சிம்பு ரசிகர்களுக்கு ‘வெந்து தணிந்தது காடு’ பட மாஸ் அப்டேட் கொடுத்த படக்குழு

சிம்பு ரசிகர்களுக்கு ‘வெந்து தணிந்தது காடு’ பட மாஸ் அப்டேட் கொடுத்த படக்குழு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘விண்ணைத் தாண்டி வருவாயா’ & ‘அச்சம் என்பது மடமையடா’ படத்திற்கு பிறகு சிலம்பரசன் & கெளதம் மேனன் மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் ‘வெந்து தணிந்தது காடு‘.

3வது முறையாக சிம்பு – கெளதம் கூட்டணிக்கு இசையமைக்கவுள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான்.

வருண் நடிப்பில் ‘ஜோஷ்வா’ படத்தை இயக்கி முடித்துள்ளார் கெளதம் மேனன்,

தற்போது ‘வெந்து தணிந்தது காடு’ படத்தை இயக்கியுள்ளார்.

இந்த இரண்டு படங்களையுமே வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் சார்பாக ஐசரி கணேஷ் தயாரித்து வருகிறார்.

இப்படத்தின் போஸ்ட் புரொடெக்ஷன் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் புதிய அப்டேட் ஒன்று வெளியானது.

அதன்படி இப்படத்தின் முதல் பாடல் வரும் மே 6 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

VTK first single will be out on May 6th

சிவகார்த்திகேயனை பான் இந்தியா ஸ்டாராக்கும் கமல்ஹாசன்.?!

சிவகார்த்திகேயனை பான் இந்தியா ஸ்டாராக்கும் கமல்ஹாசன்.?!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள புதிய படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில மாதங்களுக்கு முன் வெளியானது. பிக்பாஸ் 5 நிகழ்ச்சியின் போது இந்த அறிவிப்பு வெளியானது

இந்த படத்தை ‘ரங்கூன்‘ பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார்.

இதில் ஸ்டண்ட் மாஸ்டர்களாக அன்பறிவ் இணையவுள்ளனர் என்ற அறிவிப்பும் சமீபத்தில் வெளியானது.

விரைவில் இப்பட படப்பிடிப்பு தொடங்கவுள்ள நிலையில் இதன் கதை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய ராணுவம் தான் இதன் கதைக்களம் என கூறப்படுகிறது. போர் மட்டுமில்லாமல் ராணுவ வீரர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை இப்படம் சொல்லும் என தெரிகிறது.

தற்போது மத்திய அரசிடம் அனுமதி வாங்கும் பணிகள் நடைபெறுகிறதாம்.

இந்திய ராணுவம் குறித்த படம் என்பதால் இப்படத்தை பான் – இந்தியா திரைப்படமாக உருவாக்க படக்குழு திட்டமி்ட்டுள்ளதாம்.

Sivakarthikeyan – Kamal Haasan movie will be made as a pan indian film?

சிவகார்த்திகேயன் – சூர்யா – ரஜினியை அடுத்து ஜெயம் ரவியுடன் இணையும் பிரபல நடிகை

சிவகார்த்திகேயன் – சூர்யா – ரஜினியை அடுத்து ஜெயம் ரவியுடன் இணையும் பிரபல நடிகை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘டாக்டர்’ படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்தவர் பிரியங்கா மோகன்.

இதன் பின்னர் சூர்யா உடன் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தில் நடித்தார்.

மீண்டும் சிவகார்த்திகேயன் உடன் ‘டான்’ படத்தில் நடித்துள்ளார். இந்த படம் மே மாதம் 13ஆம் தேதி வெளியாக உள்ளது.

விரைவில் ‘தலைவர் 169’ படத்தில் ரஜினியின் மகளாக பிரியங்கா நடிக்க போவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ராஜேஷ் எம் இயக்கவுள்ள படத்தில் ஜெயம் ரவி உடன் பிரியங்கா அருள் மோகன் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

விரைவில் இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம்.

ஏற்கெனவே இதில் நாயகியாக பிரியா பவானி சங்கர் PBS நடிக்க போவதாக தகவல் வெளியானதும் இங்கே கவனிக்கத்தக்கது.

Priyanka Mohan to pair up with Jayam Ravi ?

அக்ஷய்குமாரை அடுத்து ஷாரூக்கானுடன் இணையும் ஜிவி. பிரகாஷ்

அக்ஷய்குமாரை அடுத்து ஷாரூக்கானுடன் இணையும் ஜிவி. பிரகாஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விரைவில் ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் ஷாரூக்கான்.

‘PK’, 3 இடியட்ஸ் உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கியவர் ராஜ்குமார் ஹிரானி.

ராஜ்குமார் ஹிரானி & ஷாரூக்கான் இணையும் இந்தப்படத்தில் டாப்ஸி நாயகியாக நடிக்கிறார்.

இதன் படப்பிடிப்பு அடுத்த மே மாதம் துவங்கவுள்ளது.

ரசிகர்களுடன் ‘செல்ஃபி’ பார்த்து செல்ஃபி எடுத்த ஜி.வி.பிரகாஷ் & வர்ஷா

இந்த நிலையில் இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமாரை இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்ய பேச்சுவார்த்தை நடைபெறுதாகக் கூறப்படுகிறது.

இதற்குமுன் அக்லி(Ugly), ஜோக்கர் உள்ளிட்ட ஹிந்தி படங்களுக்கு இசையமைத்துள்ளார் ஜிவி. பிரகாஷ்

சூர்யா தயாரிப்பில் சுதா இயக்கத்தில் அக்ஷய்குமார் நடிக்கும் ‘சூரரைப்போற்று’ பட ஹிந்தி ரீமேக்கிற்கும் ஜிவி பிரகாஷ் தான் இசையமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

GV Prakash to compose music for Shah Rukh khan’s next film?

மறைந்த புனித் ராஜ்குமாரின் அண்ணன் மகனை அறிமுகம் செய்யும் KGF பட நிறுவனம்

மறைந்த புனித் ராஜ்குமாரின் அண்ணன் மகனை அறிமுகம் செய்யும் KGF பட நிறுவனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கேஜிஎப், கேஜிஎப் -2 ஆகிய இரண்டு மெகா படங்களையும் தயாரித்த நிறுவனம் ஹோம்பாலே பிலிம்ஸ்.

இதே நிறுவனம் தற்போது KGF பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் சலார் படத்தை தயாரித்து வருகிறது.

அண்மையில் சுதா கெங்கரா அடுத்து இயக்கும் படத்தையும் இந்த நிறுவனம் தயாரிக்க இருப்பதாக அறிவித்தது.

இந்த நிலையில் கன்னட சூப்பர் ஸ்டாரான ராஜ்குமாரின் பேரன் யுவராஜ் குமார் என்பவர் அறிமுகமாகும் படத்தை தாங்களின் ஹோம்பாலே பிலிம்ஸ் தயாரிக்க இருப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

KGF 2 BLOCK BUSTER HIT..; யஷ் ரசிகர்கள் படைத்த உலக சாதனை

இந்த படத்தை ராஜகுமாரா, மிஸ்டர் அண்ட் மிஸஸ் ராமச்சாரி என பல படங்களை இயக்கியுள்ள சந்தோஷ் ஆனந்த் ராம் இயக்குகிறார்.

இந்த யுவராஜ் குமார் நடிகர் ராஜ்குமாரின் இரண்டாவது மகனும் நடிகருமான ராகவேந்திராவின் மகன் ஆவார்.

மேலும் சமீபத்தில் மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாரின் அண்ணன் மகன் தான் இந்த யுவராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.

Hombale Films introduces the Grandson of the matinee idol Dr. Rajkumar

தனுஷின் பெற்றோர் யார் வழக்கு.? நடிகருக்கு நோட்டீஸ் அனுப்ப கோர்ட் உத்தரவு

தனுஷின் பெற்றோர் யார் வழக்கு.? நடிகருக்கு நோட்டீஸ் அனுப்ப கோர்ட் உத்தரவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மதுரை மாவட்டம் மேலுார் பகுதியைச் சேர்ந்தவர் கதிரேசன்.

இவர் நடிகர் தனுஷ் என் மகன். அவர், எனக்கு பராமரிப்புத் தொகை வழங்க உத்தரவிட வேண்டும்’ என மேலுார் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.

அதை எதிர்த்து, நடிகர் தனுஷ் மனு தாக்கல் செய்ததால், உயர் நீதிமன்ற கிளை மேலுார் நீதிமன்ற வழக்கை ரத்து செய்தது.

மேலும், ‘தனுஷ் போலி ஆவணங்கள் தாக்கல் செய்து உயர் நீதிமன்றத்தில் அவருக்கு சாதகமாக உத்தரவு பெற்றார்.

அவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்’ என மதுரை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் கதிரேசன்.

அந்த மனுவையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

‘நானே வருவேன்’ ஓவர்.; ‘வாத்தி’-யை அடுத்து பான் இந்தியா படத்தில் தனுஷ்

அதை எதிர்த்து, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கதிரேசன் மனு தாக்கல் செய்தார்.

இவ்வழக்கை நீதிபதி இளந்திரையன் விசாரித்தார்.

மனுதாரர் தரப்பில் யாரும் ஆஜராகாததால், மனுவை தள்ளுபடிக்குரிய தலைப்பிட்டு இன்று (ஏப்.,27) விசாரணைக்கு பட்டியலிட நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது… கதிரேசன் தொடர்ந்த வழக்கில் நடிகர் தனுஷ் பதிலளிக்க உயர்நீதிமன்ற கிளை நோட்டீஸ் அனுப்பியது.

நடிகர் தனுஷ் தரப்பில் போலி ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டதாக கதிரேசன் மேல்முறையீடு வழக்கு தொடர்ந்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

High court decides to send notice to Dhanush regarding paternity case

More Articles
Follows