விஜய் ஆண்டனியுடன் 3 ஹீரோயின்ஸ் இணையும் ‘ரத்தம்’ பட டப்பிங் அப்டேட்ஸ்

விஜய் ஆண்டனியுடன் 3 ஹீரோயின்ஸ் இணையும் ‘ரத்தம்’ பட டப்பிங் அப்டேட்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் ஆண்டனியின் ‘ரத்தம்’ படத்தின் முழு பணிகளும் கச்சிதமான ஒழுக்கத்துடன் நடந்தேறி வருகிறது.

Infiniti Film Ventures நிறுவனத்தின் திறமையான திட்டமிடல் பணியில் காட்டும் தீவிரம், ஆகியவற்றால் தயாரிப்பு சரியான வேகத்தில் நடந்து வருகிறது.

சமீபத்தில் தான், இப்படத்தின் இந்திய ஷெட்யூல் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டனர். வெளிநாட்டு படப்பிடிப்பை படக்குழு விரைவில் தொடங்கவுள்ள நிலையில், படத்தின் டப்பிங் பணிகள் இன்று (ஏப்ரல் 23, 2022) காலை சென்னையில் எளிமையான பூஜையுடன் இனிதே தொடங்கியது.

“ரத்தம்” படத்தை இயக்குநர் CS அமுதன் இயக்குகிறார் மற்றும் கமல் போஹ்ரா, லலிதா தனஞ்செயன், B. பிரதீப் மற்றும் பங்கஜ் போஹ்ரா ஆகியோர் Infiniti Film Ventures சார்பில் இப்படத்தை தயாரிக்கின்றனர்.

Infiniti Film Ventures உறுதி தந்தபடி, முற்றிலும் புதிய களத்தில் பரபர திருப்பங்களுடன் கூடிய, அனைவருக்கும் பிடிக்கும்படியான ஒரு மாஸ் பொழுதுபோக்கு படமாக உருவாகிறது.

“ரத்தம்” படத்தில் மஹிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா, ரம்யா நம்பீசன் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.

சுசீந்திரன் – இமான் கூட்டணியில் இணைந்த விஜய் ஆண்டனி

மேலும் ஸ்டாண்ட்-அப் காமெடியன் ஜெகன்,  நிழல்கள் ரவி, ஜான் மகேந்திரன், கலை ராணி, மகேஷ் (Family man புகழ்), OAK சுந்தர், மீஷா கோஷல் மற்றும் அமேயா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

கண்ணன் (இசை), கோபி அமர்நாத் (ஒளிப்பதிவு), சுரேஷ் (எடிட்டிங்), திலிப் சுப்பராயன் (சண்டைப்பயிற்சி) ஆகியோர் தொழில்நுட்பக் கலைஞர்களாக பணியாற்றுகின்றனர். தவிர, தெருக்குரல் அறிவு “ரத்தம்” திரைப்படத்தில் ஒரு தீம் பாடலை எழுதியதோடு, பாடலை பாடியுமுள்ளார்.

நடிகர் விஜய் ஆண்டனி இதே Infiniti Film Ventures தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து, ‘கொலை’ மற்றும் ‘மழை பிடிக்காத மனிதன்’ என்ற மேலும் இரண்டு படங்களில் பணியாற்றி வருகின்றார். அப்படங்கள் தயாரிப்பின் வெவ்வேறு கட்டங்களில் உள்ளது.

Vijay Antony starrer Raththam movie shoot updates

‘டேக் டைவர்ஷன்’ திரைப்படத்தை பாராட்டிய ‘கேஜிஎஃப்’ இயக்குநர்

‘டேக் டைவர்ஷன்’ திரைப்படத்தை பாராட்டிய ‘கேஜிஎஃப்’ இயக்குநர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வருகிற மே மாதம் 6 முதல் உலகெங்கும் வெளியாகிறது ‘டேக் டைவர்ஷன் ‘திரைப்படம்.

இப்படத்தை இயக்கி இருக்கும் சிவானி செந்தில் ஏற்கெனவே’கார்கில்’ என்ற படத்தை 2018-ல் இயக்கி இருந்தார் .அந்தப் படம் தமிழில் ஒரே ஒரு கதாபாத்திரம் தோன்றும் படமாக ஊடகங்களில் பேசப்பட்டது.

நாயகன் காரில் செல்கிற பயணம் சார்ந்த காட்சிகள் தான் அந்தப் படத்தின் கதையாக இருக்கும்.சிவானி பிலிம்ஸ் சார்பில் சுபா செந்தில் நண்பர்களுடன் இணைந்து தயாரித்துள்ளார்.

டேக் டைவர்ஷன் படத்தின் ட்ரெய்லர் மற்றும் சில காட்சிகளைப் பார்த்த கேஜிஎப் இயக்குநர் பிரசாந்த் நீல் படக்குழுவினரை பாராட்டியும் வாழ்த்தியும் சில வரிகள் எழுதிக் கொடுத்துள்ளார். இதனால் படக்குழுவினர் மிகவும் உற்சாகத்தில் உள்ளனர்.

‘டேக் டைவர்ஷன் ‘படத்தில் முக்கியமான கதாபாத்திரம் ஏற்று இருக்கும் நடிகர் சிவா என்கிற நடிகர் சிவக்குமார் ஏற்கெனவே சில படங்களில் சின்ன சின்ன பாத்திரங்களில் தோன்றியவர்.

வழக்கம்போல கேஜிஎஃப் படக்குழுவினரிடம் வாய்ப்பு கேட்டுச் சென்றுள்ளார்.

தேவா பாடிய ‘மஸ்தானா மாஸ் மைனரு…’ சூப்பரூ..; இயக்குனரை கட்டிப்பிடித்து பாராட்டிய ராம்ஸ் & ஜான் விஜய்

கேஜிஎஃப் படத்தில் நிறைய தமிழ் நடிகர்களும், தமிழ் பேசும் தொழில்நுட்பக் கலைஞர்களும் பணியாற்ற வேண்டியிருந்தது. இந்நிலையில் சிவாவைப் பிடித்துப்போய் அவருக்கு கேஜிஎப் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிப்பு வாய்ப்பைத் தந்ததுடன் உதவி இயக்குநராகவும் அவரை அருகில் வைத்துக் கொண்டு விட்டார் இயக்குநர் பிரசாந்த் நீல். இப்படி கேஜி எஃப் படத்தின் இரண்டாம் பாகத்தில் இரண்டு ஆண்டுகாலம், படம் ஆரம்பித்ததில் இருந்து முடியும் வரையும் பணியாற்றியவர்தான் நடிகர் சிவா.

நடிகர் சிவா கேஜிஎஃப் படத்தில் பணியாற்றியது பற்றிக் கூறும்போது…

“ஒரு பெரிய பிரமாண்டமான படத்தில் பணியாற்றியது 20 படங்களில் பணியாற்றிய அனுபவத்தையும் மகிழ்ச்சியையும் தந்தது டேக் டைவர்ஷன் ட்ரைலரை பார்த்து என்னை பாராட்டினார்.

குறிப்பாக படத்தின் டேக் டைவர்ஷன் ட்ரெய்லர் 1 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து உள்ளது என்று கூறினார்.

இப்படத்தில்’பேட்ட’, ‘சதுரங்கவேட்டை’ படங்களில் வில்லனாக நடித்த ராம்ஸ் என்கிற ராமச்சந்திரன் முதன்மை நாயகனாக நடித்துள்ளார்.

பல படங்களில் கையில் கத்தி போன்ற ஆயுதங்களுடன் ரவுடியாகவும் முரட்டுத்தனமாகவும் வில்லத்தனமாகவும் நடித்துள்ளவர் .இப்படத்தில் கையில் சிப்ஸ் பாக்கெட்டுடன் காதல் பார்வையுடன் முற்றிலும் மாறுபட்டு முழு கதாநாயகனாகத் தோன்றுகிறார். நாயகியாக பாடினி குமாரும் இரண்டாம் கதாநாயகியாக காயத்ரியும் நடித்துள்ளார்கள்.

ஜான் விஜய் தான் வில்லன். விஜய் டிவி புகழ் ஜார்ஜ் விஜய், பாலா ஜெ சந்திரன், சீனிவாசன் அருணாச்சலம் ஆகியோரும் நடித்துள்ளனர்.

இப்படத்திற்காக தேவா பாடிய ‘மஸ்தானா மாஸ் மைனரு ‘என்கிற கானா பாடல் இணைய உலகில் லட்சக்கணக்கானவர்களின் பார்வைகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளது.

அந்தப் பாடலுக்குப் பிக்பாஸ் புகழ் நடன இயக்குநர் சாண்டி நடனம் அமைத்துள்ளார். அதே போல ‘யாரும் எனக்கில்லை ஏனடி ? ‘ என்கிற காதல் வலியைப் பற்றிப் பேசும் பாடலும் பெரிய வெற்றி பெற்றுள்ளது.

படத்திற்கு இசையமைத்துள்ளவர் ஜோஸ் பிராங்க்ளின். இவர் ஏற்கெனவே ‘நெடுநல்வாடை’, ‘என் பெயர் ஆனந்தன்’ படங்களின் மூலம் நல்லதொரு அறிமுகம் பெற்றிருப்பவர்.

இப்படத்துக்கு ஒளிப்பதிவு ஈஸ்வரன் தங்கவேல். இவர் ஏற்கெனவே நான்கு படங்களில் பணியாற்றியுள்ளார். படத்தொகுப்பு – விது ஜீவா.

ஆர்வமும் திறமையும் கொண்ட இளைஞர்களின் கூட்டணியில் இப்படம் உருவாகியுள்ளது. முழுக்க முழுக்க அனைவரையும் கவரும் முழுநீள எண்டர்டெய்னர்தான் இப்படம்.

‘டேக் டைவர்ஷன்’ படம் மே 6 முதல் உலகமெங்கும் வெள்ளித்திரையில் வெளியாகவுள்ளது.

KGF director wishes to take diversion team

விமல் மீது கடும் நடவடிக்கை எடுக்கனும்.; கமிஷனர் அலுவலகத்தில் சிங்காரவேலன் புகார் மனு

விமல் மீது கடும் நடவடிக்கை எடுக்கனும்.; கமிஷனர் அலுவலகத்தில் சிங்காரவேலன் புகார் மனு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தன் மீது பொய் புகார் கொடுத்த நடிகர் விமல் மீது நடவடிக்கை எடுக்ககோரியும், தனக்கு விமல் தரவேண்டிய பணத்தை பெற்று தரகோரியும் இன்று (22-04-22) காலை 11 மணிக்கு சென்னை கமிஷனர் அலுவலகத்தில் தயாரிப்பாளர் சிங்காரவேலன் புகார் மனு அளித்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து புகார் மனு நகலை அளித்தார்.

அதில்,

பொருள் : ரூபாய் 1.5 கோடியை திருப்பி தராமல் ஏமாற்றி வரும் நடிகர் விமல் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக
மதிப்பிற்குரிய ஐயா அவர்களுக்கு,
வணக்கம்.

” மெரினா பிக்சர்ஸ் ” என்ற பெயரில் திரைப்பட விநியோக நிறுவனம் துவங்கி, நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ” லிங்கா “, விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான ” புறம்போக்கு ” உள்ளிட்ட சில படங்களை விநியோகம் செய்துள்ளேன். இந்நிலையில் திரைப்பட விநியோகம் குறித்து சில விளக்கங்களை பெறுவதற்காக 2016 ஆம் ஆண்டு நடிகர் விமல் என்னை சந்தித்து பேசினார். அப்போது அவருடன் நெருக்கமான நட்பு உருவானது.

அந்த சமயத்தில் அவரது நடிப்பில் வெளியான படங்களான ” நேற்று இன்று “, “ இஷ்டம்” , “ புலிவால் ” , “ ஜன்னல் ஓரம் ” ஒரு ஊருல இரண்டு ராஜா ” ” காவல் ” அஞ்சல ” மாப்பிளை சிங்கம் ” ஆகிய படங்கள் தொடர்ச்சியாக தோல்வியடைந்து தயாரிப்பாளர்களுக்கு பெரும் நஷ்டத்தை உண்டு பண்ணியதாலும், அவருக்கு மார்க்கெட் இல்லாததாலும் விமலை வைத்து படம் தயாரிக்க திரைப்பட தயாரிப்பாளர்கள் யாரும் முன்வராததாலும் மிகுந்த மனஉளைச்சலில் இருந்த அவர் திருப்பூரை சேர்ந்த கணேசன் என்ற தயாரிப்பாளரால் துவக்கி பாதியில் கைவிடப்பட்ட ” மன்னர் வகையறா ” என்ற படத்தை மேற்கொண்டு தயாரிக்க இருப்பதாகவும், அதற்கு பண உதவி தேவை என்றும் கேட்டு கொண்டார் . நானும் என் நண்பர் கோபியை அறிமுகம் செய்து வைத்து ரூ. 5 கோடி பணம் கடன் வாங்கி கொடுத்தேன்.

இந்நிலையில் 30.08.2017 ஆம் ஆண்டு சாலிகிராமத்திலுள்ள சிகரம் மினி ஹாலில் நடந்த நடிகர் விமலின் பிறந்தநாள் நிகழ்ச்சிக்கு என்னை விருந்தினராக அழைத்திருந்தார்.

விமலின் ‘குலசாமி’-க்கு வசனம் எழுதி கொடுத்த விஜய்சேதுபதி

அந்த நிகழ்ச்சியில் ” களவாணி – 2 ” என்ற படத்தை தான் தயாரிக்க இருப்பதாக மேடையில் அறிவித்தார். அப்போது களவாணி படத்தின் இயக்குநர் சற்குணமும் உடன் இருந்தார்.

அதன் பிறகு 2017 ஆம் ஆண்டு அக்டோபர் 13 ஆம் தேதி என்னை சந்தித்த நடிகர் விமல் ” களவாணி – 2 ” படத்தின் ஒட்டு மொத்த விநியோக உரிமையை வாங்கி கொள்ளுமாறும், குறுகிய காலத்தில் படத்தை முடித்து தந்து விடுவதாகவும் கூறியதையடுத்து அக்டோபர் 14 ஆம் தேதி அவருடன் ஒப்பந்தம் செய்து கொண்டு ரூ. 1.5 கோடியை முன்பணமாக கொடுத்தேன்.

ஆனால் என்னிடம் வாங்கிய பணத்தை வைத்து ” களவாணி – 2 ” படத்தின் தயாரிப்பு பணிகளை துவங்க வில்லை.

ஒரு கட்டத்தில் ” களவாணி – 2 ” படத்தை இயக்குநர் சற்குணம் தயாரிக்க இருப்பதாகவும், என்னிடம் முன்பணமாக பெற்ற ரூ. 1.5 கோடியை பட வெளியீட்டிற்கு முன்பு, தனக்கு வழங்கப்பட இருக்கும் சம்பளத்தின் மூலம் கொடுத்து விடுவதாக உறுதி கூறியதை நம்பி நானும் அமைதி காத்தேன்.

‘ களவாணி – 2 ” படத்தின் வெளியீட்டு தேதி உறுதியான நிலையில் நடிகர் விமலிடமிருந்து எனக்கு வர வேண்டிய ரூ. 1.5 கோடி பணம் வராததால், என் அலுவலக ஊழியரும், தயாரிப்பு மேற்பார்வையாளருமான கமரன் மூலம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து ” களவாணி -2 ” பட வெளியீட்டிற்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தடை உத்தரவு (வழக்கு எண் : C.S.No. 250/ 2019) பெற்றேன்.

இதனால் படத்தின் தயாரிப்பாளர் சற்குணம் என் மீது சென்னை பெருநகர காவல் ஆணையரிடம் புகார் மனு கொடுத்தார். அந்த புகாரை விசாரித்த அதிகாரிகளிடம் நான் வைத்திருந்த ஆவணங்களை காட்டி, களவாணி 2 படத்தின் காப்பி ரைட் உரிமை என்னிடம் உள்ளது என்பதை விளக்கிய போது, அதன் உண்மைத் தன்மையை புரிந்து கொண்ட காவல் அதிகாரிகள், நடிகர் விமலை உடனடியாக விசாரணைக்கு வரும்படி அழைத்தனர்.

உடனடியாக ஒரு அரசியல் பிரபலத்தை தொடர்பு கொண்ட நடிகர் விமல், எனக்கு தர வேண்டிய பணத்தை செட்டில் செய்து விடுவதாகவும், பட வெளியீட்டிற்கு உதவும் படியும் கேட்டதால் 13.05.2019 அன்று சமரசத்திற்கு ஒப்புக்கொண்டு அதற்கான ஒப்பந்தத்திலும் இருவரும் கையெழுத்திட்டோம்.

இந்த செய்தி அன்றைய நாளிதழ்களில் புகைப்படத்துடன் வெளியானது.

அதன் பிறகு இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையிலும் எனக்கு தர வேண்டிய பணத்தை நடிகர் விமல் தராததால் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் செய்து, புகாரின் அடிப்படையில் நிர்வாகிகள் நடத்திய விசாரணையின் அடிப்படையில் எனக்கு சேர வேண்டிய ரூ. 1.5 கோடியை உரிய வங்கிவட்டியுடன் திருப்பித் தந்து விட வேண்டும் என்று தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் கூறியதன் அடிப்படையில் ரூ.2.70 கோடிக்கான காசோலையை (காசோலை எண் :307204 ) நடிகர் விமல் என்னிடம் வழங்கினார்.

அதனை வங்கியில் செலுத்திய போது அந்த காசோலை உரிய பணமின்றி பவுன்ஸ் ஆகிவிட்டது. இதனால் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடிகர் விமல் மீது காசோலை மோசடி வழக்கு தொடரப்பட்டு, வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்த வழக்கிலிருந்து தப்பிப்பதற்காகவும், பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றுவதற்காகவும், என் நண்பர் கோபி என்பவர் நடிகர் விமல் மீது கொடுத்துள்ள ரூ. 5 கோடி மோசடி புகாரை திசை திருப்புவதற்காகவும் நடிகர் விமலை நான் ஏமாற்றிவிட்டதாக பொய்யான புகாரை தங்களிடம் கொடுத்ததோடு மட்டுமில்லாமல், தவறான, அவதூறான கருத்துக்களை ஊடகங்களில் பரப்பி வருகிறார்.

எனவே ஐயா அவர்கள் நடிகர் விமல் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன், எனக்கு சேர வேண்டிய தொகையை பெற்று தரும்படி தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்.

நன்றி

இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

Producer Singaravelan Complaint against Actor Vimal at commissioner office

ஆதிராஜன் இயக்கத்தில் ஹரிப்பிரியா நடிக்கும் த்ரில்லர் படம் ‘மாஸ்க்’

ஆதிராஜன் இயக்கத்தில் ஹரிப்பிரியா நடிக்கும் த்ரில்லர் படம் ‘மாஸ்க்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிலந்தி, ரணதந்த்ரா (கன்னடம்), விரைவில் திரைக்கு வர இருக்கும் ‘அருவா சண்ட’ , இளையராஜா இசையில் ‘நினைவெல்லாம் நீயடா’, படங்களை இயக்கியிருக்கும் ஆதிராஜன் தன்னுடைய கோல்டன் மேஜிக் க்ரியேட்டர்ஸ் பட நிறுவனத்தின் மூலம் எழுதி, தயாரித்து, இயக்கியிருக்கும் படம் ‘மாஸ்க்’.

சமீபத்தில் மறைந்த கன்னட சூப்பர்ஸ்டார் புனித் ராஜ்குமாரின் மைத்துனரும் சிறுவயதிலேயே தேசிய விருது பெற்றவருமான விஜய ராகவேந்திரா இப்படத்தின் கதாநாயகனாக நடிக்கிறார்.

தற்போது சசிகுமாருடன் “காமன் மேன்” படத்தில் நாயகியாக நடித்து வருபவரும், தெலுங்கு கன்னட திரையுலகின் முன்னணி நடிகையுமான ஹரிப்பிரியா கதாநாயகியாக நடிக்கிறார்.

மாஸ்க்கில் நடிப்பிலும், கவர்ச்சியிலும் வேறுவிதமான ஹரிப்ரியாவைப் பார்க்கலாம்.

தென்னிந்திய மொழிப் படங்களில் பிரபலமான மேக்னா நாயுடு ஒரு பாடலுக்கு அசத்தலாக நடனமாடியிருக்கிறார்.

மற்றும் ஐஸ்வர்யா, விஷால் ஹெக்டே, மது உட்பட பலர் நடித்திருக்கின்றனர்.

பல வெற்றிப் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்திருக்கும் ராஜேஷ் கே நாராயன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

‘சிலந்தி’ மற்றும் சில தெலுங்கு படங்களுக்கு இசையமைத்த எம் கார்த்திக் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.

குறிப்பாக, பின்னணி இசையில் ஒரு மாயாஜாலத்தையே நிகழ்த்தியுள்ளார் எனலாம்.

இந்தியா முழுவதும் வசூலை வாரிக் குவித்த “கே ஜி எஃப்” படத்தின் எடிட்டர் ஸ்ரீகாந்த் கவுடா இப்படத்தின் எடிட்டிங் பணிகளை மேற்கொள்கிறார்.

ஐ. ராதிகா, கலைக்குமார் நடனக் காட்சிகளை அமைக்க, மாஸ் மாதா சண்டைக் காட்சிகளை வடிவமைத்திருக்கிறார்.

சசிகுமாருக்கு ஜோடியாக்க மீண்டும் ஹரிப்பிரியாவை தமிழுக்கு அழைக்கும் சத்யசிவா

மோகன்லாலின் “மரைக்காயர்” உட்பட ஏராளமான படங்களுக்கு ஒலிக்கலவை செய்த எம் ஆர் ராஜா கிருஷ்ணன் இப்படத்தின் மிக்சிங் பணிகளைக் கவனிக்கிறார்.

பாடல்களை சினேகன், ஆதிராஜன் எழுதியுள்ளனர்.

இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

“மாஸ்க்” படத்தின் கதைக்களம் பற்றி இயக்குநர் ஆதிராஜனிடம் கேட்டபோது, “சென்னை, பெங்களூர், கோயம்புத்தூர், மதுரை போன்ற இடங்களில் ஒரே மாதிரியாக மர்மமான முறையில் இளம் பெண்கள் கொல்லப்படுகிறார்கள்.

அது கொலையா?!தற்கொலையா?! இல்லை அமானுஷ்ய சக்தியின் ஆட்டமா? என்று முடிவு செய்ய முடியாமல் காவல்துறை தடுமாறுகிறது.

தீவிரமாக விசாரிக்கும்போது அதன் பின்னணியில் இருக்கும் காரணம் விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது.

பெண்களுக்கு தரப்படும் அதீத சுதந்திரம் அவர்களை எப்படிப்பட்ட சிக்கலில் மாட்டி விடுகிறது என்ற கருத்தை மையமாக வைத்து விறுவிறுப்பாக திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

கிளைமாக்ஸ் யூகிக்க முடியாத கோணத்தில் நிறைவுறும்..

இப்படத்தில் ஆறு டிஜிட்டல் கேமராக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது.

படப்பிடிப்பு சென்னை, பெங்களூர், மைசூர், கோவா உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது.

த்ரில்லர் பட ரசிகர்களுக்கு தீனி போடும் படமாக உருவாகியிருக்கிறது “மாஸ்க்” என்றார் ஆதிராஜன்.

Director Adhi Rajan’s next thriller film is titled Mask

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் விருது பெற்று உரையாற்றிய ராதிகா சரத்குமார்

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் விருது பெற்று உரையாற்றிய ராதிகா சரத்குமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

திரைத்துறை, தொலைக்காட்சி உள்ளிட்டவற்றில் பல்லாண்டுகளாக திறம்பட செயலாற்றி வரும் நடிகையும் ரடான் மீடியாவொர்க்ஸின் நிர்வாக இயக்குநருமான ராதிகா சரத்குமார் தனது சாதனைகளுக்காக இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் விருது பெற்றுள்ளார்.

தமிழ் ஸ்டடீஸ் யூகே எனும் அமைப்பின் சார்பாக இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர் மரியா மில்லர் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் உலகெங்கும் பல்வேறு துறைகளில் சாதித்த பெண்கள் கவுரவிக்கப்பட்டனர்.

அட்ஜஸ்ட்மெண்ட்டுக்கு அப்புறம் கம்ப்ளைன்ட் பண்ண கூடாது; வரலட்சுமிக்கு ராதிகா ஆதரவு

இந்த உயரிய விருதிற்காக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் ராதிகாவும் ஒருவர். இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் விருது பெற்ற கையோடு, ராதிகா அங்கு உரையாற்றியும் இருக்கிறார்.

இது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளா ராதிகா சரத்குமார்…

“இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் விருது பெற்றது மிகுந்த மகிழ்ச்சியும் பெருமையும் நிரம்பிய தருணம்.

இவ்விருதிற்கு என்னை தேர்ந்தெடுத்த தேர்வுக்குழுவினருக்கும், இத்தனை ஆண்டு காலம் எனக்கு ஆதரவளித்த திரை மற்றும் தொலைக்காட்சித் துறையினருக்கும், குடும்பத்தினருக்கும் மிக்க நன்றி,” என்று கூறியுள்ளார்.

Radikaa Sarathkumar receives award for her achievements in the UK Parliament

கைக்குழந்தையுடன் ‘டாடா’.; கவின் உடன் கைகோர்த்த ‘பீஸ்ட்’ பட நடிகை

கைக்குழந்தையுடன் ‘டாடா’.; கவின் உடன் கைகோர்த்த ‘பீஸ்ட்’ பட நடிகை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘நட்புனா என்னானு தெரியுமா’ & ‘லிஃப்ட்’ படங்களின் மூலம் பெரிய திரை ரசிகர்களையும் கவர்ந்தவர் நடிகர் கவின்.

இவரின் அடுத்த படத்திற்கு ‘டாடா’ என டைட்டில் வைத்துள்ளனர்.

இப்படத்தை அறிமுக இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்க, ஒலிம்பியா மூவிஸ் சார்பில் எஸ்.அம்பேத்குமார் தயாரிக்கிறார்.

எழில் அரசு ஒளிப்பதிவு செய்ய, ஜென் மார்ட்டின் இசையமைக்கிறார்.

‘ஆகாஷ்வாணி’… செய்திகள் வாசிப்பது FILMISTREET..: கவின் ரசிகர்களுக்கு ‘ஆஹா’ செய்தி

இதில் கவினுக்கு ஜோடியாக பீஸ்ட் பட நடிகை அபர்ணா தாஸ் நடிக்கிறார்.

‘முதல் நீ முடிவும் நீ’ புகழ் ஹரிஷ் மற்றும் ‘வாழ்’ புகழ் பிரதீப் ஆண்டனி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் பா.ரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

நடிகர் கவின் ட்விட்டரில் பகிர்ந்து, ”தந்தை சொல் மிக்க மந்திரமில்லை” என குறிப்பிட்டுள்ளார்.

இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரில் கைக் குழந்தையுடன் கவின் இருக்கிறார்.

Kavin and Aparna Das joins for Dada

More Articles
Follows