‘ரன் பேபி ரன்’ தயாரிப்பாளரின் அடுத்த படைப்பு ‘தண்டட்டி’…

‘ரன் பேபி ரன்’ தயாரிப்பாளரின் அடுத்த படைப்பு ‘தண்டட்டி’…

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘ரன் பேபி ரன்’ தயாரிப்பாளர்கள் அடுத்த படைப்பிற்கு ‘தண்டட்டி’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

ராம் சங்கியா இயக்கத்தில், பசுபதி, விவேக் பிரசன்னா மற்றும் ரோகினி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ளார்.

மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்ய, சிவந்தீஸ்வரன் படத்தொகுப்பை மேற்கொள்ளவுள்ளார்.

இந்நிலையில், தயாரிப்பாளர்கள் ‘தண்டாட்டி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

‘தண்டட்டி’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படம் விரைவில் போஸ்ட் புரொடக்‌ஷன் பணியை தொடங்கவுள்ளது.

மேலும், இப்படத்தின் டீசர் மற்றும் ரிலீஸ் தேதி விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘Thandatti’ movie First look poster released

முதல் படத்திலேயே இசை ‘தடம்’ பதித்து வளரும் இசையமைப்பாளர் அருண் ராஜ்

முதல் படத்திலேயே இசை ‘தடம்’ பதித்து வளரும் இசையமைப்பாளர் அருண் ராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மகிழ்திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் இரட்டை வேடங்களில் நடித்த படம் ‘தடம்’.

இந்த படம் தமிழ் சினிமாவில் ஓர் ஆழமான தடத்தை பதித்தது என்று சொன்னால் அது மிகையல்ல.

இந்த படத்திற்கு இசையமைத்தவர் அருண் ராஜ். இவரது இசையில் உருவான ‘பைரி’ என்ற படமும் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது.

இந்த நிலையில் இவர் தற்போது இசையமைத்துள்ள படம் ‘பீட்சா 3’.

அஸ்வின் & பவித்ரா இணைந்து நடித்துள்ளனர். மோகன் கோவிந்த் என்பவர் இயக்கியுள்ள இந்த படத்தை சி.வி. குமார் தயாரித்துள்ளார்.

இந்த படத்தில் இடம்பெற்ற “மின்னல் கண்ணிலே…” என்று தொடங்கும் பாடல் ஏழு மாதங்களுக்கு முன்பு இணையத்தில் வெளியானது.

“கண்ணிலே.. மின்னல் கண்ணிலே.. என்னை தாக்கியே பெண்ணே என்னை நீ பார்க்கிறாய்..”

உன் மூச்சிலே உன் மூச்சு காற்றிலே என்னை நீ தீண்டும்போது என்னை நீ சாய்க்கிறாய்…”

இந்தப் பாடலை மோகன் ராஜா என்பவர் எழுத பாடி இசையமைத்துள்ளார் அருண் ராஜ்.

மேலும் இதே படத்தில் இடம் பெற்ற அடுத்த பாடலான ‘கண்ணே கண்மணியே..’ கடந்த வாரம் வெளியானது

இந்த பாடலின் லிரிக் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

“கண்ணே கண்மணியே…” என்று தொடங்கும் இந்த பாடல் ஓர் அழகான குடும்ப உறவை சித்தரிக்கும் பாடலாக அமைந்துள்ளது.

“கண்ணே கண்மணியே நீ இருந்தாலே வாழ்க்கை மாறும்…்என் கண் முன்னே நீ சிரிச்சாலே என் சோகம் தீரும்..

உன் கை கோர்த்து நான் போகும் தூரம் எல்லாம் என் சந்தோஷம் நூறாகும் நெஞ்சமெல்லாம்..

என அழகான வரிகளுடன் அனைவருக்கும் புரியும் படியில் ஓர் உணர்வு பாடலாக உருவாகியுள்ளது.

இந்தப் பாடல் வரிகளை மோகன் ராஜா எழுத லலிதா சுதா பாடியுள்ளார்.

சமீப காலமாக பாடல் வரிகளை கவனிக்க விடாமல் இசையே மேலோங்கி நிற்கும். ஆனால் அருண்ராஜ் இசையமைத்த இந்த இரு பாடல்களிலுமே வரிகளுக்கு தனித்துவம் கொடுத்து இதயத்திற்கு இதமான ராகத்தை கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து இதுபோல பல பாடல்களை அமைத்து அருண் ராஜ் இனி ஆனந்த (இசை) ராஜாவாக மாற வாழ்த்துவோம்…

Thadam composer Arun Raj next project details

காதலர் தின அப்டேட் : லெஸ்பியன் படத்தை தயாரிக்கும் நடிகை நீலிமா

காதலர் தின அப்டேட் : லெஸ்பியன் படத்தை தயாரிக்கும் நடிகை நீலிமா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இரண்டு இளம் பெண்கள் தன்பாலின சேர்க்கையாளராக மாறி காதலித்து வாழும் வாழ்க்கையை மையப்படுத்தி தயாராகியிருக்கும் ‘வாழ்வு தொடங்குமிடம் நீதானே’ எனும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

ஷார்ட்ஃபிளிக்ஸ் எனும் ஒ.டி.டி தளத்தில் வெளியாகும் இந்தத் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், காதலர் தினத்தை முன்னிட்டு இன்று வெளியிடப்பட்டிருக்கிறது.

ஆணும், பெண்ணும் காதலிப்பது இயற்கை. எனினும் இந்த சமூகத்தில் இயற்கையான உறவுகளை மீறி ஆணும் ஆணும்… பெண்ணும் பெண்ணும்… என தன்பாலின ஈர்ப்பும், அவர்களின் சேர்க்கையும் பல இடங்களில் நிகழ்கிறது.

இந்த நிலையில் இரண்டு வெவ்வேறு மத பின்னணியில் பிறந்து, ஆச்சார அனுஷ்டானங்களுடன் வாழும் இரண்டு இளம் பெண்கள், வித்தியாசமான சூழலில் சந்தித்து, காதல் வயப்பட்டு, தன்பாலின சேர்க்கையாளர்களாக மாறுகிறார்கள்.

இவர்களின் காதலை இந்த சமூகம் அங்கீகரித்ததா? அல்லது புறக்கணித்ததா? என்பது குறித்தும், சமூகத்தின் எதிர்ப்புகளை மீறி இவர்களின் காதல் என்ன ஆனது? என்பது குறித்தும் விவரிப்பது தான் ‘வாழ்வு தொடங்குமிடம் நீதானே’.

அறிமுக இயக்குநர் ஜெயராஜ் பழனி இயக்கத்தில் தயாராகி இருக்கும் இந்த தொடரில் சுருதி பெரியசாமி, நிரஞ்சனா நெய்தியார், அர்ஷத் ஃபராஸ், ஆறுமுக வேல், பிரதீப், நிரஞ்சன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

சதீஷ் கோகுலகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு தர்ஷன் ரவிக்குமார் இசையமைத்திருக்கிறார்.

ஆர்.எல். விக்னேஷ் படத்தொகுப்பு பணிகளை கவனிக்க, ரவி பாண்டியன் கலை இயக்கத்தை கவனித்திருக்கிறார்.

லெஸ்பியன் உறவை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஷார்ட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இசை பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. நடிகை நீலிமா இசை இப்படத்திற்கு இணை தயாரிப்பாளராக பணியாற்றியிருக்கிறார்.

காதலர் தினத்தை முன்னிட்டு இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. ஃபர்ஸ்ட் லுக்கில் கதையின் நாயகிகளின் முகங்கள் வண்ணமயமாக இடம்பெற்றிருப்பதால் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

காதலைப் பற்றி காமத்தை கடந்து உணர்வுப்பூர்வமாக காட்சிப்படுத்தியிருப்பதால் ‘வாழ்வு தொடங்குமிடம் நீதானே’ எனும் திரைப்படத்திற்கு டிஜிட்டல் தள பார்வையாளர்களிடத்தில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

vazhvu thodangumidam neethane first look poster released

ஹாலிவுட் டிவி சீரியல் பாலிவுட்டில்.; இசையமைக்கும் சாம் சி.எஸ்.

ஹாலிவுட் டிவி சீரியல் பாலிவுட்டில்.; இசையமைக்கும் சாம் சி.எஸ்.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர இசையமைப்பாளரான சாம் சி. எஸ், இந்தியில் வெளியாகவிருக்கும் ‘தி நைட் மேனேஜர்’ எனும் இணையத் தொடருக்கு இசையமைத்திருக்கிறார்.

‘தி நைட் மேனேஜர்’ எனும் பெயரில் ஆங்கில மொழியில் உருவாகி ஹாலிவுட்டில் வெளியான தொலைக்காட்சி தொடர் ‘தி நைட் மேனேஜர்’.

6 அத்தியாயங்களைக் கொண்ட இந்தத் தொடர் 2016 ஆம் ஆண்டில் வெளியானது.

இந்த தொடர் தற்போது இதே பெயரில் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டிருக்கிறது.

சாம் சி. எஸ்

இதில் ‘பொன்னியின் செல்வன்’ புகழ் நடிகை சோபிதா துலிபாலா, பாலிவுட் நட்சத்திர நடிகர்கள் அனில் கபூர், ஆதித்யா ராய் கபூர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

பிரியங்கா கோஷ், ரூக் நபீல், சந்திப் மோடி ஆகியோர் இணைந்து இயக்கியிருக்கும் இந்த தொடர், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் டிஜிட்டல் தளத்தில் பிப்ரவரி 17 ஆம் தேதியன்று வெளியாகிறது.

டிஜிட்டல் தள பார்வையாளர்களிடத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த தொடருக்கு தமிழ் திரையுலகினைச் சேர்ந்த முன்னணி இசையமைப்பாளரான சாம் சி. எஸ். இசையமைத்திருக்கிறார்.

‘விக்ரம் வேதா’ எனும் திரைப்படத்தின் இந்தி ரீமேக்கிற்கு இசையமைத்து பாலிவுட் திரையுலகிலும் தனக்கென தனி அடையாளத்தை பெற்ற சாம் சி எஸ், ‘தி நைட் மேனேஜர்’ எனும் இந்தி இணைய தொடருக்கு திறமை வாய்ந்த பல சர்வதேச இசை கலைஞர்களின் ஒத்துழைப்புடன் பின்னணி இசையமைத்திருப்பதால் பார்வையாளர்களிடத்தில் பெரும் வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சாம் சி. எஸ்

music director sam cs composed to bollywood tv serial

தமிழ் படங்களில் 5.. விஜய் படங்களில் 2.. வசூல் அள்ளிய ‘வாரிசு’ பட வரிசை பட்டியல்

தமிழ் படங்களில் 5.. விஜய் படங்களில் 2.. வசூல் அள்ளிய ‘வாரிசு’ பட வரிசை பட்டியல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

2023 ஜனவரி 11ல் விஜய் நடிப்பில் உருவான வாரிசு திரைப்படம் வெளியானது. தெலுங்கு திரையுலகின் பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிப்பில் பிரபல இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் வெளியான இதில் நாயகியாக ராஷ்மிகா நடித்து இருந்தார்.

பல திரையரங்குகளில் ‘வாரிசு’ படம் வசூல் ரீதியாக பல சாதனைகளை படைத்து வருகிறது.

அம்பாசமுத்திரம் ஸ்ரீ பாலாஜி திரையரங்கில் இதுவரை வெளியான படங்களிலேயே வாரிசு திரைப்படம் தான் மிக அதிக அளவில் வசூலித்து ஒரு பென்ச் மார்க்கையும் உருவாக்கியுள்ளது. தொடர்ந்து வெற்றிகரமாகவும் ஓடிக்கொண்டிருக்கிறது.

படம் வெளியாகி ஒரு மாதத்தை கடந்த நிலையில் இந்த ஞாயிற்றுக்கிழமை (பிப்-12) கூட கும்பகோணத்தில் உள்ள வாசு திரையரங்கில் மக்கள் மிக நீண்ட வரிசையில் காத்திருந்து திரையரங்கிற்குள் நுழைந்ததை பார்க்க முடிந்தது.

திரையரங்க வரலாற்றில் சமீப காலமாக நடக்காத ஒரு ஆச்சரிய நிகழ்வு இது. குறிப்பாக ஆறிலிருந்து அறுபது வரை உள்ள அனைவரும் குடும்பம் குடும்பமாக இந்த படத்திற்கு திரளாக வருகை தந்தது ஆச்சரியம் தருவதாக இருக்கிறது என்கிறார்கள் திரையரங்கு நிர்வாகத்தினர்.

சென்னையில் குரோம்பேட்டையில் உள்ள வெற்றி திரையரங்கில் 26 ஆவது நாளில் 3 மணி காட்சி கூட ஹவுஸ்புல் காட்சியாக, அதிலும் 85 சதவீதம் குடும்ப உறுப்பினர்கள் நிறைந்த காட்சியாக நிறைந்து இருந்தது.

திண்டுக்கல்லின் அடையாளங்களில் ஒன்றாக விளங்கும் உமா ராஜேந்திரா சினிமாஸில் 5-வது வாரத்திலும் கூட கடந்த 15 வருடங்களில் இல்லாத அளவிற்கு அதிக எண்ணிக்கையிலான ரசிகர்கள் இந்த படத்திற்கு வருகை தந்த வண்ணம் இருக்கிறார்கள்.

குறிப்பாக தற்போது திரையிடும் திரைகளின் எண்ணிக்கை பாதியாக குறைக்கப்பட்டபோதும் கூட இதற்கு முன்பு வெளியான விஜய்யின் பீஸ்ட் படத்திற்கு வருகை தந்த பார்வையாளர்களின் எண்ணிக்கையை தாண்டி வாரிசு படம் சாதனை செய்துள்ளது.

திருநெல்வேலி ராம் முத்துராம் சினிமாஸ் நிறுவனத்தினர், வாரிசு திரைப்படம் வெற்றிகரமாக ஐந்தாவது வாரத்தை தொடர்கிறது என்றும் ரெக்கார்ட் பிரேக்’கிங்’ என்றும் தங்களது வியப்பை வெளிப்படுத்தி உள்ளனர்.

வேலூரில் உள்ள விஷ்ணு திரையரங்கில் இந்த படத்தின் 25-வது நாளை ரசிகர்களுடன் சேர்ந்து மகிழ்ச்சியாக கொண்டாடியுள்ளனர்.

இது ஒருபுறம் இருக்க, வட இந்தியாவில் வெளியாகிய வாரிசு படத்தின் இந்தி பதிப்பும் வெற்றிகரமாக 30 நாட்களை கடந்துள்ளது.

இப்போதும் கூட ரசிகர்களின் வரவு குறைவில்லாமல் இருப்பதால் நேற்றைய தினம் (பிப்-12) புவனேஸ்வரில் உள்ள சினி போலிஷ் திரையரங்கத்தில் ரசிகர்களின் கூட்டத்தை சமாளிப்பதற்காக சிறப்புக் காட்சியாக நள்ளிரவு காட்சி திரையிடப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்ல வடக்கே பல திரையரங்குகளில் நேற்று (பிப்-13) திங்கள்கிழமையும் பாதி இருக்கைகளுக்கு மேல் முன்பதிவு செய்யப்பட்டு நிரம்பியுள்ளன.

பிரான்சில் முதன்முறையாக ஒரு தமிழ் படத்திற்கு 25வது நாள் கொண்டாட்டம் நடந்துள்ளது என்றால் அது வாரிசு படத்திற்கு தான் என்கிற செய்தி வீடியோவுடன் சோஷியல் மீடியாவில் வலம் வருகிறது.

மலேசியாவில் வாரிசு திரைப்படம் திரையிடப்பட்ட முதல் இரண்டு வாரங்களில் பாக்ஸ் ஆபீசில் முதல் இடத்தில் இருந்தது.

தற்போது மூன்றாவது வாரத்தில் இருந்து 10வது இடத்தில் இருந்தாலும் இப்போதும் 30 க்கும் குறையாத காட்சிகள் திரையிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தரவரிசைப்படி பல திரையரங்குகளில் இன்னும் முதலிடத்தில் தான் வாரிசு திரைப்படம் இருக்கிறது.

விஜய் படங்களிலேயே இரண்டாவது முறையாக உலக அளவில் 300 கோடி வசூலை கடந்த படம் என்கிற பெருமையை பிகில் படத்தை தொடர்ந்து வாரிசு பெற்றுள்ளது.

அந்த வகையில் உலக அளவில் 300 கோடிகளை கடந்த ஐந்தாவது தமிழ்ப்படம் என்கிற பெருமையும் வாரிசு படத்திற்கு சேர்ந்துள்ளது.

5 among the Tamil films.. 2 among the Vijay films.. ‘Varisu’ film order list

பழனி முருகனிடம் சரணடைந்த சமந்தா .. மனம் உருகி வழிபாடு

பழனி முருகனிடம் சரணடைந்த சமந்தா .. மனம் உருகி வழிபாடு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனக்கு உடல் நலம் பெற வேண்டி பழனி மலையின் 600 படிகள் ஏறி கோயிலுக்குச் சென்றார் சமந்தா .

புனித பயணத்தில் அவருடன் ’96’ இயக்குனர் சி பிரேம் குமார் சென்றார். ஒவ்வொரு அடியிலும் கற்பூரம் ஏற்றி வழிபட்டார் அவர் . தற்போது தனது ஆட்டோ இம்யூன் நிலை, மயோசிடிஸ் நோய்க்கு சிகிச்சை எடுத்து வருகிறார் சமந்தா . உடல்நிலை மற்றும் சாகுந்தலத்தின் வெற்றிக்காக முருகப்பெருமானின் ஆசீர்வாதத்தை நாடியதாக கூறப்படுகிறது.

சமந்தா பழனிக்கு வருகை தந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.

Samantha’s visit to this auspicious Tamil temple rock the internet!

More Articles
Follows