தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
விஜய் தேவரகொண்டா நடிப்பில் பூரி ஜெகந்நாத் இயக்கிய படம் ‘லைகர்’.
இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்புக்காக லைகர் பட குழுவினர் சென்னை வந்திருந்தனர்.
ரிலீஸ் ஆகும் நாளில் ‘லைகர்’ படத்திற்கு பிரத்யேக காட்சியும் போடப்படும் என அறிவித்திருந்தனர்.
ஆனால் ‘லைகர்’ படத்திற்கு முதல் நாளில் வந்த கடுமையான விமர்சனங்களால் பத்திரிகையாளர்களுக்கான காட்சி (PRESS SHOW) நிறுத்தப்பட்டது
எதிர்மறையான விமர்சனங்களால் படத்தின் வசூலும் பெருமளவு பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில் தோல்வி குறித்து உருக்கமாக பேசியுள்ளார் பட இயக்குநர் பூரி ஜெகந்நாத்.
அதில்.. “வெற்றியின்போது மேதையாக உணர்வோம். ஆனால் தோல்வி நம்மை ஒரு முட்டாளைப்போல வைத்துவிடும்.
நாமும் நம் படமும் வெற்றி பெறும்போது நம்மை நம்பியவர்கள், தோல்வியடையும் போது எதிர்மறையாக திரும்பிவிடுவார்கள்.
நம் ஙாழ்க்கையில் ஒருவரை இழக்க நேரிடலாம், செல்வம் விட்டு போகலாம்.் அதிலிருந்து மீண்டு வர காலம் ஒரு மாதத்திற்கு மேல் இருக்கக் கூடாது.
நாம் அடுத்த விஷயங்களுக்கு கடந்து செல்ல வேண்டும்.
மூன்று வருடங்கள் லைகருக்கு வேலை செய்தேன். அருமையான செட்களை உருவாக்கி, மைக் டைசனுடன் பணியாற்றினேன்.
அது தோல்வியடைந்தது என்பதற்காக 3 ஆண்டுகளுக்கு அழ முடியாது.
விரைவில் உங்கள் அனைவருக்கும் பிடித்த ஒரு படத்தை உருவாக்குவேன். நீங்கள் மகிழ்வீர்கள். சிறந்த சினிமா வரும்” என்றார்.
Director Puri Jagannadh reaction for Liger movie flop