தில்லுக்கு துட்டு விமர்சனம்

தில்லுக்கு துட்டு விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘லொள்ளு சபா’ ராம்பாலாவுடன் கைகோர்த்திருக்கிறார் சந்தானம். இவர்களின் ‘தில்லுக்கு துட்டு’ எப்படி..?

நடிகர்கள் : சந்தானம், ஷனன்யா, ஆனந்த்ராஜ், கருணாஸ், சௌரப் சுக்லா, நான் கடவுள் ராஜேந்திரன், டி.எம். கார்த்திக், சிங்கமுத்து மற்றும் பலர்.
இசை : எஸ்.தமன்
ஒளிப்பதிவு : தீபக்குமார்
படத்தொகுப்பு : கோபி கிருஷ்ணா
இயக்கம் : ராம்பாலா
பிஆர்ஓ : விஜயமுரளி
தயாரிப்பாளர் : ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ்

 

கதைக்களம்

சந்தானம், ஷனாயா காதலை எதிர்க்கிறார் ஷனாயாவின் அப்பா சௌரப் சுக்லா.

இவர்களை காதலை பிரிக்க ராஜேந்திரனை அணுகி, ஐடியா கேட்கிறார் சௌரப்.

அவரின் ஆலோசனைப்படி சந்தானத்தின் குடும்பத்தை ஒரு பங்களாவுக்கு வரவழைத்து பேய் வேஷம் போட்டு கொல்ல திட்டமிடுகிறார்.

அங்கே ஏற்கெனவே பேய்கள் நடமாடும் நிலையில், இந்த செட்டப் பேய்க்கும் நிஜ பேய்களுக்கும் நடக்கும் காமெடி யுத்தமே தில்லுக்கு துட்டு

கதாபாத்திரங்கள்…

வெறும் காமெடி நடிகர் என்ற நிலையில் இருந்த சந்தானம் இன்று ஹீரோவுக்கான அனைத்தையும் கற்று அசத்தியிருக்கிறார்.

இதில் தாடியுடன் நடித்து, கொஞ்சம் வித்தியாசமும் காட்டியிருக்கிறார்.

பேயை கிண்டல் செய்து பேசும் வசனங்கள் தியேட்டரில் அப்ளாஸை அள்ளுகிறது. சிலவை கேட்ட வசனங்களாக இருப்பது சலிப்பை தட்டுகிறது.

அறிமுக நாயகி ஷனாயா ரொமான்ஸ் காட்சிகள் மற்றும் பாடல்களுக்கு  வந்து போகிறார்.

காமெடி படமா ராஜேந்திரனை கால்ஷீட்டை புக் பன்னுங்க என்றும் சொல்லுமளவுக்கு ராஜேந்திரன் இதிலும் ஸ்கோர் செய்துள்ளார்.

இவர்களுடன் கருணாஸ் மற்றும் ஆனந்தராஜ் ஆகியோரின் பங்களிப்பு அருமை.

அதிலும் காமெடி பண்ணரேன்னு நான் பழைய வில்லன்றத மறந்துடாத என ஆனந்த்ராஜ் சொல்லும் இடம் சிரிப்பு மழை.

மாமனார் மருமகனாக வரும் சௌரப் சுக்லா, T M கார்த்திக்கின்  ஆகியோர் அருமையான தேர்வு. ஒரிஜினல் ‘சேட்டு’ போல சௌரப் சுக்லா… சபாஷ் சுக்லா.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

கார்த்திக் ராஜா பின்னணி இசையில் பலம் சேர்கிறார். பாடல்களை கேட்கலாம்.

தீபக் குமார் பாடியின் ஒளிப்பதிவு டெரர் காட்டுகிறது.

கலை இயக்குனர் ஏ.ஆர்.மோகனின் பேய் எஃபெக்ட்டை படத்தை தாங்கி நிற்கிறது.  ஆக்ஷனில் ஹரி தினேஷிம் குறை வைக்கவில்லை.

படத்தின் ப்ளஸ்

  • சந்தானம், ராஜேந்திரன், ஆனந்த்ராஜ் ஆகியோரின் பங்களிப்பு
  • இடைவேளைக்கு பிறகு வரும் அரைமணி நேர காமெடி சீன்ஸ்

படத்தின் மைனஸ்…

  • முதல்பாதியை கொஞ்சம் இயக்குனர் கவனிருத்திருக்கலாம்.
  • பின்னணி இசையளவு பாடல்கள் இல்லை.

கீரை சாதம் சாப்பிட்டுட்டு வாய் கொப்பளிக்கலையா. பல்லு கறை கறையா இருக்கு.” , ”12 மணிக்கு பேய் வரும்னா, அதை சொல்ல 11.45க்கு நீ வருவியா.” போன்ற வசனங்களுக்கு நிறைய யோசித்திருப்பார்கள் போல. அது ஓகேதான்.

ஆனால் ”முட்டை தேடி வந்த டைனோசர் மாதிரி… முட்டை போண்டாவுக்கு டை கட்டின மாதிரி, ஆதாம் ஏவாலுக்கு பொறந்த மூத்த மகன் மாதிரி…” என்ற இந்த மாதிரி மாதிரி டயலாக்குகளை சந்தானம் எப்போது மாற்ற போகிறார்.? அடிக்கடி கேட்கவே ஒரு மாதிரியாக இருக்கிறது.

பேய் படம்ன்னா லாஜிக் இருக்கக்கூடாதா? என்ன? மீறல்களிலும் சில க்ளீஷேக்களையும் அதிக கவனம் செலுத்தி இருக்கலாம்.

மொத்தத்தில் தில்லுக்கு துட்டு…. கொடுத்த துட்டுக்கு ரசிக்கலாம்.

அட்ரா மச்சான் விசிலு விமர்சனம்

அட்ரா மச்சான் விசிலு விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : மிர்ச்சி சிவா, சீனிவாசன், நைனா சர்வார், சென்ட்ராயன், ராஜ்கபூர், சிங்கமுத்து, மன்சூர் அலிகான், மதுமிதா மற்றும் பலர்.
இசை : ரகுநந்தன்
ஒளிப்பதிவு : காசி விஷ்வா
படத்தொகுப்பு : சுஜீத்
இயக்கம் : திரைவண்ணன்
பிஆர்ஓ : கேஎஸ்கே செல்வா
தயாரிப்பாளர் : என். திருநாவுக்கரசு

 

ad 4

கதைக்களம்…

சினிமாவில் பெரிய நடிகராக இருக்கிறார் பவர் ஸ்டார் சீனிவாசன். இவரின் உதவியாளர் சிங்கமுத்து. அவரின் தீவிர ரசிகர்களான சிவா, சென்ட்ராயன்.

பவர்ஸ்டாரின் படங்கள் வரும்போது அமர்க்களப்படுத்தும் இவர்கள் ஒருமுறை அவரின் படத்தை வாங்கி விநியோகம் செய்கின்றனர்.

படம் பெரும் தோல்வியை சந்திக்க, நஷ்டஈடு கேட்கின்றனர். ஹீரோ மறுக்க அதன்பின்னர் ரசிகர்கள் எடுக்கும் முடிவே மீதிக்கதை.

கதாபாத்திரங்கள்…

மிர்ச்சி சிவா ரசிகராக நடித்துள்ளார். தன் தலைவனுக்காக எதையும் செய்யும் கேரக்டரில் சில ரசிகர்களை நினைவுபடுத்துகிறார்.

இதில் கொஞ்சம் டான்சும் ஆடி இருக்கிறார். ஆனால் சென்டிமென்ட் மற்றும் ஜாலியான காட்சிகளில் ஒரே மாதிரியான ரியாக்ஷன்தான். கொஞ்சம் மாற்றினால் நல்லது.

நாயகி நைனா சர்வார். அழகு பதுமையாக வந்து செல்கிறார். கலங்கும் காட்சிகளில் கூட ஓவர் மேக்கப் போட்டு பளிச்சின்னு இருக்கிறார்.

பப்ளியாக இருந்தும் இவரை ஹீரோ அவ்வளவாக கண்டுக் கொள்ளாமல் இருப்பது ஏனோ?

ad 1

பவர்ஸ்டார் சீனிவாசன் உயர்ந்த நடிகர்களுக்கே உரிய பந்தாவாக வருகிறார். பெரும்பாலும் கூலிங் கிளாஸ் அணிந்திருப்பதால், முக பாவனைகள் தெரியவில்லை.

க்ளைமாக்ஸ் காட்சியில் ரசிகர்களுக்கு புத்திமதி சொல்லி இருக்கிறார். மற்றபடி ஒன்றுமில்லை.

சென்ட்ராயன் இதில் கொஞ்சம் வித்தியாசம் காட்ட முயற்சித்திருக்கிறார்.

ராஜ்கபூர் மற்றும் டிபி கஜேந்திரன் சிலகாட்சிகளில் வருகின்றனர்.

இவர்களுடன் மன்சூர் அலிகான், சிங்கமுத்து, மதுமிதா ஆகியோர் தங்கள் பணியை கொஞ்சம் ஓவராகவே செய்துள்ளனர்.

ad 3

தொழில்நுட்ப கலைஞர்கள்…

படத்திற்கு பக்கபலமாய் அமைந்திருக்கிறது ரகுநந்தனின் இசை. பாடல்கள் அனைத்தும் தாளம் போட வைக்கிறது.

காசி விஸ்வாவின் ஒளிப்பதிவு கச்சிதம்.

படத்தின் ப்ளஸ்…

  • இடைவேளை ட்விஸ்ட்
  • ரசிகர்களுக்கு பாடம் சொன்னது

படத்தின் மைனஸ்…

  • ஹீரோ + ரசிகர்கள் மோதல் என்ற எதிர்பாராத இடைவேளையை கொடுத்துவிட்டு, அதன் பின்னர் சுவாரஸ்யமில்லாமல் கதையை கொண்டு சென்றது.
  • மன்சூர் அலிகான், சிங்கமுத்து மற்றும் மதுமிதாவின் ஓவர் ஆக்ட்டிங்
  • காட்சிகளில் உள்ள நாடகத்தன்மை.

ad 2

நடிகர்களும் மனிதர்கள்தான். படம் என்பது பொழுதுபோக்கு சாதனமே. அதுவே ரசிகனின் வாழ்க்கையல்ல என்பதை சொன்ன திரைவண்ணனை பாராட்டலாம்.

இயக்குனர் முதல்பாதியில் கொடுத்த விறுவிறுப்பை இரண்டாம் பாதியில் கொடுத்திருந்தால் இன்னும் இன்னும் அட்ரா மச்சான் விசிலு என சொல்லியிருக்கலாம்.

மொத்தத்தில் அட்ரா மச்சான் விசிலு.. ரசிகனுக்கு நடிகன் சொல்லும் பாடம்.

பைசா திரை விமர்சனம்

பைசா திரை விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : ஸ்ரீராம், ஆரா, தீபிகா, நாசர், மயில்சாமி, ராஜசிம்மன், சென்ட்ராயன், மதுசூதன் ராவ், ராம்ராஜ் மற்றும் பலர்.
இசை : ஜே.பி.
ஒளிப்பதிவு : கே.பி. வேல்முருகன்
படத்தொகுப்பு : எஸ்.பி. அஹ்மது
இயக்கம் : அப்துல் மஜீது
பிஆர்ஓ : சுரேஷ் சந்திரா
தயாரிப்பாளர் : மஜீத், ரங்கநாதன் ராஜீ, கராத்தே கே. ஆனந்தன்

கதைக்களம்…

குப்பை பொறுக்கும் ஸ்ரீராம் ஒருமுறை ஆரா தவறவிட்ட பணத்தை அவரிடம் கொடுக்கிறார். அதுமுதல் அவர்களுக்குள் காதல் வளர்கிறது.

இதனிடையில் கூவம் நதியில் மறைத்து வைக்கப்பட்ட கோடிக்கணக்கான பண மூட்டை ஸ்ரீராமிடம் சிக்குகிறது.

இதனை வைத்து செட்டிலாக திட்டமிடுகிறார் அவர். ஆனால் அதனால் அவருக்கு பிரச்சினை மேல் பிரச்சினை வர இறுதியாக என்ன செய்கிறார்? என்பதே படத்தின் கதை.

????????????????????????????????????????

கதாபாத்திரங்கள்…

குப்பை பொறுக்கும் பையனாக ஸ்ரீராம். சில இடங்களில் நடிக்கவும் செய்திருக்கிறார். நன்றாக அழுகிறார்.

ஆனால் இவரை பார்த்தால் அழுக்கு பையனாகவே தோன்றவில்லை. எப்பொழுதும் க்ளீனாக வருகிறார். இவர் மட்டுமல்ல இவரது கூட்டாளிகளும் ப்ரெஷ்ஷாகவே வருகிறார்கள்.

ஆரா… அமர்களப்படுத்தியிருக்கிறார். கண்களால் காதல் மொழி பேசி ரசிக்க வைக்கிறார். ஆனால் காதல் சந்தியாவின் தங்கை போலவே இருக்கிறார்.

நாசர் சில காட்சிகளில் படத்தின் கருத்தை வலியுறுத்தி செல்கிறார். குப்பை போடுற நம்மள விட குப்பையை பொறுக்கி சுத்தம் செய்கிற அவர்கள் தான் நாட்டிற்குதான் தேவை என்பதை நன்றாகவே உணர்த்தியிருக்கிறார்.

சென்ட்ராயனுக்கு காட்சிகள் குறைவு என்றாலும் அவர் பேசும் வசனங்கள் ரசிக்க வைக்கிறது.

ஏழை பத்து ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 3 ரூபாய் பிடிக்கிறாங்க. பணக்காரன் 500 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் எக்ஸ்ட்ரா டாக் டைம். இதாண்டா உலகம்.

மதுசூதன் ராவ் மற்றும் ராஜசிம்மன் இருவரும் தங்கள் பார்வையாலே வில்லத்தனம் செய்கின்றனர். நல்ல தேர்வு.

தீபிகா வில்லனை கிக் ஏற்ற அடிக்கடி வருகிறார். மயில்சாமி காட்சிகளில் காமெடியே இல்லையே ஏன்..?

Paisa-Tamil-movie-poster-6

தொழில்நுட்ப கலைஞர்கள்…

  • ஜே.வி.யின் இசையில் ஓரிரு பாடல்கள் ஓகே.
  • வேல்முருகன் ஒளிப்பதிவில் எல்லாரும் பளிச்சென இருக்கிறார்கள். அழுக்கு குப்பை என்றாலும் பெரிதாக அசிங்கமே தெரியவில்லை. அதனால் யதார்த்தம் குறைகிறது.

படத்தின் ப்ளஸ்….

  • தூய்மை இந்தியா திட்டத்திற்கு முன்மாதிரி
  • ஆராவின் அழகான நடிப்பு
  • க்ளைமாக்ஸ் மற்றும் ஆக்ஷன் பைட்

படத்தின் மைனஸ்…

  • குப்பை பொறுக்குபவர்களின் போல் அல்லாத பேச்சு மற்றும் கேரக்டர்கள்.
  • பணம் வீட்டில் இருக்கும்போது வீட்டை டைட்டாக பூட்டி செல்லும் ஸ்ரீராம் வீட்டுக்குள் சென்றால் உள்ளே பூட்ட மாட்டாரா?
  • பணமூட்டை அடிக்கடி திறந்து பார்ப்பது ஏன்..?

paisa

இயக்குனர் அப்துல் மஜீத் ஒரு நல்லெண்ண அடிப்படையில் எடுத்து நல்ல கருத்துக்களையும் கூறியிருக்கிறார்.

க்ளைமாக்ஸ் பைட்டில் இருக்கும் விறுவிறுப்பு படம் முழுவதும் இருந்தால் இன்னும் ரசிக்க வைத்திருக்கும்.

மொத்தத்தில் பைசா…. கொஞ்சம் வரவு..!

ஒரு மெல்லிய கோடு விமர்சனம்

ஒரு மெல்லிய கோடு விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : அர்ஜீன், ஷாம், மனீஷா கொய்ராலா, அக்ஷா பட் மற்றும் பலர்.
இசை : இளையராஜா
ஒளிப்பதிவு : கிருஷ்ணஸ்ரீராம்
படத்தொகுப்பு : கிருஷ்ண ரெட்டி
இயக்கம் : ஏஎம்ஆர். ரமேஷ்.
பிஆர்ஓ: மௌனம் ரவி
தயாரிப்பாளர் : ரூபாதேஷ் ராஜ்ராய்

கதைக்களம்…

ஒரே இரவில் நடக்கும் கதைதான் இப்படம்.

மல்ட்டி மில்லியனர் மனீஷா கொய்ராலா கொலை செய்யப்படுகிறார். அவருடைய உடல் ‘போஸ்ட் மார்ட்டம்’ செய்ய வைக்கப்பட்டுள்ளது.

பலத்த போலீஸ் பாதுகாப்பு இருந்தும், உடல் காணாமல் போய்விடுகிறது. எனவே போலீஸின் சந்தேக பார்வை மனீஷாவின் கணவர் ஷாம் மீது விழுகிறது.

மிடுக்கான போலீஸ் அதிகாரி அர்ஜுன் அவரை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து ஒன்றன் பின் ஒன்றாக உண்மைகளை வெளிச்சத்து கொண்டு வருகிறார்.

ஆனால் க்ளைமாக்ஸ் யாரும் எதிர்பாராத ஒன்று.

omk 2

கதாபாத்திரங்கள்…

எத்தனை நடிகர்கள் போலீஸ் வேடத்தில் நடித்தாலும் அர்ஜுனுக்கு இந்த கேரக்டர் ஒரு வரப்பிரசாதம்தான்.
கிரிமினலை விட இவர் ஒவ்வொன்றாக திட்டம் தீட்டுவது ரசிக்க வைக்கிறது.

ஆனால் பைட் எதுவும் இல்லாமல் அமைதியாக வந்து அசத்தியிருக்கிறார்.

எந்த நடிகரும் ஏற்காத வேடத்தை ஷாம் செய்துள்ளார். சாக்லெட் பாயாக வந்த இவர் சமீபகாலமாக சவாலான பாத்திரங்களை தேர்ந்தெடுத்து வருகிறார்.

டாய்லெட்டில் பேப்பரை போட்டுவிட அது உள்ளே செல்லாமல் இருக்கையில் அதை தின்பது என கேரக்டராக மாறியிருக்கிறார் ஷாம். பார்க்கும் நமக்கே உவ்வே… என தோன்றும்.

omk 3

தன்னை விட மூத்த மனிஷா கொய்ராலாவை ஷாம் ஏன் திருமணம் செய்தார்? என்பதே இப்படத்தை பார்க்க வைக்கும்.

நீண்ட நாட்களுக்கு பிறகு மனீஷா கொய்ராலா. வயதான கேரக்டர் என்பதால் ஓகே. ஆனால் அதிலும் தன் கணவருக்கு தன் மீது காதல் இல்லையோ? என ஏங்குவது ரசிக்க வைக்கிறது.

ஷாமின் காதலியாக அக்ஷா பட் கொஞ்சம் நடிக்கவும் செய்திருக்கிறார்.

படத்தின் இயக்குனர் A.M.R.ரமேஷும் அர்ஜீனுடன் விசாரணை அதிகாரியாக நடித்துள்ளார். இனி அவருக்கு நடிப்புக்கான வாய்ப்புகள் வரும்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

இளையராஜாவின் இசையில் பின்னணி மிரட்டல். படத்திற்கு பலம்.
ஒளிப்பதிவாளர் கிருஷ்ணஸ்ரீராம் மற்றும் எடிட்டர் கிருஷ்ண ரெட்டியும் தங்கள் பணியை சிறப்பாக செய்துள்ளனர்.

???????????????????????????????????????????????????????

படத்தின் ப்ளஸ்…

  • ஆரம்பம் மற்றும் க்ளைமாக்ஸ் ட்விஸ்ட்
  • ஷாமின் மாறுபட்ட நடிப்பு

படத்தின் மைனஸ்…

  • அருமையாக திட்டம் போட்டு மனைவியை கொலை செய்யும் ஷாம், போலீஸ் விசாரணையில் அலட்சியமாக இருப்பது ஏன்..? துளிகூட முகத்தில் சோகம் இல்லையே?

?????????????????????????????????????????????????????

மனைவி இறந்த துக்கமே இல்லாமல் இருந்தால் போலீஸ்க்கு சந்தேகம் வரும் என இவருக்கு தெரியாதா? இயக்குனர் கவனிக்கவில்லையா?

மொத்தத்தில் ‘ஒரு மெல்லிய கோடு’ – நிச்சயம் பார்க்கலாம்.

ஜாக்சன் துரை விமர்சனம்

ஜாக்சன் துரை விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : சத்யராஜ், சிபிராஜ், பிந்து மாதவி, கருணாகரன், மொட்டை ராஜேந்திரன், யோகிபாபு, சண்முக சுந்தரம் மற்றும் பலர்.
இசை : சித்தார்த் விபின்
ஒளிப்பதிவு : யுவா
இயக்கம் : தரணிதரன்
பிஆர்ஓ : நிகில் முருகன்
தயாரிப்பாளர் : எம்.எஸ். சரவணன்

கதைக்களம்…

பிந்துமாதவியை மணக்க சிபிராஜ் மற்றும் கருணாகரன் போட்டி போடுகின்றனர். எனவே பிந்துவின் தந்தை சண்முக சுந்தரம் பேய் பங்களாவில் ஒரு வாரம் தங்க உத்தரவு இடுகிறார்.

அப்போதுதான் அங்குள்ள ஜாக்சன் என்ற பேய்க்கும் துரை என்ற பேய்க்கும் நடக்கும் பனிப்போர் இவர்களுக்கு தெரிய வருகிறது.

அந்த போராட்டம் இந்தியாவின் சுதந்திர காலப் போராட்டம் என்பதால் பேய்களுடன் இணைந்து இவர்கள் இருவரும் போராட இறுதியில் என்ன ஆனது என்பதே இப்படத்தின் மீதிக்கதை.

Jackson-Durai-movie-poster

கதாபாத்திரங்கள்…

பின்னணி இசையோடு சத்யராஜின் அறிமுக காட்சி செம. தன் மகள் தன் நாட்டுக்காக உயிரை விடுவதும், அதன்பின் தானும் உயிரை விடுவதும் ஓகே. இரண்டு தோற்றத்திலும் மிகப் பொருத்தமாக இருக்கிறார்.

ஆனால் அதன்பின் வரும் காட்சிகள் எல்லாம் என்ன சொல்வதன்றே தெரியவில்லை. பேயாக வந்து சாவதும் பின் பேயாக வருவதும் மீண்டும் பேயாக… படிக்கிற உங்களுக்கு கடுப்பா இருக்கா? எங்களுக்கும்தான்.

இவருடன் ஜாக்சன் பேய், மனைவி பேய், குழந்தை பேய் மற்றும் மொட்டை ராஜேந்திரன் பேய் என பேய் பேய்யாக வரிசை கட்டி நிற்கும்போது சிரிக்கவும் முடியவில்லை. பயமும் வரவில்லை.

சிபிராஜின் இன்ட்ரோ ஸ்மோக் ஸ்பெக்ட் எல்லாம் ஓகேதான். ஆனால் காட்சிகளில்தான் வலுவில்லை. கூளிங் கிளாஸ் குணாவை கூட இதில் காணல. ட்ரை பன்னுங்க ப்ரோ.

கருணாகரன் சில நேரம் காமெடி செய்து மற்ற நேரங்களில் அவரே டயர்ட் ஆகிவிடுகிறார்.

பிந்து மாதவிக்கு ஏன் இந்த நிலைமை? படத்தில் சில காட்சிகளில் அவரை பார்த்த ஞாபகம் மட்டும் இருக்கிறது. மகாநதி சங்கரும் இருக்கிறார்.

யோகிபாபுக்கு நல்ல கை தட்டல் இருக்கிறது. ஆனால் அவர் வரும் காட்சிகள்தான் குறைவு.

jackson-durai-movie-trailer

தொழில்நுட்ப கலைஞர்கள்….

பாடல்கள் கைகொடுக்கவில்லை. ஆனால் படத்தை பின்னணி இசை மட்டும் தாங்கி நிற்கிறது. ஆனால் பேய் பயம் நமக்கு வரவில்லை என்பதால் அதுவும் சப்பென்று ஆகிவிடுகிறது.

மற்றவர்களை விட ஒளிப்பதிவாளர் யுவாவிற்கும் ஆர்ட் டைரக்டர் டி.என். கபிலனுக்கும் நிறைய வேலை இருந்துள்ளது.

பேய் படம் என்பதால் முழுக்க இருட்டிலேயே எடுத்துள்ளனர். ஒளிப்பதிவாளருக்கு வேலை இருந்த அளவுக்கு ஒளிக்கு வேலையில்லை.

படத்தின் ப்ளஸ்…

  • மோட்டார் பைக் பாடல் கொஞ்சம் ரசிக்க வைக்கிறது.
  • கலை கபிலனும் ஒளிப்பதிவாளர் யுவாவும் படத்தை தாங்கி நிறுத்துகின்றனர்.
  • சுதந்திர போராட்டக் காலத்தில் உயிர் இழந்தவர்கள் தங்கள் சுதந்திர நாட்டை காண வேண்டும் என்பதற்காக பேய்யாக பங்களாவில் வாழ்வது.
  • Jackson-Durai-Tamil-Movie-Satyaraj-Stills-1

படத்தின் மைனஸ்…

  • ப்ளாஷ்பேக்கில் சத்யராஜ் மற்றும் அவரது மகள் இலக்கிய தமிழில் பேசுகின்றனர். பின்னர் நவீன தமிழ் மீண்டும் அடுத்த நொடியே இலக்கிய தமிழ் பேசுகின்றனர்.
  • பின்னர் நவீன காலத்தில் சிபிராஜ் பேசும்போது கொச்சை தமிழ் என்பது என்ன நியாயமோ..?
  • பேய்யுடன் மனிதன் போராடும் படங்களை பார்த்திருப்போம். ஆனால் இதில் ஒரு மனிதன் மற்றும் பேய்கள் சேர்ந்து வெள்ளைக்கார பேயுடன் போராடுவது எல்லாம் ரொம்பவே டூ மச்.
  • உடம்பு மற்றும் முகம் முழுவதும் வெள்ளை சாயம் பூசி கண்களில் மட்டும் கறுப்பு மை பூசி பயமுறுத்துவது எல்லாம் ஓவர் பழசு.

சத்யராஜ் போன்ற அனுபவமிக்க கலைஞர்களை கொண்டு இன்னும் நன்றாக கொடுக்க முயற்சித்திருக்கலாம் இயக்குனர் தரணிதரன்.

பர்மா படத்தில் பட்டைய கிளப்பியவர். இதில் சறுக்கியிருக்கிறார்.

மொத்தத்தில் ஜாக்சன் துரை… பயமில்லாத ஜவ்வு துரை

அப்பா திரை விமர்சனம்

அப்பா திரை விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : சமுத்திரக்கனி, தம்பி ராமையா, நமோ நாராயணன், வினோதினி, ப்ரீத்தி, வேல ராமமூர்த்தி, விக்னேஷ், ராகவ், யுவலட்சுமி, கேப்ரில்லா, நசாத் மற்றும் பலர்.
இசை : இளையராஜா
ஒளிப்பதிவு : ரிச்சர்ட் எம் நாதன்
படத்தொகுப்பு : ஏஎல் ரமேஷ்
இயக்கம் : சமுத்திரக்கனி
பிஆர்ஓ : நிகில் முருகன்
தயாரிப்பாளர் : நாடோடிகள் புரொடக்சன் சமுத்திரக்கனி

 

கதைக்களம்…

மூன்று அப்பாக்களும் (பெற்றோர்களும்) அவர்களது குழந்தைகளும். இவர்களுடன் வேறொரு பெற்றோரின் இரண்டு மகள்கள்.

தன் மகனின் ஆசையை தானாகவே தெரிந்து கொண்டு நிறைவேற்றும் ஒரு அப்பா. (சமுத்திரக்கனி-விக்னேஷ்)

குழந்தை பிறந்தது முதல் படிப்பு, அமெரிக்க வேலை, திருமணம் வரை திட்டமிடும் கண்டிப்பான ஒரு அப்பா. (தம்பி ராமையா-ராகவ்)

மூன்றாவது அப்பா.. மகனே நாம் இருக்கிற இடம் யாருக்கும் தெரியாம இருந்துக்கனும் என்று சொல்பவர்.  (நமோ நாரயணன்-நசாத்)

இவர்களில் எந்த அப்பாவின் மகன் நல்ல நிலைக்கு உயர்ந்து வருகிறான்? எப்படி வளர்க்கப்படுகிறான்? எந்த அப்பாவின் ஆசை நிறைவேறியது என்பதே இந்த படம்.

appa 1

கதாபாத்திரங்கள்…

ஒரு அப்பாவாக மட்டுமில்லாமல் தன் மகனுக்கு ஒரு நண்பனாகவும் மற்ற குழந்தைகளுக்கு அப்பாவாகவும் வாழ்ந்திருக்கிறார் சமுத்திரக்கனி.

மகனுக்கு சைக்கிள் கற்று கொடுப்பது, தனியாக பஸ்சில் பயணிக்க சொல்வது, நீச்சல் கற்று கொடுப்பது, அவன் போக்கில் இவர் சென்று வழிகாட்டுவது என அனைத்தும் ரசிக்கும் ரகம்.

மாமனார் வேலராமமூர்த்திக்கு மருமகனாக இல்லாமல் மகனாகவும் தன் கேரக்டரை உயர்த்தி நிறுத்தியிருக்கிறார்.

இவரின் நண்பனாக வரும் டாக்டர் சசிகுமாரும் அனல் பறக்கும் வசனங்களை பேசி செல்கிறார்.

எந்த கேரக்டர் கொடுத்தாலும் அதில் ஜெயித்து காட்டுவேன் என்பது போல தம்பி ராமையா இதிலும் வெளுத்து கட்டியிருக்கிறார். மகனையும்தான்.

எந்த குழந்தை பிறக்கும்? என்ன பெயர் வைக்கலாம்? என்பது தொட்டு, பிறக்கும் நேரம், படிக்கும் பள்ளி என அனைத்தையும் முடிவு செய்யும்போது சில அப்பாக்களை நினைவுப்படுத்துகிறார்.

appa 2

இவர்களுடன் பெரிய காக்கா முட்டை விக்னேஷ், ராகவ், யுவஸ்ரீ, கேப்ரில்லா, நசாத் என அனைவரும் தங்கள் கேரக்டர்களை ஜொலிக்க வைக்கிறார்கள்.

சின்ன சின்ன பாவனைகளையும் அழகாக காட்டி நம் மனதை கவர்கிறார்கள்.

சமுத்திரக்கனியின் மனைவியாக ப்ரீத்தி. பிடிவாதத்தால் பெண்கள் நினைப்பதை சாதிப்பார்கள் என்பதற்கு ஒரு சரியான எடுத்துக்காட்டு.

தம்பி ராமையாவின் மனைவியாக வினோதினி. கணவன் சொல்லை மீறமுடியாமல் தவிப்பதை அழகாக காட்டியுள்ளார்.

நமோ நாராயணன், அணில் முரளி, ஆதிரா ஆகியோருக்கு பெரிய வேலை இல்லையென்றாலும் கொடுத்த பணியை சிறப்பாக செய்துள்ளனர்.

appa 4

தொழில்நுட்ப கலைஞர்கள்…

மாணவனின் வளர்ச்சி பள்ளியில் இல்லை. அவனிடம் இருக்கிறது என சமுத்திரக்கனி சொல்லியதும் ஒலிக்கும் இளையராஜா குரல் அருமை. நம்மை 1980ஆம் ஆண்டுக்கே கொண்டு செல்கிறார் இசைஞானி.

இப்படத்திற்கு பாடல்கள் பெரிதாக தேவையில்லை என்பதால் அதை பின்னணி இசையில் சரி கட்டியுள்ளார்.

ரிச்சர்ட் எம் நாதனின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்கிறது. ஜாக்கியின் கலையில் குழந்தைகளும் அவர்களது வீடுகளும் அசத்தல்.

படத்தின் ப்ளஸ்….

  • படத்தின் க்ளைமாக்ஸ் ஏற்படுத்தும் ஓர் அதிர்ச்சி உணர்வு
  • உணர்ச்சிமிக்க இப்படத்திற்கு உயிர் கொடுத்த வசனங்கள்
  • திரைக்கதையும் அதனைச் சார்ந்த குழந்தைகள் நட்சத்திரங்கள்
  • ஒளிப்பதிவும் அதற்கான பின்னணி இசையும்

படத்தின் மைனஸ்…

  • அப்பாக்கள் என்ன வேலை செய்கிறார்கள்? என்பதே தெரியவில்லை.
  • 3 அப்பாக்கள் ஓகே. அதில் ஒருவருக்காவது மகள் இருப்பதாக வைத்திருக்கலாமே?

appa 5

இப்படத்தை எவருக்கும் விட்டுக் கொடுக்காமல் தானே இயக்கி வசனம் எழுதி தயாரித்து நடித்து இருக்கிறார் சமுத்திரக்கனி.

நிச்சயம் வேறு எவராவது இதில் நுழைந்திருந்தால் இப்படி ஒரு படைப்பை அவரால் கொடுத்து இருக்க முடியாது.

அதுபோல் வசனங்கள் மனதில் என்றும் நிற்கும்.

  • பாய் கடைக்கும் ஸ்கூல் பசங்க ப்ராஜக்ட்டுக்கும் என்ன சம்பந்தம்? நீங்க யாரை ஏமாத்துறீங்க?
  • அப்பா கிட்ட சொல்ல முடிஞ்ச விஷயத்தை மட்டும் பன்னு. சொல்ல முடியாத விஷயம்னா அது தப்புன்னு அர்த்தம். பண்ணாதே.
  • அழுக்கு மனசுல சேர்ந்துட்டே இருந்தா அது வக்கிரமா மாறும். ஆசிட் அடிக்கக் கூட தோனும் என்ற வசனங்கள் படத்தை தாங்கி நிற்கின்றன.

appa cycle

தன் மகனின் சக மாணவியை அவன் தோழியாக பார்க்க சொல்லும் அந்த காட்சிகள் அருமை.

க்ளைமாக்ஸ் எவரும் எதிர்பாராதது. இப்படியும் சில பள்ளிகள் இன்று இருக்கின்றன என்ற உண்மை சம்பவத்தை சொன்ன சமுத்திரக்கனிக்கு ஆயிரம் சபாஷ் சொல்லலாம்.

இப்படத்தை பார்த்தபின் அப்பாக்களும் குழந்தைகளும் கொஞ்சம் மாற்றிக் கொண்டால் நல்லது.

மொத்தத்தில் அப்பா… குழந்தைகளின் குற்றாலம்

More Articles
Follows