தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஏஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள சர்கார் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் ஏஆர். ரஹ்மான், சன் டிவி கலாநிதிமாறன், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, யோகிபாபு உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.
விழாவினை நடிகர் பிரசன்னா கலந்துக் கொண்டார்.
விழாவிற்கு தாமதமாக வந்த காமெடி நகடிர் யோகிபாபு பேசியதாவது…
‘ நான் இப்போதுதான் ஒரு பட சூட்டிங் முடித்துவிட்டு வந்திதேன்.
சர்கார் போன்ற பெரிய படத்தில் வாய்ப்பு கிடைத்ததே பெரிய விஷயம்.
விஜய் அண்ணாவுடன் நடித்ததில் ரொம்ப மகிழ்ச்சி.
என்னுடைய மூளை எனக்கு சோறு போடல. முடிதான் சோறு போடுது.
மெர்சல் படத்தில் விஜய் அண்ணாவுடன் நடித்தேன். சில காட்சிகளில் தயங்கினேன். தொழில் என்று வந்துவிட்டால் சரியாகச் செய்ய வேண்டும் தயங்க கூடாது என்று விஜய் அண்ணன் தான் அட்வைஸ் செய்தார்.
பல நடிகர்களுடன் நடித்துவிட்டேன். விஸ்வாசம் படத்தில் அஜித்துடன் நடித்து விட்டேன். ஆனால் விஜய் அண்ணா வேற லெவல் என்று பேசினார் யோகிபாபு.
அவர் பேசி முடிக்கும்போது ரசிகர்களின் ஆர்பரிப்பு அடங்க வெகு நேரமானது.