தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இந்தியாவில் கறுப்பு பணத்தை ஒழிக்கும் திட்டத்தின் முதற்கட்டமாக ரூ. 500, ரூ. 1000 நோட்டுக்கள் செல்லாது என பிரதமர் மோடி திடீரென அறிவித்தார்.
இதனால் நாட்டில் சில்லறைத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான மக்கள் வங்கிகளில் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.
இதுகுறித்து பேச இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார் விஜய்.
அப்போது அவர் கூறியதாவது…
“மத்திய அரசு எடுத்துள்ள இந்த துணிச்சலான முடிவை வரவேற்கிறேன்.
நாட்டுக்கு தேவையான, துணிச்சலான முடிவு.
ஒரு நல்ல நோக்கம் இருக்கும்போது, அதற்கான பாதிப்புகள் நிச்சயம் இருக்கும்.
பசிக்கு சாப்பிட முடியாமல், அவசர தேவைக்கு மருந்து வாங்க முடியாமல், வெளியூருக்கு சென்றவர்கள் பஸ்சில் ஏற முடியாமல் மக்கள் தவிக்கிறார்கள்.
பணம் இருந்தும் மாற்றமுடியாமல் கஷ்டப்படுகிறார்கள்.
தன் பேத்தி திருமணத்திற்காக ஒரு பெரியவர் தன் இடத்தை விற்று இருக்கிறார்.
ஆனால் அந்த பணம் செல்லாது என்பதால் தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு சென்றுவிட்டார்.
மேலும் ஆஸ்பத்திரியில் ஒரு குழந்தை இறந்துள்ளது.
முன்னேற்பாடுகள் செய்திருந்தால், இதுபோன்ற விஷயங்களை தவிர்த்திருக்கலாம்.
நாட்டுல 20% பேர் பணக்காரர்கள் இருப்பார்கள். அதில் ஒரு சிலர் செய்த தவறுகளுக்காக மீதமுள்ள 80% மக்கள் என்ன செய்வார்கள்?
இதுவரை யாருமே பண்ணாத, பண்ண யோசிக்காத ஒரு முயற்சிதான் இது.
பிரச்சினைக்கு தீர்வாக ஒரு சட்டம் போடுகிறார்கள். அதை அமல்படுத்தும்போது, என்ன பிரச்சினைகள் வரும் என்பதை முன்கூட்டியே தெரிந்துகொண்டு அதற்கான வழிகளை முன்பே எடுத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்பதுதான் என் தாழ்மையான கருத்து.
இப்பிரச்சினை தற்போது கொஞ்சம் குறைந்துள்ளது.
கிராமங்களில் இன்னும் அந்த கஷ்டம் இருக்கிறது. அந்த கஷ்டங்களை மத்திய அரசு தீர்த்து வைத்தால் நன்றாக இருக்கும்”
இவ்வாறு விஜய் தெரிவித்தார்.