தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் சாந்தனு, ஆனந்தி, சஞ்சய், இளவரசு, பிரபு, தீபா உள்ளிட்டோர் நடிக்க நேற்று வெளியானது ‘இராவண கோட்டம்’.
ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருந்த இந்த படத்தை தொழிலதிபர் கண்ணன் ரவி என்பவர் தயாரித்திருந்தார்.
இந்த படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே மிகவும் எதிர்பார்ப்புக்குள்ளான படமாக கருதப்பட்டது.
அதற்கு முக்கிய காரணம் ராமநாதபுரம் மாவட்டத்தின் தண்ணீர் பஞ்சத்தையும் சீம கருவேல மரங்களால் அழிக்கப்படும் நில வளத்தையும் இந்த படம் கதைக்களமாக கொண்டிருந்தது.
மேலும் இந்த படத்தில் மேல் சாதி கீழ் சாதி பிரிவினையும் காட்டப்பட்டிருந்தது.
இந்த படத்தை பார்த்த பலரும் பலவிதமான கருத்துக்களை கூறி வரும் நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் இந்த படத்தை நேற்று மாலை படக்குழுவினருடன் பார்த்துள்ளார்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார்.
தொல் திருமாவளவன் இந்த படத்தை பாராட்டியது தங்களுக்கு கிடைத்த தேசிய விருதாகவே கருதுகிறோம் என படக்குழுவினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்த தமிழ் மக்களின் உரிமைகளுக்காகப் போராடி வரும் சமூக நீதி காவலர் ஐயா தொல் திருமாவளவன் அவர்களின் வாழ்த்தை எங்களுக்கு கிடைத்த தேசிய விருதாகவே கருதுகிறோம்.
At a special screening today in chennai
#TholThirumaSupportsRaavanaKottam
#RaavanaKottam
Thirumavalavan appreciation is like national award-‘Ravana Kottam’ film crew