விஷால் பர்த் டே : காப்பக குழந்தைகளுடன் உணவருந்திய விஷால்.; ‘வீரமே வாகை சூடும்’ பர்ஸ்ட் லுக் ரிலீஸ்

விஷால் பர்த் டே : காப்பக குழந்தைகளுடன் உணவருந்திய விஷால்.; ‘வீரமே வாகை சூடும்’ பர்ஸ்ட் லுக் ரிலீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஷால் & ஆர்யா இணைந்து நடித்து வரும் படம் ‘எனிமி’.

இந்த படத்தைத் தொடர்ந்து, அறிமுக இயக்குநர் து.ப. சரவணன் இயக்கத்தில் விஷால் நடித்து வருகிறார்.

விஷால் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இதில் நாயகியாக டிம்பிள் ஹயாத்தி நடிக்க, வில்லனாக மலையாள நடிகர் பாபுராஜ் நடிக்கிறார்.

தற்காலிகமாக ‘விஷால் 31’ எனப் பெயரிட்டுள்ளனர்.

இன்று ஆகஸ்ட் 29 விஷால் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என நடிகர் விஷால் தெரிவித்து இருந்தார்.

அதன்படி ’வீரமே வாகை சூடும்’ என அப்படத்திற்கு பெயரிட்டு போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

இந்த நிலையில் விஷால் தன் 44வது பிறந்த நாளையொட்டி கீழ்பாக்கத்தில் உள்ள மெர்சி ஆசிரமம் & சென்னை மாநகராட்சி நகர்ப்புற காப்பகத்தில் உள்ள குழந்தைகள், முதியவர்களுக்கு பிரியாணி வழங்கினார். அவர்களுடனே அமர்ந்து பிரியாணி சாப்பிட்டார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசும் போது.. “ஒரு ரசிகனாக வடிவேல் மீண்டும் நடிக்க வருவதை வரவேற்பதாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

Veerame Vaagai Soodum first look released Vishal Birthday treat to his fans

Vishal 31
Vishal 31
தன் பிறந்த நாளில் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விஷால்

தன் பிறந்த நாளில் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஷால் & ஆர்யா இணைந்து நடித்து வரும் படம் ‘எனிமி’.

இந்த படத்தைத் தொடர்ந்து, அறிமுக இயக்குநர் து.ப. சரவணன் இயக்கத்தில் விஷால் நடித்துவருகிறார்.

விஷால் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இதில் நாயகியாக டிம்பிள் ஹயாத்தி நடிக்க, வில்லனாக மலையாள நடிகர் பாபுராஜ் நடிக்கிறார்.

தற்காலிகமாக ‘விஷால் 31’ எனப் பெயரிட்டுள்ளனர்.

இந்த நிலையில் நாளை ஆகஸ்ட் 29 விஷால் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகவுள்ளதாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

இந்த படத்திற்கான சண்டைக்காட்சி படப்பிடிப்பின் போது விஷாலுக்கு முதுகில் பலத்த காயம் ஏற்பட்டது.

எனவே ஃபிசியோதெரபி சிகிச்சை எடுத்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Vishal 31 first look and title release tomorrow

ரகுராமின் பேரன்கள் நடிக்க ‘டேக் இட் ஈசி’ படம் மூலம் ஹாலிவுட்டில் இயக்குநராக சுஜா.

ரகுராமின் பேரன்கள் நடிக்க ‘டேக் இட் ஈசி’ படம் மூலம் ஹாலிவுட்டில் இயக்குநராக சுஜா.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல நடன இயக்குநர்கள் ரகுராம் மற்றும் கிரிஜா ரகுராமின் மகள் சுஜா ரகுராம் மனோஜ், தனது தந்தையிடம் நடனம் மற்றும் இயக்குநர் பயிற்சி பெற்றவராவார்.

பல்வேறு இந்திய மொழிப்படங்களில் இவர் நடித்துள்ளார்.

கமல்ஹாசன், பிரபுதேவா, கலா மாஸ்டர், பிருந்தா மாஸ்டர் மற்றும் பல்வேறு பிரபல இயக்குநர்களுடன் பணியாற்றி உள்ளார்.

தொழிலதிபர் மனோஜ் வேணுகோபாலை மணந்த பின்னர் அமெரிக்காவுக்கு சென்ற சுஜா, அங்கு ஹாலிவுட் இயக்குநர்களான பென் & ஜூடி லெவின், பாயு பென்னட் மற்றும் டேனியல் லிர் ஆகியோருடன் பணிபுரிந்துள்ளார்.

தற்போது இவர், ரகுராமின் பேரக் குழந்தைகளான திரிஷுல் ஆர் மனோஜ் மற்றும் சனா மனோஜ் ஆகியோரை தான் தயாரித்து இயக்க உள்ள படத்தில் நடிகர்களாக அறிமுகப்படுத்த உள்ளார்.

இசையை மையமாக வைத்து எடுக்கப்படவுள்ள இத்திரைப்படத்திற்கு டேக் இட் ஈசி என்று பெயரிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஹாலிவுட்டில் இயக்குநராக அறிமுகமாகிறார் சுஜா.

நட்பைப் பற்றிப் பேசும் இத்திரைப்படத்தில், சாம் சி எஸ் இசையமைத்து பென்னி தயாள் மற்றும் சனா மனோஜ் பாடியுள்ள ஒரு சிறப்பு பாடல் இடம்பெறுகிறது.

திரிஷுல் ஆர் மனோஜ், சனா மனோஜ் மற்றும் நிகில் மகேஷ் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

திரைப்படத்துறையில் நுழைவதன் மூலம், கே சுப்பிரமணியம் அவர்களின் புகழ்மிக்க பாரம்பரியத்தை அவரது கொள்ளு பேரக்குழந்தைகள் தொடர்கிறார்கள்.

Master Raghuram grandson debut film in hollywood

ஒவ்வொரு குடும்பமும் ரசிகர் மன்றமே.. என் கனவை நிறைவேற்றியவர் (ச)-சுபாஷ்கரன் – வடிவேலு

ஒவ்வொரு குடும்பமும் ரசிகர் மன்றமே.. என் கனவை நிறைவேற்றியவர் (ச)-சுபாஷ்கரன் – வடிவேலு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மாபெரும் ஹிட்டான ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’ படத்தின் 2ஆம் பாகம் இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ என்ற பெயரில் உருவாக தொடங்கியது.

ஷங்கர் தயாரிப்பில், சிம்புதேவன் இயக்கத்தில் இந்த படம் தொடங்கப்பட்டது.

சென்னைக்கு அருகே பிரம்மாண்டமான அரங்குகள் அமைத்து இதன் படப்பிடிப்பும் தொடங்கப்பட்டது.

ஆனால் சில நாட்களிலேயே, படக்குழுவினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் வடிவேலு படப்பிடிப்பிற்கு வரவில்லை.. இதனால் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்தது.

அதனைத் தொடர்ந்து தயாரிப்பாளர் சங்கத்தில் படக்குழு சார்பில் புகாரளிக்கப்பட்டது. இதனால் வடிவேலுவுக்கு ரெட் கார்டு போடப்பட்டது.

எனவே வடிவேலுவால் பிற படங்களில் நடிக்க முடியாமல் போனது.

ஆனாலும் ‘கத்தி சண்ட’, ‘மெர்சல்’ உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.

திரையுலகினர் பலரும் ஷங்கர் – வடிவேலு தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தினர். எந்தத் தீர்வும் எட்டப்படவில்லை.

கடந்த ஜூன் மாதம் மீண்டும் சமசரப் பேச்சுவார்த்தை நடந்தது.

இந்த நிலையில் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்ட தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம்…

“எஸ்.பிக்சர்ஸ் ஷங்கர் ’23-ம் புலிகேசி 2′ திரைப்படத்தில் நடித்த வடிவேலு மீது புகார் அளித்திருந்தார்.

மேற்படி புகார் சம்பந்தமாக, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள், நடிகர் வடிவேலு மற்றும் எஸ்.பிக்சர்ஸ் நிறுவனத்துடன் பேசி மேற்கண்ட பிரச்சினைக்கு சுமுகமாகத் தீர்வு காணப்பட்டுள்ளது” என குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலையில் தான் திரும்ப நடிக்க வருவதை முன்னிட்டு பிரபல ஊடகத்திற்கு பேட்டியளித்தார் வடிவேலு.

அதில்…

என் ரசிகர்களின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றியவர் லைக்கா நிறுவனத்தின் சுபாஷ்கரன்.

என்னை மீண்டும் திரைக்கு கொண்டுவந்ததன் மூலம் சுபாஷ்கரன் சபாஷ்கரன் ஆகிவிட்டார்.

மீண்டும் சினிமாவில் நான் தோன்றப் போவது முதன் முதலில் நான் வாய்ப்புத் தேடும் போது ஏற்பட்ட உணர்வு ஏற்பட்டுள்ளதி.

என் ரசிகர்கள் ஒவ்வொரு வீட்டிலும் ரசிகர் மன்றம் வைத்துள்ளனர்.

நடிப்பதற்கு விதிக்கப்பட்ட ரெட் கார்டு தடையை நீக்கியது மகிழ்ச்சி.

இது எனக்கு மறு பிறவி. சுராஜ் இயக்கும் நாய் சேகர் படத்தில் செப்டம்பர் முதல் நடிக்க உள்ளேன்.

2 படங்களில் கதாநாயகனாக நடித்து விட்டு பின்னர் காமெடியனாகவும் நடிக்க உள்ளேன்” என்றார் வைகைப் புயல் வடிவேலு.

Vadivelu talks about his re entry in kollywood

விஜய்- சேதுபதி – கமலை அடுத்து சூர்யாவை இயக்கும் லோகேஷ் கனகராஜ்

விஜய்- சேதுபதி – கமலை அடுத்து சூர்யாவை இயக்கும் லோகேஷ் கனகராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் நடிகர்களைப் போல ஒரு சில இயக்குனர்களுக்கும் ரசிகர்கள் உண்டு.

மணிரத்னம், ஷங்கர், ஏஆர் முருகதாஸ், வெற்றிமாறன், கவுதம் மேனன், மிஷ்கின், சசி, வசந்தபாலன், லோகேஷ் கனகராஜ், பாலாஜி சக்திவேல், லிங்குசாமி ஆகியோருக்கு அதில் முக்கிய இடம் உண்டு.

இவர்கள் இணைந்து ‘ரெயின் ஆன் பிலிம்ஸ்’ என்ற ஒரு புதிய நிறுவனத்தை தொடங்கவுள்ளனர்.

இதில் ஒரு சில இயக்குனர்கள் ஏற்கெனவே தயாரிப்பு நிறுவனங்களையும் நடத்தி வருகின்றனர்.

‘ரெயின் ஆன் பிலிம்ஸ்’ முதல் தயாரிப்பை லோகேஷ் கனகராஜ் இயக்கப் போகிறார் என வந்த தகவல்களை நம் தளத்தில் பார்ப்போம்.

இதில் லோகேஷ் இயக்கவுள்ள படத்தில் சூர்யா நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படமானது 1962ல் உருவாக்கப்பட்ட The Steel Claw கதாபாத்திரத்தில் சூர்யா நடிப்பதாக கூறப்படுகிறது. அதாவது இரும்புக்கை மாயாவி கேரக்டர் என கூறப்படுகிறது.

சூர்யா தற்போது எதற்கும் துணிந்தவன் மற்றும் ஜெய் பீம் படங்களில் நடித்து வருகிறார்.

இந்த படங்களை அடுத்து வாடிவாசல் படத்தில் நடிக்கவுள்ளார் சூர்யா.

இதன்பின்னர் சூர்யா & லோகேஷ் கனகராஜ் படம் தொடங்கப்படும் எனத் தெரிகிறது.

விஜய் & விஜய்சேதுபதி இணைந்து நடித்த ‘மாஸ்டர்’ படத்தை அடுத்து கமல் சேதுபதி பகத் நடித்து வரும் ‘விக்ரம்’ படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.

Suriya and lokesh kanagaraj joins for a new film

தத்தெடுத்த தந்தை கேரக்டரில் நடிக்க ரெடியாகும் ரஜினி.; இயக்குநர் இவரா.?

தத்தெடுத்த தந்தை கேரக்டரில் நடிக்க ரெடியாகும் ரஜினி.; இயக்குநர் இவரா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘அண்ணாத்த’ படத்தை அடுத்து தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிப்பார் ரஜினி என கூறப்பட்டது.

அதன்பின்னர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கலாம் எனவும் தகவல் பரவியது.

தற்போது அந்த படத்தை பாண்டிராஜ் இயக்கவுள்ளார் எனவும் இந்த படம் பாலம் கல்யாண சுந்தரம் அவர்களின் வாழ்க்கை வரலாறாக உருவாகவுள்ளது எனவும் தெரிய வந்துள்ளது.

பாலம் கல்யாண சுந்தரம் தான் வைத்திருந்த சொத்துக்கள் அனைத்தையும் தான் வாழும்போதே ஏழை மக்களுக்கு எழுதி கொடுத்தவர் என்று அனைவரும் அறிந்த ஒன்றே.

1999ஆம் ஆண்டில் காமராஜர் அரங்கில் நடைபெற்ற பாலம் கல்யாண சுந்தரம் அவர்களுக்கான பாராட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்றார்.

தான் வாழும் போதே தன் சொத்துக்களை எழுதி தரும் மகானுக்கு நான் மகனாக வேண்டும் என மேடையிலேயே அறிவித்தார் ரஜினிகாந்த்.

எனக்கு 2 மகள்கள் உள்ளனர். ஆனால் தந்தை இல்லை. எனவே நீங்கள் எனக்குத் தந்தையாக வேண்டும் என அன்புக்கோள் விடுத்து போயஸ் கார்டன் இல்லத்திற்கு பாலம் கல்யாணசுந்தரத்தை அழைத்துச் சென்றார் ரஜினி.

ஆனால் எல்லாம் சுதந்திரமும் சகல வசதிகள் கிடைத்தாலும் ஒரு சிறையில் இருப்பதை போல் உணர்கிறேன் என ரஜினி வீட்டை விட்டு சென்றார் பாலம் கல்யாண சுந்தரம்.

இந்த நிலையில் பாலம் கலியாணசுந்தரம் அவர்களின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க நடிகர் ரஜினிகாந்த் திட்டமிட்டுள்ளார் என கூறப்படுகிறது.

விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கலாம்.

பாலம் கல்யாணசுந்தரம் வாழ்க்கை வரலாறு தமிழ், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் படமாக வெளியாக உள்ளது.

இதில் ரஜினிகாந்த், அமிதாப்பச்சன் உள்ளிட்டோர் நடிக்க உள்ளதாக அன்பு பாலம் என்ற புத்தகத்தில் பாலம் கல்யாணசுந்தரம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Super Star Rajinikanth to act in Paalam Kalyana Sundaram biopic

pandiraj
pandiraj
More Articles
Follows