தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடந்த 2017 ஆம் ஆண்டு ஒரு படம் அறிவிக்கப்பட்ட போதே பரபரப்பாக பேசப்பட்ட படம் என்றால் அது துருவ நட்சத்திரம் தான்.
தமிழ் சினிமாவின் ஸ்டைலிஷ் இயக்குனர் கௌதம் மேனன் மற்றும் சீயான் விக்ரம் ஆகியோர் கூட்டணியில் உருவாகும் இந்த படத்திற்கு பலத்த எதிர்பார்ப்பு உருவானது.
இதில் நாயகிகளாக ரீத்து வர்மா & ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கின்றனர்.
இவர்களுடன் முக்கிய வேடங்களில் ராதிகா சரத்குமார், திவ்யதர்ஷினி ஆகியோரும் நடிக்கின்றனர்.
இந்தியாவிலும்வெளிநாடுகளிலும் இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்தது.
இது தொடர்பான வீடியோக்களும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஆவலை ஏற்படுத்தியது.
ஆனால் திடீரென சில பிரச்சனைகளால் இதன் சூட்டிங் முற்றிலும் நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு இதன் படப்பிடிப்பு மீண்டும் தொடங்க உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. இன்னும் 2 வாரங்களே படப்பிடிப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து நடிகர் விக்ரம் மற்றும் இயக்குனர் கௌதம் மேனன் இருவரும் சந்தித்துள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
இந்த பிரச்சனைக்கு நடிகர் உதயநிதி தான் முற்றுப்புள்ளி வைத்துள்ளதாகவும் அவர் கொடுத்த உற்சாகத்தின் பேரிலும் ‘துருவ நட்சத்திரம்’ படத்தை அவர் வாங்க முன்வந்துள்ளது தான் காரணம் என்றும் கூறப்படுகிறது.
Udhayani Stalin behind Dhruva Natchathiram’s revival?