தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தானே ஒரு நடிகராக இருந்தபோதும் விஜய்யின் தீவிர ரசிகர் என அடிக்கடி கூறி கொண்டிருப்பவர் சாந்தனு.
இவர் தற்போது விக்ரம் சுகுமாறன் இயக்கவுள்ள படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் என்பதை பார்த்தோம்.
கதிர், ஓவியா நடித்திருந்த `மதயானை கூட்டம்’ படத்தை இயக்கியவர் இந்த விக்ரம் சுகுமாறன்.
தற்போது 7 ஆண்டுகளுக்கு பிறகு தன் படத்திற்கு `இராவண கோட்டம்’ என்று தலைப்பிட்டு இயக்கவுள்ளார்.
இந்த படத்தை கண்ணன் ரவி தயாரிக்கிறார்.
இந்நிலையில் சாந்தனுவுக்கு வாழ்த்து தெரிவித்து நடிகர் விஜய் குறுந்தகவல் ஒன்றை அனுப்பியுள்ளாராம்.
இதுகுறித்து சாந்தனு கூறியிருப்பதாவது,
வாழ்த்துக்கள் நண்பா, தலைப்பு செம என்று எனக்கு குறுந்தகவல் அனுப்பி விஜய் அண்ணா என்னை மெர்சலாக்கி விட்டார். உங்களது வாழ்த்துக்கு நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.