OFFICIAL புத்தாண்டை நெருங்கும் நேரத்தில் ‘துணிவு’ பட டிரைலர் வெளியீடு

OFFICIAL புத்தாண்டை நெருங்கும் நேரத்தில் ‘துணிவு’ பட டிரைலர் வெளியீடு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள திரைப்படம் ‘துணிவு’.

இந்த படம் 2023 பொங்கல் சமயத்தில் வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் கேரக்டர் போஸ்டர்களை ஒவ்வொன்றாக அறிவித்து வந்தனர்.

அதன்படி நடிகர் சமுத்திரக்கனி தயாளன் என்ற கேரக்டரில் நடிக்க கண்மணியாக மஞ்சுவாரியர் நடிப்பதாக அறிவித்துள்ளனர்.

இறுதியாக படத்தின் டிரைலர் வெளியீட்டு தேதியை மற்றும் குறிப்பிட்ட நேரத்தை அறிவித்துள்ளனர்.

அதன்படி ட்ரெய்லர் டிசம்பர் 31ஆம் தேதி மாலை 7 மணிக்கு வெளியாகும் என அறிவித்து போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

2023 புத்தாண்டு பிறக்க நெருங்க 5 மணி நேரங்களே உள்ள நிலையில் ட்ரெய்லர் வெளியாவது குறிப்பிடத்தக்கது.

Thunivu trailer release time announced

‘துணிவு’ படத்தில் கேரக்டர்கள் என்ன.? என்ன? அஜித் மட்டும் சஸ்பென்ஸ்.!?

‘துணிவு’ படத்தில் கேரக்டர்கள் என்ன.? என்ன? அஜித் மட்டும் சஸ்பென்ஸ்.!?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த வரும் திரைப்படம் ‘துணிவு’.

ஜிப்ரான் இசையமைக்க இந்த படத்தை போனி கபூர் தயாரித்து வருகிறார்.

இந்த படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் இந்தப் படத்தில் நடித்துள்ளவர்களின் பெயர்களை குறிப்பிட்டு அவர்களின் கேரக்டர் போஸ்டர்களை பட குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

அதன்படி நடிகர் சமுத்திரக்கனி தயாளன் என்ற கேரக்டரில் நடித்துள்ளார்.

கண்மணியாக மஞ்சுவாரியர் நடிப்பதாக அறிவித்துள்ளனர்.

பிரபல தெலுங்கு நடிகர் அஜய் ராமச்சந்திரன் என்ற கேரக்டரிலும், ராஜதந்திரம் வீரா ராதா என்ற கேரக்டரிலும், ஜிஎம் சுந்தர் முத்தழகன் என்ற கேரக்டரிலும், சார்பட்டா பரம்பரை ஜான் கோக்கன் கிரிஷ் என்ற கேரக்டரிலும், பக்ஸ் ராஜேஷ் என்ற கேரக்டரிலும், நடித்துள்ளனர்.

ஆனால் அஜித்தின் கேரக்டர் பெயர் வெளியிடப்படவில்லை.. அது சஸ்பென்சாக ஒருவேளை நாளை ட்ரெய்லரில் வெளியாகலாம் இல்லை என்றால் படம் வெளியாகும் போது அவரது கேரக்டர் பேர் தெரிய வரும்..

காம-நெடியில் கருத்து சொன்ன ‘கடைசி காதல் கதை’.; ஜாலியான ஜர்னலிஸ்ட்கள்

காம-நெடியில் கருத்து சொன்ன ‘கடைசி காதல் கதை’.; ஜாலியான ஜர்னலிஸ்ட்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒரு திரைப்படம் இளைஞர்களுக்கு பிடித்துவிட்டால் அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெறுவது உறுதி. அப்படி ஒரு படமாக சமீபத்தில் வெளியான் பாடம் ‘லவ் டுடே’. அறிமுக நடிகர்கள் நடித்து மிகப்பெரிய வரவேற்பு பெற்ற அப்படத்தை தொடர்ந்து இளைஞர்களை வெகுவாக கவரக்கூடிய படமாக உருவாகியுள்ள படம் ‘கடைசி காதல் கதை’.

முழுக்க முழுக்க புதுமுகங்கள் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் கதை வித்தியாசமாக இருப்பதோடு, அதற்கு திரைக்கதை அமைத்து காட்சிகளை கையாண்ட விதம் இளைஞர்களை கவரக்கூடிய விதத்தில் இருப்பதோடு, படம் தொடங்கியது முதல் முடியும் வரை மிக ஜாலியாக காட்சிகளை நகர்த்தி செல்வதோடு, இரண்டு மணி நேரம் எப்படி போனது என்பது தெரியாத வகையில் படம் விறுவிறுப்பாக நகர்கிறது.

காதல் தோல்வியால் மன அழுத்தத்திற்கு ஆளாகும் இளைஞர்கள் எடுக்கும் தவறான முடிவுகளை வித்தியாசமாக கையாண்டிருக்கும் இயக்குநர் அதை அனைத்து தரப்பினரும் ரசிக்கும்படி சொல்லியிருப்பதோடு, இளைஞர்களும், காதலர்களும் கொண்டாடும் வகையில் சொல்லி படத்தை ரசிக்க வைக்கிறார்.

இந்த நிலையில், படத்திரிகையாளர்களுக்காக சிறப்பு காட்சிக்கு படக்குழு ஏற்பாடு செய்திருந்தது. படத்தை பார்த்த பத்திரிகையாளர்கள் படம் முழுவதையும் ஜாலியாக பார்த்து ரசித்ததோடு, குலுங்கி குலுங்கி சிரித்து ரசித்தனர்.

படம் முடிந்த பிறகு படம் குறித்து கூறிய நிருபர்கள், படம் மிக ஜாலியாக இருக்கிறது.

‘லவ் டுடே’ படத்திற்கு பிறகு இளைஞர்களை கொண்டாட வைக்கும் படமாக ‘கடைசி காதல் கதை’ உருவாகியுள்ளது. படத்தில் இடம்பெறும் இரட்டை அர்த்த வசனங்களை ரசிக்கும்படி கையாண்டிருக்கும் இயக்குநர் படம் முழுவதையும் மிக ஜாலியாக நகர்த்தி சென்றாலும், இறுதியில் காதலர்களுக்கு மட்டும் இன்றி அனைத்து தரப்பு மக்களுக்கும் அருமையான மெசஜ் ஒன்றையும் சொல்கிறார்.

படம் நிச்சயம் அனைவருக்கும் பிடிக்கும், என்று தெரிவித்தனர்.

மேலும், படத்தில் சொல்லப்படும் மையக்கரு இதுவரை எந்த படத்திலும் இடம்பெறாத ஒரு விஷயமாக இருப்பதோடு, விபரீதமானதாகவும் இருக்கிறது. ஆனால், அதை மிக அருமையாக கையாண்ட இயக்குநர் ஆர்.கே.வித்யாதரனின் திரைக்கதை, வசனம் மற்றும் காட்சி அமைப்புகள் அனைத்தும் படத்தை சுவாரஸ்யமாக நகர்த்தி செல்வதோடு, இறுதியில் அனைத்துக்குமான தீர்வாக சொல்லப்படுவது காதலர்களுக்கு மட்டும் அல்ல, அனைத்து தரப்பினருக்குமானதாக இருக்கிறது. ஒரு நல்ல படம், நிச்சயம் அனைவரும் பார்க்கலாம், என்று கூறி இயக்குநரை பத்திரிகையாளர்கள் பாராட்டினார்கள்.

அறிமுக நடிகர் ஆகாஷ் பிரேம்குமார், அறிமுக நடிகை ஈனாக்‌ஷி கங்குலி, நாயகன், நாயகியாக நடித்திருக்கும் இப்படத்தில் ‘குக் வித் கோமாளி’ புகழ், விஜே ஆஷிக், நோபல், மைம் கோபி, சாம்ஸ், பிரியங்கா வெங்கடேஷ், அனு, பிரியதர்ஷினி, முதுன்ய, நிஷார், ஸ்வப்னா, கிருத்திகா, சாம்ஸ் என பல நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.

எஸ் கியூப் பிக்சர்ஸ் சார்பில் ஈ. மோகன் தயாரித்துள்ள இப்படத்திற்கு சேத்தன் கிருஷ்ணா இசையமைக்க, சிவசுந்தர் ஒளிப்பதிவு செய்துள்ளார். பி.ஆர்.பிரகாஷ் படத்தொகுப்பு செய்ய, கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஆர்.கே.வித்யாதரன் இயக்கியுள்ளார்.

இயக்குனரானார் காமெடி நடிகர் கோதண்டன்..; ரசிகர்கள் பாராட்டு.!

இயக்குனரானார் காமெடி நடிகர் கோதண்டன்..; ரசிகர்கள் பாராட்டு.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சின்னத்திரையில் பிரபலமாகி வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைத்து நடித்து வருபவர்கள் ஏராளம்.

அந்த வரிசையில் முல்லை கோதண்டம் ஆகிய இருவரும் தற்போது சினிமாவில் நடித்து வருகின்றனர்.

இதில் கோதண்டம் ஒரு சில படங்களில் தனியாகவே நடித்து வருகிறார்.

இந்த நிலையில் அவர் தற்போது கதை திரைக்கதை வசனம் எழுதி ஒரு குறும்படத்தை இயக்கியுள்ளார்.

அந்த குறும்படத்தின் பெயர் ‘இருட்டில் வெளிச்சம்’.

இது தற்போது இணையதளத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

15 நிமிட ஓடக்கூடிய இந்த குறும்படத்தில் பார்வையற்றவராக கோதண்டம் நடித்துள்ளார்.

கைகால் நன்றாக இருப்பவர்கள் உழைக்காமல் அடுத்தவன் சொத்தை திருடியும் அடுத்தவர் பணத்தை அபகரித்தும் வாழ்கின்றனர்.

ஆனால் கண் பார்வையற்றவர்கள் இருட்டிலே வாழ்ந்தாலும் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு வெளிச்சமாக வாழ்கிறார்கள் என்ற கருத்தை இதில் அழகாக காட்சிப்படுத்தியுள்ளார்.

இந்த வீடியோவை பார்த்த நெட்டிஷன்கள் பலரும் கோதண்டத்தின் நடிப்பையும் அவரது இயக்கத்தையும் நல்ல கருத்தையும் பாராட்டி வருகின்றனர்.

அந்த வீடியோ இதோ…

நயன்தாரா அறிக்கையால் இன்ப அதிர்ச்சியில் மூழ்கிய ரசிகர்கள்

நயன்தாரா அறிக்கையால் இன்ப அதிர்ச்சியில் மூழ்கிய ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அனைவரின் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி.

திரைப்பட துறையில் முன்னணியில் இருக்கும் அவர் , தனது பாலிவுட் அறிமுகமான ‘ஜவான்’ படத்தில் பணிபுரிகிறார்.

இதில் ஷாருக்கான் நடித்தார் மற்றும் அட்லீ இயக்கியுள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

“இது எனக்கு நிகழ்வுகள் நிறைந்த ஆண்டாகும், நான் நன்றியுணர்வுடன் நிறைந்துள்ளேன்.

எங்கள் ‘கனெக்ட்’டைப் பார்த்து ஆதரவளித்த அனைத்து திரைப்பட ஆர்வலர்கள் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி.

தொடர்ந்து, உங்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து, ரசிப்பவர்களுக்கு என் நன்றிகள் என்றார் நயன்.

அஜீத் குமாரின் ‘ஏகே 62’ படத்தின் ரெட் ஹாட் அப்டேட் இங்கே

அஜீத் குமாரின் ‘ஏகே 62’ படத்தின் ரெட் ஹாட் அப்டேட் இங்கே

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜித்தின் அடுத்த படமான ‘ஏகே 62’ படமும் தயாராகி வருகிறது, மேலும் ஒரு ரெட் ஹாட் அப்டேட்டும் இருக்கிறது .

விஜய்யின் ‘தெறி’ மற்றும் ‘சர்தார்’ படங்களுக்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டதாக விக்னேஷ் சிவன் சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

வில்லியம்ஸ் மற்றும் சிவன் ஆகியோர் இதற்கு முன்பு விஜய் சேதுபதி-நயன்தாரா நடித்த ‘நானும் ரவுடி தான்’ பிளாக்பஸ்டர் ஹிட் படத்திற்காக ஒத்துழைத்துள்ளனர்.

‘ஏகே 62’ படத்தில் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா கிருஷ்ணன் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

More Articles
Follows