தரம், இதில் மன்னர் மன்னன் கேரக்டரில் ஒரு ஜனாதிபதியாக வாழ்ந்து இருக்கிறார்.
கொடுத்த கேரக்டரில் எந்தவொரு சமரசமும் இல்லாமல் அருமையாக வாழ்ந்திருக்கிறார். லுங்கி கட்டிக் கொண்டு சாதாரண மனிதனை கண் முன் நிறுத்தியிருக்கிறார்.
கோட் அணிந்துவிட்டு அவர் பேசும் பாவனைகள் சிரிக்க வைத்தாலும் நிச்சயம் உங்களை பல முறை யோசிக்க வைக்கும்.
ரம்யா மற்றும் காயத்ரி என இரண்டு நாயகிகள். இவர்களை நீங்கள் நேரில் பார்த்தாலும் உங்களால் அடையாளம் காண முடியாது. அப்படி ஒரு யதார்த்த பதிவை இவர்கள் வழங்கியுள்ளனர்.
கோண மண்டை புடிக்கல என நாயகனை உதறிவிட்டு, பின் கொஞ்சம் கொஞ்சமாக ரம்யா பாண்டியன் மனம் மாறுவது மலர்ச்சி.
புகுந்த வீட்டில் என்ன வசதி இருக்கிறது? கேட்டுவிட்டு டாய்லெட் பற்றி கேட்கும் இடத்தில் பெண்களின் உணர்வுகளை கண்களில் பிரதிபலிக்கிறார்.
என்னதான் கணவன் சந்தோஷமாக வைத்திருந்தாலும் அடிக்கடி கட்டி முடிக்கப்படாத டாய்லெட்டை பார்க்கும்போது அவர்களின் மன உளச்சலையும் காட்டியிருக்கிறார்.
தங்கள் குழந்தை சூப்பர் சிங்கரில் பாடனும், நாம டிவியில அழனும் என கூறி டிவிக்களின் டிஆர்வி ரேட்டிங்கையும் சாடியிருக்கிறார்.
ஹீரோவுக்கு பக்கபலமாக இருந்து உதவும் காயத்ரி, க்ளைமாக்ஸில் நாளை போராட்டமா? நான் தயார் தோழரே என கூறும்போது இசை கேரக்டருக்கே பலம் சேர்த்திருக்கிறார்.
இன்று சமூகத்தில் அதிகளவில் மாற்றத்தை உண்டாக்கும் பேஸ்புக்கை ஒரு நற்பணிக்காக இவர் பயன்படுத்துவது நச்.
அதிலும் டிவி நிகழ்ச்சிக்கு ஜனாதிபதி வருவாரா? என யுவகிருஷ்ணா, அதிஷா உள்ளிட்ட ஆர்வலர்கள் கமெண்ட்ஸ் போடுவதையும் விட்டு வைக்கவில்லை.
மு.ரா. என்று அழைக்கப்படும் மு.ராமசாமி. படத்தின் அடுத்த ஹீரோ. இவர் போல் ஒருவர் போராட நமக்கு துணையாக வரமாட்டாரா? என எண்ணத் தோன்றும்.
க்ளைமேக்ஸில் இவர் கேட்கும் கேள்விகளுக்கு எவராலும் பதில் சொல்லமுடியாது.
ப்ளாஷ்பேக் காட்சியில் வரும் எழுத்தாளர் பவா செல்லதுரை படத்தின் உயிர்நாடி. காட்சிகள் கொஞ்சம் என்றாலும் மனம் முழுவதும் நிறைந்து நிற்கிறார்.
படத்தின் பிளஸ்…
- மைனஸ் ஒன்றுமில்லாத இப்படத்தில் எல்லாமே ப்ளஸ்தான்.
- செழியனின் கேமரா கவிதையாய் விரிந்து இருக்கிறது.
- பறவை பார்வையில் நாயகன் கிராமத்துக்குள் உலா வருவதைக் காண்பித்தல் நச்.
- ஷான் ரோல்டனின் இசை படத்திற்கு மிகப்பெரிய பலம். என்னங்க சார் உங்க சட்டம்? செல்லம்மா பாடல்கள் மனதில் ஒரு பெரிய மாற்றத்தை உருவாக்கும்.
- சதீஷ்குமார் கலையில் கிராமங்களும் அந்த வீடுகளும் கொள்ளை அழகு.
- இவையில்லாமல் வசனங்கள், காட்சி அமைப்பு, யதார்த்த பதிவு என அனைத்தையும் சொல்லிக் கொண்டே போகலாம்.
கைகொடுக்கும் முக்கியமான காட்சிகள்…
- மினரல் வாட்டர் நிறுவனத்தின் பெயர் ‘AMA’, ‘
- மதுவால் இறந்தவர் இங்கே… மதுவைத் திறந்தவர் எங்கே உள்பட பலர் பேனர்கள்
- அரசு அலுவலகத்தில் ஆமையை விடுதல்
- கக்கூஸ் கட்டியதாக அரசிடம் கணக்கு காட்டும் அந்த போட்டோ காட்சிகள்
- டாய்லெட் இடிந்து விழும் அந்த கனமழை காட்சிகளும் அதன் பின்னணிகளும்
கைகொடுக்கும் வசனங்கள்…
- விமானத்தை கையெடுத்து கும்பிடுதல், அரை நாள் உண்ணாவிரதத்துக்கு ஏன் ஏர் கூலர்?
- இஸ்லாம் பிறைக்கும் சிவன் பிறைக்கும் முடிச்சு போட்டு பேசும் மேடைபேச்சு
- குண்டு வைக்கிறவன விட்டுங்க, கோயில்ல உண்டக்கட்டி வாங்குறவன் பிடிங்க?
- கக்கூஸ்ல ஊழல் பண்ற உங்ககிட்ட கருணையை எப்படி எதிர்பார்க்கிறது?
- ஹீரோவைவிட வில்லனைத்தான் இப்போ ஜனங்களுக்கு பிடிக்குது
- நிம்மதியா வாழவும் விடல பேளவும் விடல இவிங்க
- எந்த போலீஸ் ஸ்டேஷன்லயாவது ஆடி காரோ, பி.எம்.டபிள்யூவோ துருப்பிடிச்சு நின்னுட்டிருக்கா?’
- கக்கூஸ் கட்டுன காசு நாறாது
- சகாயம் பண்ணல.. அட்லீஸ்ட் சகாயம் மாதிரி பண்ணுங்க
- நகைக்கடைக்காரன் புரட்சி பண்ற நாட்ல, ஜனாதிபதி புரட்சி பண்ணக் கூடாதா?
- உங்களுக்கு நல்லது பண்ணினா நான் பைத்தியக்கரனா? போங்கடா போய் பீயை தின்னுங்க.? லாட்ஜ்ல பிராத்தல் பண்ணுங்க
- நாம ஓட்டுப்போட்டுதான அவன் ஆட்சிக்கு வர்றான்… அவன டிஸ்மிஸ் பண்ண உரிமை இல்லையா….?
இப்படியான சாட்டையடி வசனங்கள் கூடுதல் பலம்.
இயக்குனர் ராஜீமுருகன்…
இப்படியான ஒரு படத்தை எடுப்பதற்கு ஒரு தைரியம் வேண்டும். அதற்கு ஒத்துழைத்த தயாரிப்பாளரையும் பாராட்டியே ஆகவேண்டும்.
பொதுவாக அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள், போலீஸ் ஆகியோரை எதிர்க்கும் ஒருவரை மாஸ் ஹீரோவாக நாம் பார்த்திருப்போம். அதுதான் தமிழ் சினிமாவின் சக்ஸஸ் பார்முலாவும் கூட.
ஆனால் இங்கே இவர்களை எதிர்க்கும் ஹீரோவே நீங்கள்தான். நம்மை மறந்து பல முறை கைதட்டல்கள் அள்ளிச் செல்கிறார் இந்த ஹீரோ டைரக்டர்.
மொத்தத்தில் இந்த ஜோக்கர் – இந்தியாவின் ரியல் ஹீரோ