தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
மெர்சல் படத்தில் விஜய் பேசிய ஜிஎஸ்டி வசனங்களுக்கு பாஜக.வினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதில் மெர்சல் படத்தை தான் இணையத்தில் பார்த்ததாக எச். ராஜா தெரிவித்திருந்தார்.
இதற்கு விஷால் கடும் கண்டனம் தெரிவிக்க, தான் ஒரு காட்சியை மட்டும் வாட்ஸ்அப்பில் பார்த்தேன் என விளக்கம் அளித்தார் எச்.ராஜா.
இதனையடுத்து மெர்சல் பிரச்சினையை மதம் பிரச்சினையாக தற்போது உருவெடுக்கும் வகையில் பேசி வருகிறார்.
தனது ட்விட்டர் பக்கத்தில் விஜய்யின் வாக்காளர் அடையாள அட்டையை பதிவிட்டு அதில் விஜய்யின் ஒரிஜினல் பெயரான ஜோசப் விஜய் என உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் உண்மை கசக்கும் என பதிவிட்டுள்ளார்.
இதிலிருந்து தாங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்? இதில் என்ன தவறு உள்ளது? என கேள்வி மேல் கேள்வி கேட்டு அவரை வசை பாடி வருகின்றனர்.
இந்நிலையில் விஜய்யின் தந்தையும் புரட்சி இயக்குனருமான எஸ்ஏசி (எஸ்ஏ.சந்திரசேகரன்) ஒரு பேட்டியில் கூறியுள்ளதாவது…
“விஜய்யின் மதம் இந்தியன். அவர் ஜாதி இந்தியன் என பள்ளியில் சேர்க்கும் போதே நான் குறிப்பிட்டுள்ளேன்.
இப்போது ஒருவரின் பெயரை வைத்த அவரின் மதத்தை அடையாளப்படுத்துவது சிறுபிள்ளைதனமானது” என பதிலடி கொடுக்கும் வகையில் பேசியுள்ளார்.
Truth is bitter pic.twitter.com/woFdxOntRn
— H Raja (@HRajaBJP) October 22, 2017