தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பெரிய திரை, சின்னத்திரை என இரண்டு திரையிலும் நடித்தவர் நடிகை சந்திரா லட்சுமணன்.
இவர் தமிழில் ஸ்ரீகாந்த் உடன் ஏப்ரல் மாதத்தில், ஜெயம் ரவி உடன் நடித்த தில்லாலங்கடி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.
சினிமா வாய்ப்புகள் குறையவே கடந்த 16 ஆண்டுகளாக பல்வேறு தமிழ் சீரியல்களில் நடித்து வந்தார்.
வசந்தம், மகள், துளசி, சொந்த பந்தம், கோலங்கள், காதலிக்க நேரமில்லை, பாசமலர் ஆகிய தொடர்களில் நடித்துள்ளார்.
அதன்பின்னர் மலையாளத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். இவர் நடித்து வரும் ஸ்வந்தம் சுஜாதா என்ற மலையாள சீரியல் தற்போது பிரபலம்.
38 வயதாகும் இவருக்கு இதுவரை திருமணம் ஆகவில்லை.
இந்த நிலையில் நடிகை சந்திராவுக்கும், அவருடன் நடித்த நடிகர் டோஷ் கிறிஸ்டிக்கும் இடையே காதல் நெருக்கம் உருவானது-
இதனையடுத்து இவர்கள் திருமணம் செய்துக் கொள்ள முடிவெடுத்தனர்.
இவர்களின் திருமணம் எளிமையான முறையில் கேரளாவில் உள்ள ஒரு ரிசார்ட் நடைபெற்றது.
நாமும் மணமக்களை வாழ்த்துவோம்.
Serial actress Chandra Lakshman gets married