என்ன கொடுமை சார்.!? விஷால் தரப்பிலே வெளியான செய்திக்கு விஷால் மறுப்பு

என்ன கொடுமை சார்.!? விஷால் தரப்பிலே வெளியான செய்திக்கு விஷால் மறுப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஓரிரு தினங்களுக்கு முன் விஷால் தரப்பில் ஒரு செய்தி வெளியானது. அதை நம் FILMISTREET தளத்தில் பதிவிட்டு இருந்தோம். அந்த செய்திக்கு தற்போது விஷால் தன் டுவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

அந்த செய்தி வதந்தி. நான் அரசியலில் ஈடுபட போவதில்லை என விளக்கம் அளித்துள்ளார்.

எங்கிருந்து இந்த செய்தி வெளியானது என்பதை அறியவில்லை. மேலும் நான் சந்திரபாபு நாயுடுவை எதிர்த்து போட்டியிடவில்லை. ஆந்திர அரசியலில் ஈடுபட போவதில்லை என விளக்கம் அளித்துள்ளார்.

விஷால் தரப்பில் வெளியான ஒரு செய்திக்கு தற்போது விஷாலே மறுப்பு தெரிவித்திருப்பது கோலிவுட்டையும் அவர் ரசிகர்களையும் மக்களையும் அதிர்ச்சி உள்ளாகியது.

இனிமேலாவது விஷால் தன் தரப்பு செய்திகளை வெளியிடுவதற்கு முன்பு அதை தீர விசாரித்தால் நல்லது.

அந்த பழைய செய்தி இதுதான்..

ஆந்திராவில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தற்போதையை முதல்வரான ஜெகன் மோகன் ரெட்டியின் தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி மொத்தமுள்ள 175 தொகுதியில் 151 தொகுதிகளை கைப்பற்றி ராட்சச பலத்துடன் ஆட்ச்சியை கைப்பற்றியது.

இவரை எதிர்த்து நின்ற சந்திரபாபு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி வெறும் 23 தொகுதிகளை மட்டும் கைப்பற்றி எதிர்க்கட்சி அந்தஸ்த்துக்கூட கிடைக்காத நிலைமைக்கு தள்ளப்பட்டது, நடிகர் பவன் கல்யாணின் ஜன சேனா கட்சி வெறும் 1 தொகுதியை மட்டும் கைப்பற்றியது பவன் கல்யாணும் தான் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் தோல்வியடைந்தார்.

ஆந்திர முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி வெற்றிகரமாக மூன்று ஆண்டுகளை கடந்த நிலையில் வரும் 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுடன் இணைந்து ஆந்திராவில் சட்டமன்ற தேர்தலும் நடைபெற உள்ளது.

ஜெகன் மோகனின் வியூகம்..

கடந்த மூன்று ஆண்டுகால ஆட்சி ஆந்திர மக்களிடம் பெரும் ஆதரவை பெற்றுள்ள ஜெகன் மோகன் ரெட்டி இம்முறையும் தனித்து களம் காண உள்ளார்.

கடந்த முறையை விட இம்முறை அதிக தொகுதிகளை வென்றுவிட வேண்டும் என்றும் முனைப்பு காட்டி வரும் சூழ்நிலையில் அதிலும் குறிப்பாக தற்போதைய எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் சந்திரபாபு நாயுடு எம்.எல்.ஏவாக இருக்கும் குப்பம் தொகுதியில் வலுவான வேட்பாளரை நிற்க வைக்க வேண்டும் என்று எண்ணிய ஜெகன் மோகன் ரெட்டி அதற்காக நடிகர் விஷாலிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ஆந்திராவில் உள்ள ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

ஏன் நடிகர் விஷாலை தேர்வு செய்கிறார் ஜெகன் மோகன் ?

சந்திரபாபு நாயுடுவின் குப்பம் தொகுதி ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது, இப்பகுதி கர்நாடக மற்றும் தமிழகத்தின் எல்லை பகுதி, கர்நாடகாவின் கே.ஜி.எஃப் லிருந்து வெறும் 22 கிலோமீட்டர் மட்டுமே அதே போல் சித்தூரிலிருந்து தமிழக எல்லையான காட்பாடி வெறும் 30 கிலோமீட்டர் மட்டுமே ஆகும்.

குப்பம் தொகுதி உட்பட சித்தூர் மாவட்டத்தில் பெரும் அளவில் தமிழகத்திலிருந்து வேலைக்கு சென்று குடியேறியவர்வர்களே தற்போது அங்கு பெரும் வாக்காளர்களாக உள்ளனர்.

இதனால் தமிழக மக்களுக்கு மிகவும் அறிந்த முகமான அதே வேளையில் ஆந்திர மக்களுக்கும் தெரிந்த முகமான ஒருவரை தேர்வு செய்ய ஆலோசித்த பொது சித்தூர் மாவட்டத்தில் உள்ள புங்கனூர் சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏ வும் மாநில அமைச்சருமான பெட்டிரெட்டி ராமச்சந்திர ரெட்டி பரிந்துரைத்த பெயர் நடிகர் விஷால்.

நடிகர் விஷாலை அமைச்சர் பெட்டிரெட்டி ராமச்சந்திர ரெட்டி பரிந்துரைக்க காரணம் என்ன ?

ஏற்கனவே மேற்கூறிய காரணமான தமிழ் மக்களுக்கும் ஆந்திர மக்களுக்கும் நன்கு அறிமுகமான நபர் நடிகர் விஷால், அது மட்டுமின்றி நடிகர் விஷால் திரைத்துறைக்கு வருவதற்கு முன்பாக அவரது தந்தை ஜி.கே.ரெட்டியின் கிரானைட் குவாரியில் வேலை செய்து வந்தார் நடிகர் விஷாலின் தந்தை அதிகமானா கிரானைட் குவாரி நடத்திவந்தது ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் அதிலும் குறிப்பாக குப்பம் தொகுதியை மையப்படுத்தியே இருந்தது, பல ஆண்டுகாலம் விஷால் அங்கே தங்கி வேலைப்பார்த்த காரணத்தால் அத்தொகுதி முழுவதும் விஷாலிற்கு தெரிந்த இடங்கள் என்பதாலும் தான் அமைச்சர் பெட்டிரெட்டி ராமச்சந்திர ரெட்டி விஷாலை பரிந்துரைத்தாக கூறப்படுகிறது இதற்கிடையே ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தரப்பிலிருந்து விஷாலிடம் பேசியதாகவும் விஷாலின் பதிலிற்காக காத்துள்ளதாக செய்திகள் வெளியாகி வருகிறது.

Vishal denies the news released on his behalf

உடல்நிலை காரணமாக சினிமாவுக்கு முழுக்கு போடும் நாசர்.? கமீலா விளக்கம்

உடல்நிலை காரணமாக சினிமாவுக்கு முழுக்கு போடும் நாசர்.? கமீலா விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் கதாநாயகன்களை தாண்டியும் பல நட்சத்திரங்கள் தங்கள் நடிப்பால் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளனர்.

அதில் மிக முக்கியமானவர் நடிகர் நாசர்.

இவர் தற்போது நடிகர் சங்க தலைவராக இருக்கிறார்.

பல படங்களில் வில்லனாகவும் குணசித்திர வேடங்களிலும் நடித்திருக்கிறார்.

இவரும் ஒரு கட்டத்தில் படங்களை தயாரித்தும் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.

வில்லனாக நடித்தாலும் ஹீரோக்களை தாண்டியும் பல படங்களில் இவரது நடிப்பு பேசப்பட்டுள்ளது.

எனவே நாசருக்கு தன் படங்களில் வலுவான கேரக்டரை அமைத்துக் கொடுப்பது கமல்ஹாசனின் வழக்கம்.

மகளிர் மட்டும் (1990களில்) படத்தில் நாசரை ஹீரோவாக்கி அழகு பார்த்தார் கமல்ஹாசன்.

மேலும் அவ்வை சண்முகி குருதிப்புனல் விஸ்வரூபம் உள்ளிட்ட பல படங்களில் நாசருக்கு முக்கியமான கேரக்டர் கொடுத்து வந்தார் கமல்ஹாசன்.

ரஜினியுடன் வேலைக்காரன் படையப்பா உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார் நாசர்.

இந்த நிலையில் நடிகர் நாசர் சினிமாவை விட்டு விலக உள்ளதாகவும் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் சில நபர்களால் பரப்பப்பட்டது.

இதனை அடுத்து நடிகர் நாசரின் மனைவி கமீலா தன் ட்விட்டர் பக்கத்தில் இதற்கு விளக்கம் அளித்துள்ளார்.

சினிமாவை உண்டு சினிமாவையே சுவாசித்திருப்பது தான் நாசர்.

அவரைப் பற்றி வரும் தகவல்கள் தவறானவை. சில நபர்கள் தேவையில்லாமல் இந்த வதந்திகளை பரப்புகிறார்கள்” என விளக்கம் அளித்துள்ளார்.

தற்போது நாசரின் மகன்களும் சினிமாவில் நடித்து வருகின்றனர்.

சைவம் & சார்லின் சாப்ளின் 2 படத்தில் நடிகர் நாசரின் ஒரு மகன் நடித்திருந்தார்.

அதுபோல கமல்ஹாசன் தயாரித்த கடாரம் கொண்டான் படத்தில் மற்றொரு மகனும் நடித்திருந்தார்.

என் மூச்சு இருக்கும் வரை நான் நடித்துக் கொண்டே இருப்பேன் –
நடிகர் நாசர்

நடிகர் நாசர் சினிமாவை விட்டு விலகப் போவதாக கடந்த சில தினங்களாக செய்தி வந்து கொண்டிருக்கிறது. அந்த செய்தியில், வயதான காரணத்தால் நடிக்க இயலவில்லை என்றும், ஏற்கனவே ஒப்புக்கொண்ட மற்றும் அட்வான்ஸ் தொகை பெற்றுக் கொண்ட படங்களில் மட்டுமே நடித்து வருவதாகவும் அது முடிந்தவுடன் நடிப்பிற்கு முற்றுப்புள்ளி வைக்கப் போவதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

பொதுவாகவே நாசர், பெரிய படங்களில் மட்டுமல்லாது முன்னணி நாயகர்கள், பெரிய கதாநாயகர்கள், என்று இல்லாமல் அறிமுக நாயகர்கள், அறிமுக கலைஞர்கள் நடிக்கும் சிறிய பட்ஜெட் படங்களிலும் நடித்து கொண்டே இருப்பவர். சின்ன கலைஞர்கள் என்று பார பட்சம் பார்க்காமல் யார் கேட்டாலும் அது சிறிய கதாபாத்திரமாகவே இருந்தாலும் அதை ஏற்று நடித்து கொண்டிருக்கிறார். இந்தியா முழுவதிலும் அனேக மொழிகளில் நடித்து வரும் நாசரை பற்றி இப்படி ஒரு செய்தி வருவது உண்மை இல்லை என்று அவரே விளக்கம் அளித்துள்ளார்

நாசர் அவர்கள் கூறியிருப்பதாவது :

நான் நடிகனாகத் தான் வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்ட பின், அதைத் தீவிரமாக எடுத்துக் கொண்டு முறையாகப் பயிற்சி பெற்றுதான் சினிமாவிற்கு வந்தேன்.

மேலும், வலைத்தளங்களில் சமீபமாக வலம் வந்து கொண்டிருக்கும் என் தொழிலிலிருந்து ஓய்வு என்ற செய்தி என்னால் சொல்லப்பட்டது அல்ல; புனைவு. நான் நடித்துக் கொண்டிருப்பேன்; நடிப்பேன். அடையாளம் இல்லாதவர்கள் வலைத்தளங்களில் பதிவிடுவதை விட மக்களால் நம்பப்படுகின்ற நான் மதிக்கின்ற பொறுமையோடும் நட்போடும் பழகுகின்ற ஊடகங்களே அதை வெளியிடுவதுதான் வருத்தமளிக்கிறது. எளிதாக தொடர்பு கொள்ளும் விதத்தில்தான் நான் பழகியிருக்கிறேன். சொந்த விஷயம் ஆகட்டும் தொழில் சார்ந்த விஷயம் ஆகட்டும், சம்பந்தப்பட்டவர்களின் ஒப்புதல் அல்லது விளக்கம் இல்லாது தயவு செய்து தவறான பதிவு செய்ய வேண்டாம்.

என் மூச்சு இருக்கும் வரை நான் நடித்துக் கொண்டே தான் இருப்பேன்.

News about Nasser’s health, quitting career (acting), etc..etc.. who ever started this, long live, to spin more stories..on more people.. Nasser eats and breathes cinema.. thanks friends and folks for all the concern. DONT SPREAD FALSE NEWS.

Nasser quits cine industry ? Kameela explains

வில்லங்கம் வேண்டவே வேண்டாம்.. இந்தியன் 2 சூட்டிங் கமல் – ஷங்கர் புதிய முடிவு

வில்லங்கம் வேண்டவே வேண்டாம்.. இந்தியன் 2 சூட்டிங் கமல் – ஷங்கர் புதிய முடிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால், ப்ரியா, விவேக் உள்ளிட்ட பலர் நடித்த படம் இந்தியன் 2.அனிருத் இசையமைக்க லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது . 2019ல் இந்தியன் 2 சூட்டிங் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வந்தது.

2020 பிப்ரவரி 19 ஆம் தேதி இரவு, ‘இந்தியன் 2’ படப்பிடிப்பில் கோர விபத்து ஏற்பட்டது.

பூந்தமல்லி அருகே உள்ள ஈவிபி அரங்கில் இந்த விபத்து நடந்தது.

கமல் லைகா ஷங்கர் கூட்டணியில் ‘இந்தியன் 2’.; மீண்டும் உறுதிப்படுத்திய உலகநாயகன்

அந்த விபத்தில் கிருஷ்ணா, மதுசூதனராவ், சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மற்றவர்கள் இந்த விபத்திலிருந்து நூலிழையில் படக்குழுவினர் பலரும் உயிர் தப்பினர்.

இவ்விபத்து நடந்த அடுத்த மாதமே கொரோனா ஊரடங்கு தொடங்கியதால் படப்பிடிப்பு நின்றது.

அதன் பின்னர் கொரோனா ஊரடங்கு அரசியல் பிரவேசம் தேர்தல் பிரச்சாரம் மருத்துவ சிகிச்சை என பிஸியாக இருந்தார் கமல்ஹாசன்.

இதனால் தெலுங்கில் ராம்சரண் படத்தை இயக்கச் சென்று விட்டார் ஷங்கர்.

ஷங்கருக்கு காத்திருக்காமல் லோகேஷ் இயக்கத்தில் உருவான ‘விக்ரம்’ படத்தில் நடிக்க சென்று விட்டார் கமல்.

மேலும் பிக் பாஸ் ஷூட்டிங் என பிசியாக தன்னை வைத்திருந்தார் கமல்ஹாசன்.

இதனால் இந்தியன் 2 சூட்டிங் தாமதம் ஆனது.

அதன்பின் பல்வேறு இடையூறுகளைக் கடந்து இப்போது மீண்டும் இந்தியன் 2 படத்தின் வேலைகள் தொடங்கியிருக்கின்றன.

அப்படத்தின் படப்பிடிப்புக்காக அரங்கம் அமைக்கும் பணிகள் தொடங்கியிருக்கின்றன.

இம்முறையும் ஈவிபியிலேயே அரங்கம் அமைக்கலாமா? என்கிற பேச்சு வரவே மீண்டும் வில்லங்கம் வேண்டாம் என கமல் மற்றும் ஷங்கர் ஆகிய இருவருமே அங்கு வேண்டாம் என்று உறுதியாகச் சொல்லிவிட்டார்களாம்.

கண்முன்னால் சில உயிர்கள் பறிபோன இடத்தில் மீண்டும் படப்பிடிப்பு நடத்த மனமில்லை என்று சொல்லியிருக்கிறார்கள்.

அதன்பின், சாலிகிராமத்திலுள்ள பிரசாத் லேபில், வேலைக்காரன் படத்துக்கு அரங்கம் அமைத்த இடத்தில் படத்துக்கான அரங்கம் அமைக்கும் பணிகள் வேகமாகத் தொடங்கிவிட்டன.

விரைவில் அப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்கிறார்கள்.

Indian 2 shooting Kamal – Shankar’s new decision

‘விக்ரம்’ வீச்சு.: கமல் ரஜினி ரசிகர்கள் மோதல்.; ரஜினி பார்க்காத வெற்றியா? கமலை கடுப்பேத்துகிறாரா.?

‘விக்ரம்’ வீச்சு.: கமல் ரஜினி ரசிகர்கள் மோதல்.; ரஜினி பார்க்காத வெற்றியா? கமலை கடுப்பேத்துகிறாரா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

1980 – 90களில் ரஜினி, கமல் படங்கள் தொடர்ச்சியாக ரிலீஸ் ஆகி கொண்டிருந்தன.

அப்போது இருதரப்பு ரசிகர்களுக்கும் பலத்த மோதல் உருவானது.

இன்று நாம் ட்விட்டரில் பார்க்கும் சண்டைகளை விட கை கலப்பு சண்டைகள் அதிகமாக இருந்தன.

ஒரே நாளில் ரஜினி கமல் படங்கள் தியேட்டர்களில் ரிலீஸ் ஆகி ஒரு பக்கம் திருவிழாவாக காணப்பட்டாலும் மறுபக்கம் கலவரமாக மாறிய காட்சிகளும் உண்டு.

இப்படியாக சென்று கொண்டிருந்த ரஜினி கமலின் காலகட்டங்கள் நாளடைவில் மோதல் குறைந்து காணப்பட்டது.

ரஜினியுடன் இணைந்து நடிக்கத் தயார்.; ‘விக்ரம்’ பட வெற்றி விழாவில் கமல் ஓபன் டாக்

இதற்கு காரணம் ரஜினி படங்கள் வரும் போது கமல் படங்கள் ரிலீஸ் ஆவதில்லை.

2000 ஆண்டுகளில் கமல் படம் ரிலீஸ் ஆகும் போது ரஜினி படங்கள் ரிலீஸ் ஆகவில்லை.

அது மட்டும் இல்லாமல் தற்போதைய சினிமாவில் ஒரு பெரிய படம் ரிலீசானால் அந்த சமயத்தில் மற்றொரு பெரிய நடிகரின் படங்கள் ரிலீசாவது இல்லை.

ஒரே படத்தை அதிக எண்ணிக்கையிலான தியேட்டர்களில் வெளியிட்டு வருகின்றனர். இதனால் மற்ற படங்களுக்கு தியேட்டர்கள் கிடைப்பதில்லை.

இந்த நிலையில் 2022 இந்த ஜூன் மாதம் 3ம் தேதி கமல்ஹாசன் தயாரித்து நடித்த ‘விக்ரம்’ படம் வெளியானது.

4 ஆண்டுகளுக்கு பிறகு கமல் படம் ரிலீசாவதால் பலத்த எதிர்பார்ப்பும் இருந்தது.

அதேபோல படத்தின் வெற்றியும் மிகப்பெரிய அளவில் உருவானதால் அது பற்றிய விமர்சனங்களும் பாராட்டுகளும் வந்த வண்ணம் உள்ளன.

கிட்டத்தட்ட ரூ.400 கோடிக்கு மேல் ‘விக்ரம்’ படம் உலக அளவில் வசூலித்து உள்ளது.

தமிழ் சினிமாவின் அனைத்து ரெக்கார்டுகளையும் இந்த படம் முறியடித்து விட்டதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் ஜூன் 15ஆம் தேதி ரஜினி நடித்த ‘சிவாஜி’ படத்தில் 15வது ஆண்டு நிறைவு விழா ட்ரெண்டிங்கில் இருந்தது.

மேலும் அந்த படத்தில் இயக்குனர் சங்கர் & தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் ஆகியோர் ரஜினியை சந்தித்தனர்.

அதுபோல ஜூன் 27ஆம் தேதி அண்ணாமலை படத்தில் 30வது ஆண்டு நிறைவு விழா கொண்டாடப்பட்டது.

அண்ணாமலை படத்தில் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா ரஜினியை சந்தித்து வாழ்த்துக்கள் தெரிவித்து ஆசி பெற்றார்.

இந்த படமும் ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் இருந்தன.

இதனால் கடுப்பான கமல் ரசிகர்கள் கமலின் வெற்றியை பொறுக்க முடியாமல் ரஜினிகாந்த் தன் பழைய ஹிட் படங்களின் வெற்றியை கொண்டாடி வருகிறார் என கருத்துக்கள் தெரிவிக்க ஆரம்பித்தனர்.

இதனால் ஆவேசம் நடந்த ரஜினி ரசிகர்கள்.. “எங்கள் தலைவர் ரஜினி பார்க்காத வெற்றியா? என தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

உங்கள் கமலஹாசன் ஏழு ஆண்டுகளுக்கு பிறகு தான் வெற்றியை கொடுத்துள்ளார். 4 வருடங்களாக படமே ரிலீசாகல.

ஆனால் எங்கள் தலைவர் ரஜினி ஹீரோ இந்த ஏழு வருடங்களில் கபாலி, காலா, பேட்ட , தர்பார், அண்ணாத்த என பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார் என தங்கள் தரப்பு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

ஆக… 30 வருடங்களுக்கு பிறகு மீண்டும் கமல் – ரஜினி யுத்தம் தொடங்கிவிட்டதா? என்பதே நடுநிலையாளர்களின் கேள்வியாக உள்ளது.

Kamal Rajini fans clash after Vikram release

விதார்த் நடிக்கும் சைக்கோ திரில்லர் திரைப்படம் ஆரம்பம்

விதார்த் நடிக்கும் சைக்கோ திரில்லர் திரைப்படம் ஆரம்பம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘யதார்த்த நாயகன்’ நடிகர் விதார்த் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் பெயரிடப்படாத புதிய படத்தின் தொடக்கவிழா இன்று சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

கிரினேடிவ் குழுமத்தை சேர்ந்த கிரினேடிவ் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர். மோகன் ராகேஷ் பாபு தயாரிக்கும் முதல் திரைப்படத்தில் நடிகர் விதார்த் கதையின் நாயகனாக நடிக்கிறார்.

பெயரிடப்படாத இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் மணிமாறன் நடராஜன் இயக்குகிறார்.

இதன் கதை, திரைக்கதை, வசனத்தை எழுத்தாளர் ஸ்ரீனிவாசன் சுந்தர் எழுத, ஒளிப்பதிவை எஸ். ஆர். சதீஷ்குமார் மேற்கொள்கிறார்.

பின்னணியிசைக்கும் முக்கியத்துவம் உள்ள இந்த படத்திற்காக ‘வலிமை’ படப் புகழ் இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைக்க, கலை இயக்கத்தை மோகன் கவனிக்கிறார்.

‘டான்’ பட புகழ் நாகூரான் ராமச்சந்திரன் பட தொகுப்பு பணிகளை கையாள, பிரமிப்பை உண்டாக்கும் சண்டை காட்சிகளை தினேஷ் சுப்பராயன் அமைக்கிறார்.

ஒப்பனைக்காக தேசிய விருதுப்பெற்ற மூத்த கலைஞர் ‘பட்டணம்’ ரஷீத் இந்த படத்தில் சிறப்பு ஒப்பனைக்காக பிரத்யேகமாக பணியாற்றுகிறார்.

படத்தில் நடிக்கும் நாயகி மற்றும் வில்லன் நடிகருக்கான தேடல் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

மேலும் இதில் பணியாற்றும் ஏனைய நடிகர், நடிகைகள் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அகில இந்திய அளவிலான ( PAN INDIA ) திரைப்படங்களை உருவாக்குவதை நோக்கமாக கொண்டு பட தயாரிப்பில் ஈடுபட்டிருக்கும் கிரினேடிவ் பிலிம்ஸ் நிறுவனத்தின் பெயரிடப்படாத முதல் படைப்பின் தொடக்க விழா இன்று சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினர்களாக பட குழுவினருடன் நந்தகுமார் ஐ ஏ எஸ், இயக்குநர்கள் கார்த்திக் சுந்தர், சற்குணம், ராம்நாத் பழனிக்குமார் ‘டோரா’ தாஸ் ராமசாமி, ‘நெருப்பு டா’ அசோக்குமார், ‘மஞ்சப்பை’ என். ராகவன் உள்ளிட்ட ஏராளமான திரையுலக பிரபலங்கள் வருகை தந்து படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இவ்விழாவில் www.greenativefilms.com என்ற இந்த குழுமத்தின் திரைப்படப்பிரிவிற்கென பிரத்யேக இணையத்தள சேவையும் தொடங்கப்பட்டது.

தமிழில் தயாராகும் காவல்துறையினரின் புலனாய்வு விசாரணை பாணியிலான சைக்கோ திரில்லர் திரைப்படம் இது என்பதால், தொடக்க விழாவின்போதே ரசிகர்களிடத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Psycho thriller movie starring Vidharth begins

மாயம் செய்யும் மணிவண்ணா.. எதிர்பார்த்ததை விட வெற்றி.; தங்க சங்கிலி பரிசளித்த சிபிராஜ்

மாயம் செய்யும் மணிவண்ணா.. எதிர்பார்த்ததை விட வெற்றி.; தங்க சங்கிலி பரிசளித்த சிபிராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

டபுள் மீனிங் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் அருண்மொழிமாணிக்கம் தயாரிப்பில், சிபி சத்யராஜ் நடிப்பில் வெளியான ‘மாயோன்’ திரைப்படம் அனைத்து தரப்பு மக்களிடமும் வரவேற்பை பெற்று வணிகரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றியை பெற்றிருக்கிறது.

இதனை பட குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர். இதன் போது படத்தை இயக்கிய அறிமுக இயக்குநர் கிஷோருக்கு, படத்தின் நாயகனான சிபிராஜ் தங்க சங்கிலியொன்றை பரிசளித்தார்.

தயாரிப்பாளர் அருண் மொழி மாணிக்கம் திரைக்கதை எழுதி தயாரித்து, பலத்த போட்டிகளுக்கு இடையே வெளியான திரைப்படம் ‘மாயோன்’.

எளிதில் யூகிக்க இயலாத திரைக்கதை, நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் பரிபூரண ஒத்துழைப்பு, ரசிகர்களை திரையரங்கிற்கு வரவழைக்கும் வகையில் வித்தியாசமான விளம்பர உத்தி, திரையலக பிரபலங்களின் பாரட்டு.. என பலவித அம்சங்களால் ‘மாயோன்’ திரைப்படம் பெரும் வெற்றியை பெற்றது. தமிழகம் முழுவதும் ‘மாயோன்’ திரையிடப்பட்ட திரையரங்குகளில் ரசிகர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டேயிருக்கிறது.

மாயோன் விமர்சனம் 3.25/5.; மறையாத மர்மங்கள்

இதனால் படக்குழுவினர் உற்சாகமடைந்திருக்கின்றனர்.

எதிர்பார்த்ததை விட கூடுதல் வெற்றி, ‘மாயோன்’ திரைப்படத்திற்கு கிடைத்ததால் மகிழ்ச்சி அடைந்த தயாரிப்பாளர், பட குழுவினரை அலுவலகத்திற்கு வரவழைத்து, வெற்றியைக் கேக் வெட்டி கொண்டாடினார்.

தமிழில் ‘மாயோன்’ திரைப்படத்திற்கு மாபெரும் வெற்றி கிடைத்ததால், ஜூலை ஏழாம் தேதியன்று தெலுங்கில் 350க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகிறது.

இதற்காக ஜுலை 1ஆம் தேதியன்று ஹைதராபாத்தில் நடைபெறும் விளம்பரப்படுத்தும் நிகழ்வில் தெலுங்கின் முன்னணி நட்சத்திரங்கள் கலந்துகொள்கிறார்கள்.

இவர்களுடன் ‘கட்டப்பா’ சத்யராஜ் உள்ளிட்ட ‘மாயோன்’ படக்குழுவினரும் கலந்துகொண்டு, தெலுங்கு ரசிகர்களுக்கு ‘மாயம் செய்யும் மணிவண்ணா..’வை அறிமுகப்படுத்துகிறார்கள்.

Sibiraj gifted gold chain to Maayon team

More Articles
Follows