தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சுதந்திர போராட்ட வீரர்களான மருதுசகோதரர்கள் 219-ஆவது நினைவு தினம் நாம் தமிழர் கட்சியினரால் அனுசரிக்கப்பட்டது.
அப்போது பேசிய கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்…
“பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியத்துக்கு இலங்கை கச்சேரியில் பாட SPB க்கு வாய்ப்பு வந்தபோது எதிர்ப்பு வருமோ என்று நினைத்து, “போய் பாடிட்டு வரட்டுமா டா தம்பி” என்று என்னிடம் கேட்டார்.
மனுஸ்மிருதியில் பெண்களை இழிவு படுத்தி பேசப்பட்டிருக்கிறது என்பதுதான் சொன்னாரே தவிர திருமாவளவன் பெண்களை இழிவாகப் பேசவில்லை.
முத்தையா முரளிதரனின் வாழ்க்கை படத்தை இலங்கை மொழியில் எடுத்துக் கொள்ளுங்கள்.
ஆனால் எங்கள் தமிழ் பிள்ளை விஜய் சேதுபதியை வைத்து தமிழில் எடுப்பதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்” என்றார்.
அவரின் எதிர்காலம் பாதிக்கப்படக் கூடாது என்பதால் அறிவுறுத்துனோம்.
அறிவுறுத்தல் இருந்ததே தவிர அச்சுறுத்தல் இல்லை”
இவ்வாறு சீமான் தெரிவித்துள்ளார்.
NTK leader Seeman supports Thiruma Valavan’s statement