ரஜினி-விக்ரம் பட நடிகைகளை பாலியல் தொழிலுக்கு தள்ளிய விஜய் பட இயக்குனர்

ரஜினி-விக்ரம் பட நடிகைகளை பாலியல் தொழிலுக்கு தள்ளிய விஜய் பட இயக்குனர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sadha and Riythvika as prostitute in Torch light movieவிஜய் நடித்த தமிழன் படத்தை இயக்கியவர் மஜீத். இவர் தற்போது இயக்கியுள்ள படத்திற்கு டார்ச் லைட் என பெயரிட்டுள்ளார்.

இப்படத்தில் அந்நியன் பட நடிகை சதா மற்றும் கபாலி பட புகழ் ரித்விகா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்த ‘டார்ச் லைட்’ படம் பற்றி இயக்குநர் மஜீத் கூறும் போது…

“இது ஒரு பீரியட் பிலிம். 90களில் நடக்கும் கதையாக இந்தப் படம் உருவாகியிருக்கிறது.

இது நெடுஞ்சாலைகளில் டார்ச் லைட் அடித்து பாலியல் தொழில் செய்யும் பெண்கள் பற்றிய கதை.

இந்தப் படத்தின் கதையைக் கேட்ட நடிகைகள் பலரும் நடிக்கத் தயங்கினார்கள். ஆனால் நடிகை சதா மட்டும் தைரியமாக நடிக்கச் சம்மதித்தார்.

வறுமையைப் பயன்படுத்தி பெண்ணினத்தை இந்தச் சமூகம் எப்படிப் படுகுழியில் தள்ளி அவர்களின் வாழ்க்கையைப் பாழாக்குகிறது என்பதை சொல்ல வேண்டும் என்று நினைத்தேன்.

இந்தக் கதை சார்ந்து பலர் உண்மைச் சாட்சியங்களாக உள்ளனர். அப்படிப்பட்ட பலரையும் சந்தித்து வீடியோவில் பேசி பதிவு செய்து படமாக்கினேன், மும்பையில் சென்சார் ஆபிஸர்கள் படம் ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

கதைக்கு என்ன தேவையோ அதை மட்டுமே படமாக்கி உள்ளேன் படம் சிறப்பாக வந்துள்ளது உங்கள் அனைவருக்கு பிடித்த படமாக இருக்கும், படத்தில் சதா, ரித்விகா இருவரும் சிறப்பாக நடித்துள்ளனர்.

படத்தில், புதுமுகம் உதயா, தினேஷ் குமார், இயக்குநர் வெங்கடேஷ், சுஜாதா. ரங்கநாதன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

சென்சார் சென்றபோது இங்கு சென்சார் சான்றிதழ் தர மறுத்தார்கள். இங்குப்போராடிப் பார்த்து வேறு வழியில்லாமல் பிறகு நான் மும்பை சென்று ஏ சான்றிதழ் பெற்றுள்ளேன். ” என்றார்

‘டார்ச் லைட் ‘படத்துக்கு ஒளிப்பதிவு – சக்திவேல், இசை – ஜேவி, பாடல்கள்- வைரமுத்து, எடிட்டிங் – மாரீஸ், கலை -சேகர், நடனம் – சிவராகவ், ஷெரீப். தயாரிப்பு அப்துல் மஜீத், எம். அந்தோனி எட்வர்ட், ரங்கநாதன் ராஜு, கண்ணன் பாஸ்கர்.

விரைவில் ஒளி வீச வருகிறது இந்த ‘டார்ச் லைட்’.

Sadha and Riythvika as prostitute in Torch light movie

torch light sadha majeeth

*திசை* பட சிங்கிள் வீடியோ டிராக்கை வெளியிட்டார் கே.பாக்யராஜ்

*திசை* பட சிங்கிள் வீடியோ டிராக்கை வெளியிட்டார் கே.பாக்யராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

K Bhagyaraj launched Thisai movie single track‘காத்தெல்லாம் காதல் வாசனை’; சிங்கிள் வீடியோ டிராக்கை வெளியிட்ட கே.பாக்யராஜ்..!

லைஃப் சைக்கிள் கிரியேஷன்ஸ் சார்பில் பவன் கந்தசாமி மற்றும் GVK இணைந்து தயாரித்துள்ள படம் ‘திசை’. பவன், யுவன், அதுல்யா ரவி, லீமா பாபு ஆகியோர் நடித்துள்ள இந்தப்படத்தை P.வரதராஜன் என்பவர் இயக்கியுள்ளார்.

மணி அமுதவன் இசையமைத்துள்ளதுடன் பாடல்களையும் எழுதியுள்ளார். ஒளிப்பதிவை தாணு பாலாஜி மேற்கொள்ள, படத்தொகுப்பை முத்துக்குமரன் கவனிக்கிறார்.

ஸ்டண்ட் ; ஸ்டண்ட் ரவி மற்றும் ரன் ரவி, நடனம் ; ராதிகா.ஐ.

இந்தப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘காத்தெல்லாம் காதல் வாசனை’ என்கிற சிங்கிள் வீடியோ டிராக்கை சமீபத்தில் கே.பாக்யராஜ் வெளியிட்டார்.

K Bhagyaraj launched Thisai movie single track

அரண்மனை சூட்டிங் சமயத்தில் சுந்தர்.சி. என்னை அனுபவித்தார் : ஸ்ரீரெட்டி

அரண்மனை சூட்டிங் சமயத்தில் சுந்தர்.சி. என்னை அனுபவித்தார் : ஸ்ரீரெட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sundar C is the latest Kollywood celebrity in Sri Reddys Tamil Leaksதெலுங்கு திரையுலகமே நடிகை ஸ்ரீ ரெட்டியின் பாலியல் குற்றச்சாட்டுக்களால் ஆடி போய் இருக்கிறது.

பட வாய்ப்பு தருவதாக கூறி பலரும் தன் படுக்கைக்கு அழைத்தனர். ஆனால் யாரும் வாய்ப்பு தரவில்லை என கூறி தன்னை ஏமாற்றிய ஒவ்வொரு பிரபலத்தின் பெயர்களையும் லீக் செய்து வருகிறார்.

தமிழ் திரையுலகின் இருண்ட பக்கத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வருவதாக தமிழ் லீக்ஸ் என்ற ஹேஷ்டேக்கில் குற்றம்சாட்டி வருகிறார்.

ஓரிரு தினங்களுக்கு முன் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர்கள் ஸ்ரீகாந்த், லாரன்ஸ் ஆகியோர் மீதும் புகார் கூறியிருந்தார்.

இதனால் தன்னை விஷால் தன்னை மிரட்டுவதாகவும் கூறியிருந்தார்.

இந்நிலையில் தற்போது நடிகரும், இயக்குனருமான சுந்தர் சி. மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளார் ஸ்ரீ ரெட்டி.

இதுகுறித்து ஸ்ரீரெட்டி அவரது பேஸ்புக் பக்கத்தில் போஸ்ட் ஒன்றை போட்டுள்ளார்.

ஹைதராபாத்தில் அரண்மனை படப்பிடிப்பு நடந்தது. அப்போது படத்தின் எக்சிகியூட்டிவ் தயாரிப்பாளரான கணேஷ் என்பவர் எனக்கு போன் செய்தார். யார் மூலமாகவோ என் நம்பரை வாங்கி எனக்கு போன் செய்தார்.

நான் ஷூட்டிங்ஸ் பாட்டிற்கு சென்றபோது அவர் என்னை சுந்தர்.சி.யிடம் அறிமுகம் செய்து வைத்தார் என்கிறார் ஸ்ரீ ரெட்டி.

ஃபேஸ்புக் நண்பர் செந்தில்குமாரையும் (கேமராமேன்) சந்தித்தேன். அடுத்த படத்தில் நீங்களும் ஒரு ஹீரோயின் என்று எனக்கு அவர் வாக்குறுதி அளித்தார்.

மறுநாள் போன் செய்து நோவோடெல் ஓட்டலுக்கு வரச் சொன்னார்.

படத்தில் வாய்ப்பு வேண்டுமானால் அவர்(கணேஷ்) மற்றும் சுந்தர் சி.யுடன் அட்ஜஸ்ட்(பாலியல் ரீதியாக) செய்ய வேண்டும் என்றனர். அதன்பிறகு நடந்தது பெருமாளுக்கு தெரியும்.

கணேஷ் ஒரு பிராடு, அவர் எனக்கு உதவி செய்யவில்லை என்று ஸ்ரீ ரெட்டி பேஸ்புக்கில் போஸ்ட் தெரிவித்துள்ளார்.

ஆனால் இதற்கு சுந்தர் சி, லாரன்ஸ், ஸ்ரீகாந்த் ஆகியோர் மறுப்பு தெரிவித்துள்ளனர். ஸ்ரீரெட்டி சொல்வது எல்லாம் பொய் என அவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

Sundar C is the latest Kollywood celebrity in Sri Reddys Tamil Leaks

sri reddy sundar c

முதல்வரின் உடலை தேட ராணுவத்துக்கு உதவும் கிருஷ்ணா

முதல்வரின் உடலை தேட ராணுவத்துக்கு உதவும் கிருஷ்ணா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kazhugu movie imagesகழுகு-2 படத்தில் கிருஷ்ணா நாயகனாகவும், பிந்து மாதவி நாயகியாகவும் நடிக்கின்றனர். காளி வெங்கட் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சத்யசிவா இயக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். கோபி கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்ய, ராஜா பட்டாசார்ஜி படத்தொகுப்பை கவனிக்கிறார்.

அண்டை மாநில முதலமைச்சர் பயணம் செய்யும் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் விழுந்து விடுகிறது. நொறுங்கி விழுந்த ஹெலிகாப்டரையும், அதில் பயணம் செய்த முதலமைச்சரையும் தேடுவதற்காக ராணுவ வீரர்கள் வரவழைக்கப்படுகிறார்கள்.

அடர்ந்த காட்டுக்குள் உள்ளூர் மக்களின் வழிகாட்டுதலோடு ராணுவ வீரர்கள் சல்லடை போட்டு தேடுகிறார்கள். எங்கு தேடியும் நொறுங்கிய ஹெலிகாப்டரின் பாகங்களோ, அதில் பயணம் செய்த முதலமைச்சர் உள்ளிட்டவர்களின் உடல்களோ கிடைக்கவில்லை.

காட்டின் பெரும்பகுதியை தேடுவதற்கு உதவிய உள்ளூர் கிராம மக்கள் காட்டின் குறிப்பிட்ட பகுதிக்கு வர மறுக்கிறார்கள். அதற்கு காரணம் அந்த காட்டு பகுதியில் வாழும் செந்நாய்கள்.

மிருகங்களிலேயே போர்க்குணம் மிக்க மிருகமென்றால் அது செந்நாய் தான். இரண்டு செந்நாய்கள் சேர்ந்தால் ஒரு சிங்கத்தையே வீழ்த்தி விடும்.

செந்நாயால் உயிருக்கு ஆபத்து என்பதால் உள்ளூர் மக்கள் வர மறுக்க, ராணுவ வீரர்களுக்கு உதவுவதற்காக செந்நாய்களை வேட்டையாடும் திறன் படைத்த கிருஷ்ணா வரவழைக்கப்படுகிறார்.

ஹெலிகாப்டரை தனி ஆளாக தான் தேடி அதன் நிலையை கண்டுபிடித்து தருவதாக கூறி செந்நாய் காட்டிற்குள் செல்கிறார் கிருஷ்ணா.

நுனி சீட்டில் அமரவைக்க போகும் இந்த ஆரம்ப காட்சியிலேயே மூன்று செந்நாய்களோடு கிருஷ்ணா மோதும் பிரம்மாண்ட சண்டை காட்சி சமீபத்தில் மூணார் காட்டு பகுதியில் படமாக்கப்பட்டது.

நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்களின் உடையணிந்த துணை நடிகர்களோடு, நூற்றுக்கணக்கான கிராம மக்கள் ஹெலிகாப்டரை தேடி காட்டிற்குள் நுழையும் ஆரம்ப காட்சி மிக பிரம்மாண்டமாக படமாக்கப்பட்டது.

‘புலிமுருகன்’ படத்தில் புதுவித உத்திகளோடு மோகன்லால் புலியை வீழ்த்துவதை போல வித்தியாசமான உத்திகளை பயன்படுத்தி செந்நாயை கிருஷ்ணா வீழ்த்துவது போன்று காட்சிகள் படமாக்கப்பட்டன.

படத்தின் இறுதி காட்சியிலும் செந்நாய்களோடு கிருஷ்ணா மோதும் காட்சி படமாக்கப்பட உள்ளது. கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் கிராபிக்ஸ் காட்சிகள் இடம் பெற போகும் இந்த படத்தின் பட்ஜெட் கிருஷ்ணா நடித்த படங்களிலேயே அதிகபட்ச பட்ஜெட் படமாகும்.

இந்த படம் கிருஷ்ணா வின் திரையுலக பயணத்தில் ஒரு மைல்கல்லாக பார்க்கப்படும் என இந்த படத்தின் விநியோக உரிமையை பெற்றிருக்கும் சிங்காரவேலன் தெரிவித்தார்.

1960 & 1980ல் மறைக்கப்பட்ட உண்மை சம்பவத்தை படமாக்கும் புரூஷ் விஜய்குமார்

1960 & 1980ல் மறைக்கப்பட்ட உண்மை சம்பவத்தை படமாக்கும் புரூஷ் விஜய்குமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kanguஶ்ரீ அங்காளபரமேஸ்வரி சினி கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் விக்னேஷ் சிவராமன் தன் முதல் படைப்பாக கங்கு படத்தை தயாரிக்கிறார்.

பிரம்மா.காம் படத்தை இயக்கிய புருஷ் விஜயகுமார் இப்படத்தை எழுதி இயக்குகிறார். 1960 மற்றும் 1980 மறைக்கப்பட்ட ஒரு உண்மை சம்பவத்தின் அடிப்படையில் இக்கதையை எழுதி இயக்குகிறார் புரூஷ் விஜய்குமார்.

மிகுந்த பொருட்செலவில் மிகப்பிரமாண்டமாக இப்படத்தை தயாரிக்கிறார் விக்னேஷ் சிவராமன்.

இன்று பூஜையுடன் துவங்கிய இத்திரைப்படம் மிகுந்த நுணுக்கத்துடன் அற்புதமாக உருவாகவுள்ளது.

1960 மற்றும் 1980 காலகட்டங்களை கண்முன் நிறுத்தும்படி மிகப்பிரமாண்டமான செட் போடப்பட்டு வருகிறது.

மேலும் பல நிஜ லோகேஷன்களிலும் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. இப்படத்தில் நிறைய புதுமுகங்கள் நடிக்க பல பிரபலங்களும் நடிக்க உள்ளனர்.

மற்றும் படத்தில் மிகப்பெரிய டெக்னிஷீயன்கள் பணிபுரிய உள்ளனர்.

இன்று துவங்கிய பூஜையில் நடிகர் ராமகிருஷ்ணன், வடிவுக்கரசி, ஜாக்குவார் தங்கம் உட்பட பல பிரபலங்கள் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

ஒரிஜினல் துப்பாக்கி வைத்திருந்த கிருஷ்ணாவை சுற்றி வளைத்த போலீஸ்

ஒரிஜினல் துப்பாக்கி வைத்திருந்த கிருஷ்ணாவை சுற்றி வளைத்த போலீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kazhugu 2மேற்கு தொடர்ச்சி மலைக்காடுகளில் மாவோயிஸ்டுகளும், நக்சல்களும் ஆயுத பயிற்சி எடுப்பதும், அதிரடிப்படை அவர்களை சுற்றி வளைத்து கைது செய்வதும் அவ்வப்போது நடந்து வருகிறது.

இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை காட்டுப்பகுதியான கேரள மாநிலம் மறையூரில் தனியாருக்கு சொந்தமான காட்டுப்பகுதியில் நடிகர் கிருஷ்ணா நடித்துவரும் ‘கழுகு – 2’ படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. தனியாருக்கு சொந்தமான இடத்தை சுற்றிலும் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள காடு உள்ளது. இந்த படத்தில் செந்நாய்களை கிருஷ்ணா வேட்டையாடும் காட்சி இடம் பெறுகிறது.

ஆகாயத்தில் பறந்தவாறு செந்நாய்களை குறி தவறாமல் கிருஷ்ணா சுட வேண்டும். இதற்காக அடர்ந்த காட்டுப்பகுதியில் நடிகர் கிருஷ்ணா ஒரிஜினல் துப்பாக்கியை வைத்து துப்பாக்கி சுடும் பயிற்சியை எடுத்து கொண்டார்.

தொடர்ந்து துப்பாக்கி சத்தம் கேட்டதால் பீதியான மக்கள் மாவோயிஸ்டுகள் ஆயுத பயிற்சி மேற்கொள்வதாக தகவல் தெரிவித்ததை அடுத்து அந்த பகுதிக்கு விரைந்த அதிரடிப் படையினர் துப்பாக்கி முனையில் நடிகர் கிருஷ்ணாவையும், அவரது உதவியாளர்களையும் சுற்றி வளைத்தனர்.

அருகில் சென்று பார்த்த போது தான், அது திரைப்படத்திற்கான ஒத்திகை என்பது தெரிய வந்தது இருப்பினும் துப்பாக்கியை ஆய்வு செய்த காவல்துறையினர், அது ஒரிஜினல் துப்பாக்கி என்றும், லைசென்சை காண்பித்து விட்டு துப்பாக்கியை பெற்று செல்லுமாறும் கூறியுள்ளனர்.

இந்த துப்பாக்கிகள் சென்னையைச் சார்ந்த GUN ராஜ் என்பவருக்கு சொந்தமானது. துப்பாக்கிகளுக்கான லைசென்சுடன் கேரளா விரைந்துள்ளார் GUN ராஜ்.

More Articles
Follows