பைரவா புரொடியூசருடன் இணையும் சிம்பு & கார்த்திக் நரேன்.?

பைரவா புரொடியூசருடன் இணையும் சிம்பு & கார்த்திக் நரேன்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

strகடந்த சில தினங்களுக்கு முன் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியுடன், வெங்கட் பிரபு சிம்புவை சந்தித்துள்ளனர்.

இவர்கள் கூட்டனியில் புதிய படம் உருவாக வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் துருவங்கள் 16 படத்தின் இயக்குநரான கார்த்திக் நரேனும் சிம்புவை சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பில் கார்த்திக் நரேன் சிம்புவிடம் கதை விவாதித்ததாக கூறப்படுகிறது.

இப்படத்தை பைரவா பட நிறுவனமான விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

மீண்டும் போலீஸில் சிக்கிய ஜெய்.; கண்டித்து வீடியோ எடுத்து அனுப்பிய காவலர்கள்

மீண்டும் போலீஸில் சிக்கிய ஜெய்.; கண்டித்து வீடியோ எடுத்து அனுப்பிய காவலர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

jaiநேற்று இரவு வேப்பேரி அருகே கார் ஒன்று அதிக இரைச்சலுடன் சென்றதை தொடர்ந்து அங்கு பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து போலீசார், அந்த காரை வழிமறித்து நிறுத்தினர்.

அப்போது காரினுள் இருந்த நடிகர் ஜெய்யை கண்ட போலீசார், இளைஞர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டிய நடிகர்களே இவ்வாறு விதிகளை மீறலாமா என அவரிடம் கேள்வி எழுப்பினர்.

இதையடுத்து தனது தவறை ஒப்புக் கொண்ட ஜெய் இனி இப்படி செய்ய மாட்டேன் என போலீசாரிடம் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து நடிகர் ஜெய்யை வைத்துக் கொண்டே பள்ளிகள், மருத்துவமனைகளுக்குத் தொந்தரவாகவும், சக வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் பாட்டில் சைலன்ஸரைப் பயன்படுத்த வேண்டாம் என அறிவுரை வழங்கும் வீடியோவை போக்குவரத்து போலீசார் எடுத்தனர்.

பொதுவாக அதிக இரைச்சல் கொண்ட சைலன்சரை பயன்படுத்துவோரை காவல்துறையினர் பிடித்தால் அந்த வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு, வழக்குப்பதிவும் செய்வர்.

ஆனால் நடிகர் ஜெய் மீது இவ்வாறான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

முன்னதாக கடந்த 2017 ஆண்டு செப்டம்பர் மாதம் மது போதையில் வாகனம் ஓட்டிய ஜெய் அடையாறு மேம்பாலத்தின் கீழே உள்ள சாலை தடுப்பில் மோதி விபத்தில் சிக்கினார்.

அப்போது நீதிமன்றத்தில் ஆஜராகாத ஜெய்க்கு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது.

நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து ஆஜரான ஜெய்யின் ஓட்டுநர் உரிமத்தை 6 மாத காலத்திற்கு ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

சினிமாவில் இருந்தால் ஜெயலலிதா உடன் நடிச்சிருப்பேன்…- துரைமுருகன்

சினிமாவில் இருந்தால் ஜெயலலிதா உடன் நடிச்சிருப்பேன்…- துரைமுருகன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

jayalalitha and durai muruganகிராமிய கலைஞர்களை ஊக்குவிக்க நடவடிக்கை கோரிய
சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர்
துரைமுருகன் கிராமிய பாடல்களையும் பாடிக் காட்டினார்.

அப்போது அழகாக பாடும் நீங்கள் நாடகங்களில் நடித்து உண்டா என்ற சபாநாயகரின் கேள்விக்கு சிறு வயதில் நாடகங்களில் நடித்துள்ளதாக துரைமுருகன் தெரிவித்தார்.

ஷேக்ஸ்பியர் குறிப்பிட்டது போல் உலகமே நாடகமேடை என்றும் இங்கு அனைவரும் நடித்துக் கொண்டு இருக்கிறோம் என்றும் கூறிய துரைமுருகன், சபாநாயகரான நீங்களும் நடித்துக் கொண்டுதான் இருக்கிறீர்கள் என்று கூறியது சிரிப்பலையை ஏற்படுத்தியது.

அப்போது பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்,அவையில் துரைமுருகன் நவரசங்கள் வெளிப்படும் விதமாக பேசுவதாக ஜெயலலிதா பாராட்டியதைக் குறிப்பிட்டார்.

இதற்கு பதிலளித்த துரைமுருகன் சினிமா துறைக்கு போயிருந்தால் ஜெயலலிதாவோடு நடிக்க தனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கும் என்றார்.

இதை கேட்ட தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. உறுப்பினர்கள் மேஜையை தட்டிசிரித்தனர்.

அதர்வா-நயன்தாரா கலந்துக் கொள்ளாத *இமைக்கா நொடிகள்* இசை விழா

அதர்வா-நயன்தாரா கலந்துக் கொள்ளாத *இமைக்கா நொடிகள்* இசை விழா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

atharva and nayantharaடிமாண்டி காலனி’ படத்தை தொடர்ந்து அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள படம் ‘இமைக்கா நொடிகள்’.

‘கேமியோ ஃபிலிம்ஸ்’ நிறுவனம் சார்பில் சி.ஜே.ஜெயகுமார் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ‘ஹிப் பாப் தமிழா’ ஆதி இசை அமைத்துள்ளார்.

இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.

இந்த விழாவில் விஜய் சேதுபதி, நயன்தாரா, அதர்வா என முக்கிய நட்சத்திரங்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை.

இந்த படத்தில் நயன்தாரா சிபிஐ அதிகாரியாக நடிக்கிறார்.

பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யாப் குரூரமாக தொடர் கொலைகளை செய்யும் ‘ருத்ரா’ என்ற சைக்கோவாக நடிக்கிறார்.

அதர்வா மருத்துவ கல்லூரி மாணவராக நடிக்கிறார்.

இந்த படத்தின் கதையில் ட்விஸ்டை ஏற்படுத்தும் ஒரு கேரக்டரில் விஜய்சேதுபதி நடித்துள்ளார்.

இந்த படத்தில் விஜய்சேதுபதியும், நயன்தாராவும் கணவன், மனைவியாக நடித்துள்ளனர்.

இந்த படத்தில் விஜய்சேதுபதி சம்பந்தப்பட்ட காட்சிகள் 15 நிமிடங்கள் இடம்பெறுகிறது!

மீண்டும் லைகாவுடன் இணையும் ரஜினிகாந்த் -முருகதாஸ்

மீண்டும் லைகாவுடன் இணையும் ரஜினிகாந்த் -முருகதாஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanth and AR Murugadossகார்த்தி சுப்பராஜ் படத்தை தொடர்ந்து உடனடியாக அடுத்தப்படத்திலும் நடிக்க ஆர்வமாக இருக்கிறாராம் ரஜினிகாந்த்.

ரஜினியின் ஆர்வத்தை புரிந்துக் கொண்ட லைகா இப்படத்தை தயாரிக்க முன் வந்துள்ளதாம்.

இப்படத்தை ஏஆர். முருகதாஸ் இயக்குவார் என கூறப்படுகிறது.

ஏற்கெனவே ரஜினியின் 2.0 படத்தை லைகா தயாரித்து வருகிறது.

மேலும் விஜய்-முருகதாஸ் இணைந்த கத்தி படத்தையும் லைகா தயாரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

13வது முறையாக அஜித்துடன் இணையும் விவேக்.!

13வது முறையாக அஜித்துடன் இணையும் விவேக்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ajith vivekசிவா இயக்கும் விஸ்வாசம் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.

மேலும், தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகிபாபு, ரமேஷ் திலக் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். டி.இமான் இசையமைக்கிறார்.

‘விவேகம்’ படத்தைத் தயாரித்த சத்யஜோதி ஃபிலிம்ஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.

இந்நிலையில், இந்தப் படத்தில் விவேக்கும் இணைந்துள்ளார்.

“அன்பு நண்பர் அஜித்துடன் மீண்டும் கரம் கோர்ப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

வாழ்த்திய ரசிகப் பெருமக்களுக்கு என் நன்றிகள். எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்வேன்” என ட்விட்டரில் தெரிவித்துள்ளார் விவேக்.

கவுதம் மேனன் இயக்கிய ‘என்னை அறிந்தால்’ படம்தாம், அஜித்துடன் சேர்ந்து விவேக் கடைசியாக நடித்த படம்.

இதுவரை 12 படங்களில் அஜித்துடன் இணைந்து நடித்துள்ளார் விவேக் என்பது குறிப்பிடத்தக்கது.

More Articles
Follows