தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
‘லொள்ளு சபா’ ராம்பாலாவுடன் கைகோர்த்திருக்கிறார் சந்தானம். இவர்களின் ‘தில்லுக்கு துட்டு’ எப்படி..?
நடிகர்கள் : சந்தானம், ஷனன்யா, ஆனந்த்ராஜ், கருணாஸ், சௌரப் சுக்லா, நான் கடவுள் ராஜேந்திரன், டி.எம். கார்த்திக், சிங்கமுத்து மற்றும் பலர்.
இசை : எஸ்.தமன்
ஒளிப்பதிவு : தீபக்குமார்
படத்தொகுப்பு : கோபி கிருஷ்ணா
இயக்கம் : ராம்பாலா
பிஆர்ஓ : விஜயமுரளி
தயாரிப்பாளர் : ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ்
கதைக்களம்…
சந்தானம், ஷனாயா காதலை எதிர்க்கிறார் ஷனாயாவின் அப்பா சௌரப் சுக்லா.
இவர்களை காதலை பிரிக்க ராஜேந்திரனை அணுகி, ஐடியா கேட்கிறார் சௌரப்.
அவரின் ஆலோசனைப்படி சந்தானத்தின் குடும்பத்தை ஒரு பங்களாவுக்கு வரவழைத்து பேய் வேஷம் போட்டு கொல்ல திட்டமிடுகிறார்.
அங்கே ஏற்கெனவே பேய்கள் நடமாடும் நிலையில், இந்த செட்டப் பேய்க்கும் நிஜ பேய்களுக்கும் நடக்கும் காமெடி யுத்தமே தில்லுக்கு துட்டு
கதாபாத்திரங்கள்…
வெறும் காமெடி நடிகர் என்ற நிலையில் இருந்த சந்தானம் இன்று ஹீரோவுக்கான அனைத்தையும் கற்று அசத்தியிருக்கிறார்.
இதில் தாடியுடன் நடித்து, கொஞ்சம் வித்தியாசமும் காட்டியிருக்கிறார்.
பேயை கிண்டல் செய்து பேசும் வசனங்கள் தியேட்டரில் அப்ளாஸை அள்ளுகிறது. சிலவை கேட்ட வசனங்களாக இருப்பது சலிப்பை தட்டுகிறது.
அறிமுக நாயகி ஷனாயா ரொமான்ஸ் காட்சிகள் மற்றும் பாடல்களுக்கு வந்து போகிறார்.
காமெடி படமா ராஜேந்திரனை கால்ஷீட்டை புக் பன்னுங்க என்றும் சொல்லுமளவுக்கு ராஜேந்திரன் இதிலும் ஸ்கோர் செய்துள்ளார்.
இவர்களுடன் கருணாஸ் மற்றும் ஆனந்தராஜ் ஆகியோரின் பங்களிப்பு அருமை.
அதிலும் காமெடி பண்ணரேன்னு நான் பழைய வில்லன்றத மறந்துடாத என ஆனந்த்ராஜ் சொல்லும் இடம் சிரிப்பு மழை.
மாமனார் மருமகனாக வரும் சௌரப் சுக்லா, T M கார்த்திக்கின் ஆகியோர் அருமையான தேர்வு. ஒரிஜினல் ‘சேட்டு’ போல சௌரப் சுக்லா… சபாஷ் சுக்லா.
தொழில்நுட்ப கலைஞர்கள்…
கார்த்திக் ராஜா பின்னணி இசையில் பலம் சேர்கிறார். பாடல்களை கேட்கலாம்.
தீபக் குமார் பாடியின் ஒளிப்பதிவு டெரர் காட்டுகிறது.
கலை இயக்குனர் ஏ.ஆர்.மோகனின் பேய் எஃபெக்ட்டை படத்தை தாங்கி நிற்கிறது. ஆக்ஷனில் ஹரி தினேஷிம் குறை வைக்கவில்லை.
படத்தின் ப்ளஸ்
- சந்தானம், ராஜேந்திரன், ஆனந்த்ராஜ் ஆகியோரின் பங்களிப்பு
- இடைவேளைக்கு பிறகு வரும் அரைமணி நேர காமெடி சீன்ஸ்
படத்தின் மைனஸ்…
- முதல்பாதியை கொஞ்சம் இயக்குனர் கவனிருத்திருக்கலாம்.
- பின்னணி இசையளவு பாடல்கள் இல்லை.
கீரை சாதம் சாப்பிட்டுட்டு வாய் கொப்பளிக்கலையா. பல்லு கறை கறையா இருக்கு.” , ”12 மணிக்கு பேய் வரும்னா, அதை சொல்ல 11.45க்கு நீ வருவியா.” போன்ற வசனங்களுக்கு நிறைய யோசித்திருப்பார்கள் போல. அது ஓகேதான்.
ஆனால் ”முட்டை தேடி வந்த டைனோசர் மாதிரி… முட்டை போண்டாவுக்கு டை கட்டின மாதிரி, ஆதாம் ஏவாலுக்கு பொறந்த மூத்த மகன் மாதிரி…” என்ற இந்த மாதிரி மாதிரி டயலாக்குகளை சந்தானம் எப்போது மாற்ற போகிறார்.? அடிக்கடி கேட்கவே ஒரு மாதிரியாக இருக்கிறது.
பேய் படம்ன்னா லாஜிக் இருக்கக்கூடாதா? என்ன? மீறல்களிலும் சில க்ளீஷேக்களையும் அதிக கவனம் செலுத்தி இருக்கலாம்.
மொத்தத்தில் தில்லுக்கு துட்டு…. கொடுத்த துட்டுக்கு ரசிக்கலாம்.