தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர்கள் : நயன்தாரா, விக்னேஷ், ரமேஷ், சுனு லெட்சமி, வினோதினி வைத்தியநாதன், ராமச்சந்திரன் துரைராஜ், ஆனந்தகிருஷ்ணன், மாரிமுத்து, பாண்டியன் மற்றும் பலர்.
இயக்கம் : கோபி நயினார்
இசை : ஜிப்ரான்
ஒளிப்பதிவு: ஓம் பிரகாஷ்
எடிட்டிங்: ரூபன்
பி.ஆர்.ஓ. : சுரேஷ் சந்திரா
தயாரிப்பு: கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ்
கதைக்களம்…
இது ஒரு அரசியல் கதை. அவசியமான கதை. அனைவரும் தெரிந்துக் கொள்ள வேண்டிய கதை. அலட்டிக் கொள்ளாத கதை, அன்பான கதை, அழகான கதை… இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
தமிழகத்தின் மூலையில் உள்ள ஒரு கிராமம் காட்டூர். குடி தண்ணீர் கூடாத இல்லாத பகுதி.
அந்த கிராமத்தில் கஷ்டப்படும் மக்களில் ஒருத்தி சுனு லட்சுமி. இவரது 4 வயது மகளை வெளியே அழைத்துப் போகும் அங்கு தோண்டப்பட்டிருக்கும் 36 அடி ஆழ்துளைக் கிணற்றுக்குள் குழந்தை தவறி விழந்து விடுகிறாள்.
அந்த குழந்தையைக் காப்பாற்ற கலெக்டர் நயன்தாரா முதல் தாசில்தார், விஓஏ, தீயணைப்பு படை, போலீஸ், எம்எம்ஏ, கவுன்சிலர் என அனைவரும் ஆஜர்.
ஆனால் இவர்கள் செய்யும் முயற்சிகள் ஒன்றன்பின் ஒன்றாக தோல்வி அடைகிறது.
இதனால் பல அரசியல் சதிகளை மீறி நயன்தாரா அந்த குழந்தையை மீட்க என்ன செய்தார்? என்பதே இந்த அறம்.
கேரக்டர்கள்…
நயன்தாரா போல ஒரு ஹீரோயின் இருந்தா இனிமே ஹீரோ இல்லாமல் கூட படம் எடுக்க நினைப்பார்கள் இயக்குனர்கள்.
குழிக்குள் இருக்கும் குழந்தையை மீட்க ஒரு தாயைப் போல் தவிப்பை பிரதிபலித்துள்ளார் நயன்தாரா.
அவரின் இயல்பான நடிப்பு, நேர்த்தியான பார்வை, என அனைத்தும் படத்திற்கு ப்ளஸ்.
மக்கள் பிரச்சினையை மக்கள் இடத்தில் இருந்து நயன்தாரா பேசும் காட்சிகள் கைத்தட்டலை அள்ளும்.
சுமதியாக வரும் சுனு லட்சுமி வெகு இயல்பாக நடித்திருக்கிறார். ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்துவிடும் அந்தக் குழந்தையும் அவளது அண்ணனும் அருமையான நடிப்பு.
பழனி பட்டாளம், ஈ ராமதாஸ், முத்துராமன், விக்னேஷ், தீயணைப்பு வீரர்கள் என அனைவரும் யதார்த்தமான நடிப்பை வாரி வாரி வழங்கியிருக்கிறார்கள்.
இதுபோன்ற படங்களுக்கு வசனங்கள்தான் பெரிதும் கைகொடுக்கும். அதை சரியாக செய்துள்ளார் இயக்குனர்.
“இந்தியாவுல விண்வெளிக்கு ராக்கெட் அனுப்ப முடியும். ஆனால் தண்ணீர் பிரச்சனைக்குத் தீர்வு இல்லை, குழிக்குள் விழுந்த குழந்தையை காப்பாற்ற ஒரு மெசின் இல்லை.
இன்னும் கயிறு நம்பித்தான் இருக்கானுங்க. என அதிரடி வசனங்கள் நம்மையும் யோசிக்க வைக்கும்.
ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் நன்றாக உழைத்திருக்கிறார். ஆழ்துளைக் கிணறு குழந்தை மீட்பை நிஜமாகவே பெரும் பள்ளம் தோண்டிப் படமாக்கியிருக்கிறார்கள்.
உணர்வுப்பூர்வமாக இசையை ஜிப்ரான் கொடுத்து நம்மை படத்துடன் ஒன்ற செய்கிறார்.
மக்கள் அரசு அதிகாரியை பார்த்து வர ஏன் இவ்வளவு தாமதம்? என கேட்கும்போது, ரொம்ப அவுட்டராக இருக்கு என்னும்போது மக்கள் கேட்கும் கேள்விகள் நச்.
ஓட்டு கேட்கும்போது நாங்க இங்கோ இருக்கோம் வரத்தெரியலையா? ஓட்டுப் போட எங்களை கூட்டிட்டு போக தெரியலையா? இப்போதான் நாங்க இவ்வளவு தூரத்துல இருக்கோம் தெரியுதா? என கேட்கும்போது எந்த அரசாங்கத்திடமும் பதில் இருக்காது.
அருமையான கதையை கோபி நயினார் மற்றும் நயன்தாராவுடன் இணைந்து கொடுத்திருக்கிறார்.
அறம்… அருமை. அவசியம்.