தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
விக்ரம் படங்கள் என்றாலே குடும்பத்துடன் பார்க்கக் கூடிய வகையில்தான் இருக்கும்.
இவருக்கு என்று குறிப்பிட்ட ரசிகர்கள் வட்ட இருந்தாலும் இதை மீறி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ளார்.
அதற்கு காரணம் ஒவ்வொரு படத்திற்காகவும் தன் உருவத்தையே மாற்றிக் கொள்ளும் அற்புத கலைஞர் இவர்.
இனி இருமுகனை ஏன் பார்க்க வேண்டும் என்பதை பார்ப்போமோ?
முதன்முதலாக இரண்டு வித்தியாசமான வேடங்களில் நடித்துள்ளார் சீயான்.
‘அரிமா நம்பி’ என்ற வெற்றி படத்தை கொடுத்த ஆனந்த் சங்கரின் இரண்டாவது படம் இது.
இப்படத்திற்காக விக்ரமை 10 மாதங்கள் வரை காக்க வைத்திருக்கிறார். அவரும் இதற்காக வளர்க்கப்பட்ட தாடியுடன் பொறுமையுடன் காத்திருந்தார்.
இதில் விக்ரம் ஏற்றுள்ள கேரக்டர்களின் பெயர்களே நம்மை பார்க்க தூண்டும் வகையில் அமைந்துள்ளது.
அகிலன் மற்றும் லவ் என்ற இரு கேரக்டரில் நடித்துள்ளார்.
அந்நியன் படத்திலுள்ள ரெமோ கேரக்டர் போல இதில் உள்ள லவ் கேரக்டர் அவருக்கு பெரிய திருப்புமுனையை உண்டாக்கும் என சொல்லப்படுகிறது.
மேலும் தென்னிந்தியாவின் சூப்பர் நடிகையான நயன்தாரா இதில் விக்ரமுடன் இணைந்து நடித்துள்ளார்.
இவர்களுடன் திறமையான நடிகை நித்யா மேனனும் இணைந்துள்ளார்.
மெடிக்கல் க்ரைம் சப்ஜெக்டை கமர்ஷியல் கலந்து கொடுத்துள்ளனர்.
நீண்ட இடைவேளைக்கு பின்னர் ஹாரீஸ் ஜெயராஜ் தன் மெலோடி பாடல்கள் மூலம் ரீ-எண்ட்ரி கொடுத்துள்ளார்.
இவரது இசையில் உருவான ‘ஹெலேனா’ பாடலை கேட்காத செவிகள் இல்லை என்னுமளவுக்கு சேனல்களில் ஒலித்து கொண்டே இருக்கிறது.
இப்படம் நாளை செப்டம்பர் 8ஆம் தேதி வெளியாகிறது.
நாளை விமர்சனத்துடன் சந்திக்கிறோம்.