தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
செப்டம்பர் 10ல் நடிகர் ஜெயம்ரவி தனது பிறந்தநாளையொட்டி ரசிகர்கள் & பத்திரிகையாளர்களை சந்தித்து புகைப்படங்களை எடுத்துக்கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது…
”சினிமாவுக்கு நான் வந்து 20 வருடங்கள் கடந்து விட்டன. ஆனால், 25 படங்களில் மட்டுமே நடித்திருக்கிறேன்.
இதை மற்ற சக நடிகர்களுடன் ஒப்பிடும்போது ரொம்ப குறைவு தான். எனக்கு பிறகு வந்தவர்கள் 40, 45 படங்களில் நடித்துவிட்டனர்.
நான் ஏன் குறைவான நடித்திருக்கிறேன். ஏன் என்று யோசித்தால், குவாலிட்டிக்கு மதிப்பு கொடுக்கிறேன்.
குவான்டிட்டியை விட குவாலிட்டிதான் முக்கியம்.
‘ஜெயம்’ படம் வெளியாகி 150 நாட்கள் ஓடி பெரிய வெற்றி பெற்றது. ஆனாலும் அதன் பிறகு 8 மாதம் வீட்டில் சும்மாவே இருந்தேன்.
அப்போதுதான் அப்பா சொன்னார், ‘நல்ல படம் வரும் வரைக்கும் சும்மா உட்காரு தப்பில்ல.” என்று சொன்னார். எனவே என்னுடைய பயணத்தில் சரியாக ஓடாத படங்களின் விகிதம் குறைந்திருக்கிறது.
நல்ல படங்களில் நடிக்க வேண்டும் என நினைக்கிறேன். நிறைய கற்றுக்கொண்டிருக்கிறேன்”
இவ்வாறு ஜெயம் ரவி பேசினார்