விஜய் தேவரகொண்டா, பூரி ஜெகன்நாத் இணையும் புதிய படம் துவக்கம் !

விஜய் தேவரகொண்டா, பூரி ஜெகன்நாத் இணையும் புதிய படம் துவக்கம் !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay Devarakondaமிக சமீபகாலத்தில் இளைஞர்களிடம் வெகுவான வரவேற்பை பெற்ற ஹீரோவாக மாறியிருக்கும் நாயகன் விஜய் தேவரகொண்டா, ஆக்‌ஷன் கமர்ஷயலில் அதகளம் செய்யும் இயக்குநர் பூரி ஜெகன்நாத் ஆகிய இருவரும் இணையும் புதிய படம், இன்று மிக எளிதான பூஜையுடன் மும்பையில் படப்பிடிப்பு துவங்கியுள்ளது.

விஜய் தேவரகொண்ட நடிக்க நடிகை ஷார்மி கவுர் கிளாப் அடித்து படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.

இந்த வருடத்தில், மிக புதுவிதமான ஐடியாவுடன் அதிரிபுதிரி ஹிட்டாக “ஐ ஸ்மார்ட்” படத்தை தந்திருந்தார் பூரி ஜெகன்நாத். இப்படத்தின் பிரமாண்ட வெற்றிக்குபிறகு, உடனடியாக எவரும் எதிர்பாராவிதமாக காதல் படங்களில் நடித்து வரும் விஜய் தேவரகொண்டாவுடன் இப்படத்தை துவங்கியுள்ளார். படத்தின் மீது ஈர்க்கப்பட்டு பாலிவுட் பிரபலம் கரண் ஜோஹர் மற்றும் அபூர்வா மேத்தா இப்படத்தின் தயாரிப்பாளர்களாக இணைந்துள்ளார்கள்.

இது ஒரு முழு இந்திய ரசிகர்களுக்கான படமாக ஹிந்தி, தெலுங்கு, தமிழ் என அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் உருவாகிறது.

ஹீரோ யார்..? சிவகார்த்திகேயன்-விஜய் தேவரகொண்டா மோதல்

பூரி ஜெகன்நாத் எப்போதும் ஹீரோவை, அவர்கள் காணாத வேறொரு பரிணாமத்தில் திரையில் காட்டி கலக்குவார். இப்படத்திலும் விஜய் தேவரகொண்டாவை இதுவரை கண்டிராத வேடத்தில் இயக்கவுள்ளார்.

இயக்குநர் பூரி ஜெகன்நாத் முழுமையாக மாறுபட்ட கோணத்தில் விஜய் தேவரகொண்டா பாத்திரத்தை உருவாக்கியுள்ளார். இக்கதாப்பாத்திரத்திற்காக முழு டயட் மேற்கொண்டு உடலை ஆக்‌ஷன் ஹீரோ வடிவத்திற்கு மாற்றி வருகிறார் விஜய் தேவரகொண்டா. மேலும் தாய்லாந்து சென்று அங்குள்ள தற்காப்பு கலைகளில் பயிற்சி பெற்று வந்துள்ளார். அவரது சினிமா வாழ்வில் மிக சவாலான பாத்திரமாக, இக்காதாப்பாத்திரம் அமைந்திருப்பதை ஏற்று வெகு அர்பணிப்புடன் தன் முழு உழைப்பையும் கொடுத்து உழைத்து வருகிறார்.

Puri connects, Touring Talkies சார்பில் இயக்குநர் பூரி ஜெகன்நாத் நடிகை ஷார்மி கவுர், கரண் ஜோஹர், ஆபூர்வா மேத்தாவுடன் இணைந்து இப்படத்தினை தயாரிக்கிறார்.

ரம்யா கிருஷ்ணன் ரோனித் ராய், விஷு ரெட்டி, ஆழி, கெட்டப் ஶ்ரீனு ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள். Dharma Productions இப்படத்தை வழங்குகிறார்கள்.

தயாரிப்பு நிறுவனம் – Puri Connect

வழங்குபவர் – Dharma Productions

தயாரிப்பாளர்கள் – பூரி ஜெகன்நாத் , ஷார்மி கவுர், கரண் ஜோஹர், அபூர்வா மேத்தா.

பெரியார் பற்றி பேச்சு; ரஜினி மன்னிப்பு கேட்க தபெதிக வலியுறுத்தல்

பெரியார் பற்றி பேச்சு; ரஜினி மன்னிப்பு கேட்க தபெதிக வலியுறுத்தல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini should apologize for his controversial speech about Periyarஓரிரு தினங்களுக்கு முன் சென்னையில் துக்ளக் 50-வது ஆண்டு விழா நடைபெற்றது.

இதில் நடிகர் ரஜினிகாந்த கலந்துக் கொண்டார். அப்போது அவர் முரசொலி வைத்திருத்தால் திமுக காரன் என்றும் துக்ளக் படித்திருந்தால் அவர் அறிவாளி என்றும் பேசியிருந்தார்.

மேலும் பெரியார் தலைமையில் ராமர், சீதை உருவங்கள் நிர்வாணமாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. செருப்பு மாலை போடப்பட்டது என சிலவற்றை பேசியிருந்தார்.

இத்துடன் பத்திரிகையாளர்கள் பால் என்ற உண்மை செய்தியில் பொய் என்ற தண்ணீரை கலக்க கூடாது என வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்த நிலையில் பெரியார் குறித்த ரஜினியின் பேச்சுக்கு தற்போது கடும் எதிர்ப்பு கிளம்பியது.

கோவை திராவிடர் விடுதலை கழகம் சார்பில் ரஜினி மீது வழக்குப்பதிவு செய்ய காவல் ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது நடிகர் ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்காவிட்டால் வருகின்ற ஜனவரி 23ல் (23.1.2020) காலை 10 மணிக்கு, தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கோவை ராமகிருஷ்ணன் தலைமையில் நடிகர் ரஜினிகாந்த் வீடு முற்றுகையிடபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Rajini should apologize for his controversial speech about Periyar

எப்போ ரிலீசானாலும் படம் ஓடும் என ஓவரா நம்பாதீங்க. – எஸ்விசேகர்

எப்போ ரிலீசானாலும் படம் ஓடும் என ஓவரா நம்பாதீங்க. – எஸ்விசேகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

S Ve Shekar slams Top heroes and their movie release datesஅமலாபால் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘அதோ அந்த பறவை போல’. ஆக்‌ஷன் அட்வெஞ்சர் திரில்லர் படமாக உருவாகி இருக்கும் இப்படத்தை ஜோன்ஸ் தயாரித்துள்ளார்.

அறிமுக இயக்குனர் கே.ஆர்.வினோத் இயக்க, அருண் கதை எழுதியுள்ளார். இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

இதில் தயாரிப்பாளர் ஜோன்ஸ், நடிகை அமலாபால், இயக்குனர் கே.ஆர்.வினோத் உள்ளிட்ட படக்குழுவினருடன் நடிகர், இயக்குனர், அரசியல் பிரமுகர் எஸ்.வி.சேகர், தயாரிப்பாளர் ஜான் மேக்ஸ், இயக்குனர் திருமலை ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

இவ்விழாவில் தயாரிப்பாளர் ஜோன்ஸ் பேசும்போது….

பல படங்களை ஜான் மேக்ஸ் உடன் இணைந்து தயாரித்துள்ளேன். மைனா படத்தில் இருந்து அமலாபால் எங்களுக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார். அதோ அந்த பறவை போல படத்தில் அவரின் அர்ப்பணிப்பு ரொம்ப உணர்வுப்பூர்வமானது.

இந்த விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் மனதார வரவேற்கிறேன். மிக வித்தியாசமான கதை. அமலாபாலிடம் இந்தக்கதையை சொன்னதும் ஓ.கே என்றார். கதைப் பிடித்ததால் இந்தப்படத்தை இயக்குநர் கே.ஆர்.வினோத் சிறப்பாக இயக்கி தந்துள்ளார்’ என்றார்.

எஸ்.வி.சேகர் பேசும்போது…

‘அதோ அந்த பறவை போல பாட்டு வரி தான் இப்படத்தின் தலைப்பு. நம்மிடம் இப்படியான படங்கள் வருவதற்கு இப்போது தான் வாய்ப்பு வந்துள்ளது. சினிமாவில் இரண்டு வகை. ஓடும் படம், ஓடாத படம் அவ்ளோ தான். சினிமாவில் ராமராஜன் பசுமாடு வைத்து பால் கறக்கும் படம் ஓடிவிட்டால் அதேபோல் பத்துப்படம் எடுப்பார்கள். ஏன் என்றால் இது வியாபாரம்.

நாங்கள் படம் எடுத்த காலத்தில் பத்து லட்சத்திலேயே படத்தை எடுத்து விடுவோம். நாம் சரியான பட்ஜெட்டில் படம் எடுக்க வேண்டும்.
இப்போது ஒரு நாளைக்கு நாற்பது லட்சம் ஆகிறது.

சினிமாவில் மட்டும் தான் உள்ளே வந்து நிறைய விஷயங்கள் தெரிந்துகொள்ள வேண்டி இருக்கிறது. முதலில் சினிமாவை தெரிந்துகொண்டு உள்ளே வரவேண்டும். இந்தப்படத்தில் பெரிய பிளஸ் அமலாபால்.

அவருக்கு எல்லா மொழிகளிலும் மார்க்கெட் இருக்கு. இந்த படத்தை ரொம்ப பிரமாதமாக எடுத்திருக்கிறார்கள். அமலாபாலின் தையரித்தை நான் பாராட்டுகிறேன். சினிமாவிற்கு சென்சார் தேவையே இல்லை என்பது என் கருத்து. நம்பிக்கை வேற ஓவர் நம்பிக்கை வேற.

சரியான நேரத்தில் படத்தை வெளியீடுங்கள். என் படம் எப்போது வெளியானாலும் ஓடும் என்று ஓவர் நம்பிக்கை வைக்காதீர்கள். அதனால், இப்படத்தை அப்படி சரியான நேரத்தில் வெளியீட்டு வெற்றி காண வாழ்த்துகிறேன்’ என்றார்.

இயக்குனர் கே.ஆர்.வினோத் பேசும்போது, ‘என்னோட குடும்பத்தினர், நண்பர்கள் இல்லாமல் எனக்கு இந்த மேடை அமைந்திருக்காது. என் உழைப்பை நம்பி வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளருக்கு நன்றி. மற்றும் என்னுடைய படக்குழுவினருக்கு நன்றி. எங்கள் படத்தில் அமலாபால் ஹீரோயின் இல்லை, ஹீரோ. அவரை அப்படித்தான் அழைத்து வருகிறேன். அமலாபாலுக்கு இந்தபடம் ரொம்ப சிறப்பா இருக்கும் என்று நம்புகிறோம். சண்டைக்காட்சிகள் எல்லாம் நாங்கள் முன்கூட்டியே திட்டமிட்டு அமலாபாலிடம் காட்டினோம்.

அதைப் பார்த்து பயிற்சி செய்து படத்திற்கு தயாரானார். அதை அப்படியே படப்பிடிப்பில் மிகச்சிறப்பாக செய்துவிட்டார். 60 அடி உயரமுள்ள மரத்தில் இருந்து இறங்குவது, சண்டை போடுவது என நடிப்பில் அமலாபால் அசத்தியுள்ளார். குறிப்பாக சேற்றுக்குள் இறங்கி மூச்சு விடாமல் நடிக்க வேண்டும் அதை நாங்கள் நினைத்து பார்க்க முடியாதளவிற்கு நடித்து கொடுத்தார். இந்த தைரியம் யாருக்கு வரும். எல்லாருக்கும் பிடிக்கும் வகையில் படம் சிறப்பாக வந்திருக்கிறது’ என்றார்.

S Ve Shekar slams Top heroes and their movie release dates

வினோத் & பிரியங்கா இணையும் ‘தி மாயன்’; ஆங்கிலத்திலும் வெளியாகிறது

வினோத் & பிரியங்கா இணையும் ‘தி மாயன்’; ஆங்கிலத்திலும் வெளியாகிறது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

GV Prakash and Adhik Ravichandran launched first look of English film The Mayanஇசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் மற்றும் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இணைந்து “தி மாயன்” ஆங்கில படத்தின் 1st லுக் ஐ வெளியிட்டுள்ளனர்.

இப்படம் தமிழிலும் ஆங்கிலத்திலும் நேரடியாக தயாரிக்கப்பட்டுள்ளது.

இதுவே இந்தியாவில் இருந்து எடுக்கப்படும் முதல் கமர்ஷியல் ஆங்கில படம். இதை தயாரித்து இயக்கியுள்ளார் ஜெ.ராஜேஷ் கண்ணா.

இவர் சன் தொலைக்காட்சியில் நடிகர் விஷாலை வைத்து நாம் ஒருவர் என்னும் நிகழ்ச்சியை இயக்கினார்.
வினோத் மோகன் இப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

கேங் லீடர் என்னும் தெலுங்கு படத்தில் நானிக்கு ஜோடியாகவும் மற்றும் டாக்டர் என்னும் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகவும் நடித்த பிரியங்கா மோகன் இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளனர்.

இதுவே அவருக்கு முதல் படமாகும்.

ஜி.வி பிரகாஷ் தமிழில் தயாரிக்கப்பட்ட மாயன் படத்தில் ஒரு பாடலை பாடவிருக்கிறார். சிம்பு மற்றும் அருண்ராஜா காமராஜுரும் ஒரு பாடலை பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தை பாக்ஸ் அண்ட் க்ரோவ் இந்தியா மற்றும் ஜி. வி.கே. எம் எழிபண்ட் பிட்சர் மலேஷியா இணைந்து தயாரித்துள்ளது. கணேஷ் மோகன சுந்தரம் இப்படத்தின் இணை தயாரிப்பாளர் ஆவர்.

GV Prakash and Adhik Ravichandran launched first look of English film The Mayan

தி மாயன்

‘தலைவி’ பட அரவிந்த்சாமியின் எம்ஜிஆர் லுக் வெளியானது

‘தலைவி’ பட அரவிந்த்சாமியின் எம்ஜிஆர் லுக் வெளியானது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

First look of Aravind Swamy as MGR in Thalaivi movieதமிழ்நாட்டின் தலைசிறந்த முதல்வராக விளங்கிய புரட்சி தலைவர் எம். ஜி. ஆர் அவர்களின் 103 வது பிறந்த நாளில் தலைவி படத்தில் எம். ஜி. ஆராக நடிக்கவுள்ள அரவிந்த்சாமியின் கதாபாத்திர ஃபர்ஸ்ட்லுக்கை படக்குழு இன்று அறிமுகப்படுத்தியுள்ளது.

தலைவர் எம். ஜி. ஆரின் பிறந்த நாளில் இந்த ஃபர்ஸ்ட்லுக்கை அறிமுகப்படுத்துவது தமிழ்நாட்டின் பொற்கால ஆட்சியை தந்த அவருக்கு செலுத்தும் இதயப்பூர்வமான அஞ்சலியாக இருக்குமென கருதுகிறது படக்குழு.

இயக்குநர் விஜய் கூறியதாவது. .

முன்னமே சொன்னதுபோல் “தலைவி” படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது என் வாழ்வில் எனக்கு கிடைத்த வரம் ஆகும். தமிழ்நாட்டினை இன்றைக்கு இருக்கும் இந்த உயர்நிலைக்கு மாற்றிய, இரண்டு சகாப்தங்களின் வாழ்வை நெருங்கி பார்த்து, அதனை திரைவடிவமாக்குவது எவருக்கும் கிடைத்திராத அரிய வாய்ப்பு.

இது ஒரு மிகப்பெரிய அனுபவம். இதிலுள்ள மிகப்பெரும் சவால் என்பது, இப்படத்திற்கு சரியான நடிகர்களை தேர்ந்தெடுப்பதே. நிஜத்தில் வாழ்ந்தவர்களின் தோற்றத்தை பிரதிபலிப்பதுடன், திரையில் அந்த ஆளுமையை மறுவுருவாக்கம் செய்வது மிக அவசியம் ஆகும்.

நடிகை கங்கனா ரனாவத்தை முதல்வர் புரட்சிதலைவி ஜெயலலிதா பாத்திரத்திற்கு தேர்வு செய்த பின், எம். ஜி. ஆரின் பாத்திரத்திற்கு பலரை கருத்தில் கொண்டு முயன்று பார்த்தோம்.

இறுதியாக அரவிந்த்சாமி மிகப்பொருத்தமானவர் என அவரை தேர்ந்தெடுத்தோம். இன்றும் மக்கள் மனங்களில் நீங்கா இடம் பிடித்து வாழ்ந்து கொண்டிருக்கும் தலைவர் எம். ஜி.ஆர். அவரை திரையில் கொண்டுவருவது எளிதான செயல் அல்ல.

அவரைப் பற்றிய அத்தனை தகவல்களையும் திரட்டி அரவிந்த்சாமியை அதேவிதமான லுக்கிற்கு மாற்றினோம். எங்களை விட அவர் இந்தக் கதாப்பாத்திரத்தின் மீது அதிக காதல் கொண்டு தன்னை பல விதங்களில் தயார் செய்து கொண்டார்.

திரையில் அந்த ஆளுமைக்கு நியாயம் செய்யும்படியான உழைப்பை நாங்கள் அனைவரும் தருவோம். பாரத ரத்னா வாங்கி, இந்தியாவின் மிகப்பெரும் தலைவராக விளங்கிய எம்.ஜி. ஆரை திரையில் வடிப்பது எங்கள் அனைவரின் பாக்கியம் என்றார்.

Vibri Motion Pictures நிறுவனம் Karma Media Entertainment நிறுவனத்துடன் இணைந்து “தலைவி” படத்தை தயாரிக்கிறார்கள். 2020 ஜூன் 26 அன்று படம் திரைக்கு வரவுள்ளது.

First look of Aravind Swamy as MGR in Thalaivi movie

பிரபாஸ் & பூஜா ஹெக்டே இணையும் புதிய படம் தொடங்கியது

பிரபாஸ் & பூஜா ஹெக்டே இணையும் புதிய படம் தொடங்கியது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Much awaited Rebel Star Prabhass movie kick startsஇந்தியா முழுதும் திரும்பிப் பார்த்த வெற்றியை தந்த “பாகுபலி”, “சஹோ” படங்களுக்கு பிறகு நடிகர் பிரபாஸ் தன் அடுத்த படத்தில் நடிக்கவுள்ளார்.

கோபி கிருஷ்ணா மூவிஸ் தயாரிப்பில் தலைப்பிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரி 17 முதல் துவங்கவுள்ளது.

“ரிபெல் ஸ்டார்” பிரபாஸின் ரசிகர்கள் இச்செய்தியால் பெரும் மகிழ்ச்சியில் திளைத்து வருகிறார்கள்.

கோபி கிருஷ்ணா மூவிஸ் தெலுங்கு திரையுலகின் மாரியாதைக்குரிய, மிகப்பெரும் நிறுவனம் ஆகும். பழபெரும் நடிகர் ஶ்ரீ கிருஷ்ணம் ராஜு இப்படத்தினை தனது மேற்பார்வையில் வழங்குகிறார்.

மிகப்பெரும் பட்ஜெட்டில் இந்தியா முழுமைக்குமான படைப்பாக, தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் இப்படம் தயாராகவுள்ளது. மேலும் மற்ற மொழிகளில் டப்பிங் செய்து வெளியிடப்படவுள்ளது.

கோபி கிருஷ்ணா மூவிஸ் நிறுவனம் UV Creations நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறார்கள். ஸ்டைலீஷ் ஆக்‌ஷன் திரில்லரான “ஜில்” படம் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ராதா கிருஷ்ணா இப்படத்தை இயக்குகிறார்.

இப்படத்திற்காக பிரமாண்டமான அரங்கம் அன்னபூர்னா ஸ்டுடியோவில் அமைக்கப்பட்டு வருகிறது. இப்படத்தில் நடிகர் பிரபாஸ் நாயகனாக நடிக்க பூஜா ஹெக்டே நாயகியாக நடிக்கிறார்.

தொழில் நுட்ப குழு விபரம்

எழுத்து, இயக்கம் – ராதா கிருஷ்ணா

ஒளிப்பதிவு – மனோஜ் பரமஹம்ஷா

படத்தொகுப்பு – ஶ்ரீகர் பிரசாத்

தயாரிப்பு வடிவமைப்பு – ரவீந்த்ரா

வழங்குபவர்கள் – ஶ்ரீ கிருஷ்ணம் ராஜு அவர்களின் கோபி கிருஷ்ணா மூவிஸ்.

தயாரிப்பு – வம்சி, பிரமோத் மற்றும் UV Creations.

Much awaited Rebel Star Prabhass movie kick starts

More Articles
Follows