தென்னிந்திய மொழிகளில் ரிலீசாகும் ‘வீரமே வாகை சூடும்’.; தமிழை விட தெலுங்கில் அதிக தியேட்டர்கள்

தென்னிந்திய மொழிகளில் ரிலீசாகும் ‘வீரமே வாகை சூடும்’.; தமிழை விட தெலுங்கில் அதிக தியேட்டர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஷால் ஃபிலிம் பேக்டரி சார்பில், நடிகர் விஷால் நடிப்பில் அறிமுக இயக்குநர் து.ப. சரவணன் இயக்கியுள்ள “வீரமே வாகை சூடும்” படம் தமிழ் தெலுங்கு கன்னடம் மொழிகளில், பிரமாண்ட வெளியீடாக 2022 பிப்ரவரி 4 ஆம் தேதி வெளியாகிறது

அதிகார மட்டத்திற்கு எதிராக எளியவனின் போராட்டத்தை களமாக கொண்டு உருவாகியுள்ள நீண்ட இடைவேளைக்கு இப்படத்தில் பாண்டியநாடு பட பாணியில் மாறுபட்ட நடிப்பில் மிரட்டியிருக்கிறார் நடிகர் விஷால். அனைத்து ரசிகர்களும் ரசிக்கும் வகையிலான கமர்ஷியல் ஆக்சன் படமாக இப்படம் உருவாகியுள்ளது.

இப்படத்தில் விஷால் நாயகனாக நடிக்க, டிம்பிள் ஹயாதி அறிமுக நாயகியாக நடிக்கிறார். யோகிபாபு, மாரிமுத்து, துளசி, கவிதா பாரதி, RNR மனோகர், பாபுராஜ், பில்லி முரளி, ரவீனா, KSG வெங்கடேஷ்,
மஹா காந்தி, மரியம் ஜார்ஜ்
Black sheep தீப்தி முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

விஷால் ஃபிலிம் பேக்டரி சார்பில் நடிகர் விஷால் இப்படத்தினை தயாரிக்கிறார். து.ப. சரவணனன் எழுதி இயக்குகிறார்.

முன்னணி இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். கவின் ராஜ் ஒளிப்பதிவு செய்ய, N.B.ஶ்ரீகாந்த் படத்தொகுப்பு செய்கிறார். S.S.மூர்த்தி கலை இயக்கம் செய்ய, வாசுகி பாஸ்கர் உடை வடிவமைப்பு செய்கிறார். ஒலி அமைப்பை தபஸ் நாயக் செய்கிறார்.

அனல் அரசு, ரவி வர்மா, தினேஷ் சண்டைகாட்சிகளை அமைக்கின்றனர். விளம்பர வடிவமைப்பை கண்ணதாசன் செய்கிறார். மக்கள் தொடர்பு பணிகளை ஜான்சன் செய்கிறார். பாலா கோபி எக்ஸிக்யூட்டிவ் புரொடியூசராக பணியாற்றுகிறார்.

இப்படம் U/A சான்றிதழ் பெற்றுள்ளது. வரும் 2022 பிப்ரவரி 4 ஆம் தேதி தமிழ் நாட்டில் 560க்கு மேற்பட்ட திரையரங்குகளிலும், ஆந்திராவில் 750க்கு மேற்பட்ட திரையரங்குகளிலும், கன்னடத்தில் மிக பெரிய வெளியீட்டாக 180 க்கும் மேற்பட்ட திரையரங்குகளிலும் பிரமாண்ட வெளியீடாக உலகமெங்கும் வெளியாகிறது.

Veerame Vaagai Soodum will release in more theatres in Andhra Pradesh

நீண்ட நாட்களுக்கு பிறகு ‘எதற்கும் துணிந்தவன்’ சூர்யா தியேட்டருக்கு வருகிறார்

நீண்ட நாட்களுக்கு பிறகு ‘எதற்கும் துணிந்தவன்’ சூர்யா தியேட்டருக்கு வருகிறார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாண்டிராஜ் இயக்கத்தில் இமான் இசையமைப்பில் சூர்யா நடித்துள்ள படம் ‘எதற்கும் துணிந்தவன்’.

இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ப்ரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார்.

இவர்களுடன் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, இளவரசு, சுப்பு பஞ்சு, திவ்யா துரைசாமி, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டோ நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவாளராக ரத்னவேலு பணிபுரிய சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.

இப்படத்தை வரும் பிப்ரவரி 4ஆம் தேதி வெளியிடப் படக்குழு தீர்மானித்து அந்த அறிவிப்பையும் 2021 நவ.19ல் வெளியிட்டது.

ஆனால் கரோனா அச்சுறுத்தலால் ரிலீசில் தள்ளி வைத்தனர்.

தற்போது இப்படத்தை வரும் மார்ச் 10ஆம் தேதி தியேட்டர்களில் உலகமெங்கும் வெளியிடப் படக்குழு தீர்மானித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

சூர்யாவின் முந்தைய படங்களான ‘சூரரைப் போற்று’ & ‘ஜெய்பீம்’ ஆகிய படங்கள் தியேட்டர்களில் ரிலீசாகாமல் பல பிரச்னைகளை தாண்டி ஓடிடி தளத்தில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

Suriya ’s #EtharkkumThunindhavan is releasing on March 10th, 2022

பவர்புஃல் டைட்டிலுடன் மீண்டும் இணைந்தனர் விக்ரம் பிரபு & ஸ்ரீதிவ்யா

பவர்புஃல் டைட்டிலுடன் மீண்டும் இணைந்தனர் விக்ரம் பிரபு & ஸ்ரீதிவ்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘கும்கி’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார் சிவாஜி பேரன் விக்ரம் பிரபு.

இப்பட வெற்றியை தொடர்ந்து அரிமா நம்பி, மற்றும் சிகரம் தொடு என ஹாட்ரிக் வெற்றிகளை கொடுத்தார்.

ஆனால் அதன்பின்னர் என்ன ஆனதோ.. அவரது பல படங்கள் தோல்வியை தழுவியது.

வெள்ளைக்கார துரை, வாகா, பக்கா, வீரசிவாஜி, நெருப்புடா, துப்பாக்கி முனை, அசுரகுரு ஆகிய படங்கள் சொல்லிக்கொள்கிற அளவில் ஓடவில்லை.

வானம் கொட்டட்டும், புலிக்குத்தி பாண்டி ஆகிய படங்கள் சுமாரான வெற்றியை பெற்றது.

தற்போது விக்ரம் பிரபு கைவசம் ‘பாயும் புலி நீ எனக்கு’, ‘டாணாக்காரன்’ மற்றும் ’பொன்னியின் செல்வன்’ ஆகிய படங்கள் உள்ளது.

இந்த நிலையில் தற்போது விக்ரம்பிரபு ஹீரோவாக நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டில் ’டைகர்’ என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் பூஜை இன்று நடந்தது

கார்த்திக் என்பவர் இந்தப் படத்தை இயக்குகிறார்.

இதில் விக்ரம் பிரபு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடிக்க உள்ளார்.

இந்த ஜோடி ஏற்கனவே ’வெள்ளைக்கார துரை’ படத்தில் இணைந்துள்ளனர் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

நடிகர் சக்தி வாசு வில்லனாக நடிக்கும் இந்த படத்தில் அனந்திகா மற்றொரு கதாநாயகியாக நடிக்கிறார். ரிஷி (எனும்) அட்டு, டேனியல் (எனும்) டேனி முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

சாம் CS இசையமைக்க, கதிரவன் ஒளிப்பதிவு செய்கிறார், வீரமணி கலைத் துறையை கவனிக்கிறார். மற்ற தொழில்நுட்ப வல்லுநர்களில் மணிமாறன் (எடிட்டிங்), முருகன் (ஸ்டில்ஸ்), பாபா பாஸ்கர் (நடன அமைப்பு), கணேஷ் மாஸ்டர் (ஸ்டண்ட்), மற்றும் S. வினோத் குமார்-தம்பி M பூபதி (நிர்வாகத் தயாரிப்பு) பணிகளை கவனிக்கின்றனர்.

Vikram Prabhu and Sri Divya joins for a new film

நிவின்பாலி-அஞ்சலி கூட்டணியில் சூரி..; மிஷ்கின் திடீர் விசிட்

நிவின்பாலி-அஞ்சலி கூட்டணியில் சூரி..; மிஷ்கின் திடீர் விசிட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து சூப்பர் ஹிட்டான ’மாநாடு’ படத்தை தயாரித்தவர் சுரேஷ் காமாட்சி.

இவர் மாநாடு ரிலீசுக்கு முன்பே தன் பட தயாரிப்பு அறிவிப்பை வெளியிட்டு இருந்தார்.

தற்போது சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் ராம் இயக்கத்தில் ஒரு படம் உருவாகி வருகிறது.

இதில் நிவின்பாலி மற்றும் அஞ்சலி ஜோடியாக நடித்து வருகின்றனர்.

யுவன் இசையமைத்து வரும் இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தின் முக்கிய காட்சிக்காக ரயில் செட் ஒன்று போடப்பட்டுள்ளதாம்.

முக்கிய வேடத்தில் சூரி இந்த படத்தில் இணைந்துள்ளார்.

தற்போது நிவின்பாலி மற்றும் சூரி நடிக்கும் காட்சிகளை படமாக்கி வருகிறார் ராம்.

இந்த நிலையில் இப்பட சூட்டிங் ஸ்பாட்டை இயக்குனர் மிஷ்கின் விசிட் செய்துள்ளார்.

அந்த படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

Mysskin surprise visits to Director Ram – Nivin Pauly new film sets

சூர்யா தயாரிப்பில் மீண்டும் ஜோதிகா..; இயக்குனர் இவரா..?

சூர்யா தயாரிப்பில் மீண்டும் ஜோதிகா..; இயக்குனர் இவரா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தன் மனைவி ஜோதிகா ரீஎன்ட்ரீ ஆனது முதல் அவர் நடிக்கும் படங்களை சூர்யா தயாரித்து வருகிறார்.

அண்மையில் ஜோதிகா நடிப்பில் வெளியான பொன்மகள் வந்தாள், உடன்பிறப்பே ஆகிய படங்கள் பெரும் வரவேற்பை பெற்றன.

இந்த நிலையில் ஜோதிகா நடிக்கவுள்ள அடுத்த படம் குறித்து தகவல்கள் வந்துள்ளன.

இந்த படத்தை ’கண்ட நாள் முதல்’ மற்றும் ’கண்ணாம்பூச்சி ஏனடா’ ஆகிய படங்களை இயக்கிய பெண் இயக்குனர் பிரியா இயக்கவிருக்கிறாராம்.

இந்த திரைப்படத்தையும் சூர்யா – ஜோதிகாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Suriya to produce new film with Jyothika

ராஜமௌலியால் வந்த பிரச்சினை.; சிவகார்த்திகேயன் பட ரிலீசில் சிக்கல்

ராஜமௌலியால் வந்த பிரச்சினை.; சிவகார்த்திகேயன் பட ரிலீசில் சிக்கல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தயாரித்து நடித்துள்ள படம் ‘டான்’.

இந்த திரைப்படம் மார்ச் மாதம் 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்தது.

இதன் பின்னர் கொரோனா ஊரடங்கால் தள்ளி வைக்கப்பட்ட ‘ஆர்ஆர்ஆர்’ படமும் மார்ச் 25ஆம் தேதி வெளியாகும் என ராஜமௌலி அறிவித்தார்.

டான் படத்தை சிவகார்த்திகேயனுடன் இணைந்து லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.

அதே சமயம் ராஜமௌலி இயக்கியுள்ள ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை லைகா நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

‘ஆர்ஆர்ஆர்’ படம் பான் இந்தியா படம். மேலும் இது ராஜமௌலியின் படம் என்பதால் உலகளவில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.

இந்த சமயத்தில் தமிழகளவில் டான் வெளியானால் கூட மிகவும் குறைவான தியேட்டர்களே கிடைக்கும்.

அத்துடன் லைகா-வின் இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியானால் டான் படத்தின் லாபம் பெரியளவில் பாதிக்கப்படும்.

எனவே ராஜமௌலியின் ‘ஆர்ஆர்ஆர்’ படத்திற்கு வழிவிடுவதை தவிர டான் படக்குழுவுக்கு வேறு வழியில்லை.

எனவே டான் படத்தின் புதிய ரிலீஸ் தேதி விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

Sivakarthikeyan’s Don may be postponed due to RRR release

More Articles
Follows